இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, June 09, 2009

சுங்கவரி என்றhல் என்னவென்றே தெரியாத படித்த கோடீஸ்வர கண்மணி!

பிரபல பெண் தொழிலதிபருக்கு ஜாமீன்

Dinamalar News: June 10, 2009

மும்பையைச் சேர்ந்த பிரபல பெண் தொழிலதிபர் ஷீத்தல் மபத்லால். இவரின் குடும்பத்தினர் தான், மபத்லால் குரூப் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். கடந்த 12ம் தேதி லண்டனிலிருந்து மும்பை வந்த ஷீத்தல், சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனைக்கு ஆட்படாமல், விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டார். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளைக் கொண்டுவந்த அவர், அவற்றுக்கான வரியைச் செலுத்தாமல் தப்பிக்க முற்பட்டதாக, இந்திய சுங்கச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரின் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷீத்தலின் சார்பில் ஆஜரான வக்கீல், "என் கட்சிக்காரருக்கு எதிராக வேறு எந்த வழக்கும் இல்லை. சட்ட விதிகளை மீறியிருந்தால், அதற்கான வரியைச் செலுத்தவும் தயாராக உள்ளார்' என்றார். உடன், ஐந்து லட்சம் ரூபாய் ஜாமீனில் அவரை விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மபத்லால் குடும்ப வாரிசான அதுல்யாவை மணக்கும் முன், ஷீத்தல் மாடல் அழகியாகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.