இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, November 05, 2009

பொண்டாட்டி ஜாக்கிரதை!

திருமணமான 4-வது மாதத்தில் கள்ளக்காதலனை நாடிய புதுப்பெண் கொடூர கொலை
03 நவம்பர் 2009

திருச்சி லால்குடி கொத்தமங்கலத்தை சேர்ந்த அன்பரசிக்கு வயது 21தான். திருமண வயது வந்ததும் அன்பரசியை அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி முத்துக்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

2.7.2009ல் உறவினர்கள் கூடி நின்று வாழ்த்த புரோகிதர்கள் மாங்கல்யம் தந்துனானே... என மந்திரம் ஒத... நல்ல நேரம் பார்த்து முத்துக்குமார் கட்டிய தாலியை கழுத்தில் வாங்கினாள் அன்பரசி.

3 மாதம் கணவர் முத்துக்குமாருடன் திருமண வாழ்க்கையை ஜாலியாக அன்பரசி அனுபவித்தார். விருந்து உபசரிப்பு... நல விசாரிப்பு, குழந்தை விசாரிப்பு என... உபசரிப்புகளால் அன்பரசி திக்குமுக்காடிப்போனாள்.

பால் வியாபாரத்திற்கு செல்லும் கணவர் முத்துக்குமாருக்கு அன்பரசியுடன் அடிக்கடி பேசாமல் இருக்க முடியவில்லை. ரூ.3 ஆயிரம் செலவு செய்து செல்போன் வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில்தான் ஒரு நாள் இரவு... அன்பரசியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டுகால் வந்தது. யாரோ... என்று அதே எண்ணுக்கு அன்பரசி தொடர்பு கொண்டாள். மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஹலோ என்றாள்.
மறு முனையில் தயங்கியபடி ஹலோ... என்றான். அவன்..! அன்பரசிக்கு அந்த குரலை கேட்டதும் உடலுக்குள் பட்டாம் பூச்சு பறப்பது போல உணர்வு.

ஆனால்... பேசினாள் அங்கமுத்து தினமும் மிஸ்டுகால் விட்டான். அன்பரசி.., உடனே தொடர்பு கொண்டாள்.

தன் மனைவி... அன்பரசி... மோகம் 30 நாள், ஆசை 60 நாள் என்பது உண்மையா... வேறு ஒரு முகம் தெரியாத வாலிபருடன் போனில் பேசுகிறாள் என்பது தெரியாமல்... முத்துக்குமார் வீடு, வீடாக சென்று பால் ஊற்றிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையே எவ்வளவு நாள் தான். போனிலேயே பேசுவது. நேரில் பார்க்க வேண்டாமா, என்று அன்பரசிக்கு அழைப்பு விடுத்தான் அங்கமுத்து.
அன்பரசியும்... மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல... அங்கமுத்துவை தேடி திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர், காமராஜர்புரத்தில் உள்ள வீட்டுக்கே வந்தாள். அன்பரசியை பார்த்ததும்... அவள் அழகில் மயங்கிப் போனான் அங்கமுத்து.

தனிமை...! இளமை.. பஞ்சும்... நெருப்பும் பற்றிக்கொள்ள தொடங்கியது. அப்போதுதான். அன்பரசியின் கழுத்தில் இன்னமும் மஞ்சள் காயாத... தாலிக் கொடி கிடப்பதை அங்கமுத்து பார்த்தான். ஆனாலும்... அன்பரசி.. தனக்கு... தற்காலிகம் தானே... என மனதை தேற்றிக்கொண்டாள்.

அதன்பிறகு... கணவர்... முத்துக்குமாரிடம் ஏதாவது பொய் சொல்லி விட்டு முத்தரசநல்லூருக்கு கள்ளக்காதலன் அங்கமுத்துவை பார்க்க புறப்பட்டு சென்று விடுவாள்.

நாளடைவில் கள்ளக்காதலன் அங்கமுத்து கொடுத்தசுகம். கணவர் முத்துக்குமாரையே தூக்கி எறிய அன்பரசிக்கு தைரியம் கொடுத்து விட்டது. இதற்கிடையே முத்துக்குமாருக்கு அரசல் புரசலாக விஷயம் கசிய தொடங்கி உள்ளது.

அங்கமுத்துவிடம்.. 90 நாள் கணவனை தூக்கி எறிந்து விட்டேன். என்னை மனைவியாக ஏற்றுக்கொள் என்று அன்பரசி அடம்பிடித்தாள்.

கள்ளக்காதலி... அன்பரசியோ... தன்னை உடனே திருமணம் செய்து கொள் என்று அடம்பிடிக்க தொடங்கினாள். கண்ணீர் விட்டாள். கணவனையே உன்னை நம்பி கைகழுவி விட்டேன். என்னை ஏமாற்றி விடாதே... என கெஞ்சினாள்.

2.7.2009... அன்பரசி கழுத்தில் தாலிகட்டிய முத்துக்குமார் நேற்று 2.11.2009ல் முத்தரசநல்லூர் தோப்பில்... அழுகி பிணமாக கிடந்த மனைவி அன்பரசியை பார்த்து கதறி... அழுதான்...கட்டிய மனைவிக்கோ... கணவனுக்கோ... துரோகம் செய்பவர்களின் வாழ்க்கை... முடிவு இப்படிதான் ஆகும்.

முழுச் செய்தியை இங்கே காண்க: New India News

===========================

498A மனைவிகளும் இப்படித்தான் கணவரின் அன்பை மறந்து தனது சுயலாபத்திற்காக (இதனை ஒரு வகையில் இச்சை என்றும் சொல்லலாம்) பெட்டிக்கடை வக்கீல்களின் உதவியுடனும் அடியாட்கள் போல கூலிக்கு வேலைசெய்யும் சில காவலாளிகளுடன் கூட்டணி அமைத்து கூலிக்கு வேலைசெய்யும் கூட்டத்தின் ஆதரவு நிரந்தரமானது என்ற எண்ணத்தில் (மோகத்தில்) அன்புக்கணவரையும் அவரது குடும்பத்தாரையும் அவமானப்படுத்தி கோர்ட்டிற்கு இழுத்து கடைசியில் அன்புக்கணவரையும் இழந்து, கூலிக்கு கும்மியடிக்கும் கூட்டத்தாலும் புறக்கணிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்து நாதியற்று நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

காலம் கடந்து புத்தி வரும்வரை இறைவன் கொடுத்த அற்புத வாழ்க்கை காத்திருக்குமா?




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.