இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 25, 2012

இந்தியாவில் உயிரினமாகவே கருதப்படாத பெண்ணினம் எது தெரியுமா?

சென்ற வாரம் பண போதையில் மிதந்து மதுசாலையில் பிறந்த நாள் கொண்டாடி மகிழச் சென்ற இளம் பெண்ணுக்கு குடிகார நண்பர்களுடன் நடந்த சண்டைக்கு கொடி பிடித்து போராடிவரும் தேசிய பெண்கள் வாரியமோ, உள்துறை அமைச்சகமோ பின்வரும் படத்தில் இருக்கும் பெண்களுக்காக என்றாவது தீவிரமாக குரல் கொடுத்திருப்பார்களா?

தினமலரில் வந்த படம் 25 ஜூலை 2012
ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் விட்டு வல்லரசாகிக் கொண்டிருக்கும் நாட்டில் காலில் காலணிகூட இல்லாத பள்ளிச் சிறுமிகள், “டீ” வாங்கிக் கொண்டு செல்லும் அவலம்.

இதுபோலத்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளிலும் கணவனை சிறையில் அடைத்து மருமகளுடன் குதூகலம் அடையும் அரசாங்கமோ, பெண்கள் அமைச்சகமோ, பெண்கள் வாரியமோ, பெண்கள் அமைப்புகளோ அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இதுவரை ஒரு துளிகூட கவலைப்பட்டதில்லை. இதுபோல் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளில் அரசாங்கத்தின் உதவியால் அனாதையாக்கப்பட்டு கவனிக்கப்படாத குழந்தைகள் லட்சக் கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது இருட்டடிக்கப்பட்ட கசப்பான உண்மை.


1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் சொல்வது எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தே!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.