இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label IPC498A. Show all posts
Showing posts with label IPC498A. Show all posts

Thursday, August 12, 2010

கலியுக மருமகளால் வரப்போகும் ஆபத்து!

போலியான பெண்ணியவாதிகள் கூட்டம் எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது, பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள், பெண்களுக்கு அங்கே அது நடக்கிறது, இது நடக்கிறது என்று கூப்பாடு போட்டு மோடி வித்தைக்காரர்கள் போல கூட்டம் சேர்த்து காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அற்பத்தனமான சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப்படும் (IPC498A, Domestic Violence Act) தவறான ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்த சட்டங்களால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிட பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். ஒரு கலியுக மருமகளின் பொய்யான வரதட்சணைப் புகாரால் ஒரு குடும்பத்திலுள்ள குறைந்தது 4 - 6 பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இதுபோன்ற போலியான பெண்ணியவாதிகளின் முகத்திரையைக் கிழித்து ஒரு புதுமைப் பெண் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்கட்டுரையையும் பின்வரும் இணைப்பில் சென்று படியுங்கள்.

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான்.


மேலுள்ள கட்டுரையைப் படித்தபிறகு கலியுகப் பெண்கள் ஏன் மோசமான போலியான பெண்ணியவாதிகளால் தவறான பாதையில் இப்படி தவறான சட்டங்கள் மூலமாக வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள் என்று யோசித்தால் அதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதி வெண்பா என்ற பழந்தமிழ் நூலில் ஒரு அறிஞர் பாடிச் சென்றிருக்கிறார்.

நீதிவெண்பா

32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் கிரேதாயுகத்தில் ரேணுகை என்ற பெண்ணால் உலகம் அழிந்தது. திரேதாயுகத்தில் சானகி என்ற சீதையால் இராமாயணப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது. அதன்பிறகான காலத்தில் திரௌபதி என்ற பெண்ணால் பாரதப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது.

இந்தக் கலியுகத்தில் வீட்டிற்கு வீடு இருக்கும் ஒரு பெண்ணால் இந்த உலகம் அழியும் என்று அந்த அறிஞர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் யாருமல்ல பொய்யான பெண்ணுரிமை பேசும் கூட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு தவறான சட்டங்கள் என்ற ஆயுதங்களை கையில் எடுத்து சிறு குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் அனைவரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கும் மருமகள்தான் அந்தப் பெண். புராண காலத்து யுகங்களில் இருந்த பெண்களால் அநீதிக்கு எதிராக போர் ஏற்பட்டது. ஆனால் இந்தக் கலியுகத்தில் ஏற்பட்டிருக்கிற போரில் நீதியை அழிக்க அநீதிகளலெல்லாம் ஒன்று கூடி தவறான சட்டங்கள் என்ற உருவில் வந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

அதனால் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை பண்புடன் வளர்த்து நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் மாற்றுவது பெற்றவர்களின் கடமை. இல்லையெனில் நீதிவெண்பாவில் சொன்னது உண்மையாகிவிடும். இப்போதே நாட்டின் நிலைமை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்தியிலேயே நீங்கள் உணரமுடியும். அதற்கான சிறு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.


சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

இரும்பு சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்
04 Aug 2010 தினமணி

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்


ஜூலை 29,2010 தினமலர்

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்

சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010
சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஜூலை 16,2010 தினமலர்
Woman ASI caught taking Rs 500 bribe
தாயுடன் கணவனுக்கு கள்ளக்காதல்: நடவடிக்கை கோரி இளம் பெண் புகார்
தினமலர் மார்ச் 05, 2010
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்
கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தினமலர் ஜூன் 12,2010
மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010
மாமியாருக்கு “குத்து”விளக்கு ஏற்றிய குல விலக்கு மருமகள்
தினமலர் 18 மே 2010
மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010
கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

அதனால் அவரவர் வீட்டுப் பெண்களை நல்வழிப்படுத்தி வீட்டையும், நாட்டையும் உலகையும் காப்பாற்றவேண்டியது பெற்றவர்களின் கடமை. பெற்றோர்களே, போலியான பெண்ணியவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் “பெண் விடுதலை” என்பதற்கு தவறான அர்த்தத்தை உங்களின் மகள்களுக்கு காட்டி அவர்களின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள்.





