இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, March 07, 2010

குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் சேர்த்து திருமணம் செய்யலாமா?

பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றினால் சில பெண்கள் அதனைப் பயன்படுத்தி எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார்கள்.


மாமனார் வீட்டில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை
தினமலர் மார்ச் 08,2010

புதுடில்லி: "மாமனார் வீட்டு சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை' என, டில்லி கோர்ட் தெரிவித்துள்ளது.அரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியை, தனது மாமனாரின் சொத்தில் பங்கு கேட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டில்லி செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மது ஜெயின் கூறியதாவது:குடும்ப வன்முறை சட்டம் போன்றவை பெண்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டது. இச்சட்டத்தை வைத்து பெண்கள் யாரையும் மிரட்டக் கூடாது. அதற்கு கோர்ட்டை ஒரு கருவியாகவும் பயன்படுத்தக்கூடாது.

மாமனாரின் சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமை இல்லை. தேவைப்பட்டால் பராமரிப்பு செலவை கணவனிடமோ, மகன் மற்றும் மகளிடம் மட்டுமே கேட்க உரிமை உண்டு.மனு கொடுத்துள்ள பெண், அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவர், தனியார் பள்ளியில் நூலகராக உள்ளார். இருவருடைய சம்பளமும் ஏறக்குறைய 20 ஆயிரமாக உள்ளது. இதை வைத்து அவர்கள் நல்லபடியாக குடும்பம் நடத்தலாம்.அதை விட்டுவிட்டு மாமனார் சொந்த பணத்தில் கட்டிய வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமையில்லை. இந்த வீட்டை கட்டியதில் இவருடைய கணவரின் பங்கு ஏதும் இல்லை.அதுமட்டுமல்லாமல் திருமணமான புதிதில் ஓரிரு நாள் மாமனார் வீட்டுக்கு சென்றதோடு சரி. அதன் பிறகு அந்த பக்கம் திரும்பிக் கூட பார்த்திராத இந்த மருமகள், அந்த வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமை கிடையாது. (மருமகள் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தால் மாமனார் இந்நேரம் வரதட்சணை கொடுமை சட்டத்தில் சிறையில் அல்லவா இருந்திருப்பார்!) இவ்வாறு நீதிபதி ஜெயின் கூறியுள்ளார். மனுவையும் தள்ளுபடி செய்து விட்டார்.

=================

நல்லவேளை இந்த மருமகள் குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் தாலி கட்ட சொல்லுங்கள் என்று சொல்லி பிறகு சொத்தில் பங்குகேட்கலாம் என்று நினைக்கவில்லை. காசுக்காக சட்டத்தின் மூலம் எதைவேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறது.




1 comment:

Robin said...

//திருமணமான புதிதில் ஓரிரு நாள் மாமனார் வீட்டுக்கு சென்றதோடு சரி. அதன் பிறகு அந்த பக்கம் திரும்பிக் கூட பார்த்திராத இந்த மருமகள், அந்த வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமை கிடையாது. //- சரியான தீர்ப்பு.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.