இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 12, 2011

கல்யாணமாம் கல்யாணம்!

டர்பன் : போலி திருமணச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், அவரது தாயாருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தென் ஆப்பிரிக்க கோர்ட் தீர்ப்பு அளித்தது.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் முனிசாமி ரெட்டி (60). இவருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரது வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா அப்பால்சாமி (21) என்ற பெண்ணும், அவரது தாயாரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், 2008ல் விஷம் கலந்த மீன் உணவை சாப்பிட்டதால் முனிசாமி ரெட்டி இறந்தார். அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்காக, முனிசாமி ரெட்டிக்கும், தனக்கும் திருமணம் நடந்தது போன்ற, போலியான திருமணச் சான்றிதழை சமந்தாவும், அவரது தாயாரும் தயார் செய்தனர்.

இந்நிலையில், முனிசாமி ரெட்டியை கொலை செய்ததாகவும், போலி திருமணச் சான்றிதழ் தயார் செய்ததாகவும், சமந்தாவும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, தென் ஆப்பிரிக்க கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், முனிசாமி ரெட்டியை, தாயும், மகளும் சேர்ந்து கொலை செய்தனர் என்பதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் கோர்ட்டில் நிரூபிக்க தவறியதால், கொலை வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போலி திருமணச் சான்றிதழ் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சித்த குற்றத்துக்காக, இருவருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

==========

திருமணத்தின் மூலம் பணம் பறிப்பதில் இதெல்லாம் முப்பாட்டன் காலத்து “டெக்னிக்”. நம்ம ஊரில் இப்போதெல்லாம் “தொழில்நுட்பம்” எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இப்ப இந்தத் தொழில் அரசாங்க அங்கீகாரத்துடன் அமோகமாக சட்டத்தின் துணையோடு நடந்துகொண்டிருக்கிறது. திருமணம் செய்துவிட்டு பிறகு பொய் வரதட்சணை வழக்குப்போட்டு கணவனை அவனது குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பி பிறகு சட்டம் தெரிந்த இடைத்தரகர்கள் மூலம் கணவனிடம் பேரம்பேசி பெருந்தொகை கொடுத்தால் வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறி ஒரு பெருந்தொகையை கறந்துவிடுவார்கள். இதை டில்லி உயர்நீதிமன்றம் 2007லேயே சொல்லிவிட்டது.

Delhi High Court

Crl. Appeal No. 696/2004 Date: 01.11.2007

A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. In many cases, where FIRs are filed under Section 498A IPC, petitions are being filed under Section 482 Cr.P.C. for quashing of FIRs after settlements between the parties and the allegations made of cruelties etc. are withdrawn the moment a lump sum payment is received. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbours are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.