இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, January 03, 2012

காதல் பரிசு - அன்னாசிப் பழம்!

காதல் பரிசு - அன்னாசி பழம்
கல்யாண பரிசு - பொய் வரதட்சணை வழக்கு

(IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act)


கள்ளக் காதலை கணவன் தட்டிக் கேட்டால் மனைவிக்கு இப்போதெல்லாம் கோபம் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது! முன்பெல்லாம் பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து கணவனை அவனது குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது காதலை தொடர்ந்தார்கள். இப்போது தன் கண் எதிரிலேயே கணவன் சிறையில் கஷ்டப்படக்கூடாது என்ற கருணை உள்ளத்தோடு களத்தில் இறங்கி கணவனின் கழுத்திலேயே கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

தவறான மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கும்வரை கணவன்கள் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.


கோட்டயம்: கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார். சதித் திட்டத்தை நிறைவேற்றிய, கள்ளக் காதலனுக்கு மனைவி அன்னாசி பழத்தை பரிசாக வழங்கினார்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே திருக்காக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பால் வர்கீஸ், 35. இவர், எர்ணாகுளத்தில் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சஜிதா, 32. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவரது, சகோதரியின் திருமணம் தொடர்பாக அளித்த விளம்பரத்தை பார்த்து இங்கிலாந்தில் வேலை பார்த்து வந்த டிசன், 31 என்பவர் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் தொடர்பு கொண்டது சஜிதாவுடன் என்பது பால் வர்கீசுக்குத் தெரியவில்லை. தொலைபேசியில் தொடர்ந்த நட்பு, அவர் கேரளாவுக்கு வந்ததும் நேரில் சந்தித்து தொடர்ந்தது. கணவனை விட்டு விலகி, மகள்களுடன் இங்கிலாந்துக்கு வருமாறு டிசன் அழைத்தார். ஆனால், அதற்கு சஜிதா மறுத்து விட்டார். மனைவியின் கள்ளக் காதல் பால் வர்கீசுக்கு தெரிய வந்ததும். மனைவியை கண்டித்தார். இதனால், கோபம் அடைந்த அவர், கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, டிசனுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினார்.

டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவு, பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணவனுக்கு, உணவில் அதிகளவு தூக்க மாத்திரைகளை கலந்து சஜிதா கொடுத்தார். அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டதால் இறந்து விடுவார் என எதிர்பார்த்த சஜிதாவும், டிசனும் ஏமாந்தனர். எனவே, நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த பால் வர்கீசின் கழுத்தில் துண்டால் இருவரும் சேர்ந்து முறுக்கினர். அவர், இறந்து விட்டதை உறுதி செய்ய தலையணையால் முகத்தை அழுத்தினர். இதில் அவர் இறந்து விட்டார் என தெரிந்ததும், சந்தோஷத்தில் திளைத்த சுஜிதா, வீட்டு தோட்டத்திலிருந்து அன்னாசி பழத்தை பறித்து கள்ளக் காதலனுக்கு பரிசாக அளித்தார்.

அவரை அனுப்பி விட்டு, கணவர் இறந்து விட்டார் என உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து அழுது புரண்டார். ஆனால், பால் வர்கீசின் கழுத்தில் இருந்த அடையாளங்களை வைத்து உறவினர்கள் அவர் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகித்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பால் வர்கீசின் கழுத்தில் ரத்தம் தடைப்பட்டுள்ளது தெரிந்தது. இதை அடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் சஜிதாவும், டிசனும் சேர்ந்து தான் கொலை செய்துள்ளது தெரிந்தது. விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

=====
கள்ளக் காமத்தில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடமில்லை என்ற விஷயம் பல பெண்களுக்குத் தெரியாத காரணத்தால் கணவன் கண்டித்ததும் அவசரப்பட்டு அவனை கொலை செய்து தங்களது இனிய காதல் வாழ்வை நாசமாக்கிக் கொள்கிறார்கள். பெண்ணுரிமை பேசுபவர்கள் இந்த சட்ட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் பல “அப்பாவி அபலைப்” பெண்களின் வாழ்வு கொலைப் பழியிலிருந்து பாதுகாக்கப்படும்.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.