இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, November 06, 2010

(கள்ளக்)காதல் படுத்தும் பாடு - திரிசங்கு நிலையில் 2 வயது குழந்தை

கள்ளத்தொடர்பால் அனாதையான பெண் : திரிசங்கு நிலையில் மகன்

தினமலர் நவம்பர் 06,2010

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கள்ளத்தொடர்பால் பெண் ஒருவர் பலியானார். உடலை வாங்க உறவினர்கள் வராததால், இரு நாட்களாக அனாதையாக கிடக்கிறது.

மும்பை தமிழரான கணேஷ் (28), அங்கு பேன்சி கடை வைத்துள்ளார். இவருக்கும்,தேவி என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; நகுல் (2) என்ற மகன் உள்ளான். கணேஷின் கடையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் கங்கையம்மன் நகரை சேர்ந்த சுரேஷ் (25), வேலை செய்தார். அவருக்கும், தேவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் மகனை அழைத்துக்கொண்டு சுரேஷூடன் தேவி மானாமதுரை வந்தார். ஓரிரு நாட்களில் மானாமதுரை வந்த தேவியின் பெற்றோர், போலீஸ் உதவியுடன், தேவியை மும்பைக்கு அழைத்து சென்றனர். சேலம் ஸ்டேஷனில் ரயில் நின்ற போது, அங்கிருந்து தப்பி மீண்டும் சுரேஷிடம், தேவி தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில், கடந்த அக்., 29 ல் மகளிர் போலீசில், மனைவியை மீட்டு தருமாறு, உறவினர் மூலம் கணவர் கணேஷ் புகார் செய்தார். கணவருடன் செல்ல மறுத்த தேவியை எச்சரித்த போலீசார், இரு நாட்கள் கழித்து விசாரணைக்கு வர உத்தரவிட்டனர். கள்ளத்தொடர்பை பிரித்து விடுவார்கள் என, அஞ்சிய தேவி தீக்குளித்து, மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த நவ.,4 மாலை இறந்தார். இதுகுறித்து போலீசார், தேவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று வரை யாரும் வரவில்லை. கள்ளக்காதலனிடம் உடலை ஒப்படைப்பதில் சட்டச்சிக்கல் இருப்பதால், பிரேத அறையில் தேவியின் உடல் கிடக்கிறது. தாய் இறந்த சோகம் கூட அறியாத சிறுவன் நகுல், தற்போது சுரேஷின் கட்டுப்பாட்டில் உள்ளான்.

================

கள்ளக்காதலில் சிக்கி கடைசியில் அனாதையாக்கப்படும் இதுபோன்ற அபலைப் பெண்களுக்காக பெண்கள் நல வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் தனியாக நிதியம் அமைக்கும் நிலை ஏற்படும் போலிருக்கிறது.

தங்களின் காம சுகத்திற்காக அப்பாவிக் குழந்தைகளை அனாதையாக்குபவர்களை யார் தட்டிக் கேட்பது ? கண்டிப்பாக இந்திய சட்டங்களும் பெண்கள் அமைப்புகளும் கள்ளக்காம பெண்களுக்கு ஆதரவு தருவார்களே தவிர இதுபோன்ற அப்பாவிக் குழந்தைகளை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியும் கசப்பான உண்மை.

இல்லையென்றால் ராமாயணக் கதையில் வரும் ராமன், சீதை, ராவணன் என்ற கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டுள்ள பழைய பஞ்சாங்கமான 1860ல் இயற்றப்பட்ட கள்ளஉறவு சட்டத்தை இன்றுவரையும் உரம்போட்டு வளர்த்து கள்ள உறவில் ஈடுபடும் ஆண் மட்டுமே குற்றவாளி என்றும் கள்ள உறவில் ஈடுபடும் பெண்கள் எல்லாம் அப்பாவி கற்புக்கரசிகள் என்றும் தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று சிறு குழந்தைக்குக் கூட தெரியுமே.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.






No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.