இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, March 21, 2010

பெண்ணுக்கு அரைகுறை ஆடையும் பார்ப்பவர்க்கு தடித்த தோலும்

இந்த வார வாரமலரில் அந்துமணி கேள்வி பதில் பகுதியில் வந்துள்ள செய்தி இது.

===========================================================

அ.வள்ளி, காமநாயக்கன்பாளையம்:
அங்கங்களை அம்பலப்படுத்தி நடிக்கும் சினிமா நடிகைகளால், பெண்களான எங்களுக்கு கோபம் ஏற்படுகிறதே....




* காமநாயக்கன் பாளையத்திலிருந்து சென்னை வந்து பாருங்கள். நடிகைகளின் உடைகளைத் தூக்கி சாப்பிடும் வகையில் உடை அணிகின்றனர் சென்னை பெண்கள். இதெல்லாம், 'பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்' ஆகிக் கொண்டு வருகிறது... தடித்த தோலுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டியது தான்!
===========================================================

நகரத்துப் பெண்களிடையே ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் “பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்” என்று எடுத்துக்கொள்ளவேண்டும்! இவர்கள் போடும் பொய்வரதட்சணை வழக்குகளும் அப்படித்தான்.

உடை விஷயத்தில் மட்டுமல்ல. பெண்கள் சட்டங்களைத் தவறாகப்பயன்படுத்தி பொய்வழக்குகள் போடுகிறார்கள். இது ஒரு தவறான செயல் என்பதை உணரும் நிலையில் கூட இல்லாமல் இந்த ஒட்டுமொத்த சமுதாயமும் தடித்த தோலுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினாலும் நீதிமன்றங்களும் பொதுமக்களும் பொய்வழக்கில் சிக்கியவருக்கு சொல்லும் முதல் அறிவுரையும் இது தான் “இதெல்லாம், 'பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்' ... தடித்த தோலுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டியது தான்!


இதுபோன்ற நகரத்து மேல்தட்டுவர்க்கப் பெண்கள்தான் தங்களின் வாழ்க்கைத்தரம் அடிமட்டத்தில் இருப்பதாகவும் தங்களின் தரம் மேலும் உயர அரசியலில் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று
மகளிர் சங்கங்கள் என்ற பெயரில் நாடெங்கும் புரட்சி முழக்கமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.