இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, May 11, 2012

அவர் உயிரோடு இருந்தால் நாங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது!

“அவர் உயிரோடு இருந்தால் நாங்கள் சந்தோஷமாக இருக்கமுடியாது” என்று சொல்வது வேறு யாருமல்ல கள்ளகாமத்தில் ஈடுபடும் மனைவியர் தங்களின் கணவனைத்தான் இப்படி சொல்கிறார்கள். கணவன் உயிரோடு இருந்தால் தங்களின் கள்ளக்காம சல்லாப வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியாது என்று வருத்தப்படுகிறார்கள்.

திருமணம் என்ற புனிதமான பந்தத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களின் இன்ப துன்பங்களை சமமாக கருதவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் என்னவோ மனைவியின் கள்ளக்காமம் என்னும் இன்பத்தில் குறுக்கிடும் கணவனை திருமண ஒப்பந்தத்தை மீறியதாகக் கருதி மனைவியர் தண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. இந்திய கள்ளக்காம சட்டமும் மனைவியர் கள்ளக்காதலில் ஈடுபடுவதை தவறில்லை என்றுதான் சொல்கிறது! கள்ளக்காமத்தில் ஈடுபடும் ஆண் மட்டுமே குற்றவாளி என்று சொல்கிறது.

அதனால்தான் கள்ளக்காமத்தில் ஈடுபடும் ஆணும் குற்றவாளி, மனைவியின் கள்ளக்காமத்திற்கு தடையாக இருக்கும் கணவனும் குற்றவாளி என்று நினைத்து இப்போதெல்லாம் கள்ளக்காமத்திற்கு தடையாக இருக்கும் கணவர்கள் கொல்லப்படுகிறார்கள் போலிருக்கிறது.
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை : போலீசில் மனைவி பரபரப்பு வாக்குமூலம்
தினமலர் 12 மே 2012

சின்னசேலம்: சின்னசேலம் அருகே, கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை கொலை செய்ததாக, மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அடுத்த, பங்காரம் கோமுகி ஆற்றுப்பாலம் அருகே, கடந்த 3ம் தேதி இரவு, முகம் சிதைந்த நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து, "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதை பார்த்த சங்கராபுரம் அடுத்த, ஊராங்கணி கிராமத்தைச் சேர்ந்த கோமதிராணி,31, என்பவர், இறந்தவர் தன் கணவர் தண்டபாணி,35, என்று, சின்னசேலம் போலீசாரிடம் தெரிவித்தார்.போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, கோமதிராணியிடம் விசாரித்தனர். அதில், கள்ளக்காதலன் தன் கணவரை கடத்திச் சென்று கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து, போலீசாரிடம் கோமதிராணி அளித்த வாக்குமூலம்: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தண்டபாணிக்கும், எனக்கும் திருமணமானது. எங்களுக்கு ஹேமபாரதி,12, என்ற மகளும், சுரேந்தர்,10, என்ற மகனும் உள்ளனர். வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்த என் கணவர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். அதன் மூலம், அவருக்கும், சங்கராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகம் என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டது. சண்முகம் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால், எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த என் கணவர், எங்களை கண்டித்தார். அவர் உயிருடன் இருந்தால், நாங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது என்று கருதி, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

கடந்த 3ம் தேதி, ஷேவிங் செய்ய சென்ற என் கணவரை, சண்முகம் மற்றும் அவரின் நண்பர்கள் சங்கராபுரத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி, கடுவனூரை சேர்ந்த குரு ஆகியோர், காரில் கடத்தி சென்றனர். வழியில் தண்டபாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, வாகனம் மோதி இறந்தது போன்று தெரிவதற்காக, சாலையில் அவர்கள் வீசிவிட்டு சென்றனர். பின், சண்முகம் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தண்டபாணியை கொலை செய்ததை கூறினார். இவ்வாறு, கோமதிராணி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

2 comments:

Unknown said...

தங்களது உன்னதமான சமூகப்பணிக்கு எனது பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நன்றி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.