இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 30, 2010

வரதட்சணைக் கொடுத்த பெண்ணை பாராட்டிய இந்திய ஜனாதிபதி!

இந்தியாவில் 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை பெண்கள் வரதட்சணைக் கொடுமை அடைவதாக பெண்கள் நல வாரியம், பெண்கள் நல அமைச்சகம் மற்றும் பல மகளிர் குழுக்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கூட்டம் ஒரு உண்மையை மட்டும் மறைத்து தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பிரச்சனையை திசைதிருப்பிக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை அதை ஒழுங்காக செயல்படுத்தாமல் தடைசெய்து வருவது இந்திய அரசாங்கம்தான். இயற்றிய சட்டத்தை சுயநல நோக்கில் ஒழுங்காக செயல்படுத்தாமல் அப்பாவிக் கணவர்கள் மீது பழி சுமத்தி சிறையில் தள்ளி சமுதாயத்தை சீரழித்து வருகிறது இந்த ஒட்டுமொத்தக் கூட்டம்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3 ன் படி வரதட்சணை கொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more


சட்டம் இப்படி இருக்கிறது. ஆனால் இன்றுவரை ஒருவர் கூட வரதட்சணைக் கொடுத்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதில்லை. கொடுப்பவர் இல்லையென்றால் வாங்குபவர்கள் இருப்பார்களா? ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை. காரணம் பல மகளிர் அமைப்புகளுக்கு வரதட்சணை வழக்குகளின் புள்ளி விபரம்தான் பணம் காய்க்கும் மரமாக, வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு இந்த வரதட்சணை முறையை ஒழிக்க மனம் வராது.

கீழுள்ள செய்தியில் பாருங்கள் இந்திய ஜனாதிபதி கூட இதே வேலையைத்தான் செய்திருக்கிறார்.

புதுடில்லி: வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித் தள்ளிய துணிச்சல் பெண்ணை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்த இளம்பெண் புல்தி பாகி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புல்தி பாகிக்கு சஞ்சய் பாகி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது பெற்றோர் புல்தி பாகி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். மேலும் உள்ளுர் பைனான்ஸ் அதிபரிடம் கடன் வாங்கி மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசைகளை வழங்கினர். கடந்த மாதம் திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்தின் போது ஒரு லட்ச ரூபாய் ரொக்கமாக வரதட்சணை கொடுக்க புல்தியின் வீட்டார் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தனர். மீதம் பத்தாயிரம் ரூபாயை சிறிது நாட்களில் தருவதாக கூறினர். இதனை மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை.மேலும் கூடுதல் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்றும் நிர்பந்தம் விதித்தனர். மேலும் மாப்பிள்ளை சஞ்சய் குடிபோதையில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மீதி பத்தாயிரம் ரூபாயை உடனே தரவேண்டும்;கூடுதலாக வரதட்சணை கொடுத்தால் தான் புல்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் எனக் கூறினார்.

மாப்பிள்ளை வீட்டாரின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த புல்திபாகி அதிர்ச்சியடைந்தார். மணமேடையில் இருந்து திடீரென எழுந்து கழுத்தில் இருந்த மாலை, நகைகளை கழற்றி வீசினார். நான் சஞ்சய் பாகியுடன் செல்ல மாட்டேன்;எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம் என கூறிவிட்டு விருட்டென்று எழுந்து வீட்டிற்கு சென்று விட்டார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் புல்தி பாகியின் செயலைக் கண்டு திகைத்தனர்.இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்,உறவினர் சமாதானங்களை புல்திபாகி ஏற்கவில்லை.இதையடுத்து பிரச்னையில் ஊர் பெரியவர்கள் தலையிட்டு இந்தத் திருமணம் செல்லாது என அறிவித்தனர்.

இந்நிலையில் வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித்தள்ளி,பெண் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் புல்தி பாகியின் துணிச்சலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் புல்தி பாகியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து விரைவில் அவர் கவுரவப்படுத்த உள்ளார். கிராமப்புறங்களில் பெண்கள் திருமணத்தை உதறித் தள்ளுவதால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதையும் மீறி திருமணத்தை உதறித்தள்ளிய புல்தியை ஜனாதிபதி நேரில் அழைத்து ஊக்கப்படுத்த விரும்புகிறார்.அவர் கல்வி கற்கவும் அல்லது வேலைக்கு செல்லவும் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். புல்திக்கு நிதி உதவி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோன்று சமுதாயப் புரட்சி செய்த சரிதா மட்டோ,பிரவீனா கதுன் மற்றும் ரேகா ஆகியோரையும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

=============

மேலுள்ள செய்தியில் முதலில் வரதட்சணைக்கொடுக்க பெண்வீட்டார் ஏன் ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வியே கேட்கப்படவில்லை. வரதட்சணை கொடுக்க முற்பட்டது சட்டப்படி ஒரு குற்றச் செயலாகும். முதலிலேயே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கும்போதே திருமணத்தை உதறியிருந்தால் இந்தப் பெண் புரட்சிப்பெண் என்று சொல்லலாம். ஆனால் இரண்டு கூட்டமும் சேர்ந்து ஒரு குற்றத்தை இழைத்திருக்கிறார்கள். பிறகு “டீல்” ஒத்து வரவில்லையென்றால் அடுத்த ஆள் மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்தியாவில் நடந்துவரும் வரதட்சணை சட்ட நடைமுறை. இதில் வரதட்சணைக்கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஏன் பரிந்துரைக்கவில்லை? வரதட்சணை தடுப்புச் சட்டத்தை முழுமையாக யார்தான் கடைபிடிப்பார்களோ?

நாட்டின் சட்டத்தை கடைபிடிக்கவேண்டிய முதல் பெண்மணியே வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்களை பாராட்டி கௌரவம் செய்தால் நாட்டில் இதுபோன்ற சமுதாயக் குற்றங்களை களைவது யார்? பெண்களுக்கு உண்மையாகவே நன்மை செய்யப்போவது யார்?

சமீபத்தில் தில்லி நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வரதட்சணை சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்திருக்கிறார். வரதட்சணை கொடுத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார். ஆனால் ஜனாதிபதியோ வரதட்சணை கொடுத்தவர்களை பாராட்டி மகிழ்கிறார். என்ன ஒரு சட்ட நடைமுறையோ! கடைசியில் பெண்களை வைத்து நன்றாக சட்ட, அரசியல் வியாபாரம் செய்துவிடுகிறார்கள் இந்த நாட்டில்.


Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.