சட்டப் படிப்பு முடிக்காமல் வழக்கு நடத்தி மோசடி
Dinamalar: அக்டோபர் 07,2009

யாரிடமும் ஜூனியராக இல்லாமல் அவரே வழக்குகளை நடத்தினார். சந்தேகமடைந்த வக்கீல் சங்க நிர்வாகிகள், மதுரை சட்ட கல்லூரியில் விசாரித்தனர். கடந்த 23ம் தேதி தான் சட்டக் கல்வியை முடித்ததும், வரும் 21ம் தேதி நடக்கவுள்ள, "பார் கவுன்சில்' உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பித்ததும் தெரிந்தது. "பெங்களூரில் எல்.எல்.பி., முடித்து வக்கீலாக உள்ளதாகவும், கூடுதல் தகுதியாக பி.எல்., படிப்பதாகவும்' சக மாணவர்களிடம் கூறியுள்ளார். இவர் மீது ஐகோர்ட் பதிவாளர் அமீர்ஜானிடம் வக்கீல்கள் முத்துகுமார், அருண்குமார் ஆகியோர் ஜூலை 30ம் தேதி புகார் செய்தனர்.
==========================================
ஆயிரக்கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு ரசீது, வருமான வரி போன்ற எந்த கணக்கும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் இது தான். சட்டம் படிக்காமலே அல்லது படித்த சட்டங்கள் மறந்து போனாலும் வீட்டிலிருந்தபடியே பொய் 498A-டெம்ப்ளேட் (Template) கேசுகளை எழுதித்தந்து ஒரு டெம்ப்ளேட் புகார் எழுத இவ்வளவு என்று பிஃக்சுடு ரேட் (Fixed Rate) நிர்ணயித்து குடிசைத்தொழில் போல செய்யக் கூடிய தொழிலும் இது தான். மேலும் 498A போன்ற கேசுகளில் அப்பாவிகள் சிக்கும் போது பெயில் (Bail) வாங்குவதற்கு இவ்வளவு என்று பணயக்கைதியிடம் பிணைத்தொகை போல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் எந்த வித பயமும் இன்றி பணம் சம்பாதிக்கக்கூடிய தொழிலும் இது தான். அப்படியிருக்க இந்த தொழில் செய்ய போலிகள் ஆசைப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான்கு ஆண்டுகள் ஒரு போலியான ஆசாமி நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜரானது கூட தெரியாத நீதிமன்றத்தின் நிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
No comments:
Post a Comment