இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, March 21, 2010

கற்புநெறி தவறாத கள்ளக்காதல் கலாச்சாரம்

புனிதமான காதலின் போக்கு எந்தப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது இந்த நாட்டில். கள்ளக்காதலுக்காக கணவனை பிரிந்து செல்லும் அப்பாவி மனைவிகளும், அரசாங்கத்தை நம்பி புருஷன் மீது பொய்கேசு போடும் அப்பாவிப் பெண்களும் நாட்டில் அதிகரித்துவருகின்றனர்.


மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது
தினமலர் மார்ச் 22,2010

கோவை: கள்ளக்காதலுக்காக கணவரை பிரிந்த நர்ஸ், மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை டாக்டரை போலீசார் கைது செய்தனர்.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி(40). மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திராநகரில் வசித்தார். சின்னியம்பாளையத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் தரணிக்குமாருடன் ஐந்து ஆண்டுகளாக ரேணுகா தேவி நெருங்கிப் பழகினார்.இதையறிந்த ரேணுகாதேவியின் கணவர் சுரேஷ்குமார், மனைவியை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்தது. மனைவியை பிரிந்த சுரேஷ்குமார், விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, துடியலூரில் வசிக்கிறார்.

இந்நிலையில், டாக்டர் தரணிக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த ரேணுகாதேவி அதிர்ச்சி அடைந்தார்; டாக்டரிடம் அதிருப்தியை தெரிவித்துள்ளார். சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக, தன் ஒரே மகளுக்கு ஊசியில் மயக்க மருந்து செலுத்தி, மயக்கமடைந்ததும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.நேற்று காலை வெகு நேரம் வீடு திறக்காததை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே ரேணுகாதேவி தூக்கில் தொங்கியபடியும், சிறுமி பிணமாகவும் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்தவர்கள், சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், தாய், மகளின் பிணத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை நடந்த அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ரேணுகாதேவி எழுதி வைத்த கடிதம் சிக்கியது.கடிதத்தில், 'ஐந்து ஆண்டுகளாக டாக்டரை உயிருக்குயிராக காதலிக்கிறேன். இக்காதலுக்காக, எனது கணவரிடம் இருந்து பிரிந்தேன். தற்போது, தனியார் எப்.எம்.ரேடியோவில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருடன் அடிக்கடி டாக்டர் சுற்றுகிறார்.எங்கே என்னை விட்டு பிரிந்து விடுவாரோ என்ற அச்சத்தில் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தோம். இந்த தற்கொலைக்கு டாக்டர் தரணிக்குமார் தான் முழுக் காரணம்' என, கடிதத்தில் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். கைதான டாக்டர் தரணிக்குமார், திருமணமானவர். அவருக்கு, மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
========================

கள்ளக்காதல் போற்றும் பெண்டிரும், பொய்வழக்குப்போடும் மனைவியரும் தங்கள் கள்ளக்காதலிலும் கலாச்சாரத்திலும் ஒரு கற்பு நெறியை கடைபிடித்து வருகின்றனர். தன்னுடைய கள்ளக்காதலன் தனக்கு கிடைக்கவில்லையென்றால் ஒன்று அவனை கொலை செய்வது அல்லது தன்னுடையை குழந்தையையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டு போகிற போக்கில் கள்ளக்காதலனை போலிஸில் போட்டுவிட்டுப் போவது. இதுதான் இவர்களின் நவீன காலத்து கற்பு நெறி. இது கள்ளக்காதல் பெண்களின் கற்பு நெறி.

பொய் வரதட்சணை கேசு போடும் மனைவிகளின் கற்பு வித்தியாசமானது. தான் நினைத்ததை அடைய முடியவில்லையென்றால் கணவன் மற்றும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் சிறையில் தள்ளப்படவேண்டும் என்பதுதான் பொய் வழக்குப் போடும் பெண்களின் பெருமைமிகு கலாச்சாரம். என்ன ஒரு கலாச்சாரப் பற்று.

கற்புநெறி தவறாத கள்ளக்காதல் மனைவியருக்கும், பொய்வழக்குப் போட்டு கலாச்சாரத்தைப் போற்றும் மனைவியருக்கும் துணை செய்வதையே கடமையாகச் செய்யும் சட்டங்களும், நீதி, காவல்துறைகளும் வாழ்க! இந்த கடமை தவறாத கண்ணியவான்களுக்கு உண்மையான அப்பாவிப் பெண்களான வயதான தாய்மார்களும், சகோதரிகளும் என்றுமே கண்களுக்கு தெரியமாட்டார்கள்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.