இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, June 12, 2011

பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் தன்னாட்சியின் முதல்படி

அன்றைய தமிழ்நாட்டில் வேலு நாச்சியார் போன்ற பெருமை மிக்க பெண்கள் வாழ்ந்து பெண்மைக்கு பெருமை சேர்த்தார்கள்.....


இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் (1730) வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியடித்த வீரத்தாய் வேலு நாச்சியாரின் வரலாற்று நாட்டிய நாடகம், பரதாஸ்ரம் அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்தது. இதில் நடன கலைஞர்களின் முக்கிய காட்சிகள் பார்பதற்கு தத்ரூபமாக இருந்தது. (நன்றி- தினமலர் செய்திப் படம்)

சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள் போன்ற பெண்களால் பெருமை அடைந்தது பெண்மை. அவர்கள் வாழ்ந்த இதே தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களின் நிலை இதுதானோ?

(நன்றி தினமலர் கருத்துப்படம்)
ஆண்கள்தான் குடித்துக் கெடுகிறார்கள் நீங்களும் ஏன் குடிக்கிறீர்கள் என்று சொன்னால் பெண்ணுரிமைத் தலைவிகளுக்கு கோபம் வந்துவிடும். ஏன் ஆண் மட்டும்தான் குடிக்கவேண்டுமா? பெண்கள் குடித்தால் தவறா? பெண் என்ன அடிமையா என்று வெகுண்டு எழுவார்கள்.

அதனால் ஆணுக்கு நிகராக பெண்ணும் மதுசாலைக்கு வந்துவிட்டாள். ஆகா! பெண்ணுக்கு ஆனந்த சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்து பெண்ணுரிமை பேசுவோர்களின் மனங்களை மகிழ்விப்போம்!
இதுவே பெண்ணுக்கு கிடைத்திருக்கும் தன்னாட்சியின் (Women Empowerment) முதல்படி என்றுகூட சொல்லாம்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.