இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, May 24, 2012

காமம் கண்ணை மறைத்தால்... ... ...

காமம் கண்ணை மறைத்தால் அதற்குப் பலியாவது அப்பாவிக் குழந்தைகள்தான். ஆனால் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை. இந்திய கள்ளக் காம சட்டப்படி கள்ளக் காமத்தில் ஈடுபடும் பெண் தண்டனைக்குரிய குற்றவாளி கிடையாது!!
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

பெண்களுக்கான “சிறப்பு” பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சி பெற்ற மருமகள்கள் இதுபோன்ற கள்ளக்காமத்தில் ஈடுபடும்போது தங்களின் கள்ளக்காமத்திற்கு தடையாக இருக்கும் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பக்குவமாக பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்துவிட்டு தங்களது “குதூகலத்தை” தொடர்ந்துகொண்டிருப்பார்கள். ஆனால் இந்த சட்டங்கள் பற்றித் தெரியாத அப்பாவி மருமகள்கள்தான் பாவம். தங்களுடைய கள்ளக் காதலின் “புனிதத்தைக்” காக்க பெற்ற குழந்தைகளையும் தவிக்கவிட்டு “காதலுக்காக” தங்களின் உயிரையும் மாய்த்துக்கொள்ளத் துணிகிறார்கள். அதுதான் இன்று நாட்டில் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது.


கள்ளக்காதல் விவகாரத்தால் "விபரீதம்' விஷம் குடித்து பெண் தற்கொலை

தினமலர் மே 25,2012

திருச்சி: கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால், இரண்டு பெண் குழந்தைகளின் தாய், குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு, விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணாவளைவு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்கண்ணன் (29) கொத்தனார். தற்போது மதுரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (எ) ரோஜா (20). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அடிக்கடி வேலைக்கு வெளியூருக்கு சென்றுவிடுதால் தனிமையில் தவித்த ரோஜாவுக்கும், துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த லோடுமேன் மாணிக்கம் (23) என்பவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. திருமணமாகாத மாணிக்கத்துடன் ரோஜா, பல இடங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தார்.

இவர்களின் தொடர்பை அறிந்த இரண்டு குடும்பத்தினரும் பலமுறை கண்டித்தும் இவர்கள் உறவை துண்டித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 16ம் தேதி கள்ளக்காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது. இதுகுறித்து ராஜ்கண்ணன், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.போலீஸார் வழக்குப்பதிந்து கள்ளக்காதல் ஜோடியை பிடித்து விசாரித்தனர். "கள்ளக்காதலை கைவிட்டு இருவரும் ஒழுங்காக வாழுங்கள். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கையுடன் அறிவுரை கூறி அவரவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மனமுடைந்த நிலையில் இருந்த இருவரும், நேற்று அதிகாலை "பெல்' காலனி குப்பைக்கிடங்கு அருகே ரகசியமாக சந்தித்துக் கொண்டனர். "வாழ்வில் இல்லாவிட்டாலும், சாவில் ஒன்றாக இணைவோம்' என்று அரளி விதையை அரைத்து தின்றுவிட்டனர். உயிருக்கு போராடிய அவர்களை கண்ட சிலர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிக்சை பலனின்றி ரோஜா இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணிக்கம் சிகிச்சை பெறுகிறார்.இதுகுறித்து துவாக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
பதிவுகள் அனைத்தும் அரிய தக்வலகள் கொண்டதாகவும்
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய
பயனுள்ள தகவலாகவும் உள்ளது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நன்றி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.