Sunday, February 21, 2010

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

சென்ற ஆண்டு இந்திய ஜனாதிபதி பெணகள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றினார். ஆனால் அதற்கு பல மகளிர் சங்ககங்களும் மகளிர் வாரியங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றிய செய்தியும் அதற்கு செய்தித்தாளில் ஒரு வாசகர் எழுதியிருந்த பதிலும் உங்களின் சிந்தனைக்காக தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு நன்கு யோசியுங்கள்.

வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில்,
"பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

மகளிர் சங்கங்களும் வாரியங்களும் பெண்களுக்கு எந்தவகையான போதனைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிறுமி அழகாக நடித்துக்காட்டியிருக்கிறார். இது தான் இந்த சங்கங்களின் இன்றைய நிலையா என்ற உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த புத்திசாலி சிறுமிக்குப் பாராட்டுக்கள்.





ஜனாதிபதிக்கு "ஜே':
பா.சி.ராமச்சந்திரன், திருவொற்றியூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "வரதட்சணைக் கொடுமை சட்டம், சில பெண்களால் தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு சர்வே கூறியிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று, இந்தியாவின் முதல் பெண்மணியும், நமது ஜனாதிபதியுமான பிரதிபா பாட்டீல் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை. மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஓர் பெண்மணி கூறியதை, உடனே பெண்கள் அமைப்புகள் கண்டனம் செய்தது, கண்டனத்திற்கு உரியதாகும். அவர் அப்படிச் சொன்னது உண்மை தானா என்று ஆராயாமல், அவர் கருத்தை எதிர்ப்பது தவறானது. ஒரு ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கிறதே என்று ஜனாதிபதி வருத்தப் பட்டதையே எதிர்க்கும் பெண்கள், வீட்டில் மாமியாரை எப்படி ஆதரிப்பர்? தங்களுடைய வீட்டில், தன்னைப் பெற்ற அன்னைக்கு ஆதரவாயிருக்கும் பெண்கள், தன்னுடைய கணவரைப் பெற்றதும் ஒரு அன்னையே என்பதை அறியாமல், அவர்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் இன்று ஏராளம். கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில், பெண்கள் தங்களுடைய மாமியார், மாமனாருக்கு எதிராகப் போவதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்திருக்கிறது. அது மட்டுமல்ல, வரதட்சணைக் கொடுமைச் சட்டம், பாலியல் பலாத்காரச் சட்டம் போன்றவைகளையும் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, மாமனார், மாமியார், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களையும் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். அதனால் தான், காவல் துறை எந்த ஒரு சட்டத்தையும் பயன்படுத்தும் போது, தீர விசாரித்து கைது செய்ய வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்' என்றெல்லாம் பேசிவிட்டு, செய்யாத தவறுக்காக பெண் உரிமையைப் பயன்படுத்தி ஆண்களையும், பெண்களையும் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? பல குடும்பங்களில் மருமகள் செய்யும் கொடுமைகளை மாமனார், மாமியார் போன்றோர், காவல் துறைக்குத் தெரிவித்து, மருமகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததற்குக் காரணம், குடும்ப கவுரவம் பாழாகிவிடக் கூடாது என்பதால் தான். இதை இளம் பெண்கள் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்த குடும்ப அமைப்பு. சரியான நேரத்தில் ஜனாதிபதி கூறியது முற்றிலும் சரியே!

Friday, October 16, 2009

அரசியல் குடும்பத்தில் ஒரு வரதட்சணை கூத்து

முன்னாள் பெண் எம்.எல்.ஏ., கணவருக்கு விடுதலை

அக்டோபர் 16,2009

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் பெண் எம்.எல்.ஏ.,வை கொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவரை விடுதலை செய்து சென்னை மகளிர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில், கடந்த 2001ம் ஆண்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருப்பாயி.

