இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, February 26, 2013

கற்பழிப்பைவிட தினசரி நடந்துகொண்டிருக்கும் மோசமான பெண் கொடுமை


ஒரு பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தால் உடனடியாக அவைகூடி அடுத்தநாளே புது சட்டம் போட்டு ஆண்கள் அனைவருக்கும் “கொட்டை” நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூப்பாடு போடும் கூட்டம் பல ஆண்டுகளாக இளம் பெண்களுக்கு எதிராக நாட்டில் இருக்கும் அவலத்தைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. இதில் பொது மக்களும் அடக்கம்.

பெண்களுக்கு விழிப்புணர்ச்சியும், சுய சிந்தனையும் அளிக்கும் இடங்களாகிய கல்விக் கூடங்களில் கழிவறை, குடிநீர் வசதியில்லாமல் மாணவ மாணவிகள் திண்டாடுவது காலம் காலமாக இந்தியாவில் இருந்துகொண்டிருக்கும் அவலம்.  இதைப் பற்றி இதுவரை ஒருவர்கூட குரல் கொடுத்ததில்லை.  ஏன்?

உண்மையான பெண் சுதந்திரத்தில் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை.  பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு சிந்திக்கும் திறன் ஏற்பட்டுவிட்டால் அவர்களை மேல்நாட்டு கவர்ச்சி வலையில் வீழ்த்தி தவறான வழிக்கு அழைத்துச் சென்று “பெண்ணுரிமை” என்ற பெயரில் பணம் சம்பாதிக்க முடியாது என்ற உண்மையை அறிந்தவர்கள் எப்போதும் நகர்ப்புற மேல்தட்டு பெண்களை மட்டுமே மையமாக வைத்து “பெண்ணுரிமை” பேசி வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். 

உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் செல்லும் நகராட்சி அல்லது அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் அடிப்படை வசதி இருக்கிறதா என்று என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா? உங்கள் வரிப்பணம் கற்பழிப்பிற்கு நஷ்ட ஈடு கொடுக்க மட்டும்தான் பயன்படுத்தப்படவேண்டுமா?

பிப்ரவரி 26,2013 தினமலர்


ஜோத்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிகளில் கழிப்பறை இல்லாததால், கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று லட்சம் மாணவியர், படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளி குழந்தைகள் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது; இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லாததால், கடந்த கல்வி ஆண்டில், 45 ஆயிரம் மாணவியர், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.

மூன்று ஆண்டுகளில், மொத்தம், மூன்று லட்சம் மாணவியர், இந்தப் பிரச்னைக்காக படிப்பை கைவிட்டுள்ளனர். முதல்வர் அசோக் கெலாட்டின் ஜோத்பூர் தொகுதியில், 144 பள்ளிகளிலும், மாநில கல்வி அமைச்சர், பிரிஜ்கிஷோர் சர்மாவின், ஜெய்ப்பூர் தொகுதியில், 236 பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை.

"வரும் ஏப்ரல் மாதத்திற்குள், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு, தனி கழிப்பறை வசதிகளை அமைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், இந்த நிலைமை காணப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை, மாணவ, மாணவியர் பாதியில் கைவிடுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சில மாநில அரசுகளின் கவனக் குறைவால், இதுபோன்ற நிலைமை காணப்படுகிறது.

1 comment:

Anonymous said...

மிகச் சரியான ஒரு விடயத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள், அரசுப் பள்ளியென சென்னை போன்ற நகரங்களின் தனியார் பள்ளியிலே குடிநீர், கழிவறை வசதிகள் ஏதுமில்லை அது குறித்து எவருக்கும் கவலையுமில்லை. வாழ்க பாரத சமுதாயம் !

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.