இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, April 01, 2012

(கள்ளக்) காதல் சுகமானதுதான், கணவனைக் கொல்லாதவரை!

இந்திய கள்ளக்காதல் சட்டத்தைப் பொறுத்தவரை கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி கணவனைக் கொல்லாதவரை அப்பாவிதான். இது தெரியாமல் பலர் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை கொன்றுவிட்டு சட்டப்பூர்வமாக கிடைக்கும் சுகமான (கள்ளக்) காதல் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். இன்னும் சட்டங்கள் பற்றிய போதிய விழிப்புணர்ச்சியே இல்லை!!

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

காதல், கல்யாணம், கள்ளக் காதல் இந்த மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொண்டு பின்வரும் செய்தியை தொடர்ந்து படியுங்கள்.



சாத்தூர் : கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில், அருப்புக்கோட்டை ஒன்றிய தி.மு.க., செயலர் சாகுல் அமீதுவை, சாத்தூர் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலி மாரியம்மாளும் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல் குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது, 56; ஒன்றிய தி.மு.க., செயலர். இவருக்கும், சேதுராஜபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி மாரியம்மாளுக்கும், 45, இடையே கள்ளத் தொடர்பு இருந்தது. லட்சுமணன், 50, திருவேங்கடபுரத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்த போது, இருக்கன்குடி அருகே லட்சுமியாபுரம் ரோட்டில் 2007 அக்., 30ல் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இருக்கன்குடி போலீசார் விசாரித்தனர்.

எஸ்.பி., சின்னையா டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் தனிப்படை போலீசார், சாகுல் அமீது, மாரியம்மாளை கைது செய்து விசாரித்தனர். இதில், இருவரும் சேர்ந்து லட்சுமணனை அடித்து, சுமோ காரை ஏற்றியும் கொலை செய்தது தெரியவந்தது. சாத்தூர் மாஜிஸ்திரேட் கோட்டில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டார். சாகுல் அமீது, மதுரை மத்திய சிறையிலும், மாரியம்மாள், திருச்சி மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

கொலையாளிகள் சிக்கியது எப்படி?

கூடுதல் எஸ்.பி., சாமிநாதன் கூறியதாவது: மாரியம்மாள், சாகுல் அமீதின் சகோதரியின் பள்ளித் தோழி. சாகுல் அமீதுக்கும், மாரியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாரியம்மாள் லட்சுமணனை திருமணம் செய்த பின்னரும் கள்ளக்காதல் தொடர்ந்தது. மாரியம்மாளை லட்சுமணன் கண்டித்தார். கணவரை கொல்ல இருவரும் திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று இரவு, 7 மணிக்கு சேதுராஜபுரத்தில் இருந்து திருவேங்கடம் செல்ல பஸ்சுக்காக லட்சுமணன் ரோட்டில் காத்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி மாரியம்மாள், சாகுல் அமீது சுமோ காரில் வந்தனர். லட்சுமணனை திருவேங்கடத்தில் இறக்கிவிடுவதாக ஏற்றிக்கொண்டனர். பந்தல்குடி வழியாக இருக்கன்குடி ரோட்டில் வந்தனர். லட்சுமியாபுரம் என்ற இடத்தில் காரை நிறுத்தினர். சிறுநீர் கழிக்க இறங்கிய லட்சுமணனை, சாகுல் அமீதும், மாரியம்மாளும் டார்ச் லைட்டால் தாக்கி, கார் ஏற்றி கொலை செய்தனர்.
சுமோ ஒருவர் மீது ஏறிச் செல்வதை, இருக்கன்குடியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பார்த்து, கார் நம்பரை போலீசாரிடம் தெரிவித்தனர். சென்னையில் இருந்த அந்த காரை கண்டுபிடித்த பின் தான், கொலை சம்பவம் தெரிய வந்தது என்றார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.