இவர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அவரது கணவர் கருப்பையா. இவர் கருப்பாயியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவருக்கு எதிராக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கருப்பாயி புகார் கொடுத்தார். அதையடுத்து கருப்பையா கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள அறையில் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக, கணவர் கருப்பையாவுக்கு எதிராக புகார் கொடுத்தார்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இச்சம்பவம் நடந்தது. இந்த வழக்கை சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி ஜபருல்லாகான் விசாரித்தார். கருப்பையா சார்பில் வக்கீல் செல்வம் சவுந்தர் ஆஜரானார். கருப்பையா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை எனக் கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி ஜபருல்லாகான் உத்தரவிட்டார்.



Thursday, October 08, 2009

சூப்பர் நியூஸ்!

அரசு ஊழியர்கள் வரதட்சணை உறுதி படிவம் அளிக்க உத்தரவு

Dinamalar: October 9,2009

சென்னை: அரசு ஊழியர்கள் தங்களது திருமணம் மட்டுமின்றி, தங்களது குழந்தைகளின் திருமணங்களின் போது வரதட்சணை வாங்கவில்லை என்பதற்கான உறுதிமொழி படிவத்தை, துறைத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் போது, எந்த அரசு ஊழியரும் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ மணமக்களின் பெற்றோர் அல்லது காப்பாளரிடம் எவ்வித வரதட்சணையும் கோரக் கூடாது.இந்த விதிகளில், 2006ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அரசு ஊழியர்கள் தங்களது திருமணத்துக்கு பின் அல்லது தங்களது குழந்தைகளின் திருமணத்தை கொண்டாடும் போது, துறைத் தலைவரிடம் தான் எவ்வித வரதட்சணையும் பெறவில்லை என்பதற்கான உறுதிமொழியை கொடுக்க வேண்டுமென உத்தரவிடப் பட்டது. இந்த உறுதிமொழி படிவத்தில், தங்களது குழந்தையை திருமணம் செய்பவரிடமும், அவரது பெற்றோரிடமும் கையெழுத்து பெற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இந்த விதியில், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அட்டவணை 4ன் கீழ் அரசு வகுத்துள்ள படிவத்தின்படியே உறுதிமொழியை அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர் தங்களது குழந்தையின் திருமணத்தின் போது, இந்த படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பூர்த்தி செய்து, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடுவதோடு, திருமணம் செய்பவரது பெற்றோர் மற்றும் சாட்சிகளிடமும் கையெழுத்து பெற வேண்டுமென தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

========================
இதுவரை யார் பின்பற்றினார்கள்? இனி யார் பின்பற்றுவார்களோ? IPS, IAS- களுக்கும், நீதிபதிகளுக்கும் பிரச்சனை வரும்போது தான் இது போன்ற விதிமுறைகளை தூசி தட்டி தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பு அடியில் வந்தால் தான் எழுந்து தேட ஆரம்பிக்கிறார்கள்.




Tuesday, October 06, 2009

தீபாவளி ஸ்பெஷல்!

வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு

லூதியானா: பஞ்சாபில், வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய மாஜிஸ்திரேட் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர் பால் சிங் கிரேவல்.

இவர், தனது மகள் கரண்தீப் கவுரை, அமிர்தசரஸ் கோர்ட்டில் பணிபுரியும் மாஜிஸ்திரேட் பல்ஜிந்தர் சிங்கிற்கு, கடந்தாண்டு திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில், வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பல்ஜிந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, கரண்தீப் கவுர் போலிசில் புகார் செய்தார். இதையடுத்து, மாஜிஸ்திரேட் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி மற்றும் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மாஜிஸ்திரேட்டின் தாயார், மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

Dinamalar: அக்டோபர் 07,2009
==========================================

மாஜிஸ்திரேட் வரதட்சணை கேசில் மாட்டிக் கொண்டு தலைமறைவான செய்தியைப் படித்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் ஒரு அரசியல் கட்சி குடும்பமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட இதை விட வேறு என்ன செய்தி வேண்டும்?






Thursday, September 17, 2009

சராசரி இந்தியன்....

வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பற்றிய விவாதம்
(நன்றி: http://tamil498a.blogspot.com/)

பகுதி 1


பகுதி 2


=========================
இது போன்று எத்தனை விவாதங்கள் நடந்தாலும் சராசரி இந்தியர்கள் பொம்பளை சொல்றத மட்டும் தான் கேட்பார்கள்....உண்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.

