இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 18, 2010

இன்னுமா பெண்ணுரிமையை பறிக்கும் இழிநிலை?

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பெண்ணுக்கு தன் இஷ்டப்படி நடக்க சுதந்திரம் கொடுக்கப்படவில்லையே!

தினமலர் 18/12/2010

காரக்பூர் : மேற்குவங்கத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில், கிராமத்தினர் ஒன்று திரண்டு நடத்திய தாக்குதலில், இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

காரக்பூர் அருகேயுள்ள மத்கத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், அங்குள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் வெளியூரில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே செங்கல் சூளையில் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவருடன், அந்த பெண்ணுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கள்ளத் தொடர்பை விட்டுவிடுமாறு, அந்த பெண்ணை கிராமவாசிகள் எச்சரித்துள்ளனர். இதை பொருட்படுத்தாமல் அந்த பெண் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வீட்டிலிருந்த அந்த பெண்ணை வெளியில் இழுத்து வந்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், அப்பெண் படுகாயமடைந்து மயக்க நிலைக்கு சென்றார். பயந்துபோன கிராமவாசிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தற்போது, காரக்பூர் மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை தாக்கிய கிராமவாசிகள் 11 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாக்குதலில் சம்பந்தப்பட்ட 11 பேரும், தலைமறைவாக உள்ளனர். அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த செங்கல் சூளை தொழிலாளிக்கு, கிராம பஞ்சாயத்தில் ஏற்கனவே 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கள்ளக்காம பாதுகாப்பு சட்டப்படி கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண் குற்றவாளியாகக் கருதப்படக்கூடாது. ஆனால் மேலுள்ள செய்தியில் பாருங்கள் என்ன ஒரு அநியாயம். ஒரு பெண் கள்ளக்காமத்தில் ஈடுபட்டார் என்பதற்காக கிராமத்தினர் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறி பெண்ணிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. யாராவது இதை பெண்கள் சங்கங்களின் காதில் போட்டுவிடுங்கள்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



4 comments:

தேவன் மாயம் said...

நல்ல பதிவு!

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நன்றி தேவன் மாயம்.

இன்னுமா பெண்ணுரிமையை பழிக்கும் இழிநிலை என்று பெண்ணுரிமை பேசுவோர் கூச்சல் போடாமல் இருந்தால் சரிதான்.

Anonymous said...

நீதி தேவன் கிரக்கம், பெண் என்றால் பேயும் இறங்குமோ? சட்டதின் முன் அனைவரும் சமமாதல் வேண்டும்

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நன்றி அங்கிதா வர்மா.

இது நீதி தேவனுக்கு ஏற்பட்ட கிரக்கமல்ல. 1860ல் சட்டத்தை இயற்றிய மேதைகளுக்கு ஏற்பட்ட கிரக்கம். இந்த கிரக்கம் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோல பலசட்டங்கள் இப்போதும் தொடர்ந்து இயற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.