இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 10, 2012

தானாக சரணடைந்த நேர்மையான கணவர்!

தாண்டிக்குடி:கொடைக்கானல் மலைப்பகுதி தாண்டிக்குடி அருகே பட்லாங்காட்டை சேர்ந்தவர் வேல்முருகன், 39. இவரது வீட்டருகே, மங்களம்கொம்பை சேர்ந்த கணேசன், 42, குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தார். வேல்முருகன் மனைவி கவிதா, 25. இவருக்கும் கணேசனுக்கும் தொடர்பு இருந்துள்ளது. வேல்முருகன், மனைவியை எச்சரித்தும் தொடர்பு தொடர்ந்துள்ளது. நேற்று காலை 10 மணிக்கு தோட்டத்திற்கு வந்த கணேசன் வீட்டின் பின்புறமாக கவிதாவை அழைத்து பேசியுள்ளார்.

அங்குவந்த வேல்முருகன், ஆத்திரமடைந்து கவிதாவை அரிவாளால் வெட்டினார். கணேசன் தப்பியோடியபோது விரட்டிச்சென்று வெட்டினார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேல்முருகன், அரிவாளுடன் தாண்டிக்குடி போலீசில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரிக்கிறார்.கவிதாவிற்கு கோகிலா, 8, கோபாலகிருஷ்ணன், 3 என்ற குழந்தைகள் உள்ளனர். கணேசனுக்கு மனைவி சித்ரா, திருமணமாகும் நிலையில் மணிமேகலை, செல்லமணி என்ற இருமகள்கள் உள்ளனர்.

======

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

இந்திய கள்ளக்காம சட்டத்தின்படி தவறான உறவில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க சட்டத்தில் வழியே இல்லை. அதனால் கணவன் இந்த தவறை தட்டிக்கேட்டால் பெரும்பாலும் மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குத்தான் செல்லவேண்டும் என்ற சூழ்நிலை நாட்டில் பல ஆண்டுகளாக நிலவிவருகிறது.

படித்து உயர் பதவியில் இருக்கும் மேல்தட்டு குடும்பங்களில் கணவன்கள் இதுபோன்ற மனைவியின் கள்ளக்காம பிரச்சனையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கடைசியில் மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி ஜாமின் வாங்கிக்கொண்டு “கவுரமாக” உலவவுதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் ஆண்கள் இந்திய கள்ளக் காம சட்டத்தைப் பற்றி தெரிந்தோ தெரியாமலோ தாங்களே நேரடியாக தங்களுக்குத் தேவையான நீதியை எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்திய கள்ளக்காம குடும்ப பிரச்சனைகளில் நாட்டில் இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலம்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.