இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, April 19, 2013

மனைவி கையால் கலந்து கொடுக்கும் மதுவை கணவன் அருந்தலாமா?

ஆண்கள் குடித்து மகிழ வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருகிறது.  இந்த இன்பத்திற்கு மேலும் இன்பமூட்ட மனைவி கையால் அந்த மதுவை சரியான விகிதத்தில் கலந்து  அதை வாங்கி அருந்தினால் மேலும் இன்பம் கிடைக்கும் என்று கணவன்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் கணவர்களுக்கு இந்த செய்தி. 

இந்திய கள்ளக் காதல் சட்டப்படி கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது.  இப்படி சட்டமே குற்றவாளி இல்லை என்று சொல்லும்போது கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவியை கணவன் தடுக்க நினைப்பது சட்டப்படி சரியாகுமா? என்று பல மனைவியர்கள் நினைக்கிறார்கள்.  இப்படி மனைவியின் கள்ளக்காதல் உரிமையில் தலையிட்டு மனைவியின் பெண்ணுரிமையை பறிக்க முற்பட்ட ஒரு கணவருக்கு தக்க பாடம் கற்பிக்க எண்ணிய அவரது மனைவி கணவனுக்கு அன்பாக மது கொடுத்திருக்கிறார்.  அந்த மதுவில் அவர் கலந்தது அன்பா அல்லது இந்திய கள்ளக்காதல் சட்டமா?

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

கணவரை கொல்ல மதுவில் விஷம்: தவறுதலாக குடித்த மற்றொருவர் பலி
 
ஏப்ரல் 20,2013 தினமலர்

ராமநாதபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, விஷம் கலந்த மது கொடுத்து மனைவி கொல்ல முயன்றார். தவறுதலாக விஷமதுவை மற்றொருவர் குடித்து இறந்தார். இதுதொடர்பாக, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் காட்டூரணியை சேர்ந்தவர் கண்ணன். இவரது நண்பர் முனீஷ்குமார், 27. கட்டட பணி செய்த இருவரும் நண்பர்கள். அடிக்கடி, நண்பர் வீட்டுக்கு சென்றவந்த முனீஷ்குமாருடன், கண்ணன் மனைவி வனிதாவுக்கு, 24, கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கண்ணன், இருவரையும் கண்டித்தார். கள்ளக்காதலுக்கு, இடையூறாக இருந்த கணவரை, கொலை செய்ய, வனிதா திட்டமிட்டார். இதற்கு, கள்ளக்காதலன் முனீஷ்குமார் உதவினார்.

குடிப் பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி, கண்ணனை கொலை செய்ய, முடிவு செய்தனர். கடந்த 16ம் தேதி, கண்ணன், குடித்து விட்டு, மீதி வைத்திருந்த பிராந்தியில், பூச்சி மருந்தை கலந்தனர்.

அன்று இரவு, மீதி சரக்கை குடிக்க, தேவிப்பட்டினம் அருகே இலந்தைக் கூட்டத்தைச் சேர்ந்த, ராதன் என்பவர் வீட்டிற்கு, அந்த மது பாட்டிலுடன் கண்ணன் சென்றார். அங்கு தாராளமாக மது பறிமாறப்பட்டதால், கண்ணன் கொண்டு சென்ற சரக்கை, யாரும் குடிக்கவில்லை. அது, அங்கேயே கிடந்தது. கடந்த, 17ம் தேதி, ராதன் வீட்டிற்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன், வெஸ்லி உட்பட சிலர் மது அருந்தினர். மது விருந்துக்கு, கடைசியாக வந்த ரமேஷ் என்பவருக்கு, சரக்கு கிடைக்கவில்லை. இதனால், கண்ணன் முந்தின நாள் கொடுத்து வைத்திருந்த மதுவை, ரமேஷ் மட்டும் குடித்தார். சிறிது நேரத்தில், அவர் மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம், அவர் இறந்தார். தேவிப்பட்டினம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ரமேஷ் குடித்த மது பாட்டிலை, போலீசார் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. பாட்டிலை கொடுத்த கண்ணனிடம், போலீசார் விசாரித்தனர். தெடர்ந்து நடந்த விசாரணையில், உண்மை வெளியானது. இதையடுத்து, வனிதா மற்றும் முனீஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.