இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, June 15, 2010

(கள்ளக்)காதலை எதிர்க்காதீர்கள்

தாயைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்! என்று வீர முழுக்கமிட்ட நாட்டில் இப்போது வயதான தாய்மார்கள் அஞ்சி வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆண்கள் தான் எப்போதும் குற்றம் செய்பவர்கள் என்று ISI முத்திரை குத்தப்பட்டுள்ள நாட்டில் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று காட்டிவிட்டார் இந்த மருமகள்.


கள்ளக்காதலை எதிர்த்த தாயை கொன்ற மகன், மருமகள் கைது
தினமலர் ஜூன் 16,2010

திருநெல்வேலி: நெல்லை அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தாயை அடித்துக்கொன்ற மகன், மருமகள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்துள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ்(48). இவர் வள்ளியூர் பி.எஸ்.என்.எல்.,அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி மல்லிகா(42). அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு பணியாளராக உள்ளார்.

இருவரும் பணிக்கு சென்ற நிலையில் ஜூன் 3ம் தேதி, கனகராஜின் தாயார் ஈனமுத்தம்மாள்(72), பகலில் ரத்தக்காயத்துடன் கிடந்தார். மருமகள் மல்லிகா, அவரை நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் ஈனமுத்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஈனமுத்தம்மாள் அடித்துக்கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்து ஈனமுத்தம்மாளை தாக்கியிருக்கலாம் என மல்லிகா புகார் கொடுத்தார். ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளைபோகவில்லை. இருப்பினும் மல்லிகாவின் புகாரில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது துப்புதுலங்கியது. கனகராஜின் தம்பி சங்கரபாண்டி, நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். அவருக்கும் மல்லிகாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கனகராஜ் வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி அண்ணன் வீட்டுக்குவந்துசென்றுள்ளார். சம்பவத்தன்றும் சங்கரபாண்டியும், மல்லிகாவும் ஒன்றாக இருப்பதை பார்த்த ஈனமுத்தம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சங்கரபாண்டி, பெற்ற தாய் என்று கூட பாராமல் கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதற்கு மல்லிகாவும் துணையாக இருந்துள்ளார். நேற்று இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 comment:

498ஏ அப்பாவி said...

இ​தொ ஒரு ​கொடுரமான ​செயல்

கணவனின் மூக்​கை அறுத்த ம​னைவி

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=8313&id1=11

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.