இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, May 17, 2010

மாமியாரை கொலை செய்யலாம் வாங்க!

இந்தக் காலத்து மருமகள்கள் சகலமும் செய்வார்கள்.
  • கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்வார்கள்.
  • அறிவுரை சொன்னால் மாமியாரை கொலை செய்வார்கள்.
  • மனதுக்கு வெறுப்பாக இருந்தால் வேடிக்கையாக தான் பெற்ற குழந்தையை கொலை செய்வார்கள்.
  • பொழுதுபோக வேண்டுமென்றால் கணவனின் ஒட்டுமொத்தக்குடும்பத்தின் மீதும் பொய் வரதட்சணை வழக்குகள் போட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.
எல்லாமே செய்கிறார்களே! இளம் மருமகள்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டதா இந்த நாட்டில்!


மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010

சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை கத்தியால் லட்சுமி குத்தினார். படுகாயமடைந்த சாந்தா, அங்கேயே இறந்தார். 2007ம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்தது. லட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். லட்சுமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.