மும்பை: மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் ஐகோர்ட் நீதிபதியின் மகள் மனிஷா மாஷே லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகராஷ்டிரா மாநில ஐகோட் முன்னாள் நீதிபதியும் மாநில நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவருமான மாஷேயின் மகள் மணிஷா. இவர் வக்கீலாக தொழில் நடத்தி வருகிறார்.
இவர் தேசியநுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தி்ல் உள்ள வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட நபருக்கு சாதமாக தீர்ப்பு பெற்று தருவதாக கூறியுள்ளார். இதற்காக லஞ்சமாக ரூ.30 லட்சம் தருவது என முடிவானது. இந்த பணத்தை பெறுவதற்காக புனே வந்த மணிஷாவின் ஆதரவாளர்கள் இருவரை சிபிஐயின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த சிபிஐயினர் அவுரங்காபாத்தில் வைத்து மணிஷாவை கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மணிஷா போனில் பேசிய விவரங்களையும் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரிடமும் வரும் 18-ம் தேதி வரை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையில் குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் முதல்அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.
இது தமிழகத்தின் செய்தி....
No comments:
Post a Comment