இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 16, 2011

பெண் கொடுமை - நீதிமன்றத்தில் முறையிடலாமா?

இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபிறகும் அடிப்படைத் தேவையான குடிநீருக்குக்கூட போராட்டம் செய்யும் இழிநிலையில் மக்கள் குறிப்பாக பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த 65 ஆண்டு காலத்தில் எத்தனை அரசாங்கம் மாறியிருக்கிது. ஒருவர்கூட மக்களின் இந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யவில்லையே? இதுவரை இருந்த கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக மக்கள் எந்த நீதிமன்றத்தில் முறையிடுவது?

தேவை குடிநீர்...! இளையான்குடி அருகே நகரகுடி கிராம மக்கள் குடி நீர் தட்டுபாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். (தினமலர் செய்திப்படம் 17.8.2011)

திருவள்ளூர் மாவட்டம் பங்காரம்பேட்டை கிராமத்தில் வாரத்திற்கொரு முறை சப்ளை செய்யப்படும் குடிநீர் குழாய் பள்ளத்தில் இருப்பதால் அதில் இறங்கி நீர் பிடிக்க சிரமப்படும் பெண்கள். (தினமலர் 13/8/2011)

தண்ணீர் கொடு....ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை பெண்கள் கண்டித்து காலி குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலல் செய்திப் படம் 5-8-11)

பிரச்னை தீரல...அரூர் அடுத்த பாபிசெசட்டிப்பட்டியில் சீரான குடிநீர் வழங்க கோரி, காலி குடத்துடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலர் செய்திப்படம் 10.8.2011)


(தினமலரின் கருத்து) எத்தனையோ இலவச திட்டங்களை அறிவித்து மக்களை மயக்கி, ஓட்டுகள் வாங்கும் அரசியல்வாதிகளே இதை பாருங்கள்... நல்ல தண்ணீர் குழாய் அருகே கழிவு நீர் சாக்கடை ஓடுகிறது, இதனால் அப்பகுதிமக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பலகாலமாக பருகி பல்வேறு நோய்களுக்கு ஆளாகியது தான் மிச்சம். இந்நிலை மாற இலவசங்கள் வேண்டாம் சுத்தமான தண்ணீர் சுகாதாரமான வாழ்வை மக்களுக்கு தருவீர்களா? இடம் : மடிப்பாக்கம் கங்கையம்மன் தெரு.

Pesum Padam

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு அருகேயுள்ள சித்தோடு கிராம மக்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதனால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டவர்கள் மதிய உணவை சாலையில் அமர்ந்தபடியே சாப்பிட்டனர். (தினமலர்)


இந்திய அரசியலிலும் ஆட்சியிலும் உள்ள ஊழலை ஒழிக்கவேண்டுமா?
கோர்ட்டில் முறையிட்டுக் கொள்ளுங்கள்: மத்திய அரசு அறிவுரை

ஆகஸ்ட் 17,2011 தினமலர்
புதுடில்லி:"போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது.ஆனால், எந்த இடத்தில், எந்தச் சூழ்நிலையில்,எந்த நேரத்தில் என்பதெல்லாம், மிக முக்கியமாகக் கவனிக்கப்பட ...உலகெங்கிலும் நடத்தப்படும் எந்த ஒரு போராட்டமுமே, சில வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதியளிக்கப்படுகிறது. எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையுமே அரசாங்கம் வரவேற்கிறது' என்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.


2 comments:

காந்தி பனங்கூர் said...

எத்ஹனை ஆட்சி வந்தாலும் மக்கள் பாடு திண்டாட்டம் தான். இதற்கு ஒரே வழி, வாக்களிப்பு புறக்கணிப்பு தான்.

ஆனால் நான் வாக்களிப்பு புறக்கணிக்காமல் உங்களுக்கு இன்ட்லியில் ஓட்டளித்து விட்டேன். விழிப்புணர்வுள்ள செய்தி. நன்றி

www.panangoor.blogspot.com

பெண்கள் நாட்டின் கண்கள் said...

திரு. காந்தி பனங்கூர்,

தங்களின் கருத்திற்கும், இன்ட்லியில் வாக்கு அளித்ததற்கும் நன்றி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.