இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 05, 2011

கூலிக்கு “ஆள்” தேடிய அப்பாவி மனைவி!

இரண்டு சுவாரஸ்யமான செய்திகள் இன்று வந்திருக்கின்றன. புராணக் கதைகளில் கணவனை எமனிடமிருந்து காப்பாற்ற பல பத்தினிகள் போராடி எமனையே வெற்றி பெற்றதாகவும் அந்த பத்தினி தெய்வங்களை இப்போதும் தெய்வமாக வணங்கும் வழக்கம் பல ஊர்களில் இருக்கிறது என்று பழைய தலைமுறை மூத்தோர்களுக்கு மட்டும் தெரியும்.

இவையெல்லாம் இப்போது மூடப்பழக்கம், "Women Empowerment" என்ற பெயரில் ஒதுக்கித் தள்ளப்பட்டுவருகிறது. நல்ல விஷயங்களைச் சொல்லித்தரும் ஆட்களுக்கு இப்போது பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது இந்த சமுதாயத்தில். அதன் விளைவாக இப்போது நாட்டில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பின்வரும் முதல் செய்தியைப் பாருங்கள். கள்ளக்காமத்தை கணவன் தட்டிக்கேட்டதால் அவனை கொல்வதற்கு கூலிக்கு ஆள் எங்கு கிடைப்பான் என்று தெரியாமல் ஒரு மனைவி மிகவும் தவித்திருக்கிறார். இதுபோன்ற பெண்களைத்தான் இப்போது ஒன்றும் தெரியாத “அப்பாவி” (கணவனைக் கொல்ல கூலிப்படை எங்கு கிடைக்கும் என்றுகூட தெரியாதவர் அப்பாவிதானே!) என்று சித்தரித்து சட்டங்கள் பாதுகாப்பு கொடுக்கின்றன.

இதுபோன்றவர்களை மட்டுமே ஆதரிப்போம் என்று ஒரு கூட்டம் நாட்டில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் தங்கள் வீட்டுப் பெண்களையும் இதுபோன்ற தவறுசெய்யும் பெண்களையும் ஒன்றாகக் கருதி பெண்ணை எப்படி குறை சொல்வது என்று நல்லது, கெட்டதைக்கூட வேறுபடுத்தி பார்க்கத்தெரியாமல் முட்டாள்தனமாக தன்னை முற்போக்குவாதி என்று கூறிக்கொள்ளும்!


குறிஞ்சிப்பாடி: கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட கணவரை கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, வடலூர் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த பழைய நெய்வேலியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவரது மனைவி சங்கீதா(29). கடந்த 26ம் தேதி வேலைக்காக ஆந்திரா செல்வதாகக் கூறிவிட்டு செந்தில்குமார் வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் 27ம் தேதி காலை, வடலூர் ஞானசபை திடலில் இறந்து கிடந்தார். வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

செந்தில்குமார் மனைவி சங்கீதா, வடலூர் அடுத்த பார்வதிபுரம் சுரேஷ் (41), வேல்முருகன்(42) ஆகியோர் திட்டமிட்டு செந்தில்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், செந்தில்குமார் வீட்டில் வாடகைக்கு இருந்த ராஜேஷ் என்பவருக்கும், சங்கீதாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 26ம் தேதி இருவருக்கும் நடந்த தகராறில் உன்னையும், ராஜேஷையும் கொலை செய்வேன் என, கூறியுள்ளார்.

இந்நிலையில், சங்கீதா தனது உறவினர் வேல்முருகனிடம், கணவர் செந்தில்குமார் மிரட்டியதை கூறி, அவரை கொலை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பரா என விசாரித்தார். வேல்முருகன், வடலூர் பார்வதிபுரம் முத்துகிருஷ்ணன் மகன் சுரேஷ் என்பவரை அறிமுகம் செய்து வைத்து 1,000 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, 26ம் தேதி இரவு சபை திடலில் குடித்துக் கொண்டு இருந்த செந்தில்குமாரை, சுரேஷிடம் வேல்முருகன் அடையாளம் காட்டிவிட்டு சென்று விட்டார். குடிபோதையில் இருந்த செந்தில்குமாரை, சுரேஷ் கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.


இரண்டாவது செய்தி சற்று வித்தியாசமானது...

முதல் செய்தியில் மனைவியின் கள்ளக்காமத்தை தட்டிக்கேட்டதால் கணவர் கொல்லப்பட்டார். சரி கள்ளக்காமத்தில் ஈடுபடுபவர்களை இந்திய சட்டங்கள் எப்படி தண்டிக்கிறது என்று பார்த்தால் கள்ளக்காமத்தில் ஈடுபடும் ஆண் மட்டுமே தண்டிக்கப்படக்கூடியவர் ஆனால் கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண் ஒரு “அப்பாவி” என்றும் அவரை தண்டிக்க யாருக்குமே அதிகாரம் கிடையாது என்று சித்தரிக்கிறது.


497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


சட்டங்கள் இப்படி இருப்பதால்தான் என்னவோ இந்த இரண்டாவது செய்தியில் கணவரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். இல்லையென்றால் முதல் செய்தியில் இருப்பதுபோல் உயிரைவிடவேண்டியதுதான். சட்டங்கள் சரியாக இல்லையென்றால் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள அப்பாவிக் கணவன்கள் தாங்களே கையில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் நிலைதான் ஏற்படும் என்பதற்கு இந்த செய்தி நல்ல உதாரணம்.



திண்டுக்கல்: திண்டுக்கலில், வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்து, கணவன் கொலை செய்தார்.

திண்டுக்கல் பெரியார் காலனி மகாலட்சுமி நகரில் வசிப்பவர் ராஜா(28); என்.ஜி.ஓ., காலனியில் சலூன் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி(25). இவர்களுக்கு திருமணமாகி, 9 ஆண்டுகளாகிறது. மகாலட்சுமி(6) என்ற குழந்தை உள்ளது.

இதே பகுதியைச் சேர்ந்த மணி(28) என்பவருடன், ராஜாத்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கணவனை பிரிந்த ராஜாத்தி, இதே பகுதியில் உள்ள தன் தந்தை முருகன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் நேற்று தனியாக இருந்த ராஜாத்தியின் கழுத்தை கத்தியால் அறுத்து, கொலை செய்து விட்டு திண்டுக்கல் தாலுகா போலீசில் ராஜா சரணடைந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: எனது மனைவிக்கும் இதே பகுதியில் வசிக்கும் மணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நான் பல முறை கண்டித்தும், என் மனைவி கேட்கவில்லை. நேற்று காலை, கள்ளக் காதலனுடன் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்து அங்கு சென்று, ராஜாத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு ராஜா கூறினார். இன்ஸ்பெக்டர் தெய்வம் விசாரிக்கிறார்.
=====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.