இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, January 10, 2012

ஏன்டி இந்த கொல வெறி? சிதையும் இந்தியக் குடும்பங்கள்

இந்தியாவில் குடும்பங்களில் ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்குக்கூட தகுந்த மனநல ஆலோசனை வழங்காமல் எடுத்ததற்கெல்லாம் கிரிமினல் IPC498A - வரதட்சணை வழக்குப் பதிவு செய்து குடும்பங்களை நாசமாக்கிக்கொண்டிருக்கும் கண்மூடி சட்டங்களால் பல குடும்பங்கள் நாசமாகியிருக்கிறது.

இதுபோன்று குடும்பங்கள் சட்டங்கள் மூலம் நாசமாக்கப்படும்போது அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள்தான் மிகப்பெரிய பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கிறார்கள் . குழந்தைகளின் நலனை இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் ஒருபோதும்ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. கணவன் மனைவி பிரச்சனை என்று காவல்நிலையத்திற்கு வந்தால் உடனடியாக பொய் வரதட்சணை குற்ற வழக்கை பதிவு செய்து யாரோ ஒருவருடைய குடும்பம் நாசமானால் நமக்கென்ன என்று செயல்படும் காவல்துறையாலும், நீதித்துறையாலும் அழிந்த குடும்பங்கள் பல இருக்கின்றன.

இதுபோன்ற சூழலில் சிக்கும் குழந்தைகளின் நிலை எப்படி பரிதாபத்திற்கு உள்ளாகிறது என்பதை காட்டும் செய்தி.

சித்தி எனும் அரக்கியிடம் சிக்கிய குழந்தை : சுற்றிய கிரைண்டர் கல் மீது முகத்தை தேய்த்த கொடூரம்
ஜனவரி 11,2012 தினமலர்


திருப்பூர்: நான்கு வயது குழந்தை முகத்தை கிரைண்டரில் வைத்து அரைத்த சித்தி கொடுமை, திருப்பூரில் நடந்துள்ளது. திருப்பூர், நல்லூர் பொன்கோவில் நகரில் வசிப்பவர் சரவணன்; மனைவி சங்கீதா. இவர்களின் 4 வயது குழந்தை லோசனி; எல்.கே.ஜி., படிக்கிறார். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், சங்கீதா, திருவண்ணாமலையை அடுத்த ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சரவணன், விஜி என்ற பெண்ணை திருமணம் செய்து, அதே பகுதியில் வசித்து வந்தார். சங்கீதாவுக்கு பிறந்த லோசனியை, விஜி துன்புறுத்தியுள்ளார். இதையறிந்து சங்கீதா குழந்தையை கேட்டார்; சரவணன் கொடுக்கவில்லை. இதன்பின், இருவரும், குழந்தையை அவ்வப்போது துன்புறுத்தினர்.

தகவல் தெரிந்ததும் குழந்தையை மீட்ட, "சேவ்' அமைப்பு தலைவர் ஆலோஷியஸ் கூறியதாவது: சரவணன் வீட்டின் அருகில் இருந்தவர்கள், ஹெல்ப் லைன் 1098க்கு தொடர்பு கொண்டனர். அப்பகுதிக்கு சென்று விசாரித்த போது, குழந்தை மீது துணியை போட்டு அழைத்து வந்த விஜி, "கடந்த வாரம் ஒரு விபத்தில் சிக்கியது. அதனால், முகமெல்லாம் காயமாகியுள்ளது' என்றார். முகத்தை திறந்து காண்பிக்க மறுத்தார். போலீசை அழைப்போம் எனக் கூறியதும், குழந்தையை காண்பித்தார். சிகிச்சைகாக குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். "கோபம் வந்தால், சித்தி, ஓடும் கிரைண்டர் முன் முகம் காட்டுவார். சத்தம் போட்டால், கிரைண்டருக்குள் தூக்கி போட்டு உன்னையும் சேர்த்து அரைத்து விடுவேன் என மிரட்டுவார். இரண்டு, மூன்று முறை ஓடும் கிரைண்டரில் என் முகத்தை வைத்து உரசியுள்ளார். தூங்கி எழுந்ததும், குச்சியை வைத்து என் மூக்கின் உட்பகுதியில் இடித்து விடுவார். இரவில் பழுக்க காய்ச்சிய கம்பியை வைத்து கை, கால், பின்புறம் சூடு போடுவார்' என, மருத்துவமனையில் அழுது கொண்டே குழந்தை தெரிவித்தது. இவ்வாறு ஆலோஷியஸ் கூறினார்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லோசனியை பார்க்க சென்ற கலெக்டர் மதிவாணன் கூறும் போது, ""வெளியே சொல்ல முடியாத அளவு குழந்தையை கொடுமைப்படுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் புகுந்து கழுத்தை நெரித்து கொன்று விடக்கூடும். எனவே, தனியார் மருத்துவமனையிலோ, "சேவ்' அமைப்பு பாதுகாப்பிலோ வைத்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்,'' என்றார். இச்சம்பவத்தையடுத்து, சரவணன், விஜி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.



1 comment:

Unknown said...

Ivanga sandaiyil paavam andha kuzhandai

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.