இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 13, 2011

இந்தியப் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

இந்தியப் பெண்கள் தங்கள் கணவன் மீதும் மாமியார் குடும்பத்தின் மீதும் பொய் குற்ற வழக்குகளை பதிவு செய்து தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ள பல தவறான சட்டங்களை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதற்கு பெண்கள் பாதுகாப்பு என்று பெயர்.

ஆனால், வாழ்வதற்கு அடிப்படை தேவையான குடிநீர் இன்றி தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் கஷ்டங்களிலிருந்து விடுபட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ எந்தவகையான பாதுகாப்பு இருக்கிறது?

எது பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு அளித்து அவர்களின் வாழ்வை மேம்படச் செய்யப்போகிறது? பொய் வழக்குப்போட்டு வாழ்வை சீரழித்துக்கொள்ள உதவும் சட்டங்களா? அல்லது வாழ்வின் அடிப்படை ஆதாரமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்யவேண்டிய சமூகப் பாதுகாப்பா?

திருவள்ளூர் மாவட்டம் பங்காரம்பேட்டை கிராமத்தில் வாரத்திற்கொரு முறை சப்ளை செய்யப்படும் குடிநீர் குழாய் பள்ளத்தில் இருப்பதால் அதில் இறங்கி நீர் பிடிக்க சிரமப்படும் பெண்கள். (தினமலர் 13/8/2011)


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.