இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 30, 2010

மனைவி உடையான் துப்பாக்கிக்கு அஞ்சான்!

கீழுள்ள செய்தியைப் படிப்பதற்கு முன்பு இந்த சட்டத்தைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு செய்தியில் சொல்லப்பட்டுள்ள பெண் இந்திய சட்டப்படி எந்தத்தவறும் செய்யவில்லை என்று உங்களுக்கே புலப்படும்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் !), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவசாயி கைது
ஜூன் 30,2010 தினமலர்

ஓசூர்: அஞ்செட்டி அருகே கள்ளக்காதல் தகராறில், கள்ளக் காதலனை, காதலியின் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த மாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிக்கய்யா (37). அவரது மனைவி ராதா (32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு அருகே வசிப்பவர் விவசாயி அண்ணாதுரை (34). அவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

அண்ணாதுரைக்கும், ராதாவுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவன் இல்லாத நேரங்களில் ராதா, அண்ணாதுரையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை உறவினர்கள் மூலம் கேட்டறிந்த சிக்கய்யா, மனைவியை கண்டித்ததோடு, அண்ணாதுரையை வீட்டுக்கு வரக்கூடாது என, எச்சரித்தார். ஆனால், அண்ணாதுரை, சிக்கய்யா வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டுக்கு சென்று ராதாவுடன் உல்லாசமாக இருந்தார்.

நேற்று முன்தினம் சிக்கய்யா வெளியூர் செல்வதாகக் கூறி விட்டு, வீட்டை விட்டு சென்றார். இரவு 9 மணிக்கு திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் அண்ணாதுரையும், ராதாவும் ஒன்றாக இருந்தனர். சிக்கய்யாவை பார்த்ததும், அண்ணாதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆத்திரமடைந்த சிக்கய்யா, மனைவியை அடித்ததோடு, வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அண்ணாதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அவரை, சிக்கய்யா நாட்டுத் துப்பாக்கியால் 17 முறை கோபம் தணியும் வரை சுட்டார். அதில், அண்ணாதுரை சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். சிக்கய்யா அங்கு இருந்து தப்பியோடி தலைமறைவானார்.

தகவல் அறிந்த அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணாதுரையை சிக்கய்யா துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை அஞ்செட்டியில் இருந்து வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற சிக்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கணவர் இந்திய சட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார் போலிருக்கிறது. கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று இந்திய சட்டமே சொல்லியிருக்கிறது. அதனால்தான் சட்டத்தை மதித்து கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆணை மட்டும் இந்த அப்பாவி கொன்றிருக்கிறார் போலிருக்கிறது.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.