இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, October 06, 2009

தீபாவளி ஸ்பெஷல்!

வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு

லூதியானா: பஞ்சாபில், வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய மாஜிஸ்திரேட் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் பால் சிங் கிரேவல்.

இவர், தனது மகள் கரண்தீப் கவுரை, அமிர்தசரஸ் கோர்ட்டில் பணிபுரியும் மாஜிஸ்திரேட் பல்ஜிந்தர் சிங்கிற்கு, கடந்தாண்டு திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில், வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பல்ஜிந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, கரண்தீப் கவுர் போலிசில் புகார் செய்தார். இதையடுத்து, மாஜிஸ்திரேட் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி மற்றும் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மாஜிஸ்திரேட்டின் தாயார், மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

Dinamalar: அக்டோபர் 07,2009
==========================================

மாஜிஸ்திரேட் வரதட்சணை கேசில் மாட்டிக் கொண்டு தலைமறைவான செய்தியைப் படித்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் ஒரு அரசியல் கட்சி குடும்பமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட இதை விட வேறு என்ன செய்தி வேண்டும்?






No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.