சராசரி இந்தியன்



Wednesday, September 09, 2009

(மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம்!

ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான புகார்: அடக்கி வாசிக்க போலீசார் முடிவு

Dinamalar News: செப்டம்பர் 10,2009
இது தொடர்பான முந்தைய செய்தியை இங்கே காணலாம்: கணவர் மற்றும் அவரது "குடும்பத்தினர்"


ஐ.பி.எஸ்., அதிகாரிக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்னை, ஜம்மு-காஷ்மீரில் நடந்துள்ளது. அதனால், மனைவியை துன்புறுத்தியதாக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் வங்கி அதிகாரியாக பணிபுரியும் பெண் சர்மிளா. இவரும் காஷ்மீரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சாமுவேலுவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கொஞ்ச நாட்கள் ராமநாதபுரத்திலும், மதுரையிலும் தங்கிருந்த அவர்கள், பிறகு சென்னைக்கு வந்து ஓட்டலில் தங்கியுள்ளனர். அதன்பின் காஷ்மீர் சென்றுள்ளனர். சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்த சர்மிளா , "சென்னையில் தங்கியிருந்தபோது, எனது கணவர் கொடுமைப்படுத்தினார்' என, தெரிவித்திருந்தார்.

உடன் ஜம்முவில் இருந்து சென்னை வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், தன் விளக்கத்தை வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசில் அளித்தார். இதிலிருந்தே, சாமுவேலும், சர்மிளாவும் பல இடங்களில் தங்கியிருந்துள்ளது தெரிகிறது. அப்படியானால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து, அதை ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு அனுப்ப வேண்டும். ஜம்முவிலும் அவர்களுக்குள் பிரச்னை நடந்துள்ளது. இப்பிரச்னைக்கு கிடையே, "எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது' என அறிவிக்க கோரி, சென்னை கோர்ட்டில் ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் மனு தாக்கல் செய்தார்.

ஜம்முவில் இருந்து சாமுவேல், மனைவி புகாரால் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதே போல், மனைவி மீதான விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜம்முவில் வழக்கு தொடர்ந்தால், சென்னையில் உள்ள சர்மிளா, அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குடும்பநல ஆலோசனை மையத்தில் அணுகி தீர்வு காண, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர் ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்தால், அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான விவகாரத்தை தற்போதைக்கு சென்னை போலீசார் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.

=========================

நாடு விட்டு நாடு போய் நடக்காத சம்பவங்களை நடந்ததாக பொய் புகார் கொடுக்கும் போது கேசு பதிவு செய்து அப்பாவி கணவரின் குடும்பத்தாரை கூட்டமாக கைது செய்யும் போதும், வெளிநாட்டில் இருப்பவர்களை கேசுகளில் சிக்க வைக்கும் போது ஒரு துளி கூட இது போல சிந்திப்பதில்லையே?

பலமிருந்தால் (மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம். என்ன "பலம்" என்று உங்களுக்குத் தெரியும்!


Tuesday, September 08, 2009

ஆல் போல தழைத்துப் பெருகும் 498A வியாபாரம்

498A வியாபாரம் எத்தனை வியாபாரிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது பாருங்கள். தற்போது குடும்பங்களில் ஏற்படும் பிளவுகளுக்கு அடிப்படை காரணங்கள் வேறு. ஆனால், கல்லில் நார் உறித்து எல்லா விஷயத்திலேயும் காசு பார்த்துவிடுவார்கள்! எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் தான்.

ஒரு பக்கம் குடும்பங்களை அழிக்கும் IPC498A, DV, DP3 போன்ற பாரபட்சமான சட்டங்கள் மறு பக்கம் விவாகரத்து எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சுற்றுலா வியாபாரத்திட்டம். இரண்டு பக்கமும் வருமானம் தான்!

தனியாக சுற்றுலா சென்று வந்தவுடன், சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருக்கும் போது கணவன் வரதட்சணை கேட்டு கொலை செய்ய முயற்சித்தார் என்று பொய் 498A கேசு பதிவு செய்துவிடலாம். கணவனின் செலவிலேயே அவனுக்கு சமாதி கட்டி விடலாம். நல்ல திட்டம் தான்.

விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு சுற்றுலா திட்டம்
Dinamalar News:செப்டம்பர் 09,2009

மும்பை: விவாகரத்து கோரும் தம்பதிகளுக்காக சிறப்பு சுற்றுலா திட்டத்தை மும்பையை சேர்ந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே இருந்த விவாகரத்து வழக்குகள் நம்நாட்டிலும் தற்போது அதிகரித்து விட்டன.

அதிகம் படித்த பெண்களும், அதிகம் சம்பளம் வாங்கும் பெண்களும் சுயமாக சிந்திக்க துவங்கி விட்டனர். இதன் காரணமாக தனித்து வாழும் தைரியம் அதிகரித்து விட்டது. எனவே, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. கூட்டு குடும்பத்தில் உள்ள பெண்கள் தனி குடித்தனத்துக்கு சம்மதிக்காத கணவனை விவாகரத்து செய்ய துணிகின்றனர். இதுபோன்ற தம்பதியரை ஒன்றிணைத்து ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை,விவாகரத்து வழக்கை கவனிக்கும் வக்கீல்களின் துணையோடு செயல்படுத்தி வருகின்றன.

மும்பையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனங்கள். மும்பையில் உள்ள கே.வி.டூர் அண்ட் டிராவல்ஸ் நிறுவன தலைவர் விஜேஷ் தாக்கர் குறிப்பிடுகையில், "விரக்தியின் விளிம்பில் உள்ள தம்பதிகளை தனிமையில் சந்தித்து உறவாட ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்களது மணமுறிவை தடுக்கிறோம். உள்நாட்டில் உள்ள மலை வாசஸ்தலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ, தம்பதியர் விரும்பும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது' என்றார்.



Monday, September 07, 2009

மருமகளின் கொடுமை தாங்கமுடியாத 105-வயது பெரியவரின் போராட்டம்

‘Harassed by bahu’, 105-yr-old leads 60 of family on dharna

Indian Express: Tuesday , Jun 09, 2009

Rajkot : This one could well turn the scripts of the teary saas-bahu TV serials on their head. A 105-year-old patriarch of a Rajkot joint family is on a hunger strike against its own daughter-in-law — with some 60 members of his joint family in tow — outside their home in Mahudi gav.

The family’s estranged bahu, they claim, has been harassing them to no end and there was no other way to get it to stop.

From the 105-year-old Arjan to five-year-old Abhay, these 60-odd members of the Thummar family have been holding their dharna in the scorching heat for two days now. They claim Rekha, Arjan’s daughter-in-law, has been a source of constant harassment.

Estranged for over a decade now, Arjan’s grandson, 30-year-old Shantilal, says his wife has been harassing his extended family including his father and his five brothers and their children.

Rekha, 28, on her part, claims it is the husband’s family that has been mentally and physically harassing her.

Rekha married Shantilal in 1996, and after the relationship collapsed, she has filed as many as five police cases under different sections against various members of the husband’s family. These cases were registered with police stations in as different places as Junagadh, Dhoraji, Jamkandorna, Jetput and Jamanagar between 1999 and 2004. The Thammars say the family was being harassed by the police and lawyers all these years, claiming Rekha had a “good rapport” with the cops.

Arjan says he is on an indefinite fast. “I won’t eat until justice is done to us.”

The Thummars have submitted a memorandum to the Rajkot Commissioner of Police. While the Malaviya Nagar police station has begun investigating the complaint, the Thummars maintain they want immediate action against the policemen and lawyers.

“The cops keep trooping into our home every now and then, harassing and even threatening the family members,” a family member claimed.

After the relationship fell through, Rekha has been receiving Rs 3,500 as alimony every month from Shantilal over the past five years. However, she claims that her belongings are still with the in-laws. Rekha and Shantilal have two children, a son (5) and a daughter (7). Both are in Shantilal’s custody.



Sunday, September 06, 2009

அப்பாவித் தாய்மார்களை காக்க ஒரு கூட்டமைப்பு

Moms-in-law of the world unite..

