இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, March 05, 2013

பெற்ற குழந்தையைக் கொல்வதும் பெண்ணுரிமையின் வெளிப்பாடுதான்

இந்தியாவில் சமீப காலமாக  நாகரீகம், பெண்ணுரிமை என்ற பெயரில் பல இளம் பெண்கள் திருமண பந்தத்தை அறுத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு துணையாக பல பெண்ணுரிமை சங்கங்கள் குரல் கொடுக்க அரசாங்கம் பல சட்டங்களைக் கொடுத்து வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

இதன்விளைவாக பல குடும்பங்களில் மருமகள்களால் பொய் வரதட்சணை வழக்குகள் உருவாக்கப்பட்டு கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அரசாங்கத்தால் நீதிமன்றங்களில் துன்புறுத்தப்படுகிறது.  மருமகள்கள் பொய்வழக்குகள் மூலம்தான் முழுமையான “பெண்ணுரிமையை” பெறமுடியும் என்ற பிரச்சாரமும் நடந்துகொண்டிருக்கிறது.

தங்களது உரிமைக்காக தாலி அறுத்துக் கொள்ள நீதிமன்ற வாயிலில் காத்திருக்கும் பெண்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை.  தாய்மை இருந்தால்தானே பிள்ளையைப் பற்றிய எண்ணம் ஏற்படும்.  பிள்ளை பெற்றதால் மட்டும் ஒருவள் தாயாகி விடமுடியாது.

இதன் உச்சகட்டமாக இப்போது கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.  தாய் என்ற கருணை உள்ளத்தை இழந்துவரும் கேடு கெட்ட இனமாக இப்போது மனித இனம் மாறிக்கொண்டிருக்கிறது.  அதற்கு தவறான பெண்கள் ஆதரவு சட்டங்கள் வழி செய்துகொண்டிருக்கின்றன.




மார்ச் 05,2013 தினமலர்

சென்னை: கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தன் ஒரு மாத பெண் குழந்தையை கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம், மூக்காத்தாள் தெரு, டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில், வெங்கல்ராவ் என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, காவலாளியாக பணிபுரிகிறார். இவர், ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர்.

சந்தேகம் என்ற நோய் : இவரது மகள் ரம்யாவுக்கும், 19, வாரங்கல்லை சேர்ந்த உறவினர் பாபுவுக்கும், 24, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும், டைமண்ட் குடியிருப்பு பகுதியில், காவலாளிக்கான அறையிலேயே வசித்து வந்தனர். பாபு பெயின்டர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு, வர்ஷா என்ற, ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாபு அடிக்கடி, அலைபேசியில் யாருடனோ பேசி உள்ளார். இது, ரம்யாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பாபுவுக்கும், ரம்யா மீது சந்தேகம் இருந்துள்ளது. இதனால், தம்பதிகளுக்கிடையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பாபு, ரம்யாவின் தந்தை வெங்கல்ராவ் உள்ளிட்ட சிலர், வாரங்கல்லில் நடந்த திருவிழாவுக்கு சென்றனர். ரம்யா கைக்குழந்தையுடன் இருப்பதால், அவருக்கு துணையாக, பாக்யா என்ற உறவுக்கார பெண்ணை விட்டுச் சென்றனர்.

குழந்தையை கொன்றார் : நேற்று அதிகாலை, குழந்தையை காணவில்லை என, ரம்யா கூறினார். பின், குடியிருப்பு வளாகத்தில் கிடந்த பழுதடைந்த துணி துவைக்கும் இயந்திரத்தில், துணியால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்து கிடப்பதாக சொல்லி கதறி அழுதார்.

தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், விசாரணை நடத்தினர். வெளி ஆட்கள் யாரும் இதை செய்திருக்க முடியாத நிலையில், ரம்யாவை விசாரித்தபோது, குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். கணவரை பிரிந்து, தனக்கென வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள, ரம்யா நினைத்துள்ளார். பாபு ஊருக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குழந்தையை கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.