இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, March 03, 2011

பெண் அதிகாரிக்கு கொடுமை!

நாட்டில் இப்போதெல்லாம் பெண் அதிகாரிகளை துன்புறுத்தும் செயல் அதிகமாகிவிட்டது. பொய் வழக்குப்போடும் மருமகள்களுக்கு குரல் கொடுக்க ஒரு ஆதரவு கூட்டம் இருப்பதுபோல இந்த “பெண் கொடுமைக்கு” எதிராக குரல் கொடுக்க யாராவது புரட்சியாளர்கள் முன்வருவார்களா?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வணிக முத்திரை குறியீடு பெண் அதிகாரி கைது
மார்ச் 04,2011 தினமலர்

சென்னை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வணிக முத்திரை குறியீடு தென்மண்டல பெண் அதிகாரியை, சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் தயாகர் நைனார்; வக்கீல். இவரது மனைவி கஸ்தூரி (59); சென்னை, கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில், வணிக முத்திரை குறியீடு தென்மண்டல தலைமை அதிகாரி. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக சென்னை, சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம், சென்னை, பெங்களூரில் உள்ள கஸ்தூரியின் வீடு, மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரே நாளில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, 33 லட்சம் ரூபாய் பணம், குறிப்பிட்ட கால வைப்புத் தொகை 85 லட்சம் ரூபாய், 3.8 கிலோ தங்க நகைகள் மற்றும் சென்னை அடையாறு, திருப்பதி, மும்பை மற்றும் ஆமதாபாத்தில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கஸ்தூரி கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., சிறப்பு முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.