Times of India News:

CHENNAI: After woeful wives and harassed husbands, it’s the turn of mothers-in-law to form an organisation. More than 500 of them from across the country will come together in Bangalore to launch the All-India Mothers-in-law Protection Forum (AIMPF) on Sunday.

For some, it will provide a forum to be heard; for others, it is to break the ‘cruel woman’ stereotype that TV soaps have been reinforcing. So varied is the constitution of the forum that it has as members a university teacher from Chennai, a forensic expert from Delhi and a surgeon from Karnataka.

“In TV dramas, we are the villains; in real life, we are the victims,” said Nalini (name changed), a homemaker from Chennai, who has joined the AIMPF. The organization is being supported by the Save India Family Foundation (SIFF), a Bangalore-based NGO working for ‘harassed husbands’.

So will the AIMPF protect mothers-in-law only from their daughters-in-law and not sons-in-law? “Mostly the women are accused and dragged to court by their daughters-in-law. So we are focussing only on them. The organization is not against anyone; it is for mothers-in-law,” said SIFF public relations officer Virag Dhulia.

The forum plans to use its website, www.aimpf.org, to host discussions and debates. “The forum will take up issues, including amendments to inheritance laws and the Domestic Violence Act,” SIFF convenor Manoj David said.

Some AIMPF members TOI spoke to had horror tales to narrate. One said that whenever she went inside the bath to shower, her daughter- in-law would turn on the geyser from outside.

Supporters of the forum said that though there were several incidents of mothers-in-law torturing their daughters-in-law, there were also many mothers-in-law who silently bore the brunt of domestic violence. “There are several mothers-in-law who are victimised and threatened with Section 498 (a) of the IPC, which speaks of up to three years’ imprisonment for husband’s relatives in dowry harassment cases,” said Virag.
=============================

By Geeta Pandey

A group of Indian mothers-in-law have come together to fight the harassment they claim to endure at the hands of their daughters-in-law.

Fifty women have joined the All India Mothers-in-law Protection Forum (AIMPF), launched in Bangalore city.

A spokeswoman told the BBC that while there were 15 laws to protect the younger generation, there was nothing to protect mothers-in-law from abuse.

India's National Commission for Women has acknowledged the problem.

It says that cases against in-laws are often registered by brides who are protected by strict anti-dowry laws.

But a number of the accusations turn out to be false.

'As vamps'

"The mother-in-law is portrayed as a villain in our society," says Neena Thuliya, coordinator of AIMPF.

"In television serials, films and the media, we are shown as vamps. It's an age-old belief that the mother-in-law physically assaults and mentally tortures the daughter-in-law."

The AIMPF recently did a survey in Bangalore studying cases of abuse and torture filed against the mother-in-law.

Mrs Thuliya says that of the nearly 50 cases they researched, all turned out to be false allegations.

"There was a time when the daughter-in-law had to live with so many restrictions, but now the time has changed. Today's daughter-in-law is free and works outside the home. It's the old mother-in-law who now faces abuse at the hands of the daughter-in-law," Mrs Thuliya says.

"In tele-serials we are the villains, in real life we are the victims," she adds.

Mrs Thuliya says elderly women are sometimes thrown out of their homes by their daughters-in-law.

The forum, she says, will hold meetings every Sunday and will devise strategies to provide support to "harassed mothers-in-law".

The AIMPF says it will also campaign against the demonisation of the mother-in-law in popular culture.

For centuries, in many Indian families, daughters-in-law have been harassed for bringing in "inadequate dowry" - a South Asian tradition where the bride's parents give cash, jewellery and gifts to the groom's family.

The Indian government outlawed giving and accepting dowries in 1961, but the practice continues and even today few arranged marriages take place without an exchange of dowry.

Campaigners say the system has led to the abuse of young brides, making them vulnerable to domestic violence.

Every year, hundreds of women are scalded or even burned alive by their in-laws.

In the past few years, India has introduced several strict laws to protect new brides from abuse and torture.

But it is being accepted by the authorities that the laws are being increasingly misused by young women to harass their in-laws or settle scores.

Story from BBC NEWS:
http://news.bbc.co.uk/go/pr/fr/-/2/hi/south_asia/8241275.stm

Published: 2009/09/07

Saturday, September 05, 2009

இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் கோவையில் கோலாகலத் தொடக்கம்

பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: வலைத்தளத்திற்கு நன்றி!

இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் கோவையில் கோலாகலத் தொடக்கம்

Movement protecting men's rights launched

The Hindu

Tamilnadu - Coimbatore

Coimbatore: Save Indian Family Movement, an organisation focusing on abuse of women-centric laws against men, advocating gender-neutral laws and amendments to the existing laws, has launched its Coimbatore Chapter.

Convenors of the Save Indian Family Movement, Suresh Ram and M.P. Kalaiselvan (Chennai), Manoj David (Bangalore) and G. Prakash (Coimbatore) addressed journalists at Coimbatore on Friday.

They pointed out that laws aimed at protecting women, such as Sec 498 A of Indian Penal Code, Dowry Prohibition Act and Prevention of Domestic Violence Act, had been largely misused against men and this had affected the Indian family system.

Adverting to the suicide statistics of 2005 and 2006, they pointed out that in 2005, 52,483 husbands committed suicide while the number was 28,188 for wives and in 2006, 55,452 husbands committed suicide as against 29,869 suicides by wives.

In the event of the death of a married woman, the husband and his family members were subjected to prolonged legal trails. Such laws could never be a remedy for the sufferings of women and arming them with `terrorising legal weapons' only led to retribution.

They dubbed the cited legal provisions as `draconian women-centric laws'. More than 98 per cent of men faced domestic violence at the hands of their wives and in-laws in the form of verbal abuse, physical abuse, economic exploitation, cheating, infidelity and harassment, but there was no law to provide solace to them.

They said that laws needed to be gender neutral. Women-centric laws sought compensation for women in the event of a divorce even when the woman was a bread winner and saw fathers as incapable of bringing up children.

They demanded a separate Ministry for Men's Welfare, gender equal laws, besides amendments to legal provisions to tone down these legislations.

For help or more information call 98403-24551/99410-12958 or visit www.saveindianfamily.org or www.savefamily.org



Wednesday, September 02, 2009

சும்மா தமாசு!



செப்டம்பர் 03,2009

ஆமதாபாத்:போலீஸ் அதிகாரிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், போலீஸ் அதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து அவர் மனைவியைக் காக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ள சம்பவம், குஜராத்தில் நடந்துள்ளது.குஜராத் மாநில டி.ஐ.ஜி., கமல் குமார் ஓஜா; இவரது மனைவி அமிதா. "அடிக்கடி வரதட்சணை பணம் கேட்டு கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார்'என்று போலீஸ் நிலையத்தில் அமிதா புகார் அளித்தார்.

மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். (ராமசாமி அல்லது குப்புசாமி மனைவி புகார் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு பொய் 498A கேசு பதிவு செய்து கூண்டோடு கைது செய்துவிடுவார்கள்) பின்னர் இந்த விவகாரம், உயர் அதிகாரிகள் காதுக்கு போக, அமிதா புகாரை பரிசீலித்து, அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர். இதனால், கடுப்பான கமல், வீட்டில் இருந்து வெளியேறி, போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். "என் மனைவி அடிக்கடி இரவு விருந்துக்கு செல்பவள்; "பார்ட்டி கல்ச்சர்க்கு' அடிமையாகிவிட்டதால் இப்படி என் மீது புகார் சொல்கிறாள் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கு செலவுக்கு கூட கமல் பணம் தருவதில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அமிதா. இதை தொடர்ந்து, மனைவிக்கு 10 ஆயிரமும், மகன் மற்றும் மகளுக்கு தலா ஐந்தாயிரமும் மாதம் தோறும் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.தீர்ப்பை எதிர்த்து குஜராத் கோர்ட்டை அணுகினார் கமல் குமார் ஓஜா. தன் மனைவி உயர் பதவியில் இருக்கிறார்; ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 70 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்' என்று பதில் மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தேவானி, கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.



Monday, August 31, 2009

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

மீண்டும் ஒரு முறை தலைமை நீதிபதி 498A விற்கு எதிராகவும் தவறhக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். இதைப்படித்த பிறகு நீதித்துறையின் நடவடிக்கையைப் பார்த்து சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா?

கட்டுக்குள் அடங்காத அநீதிகளைப் பார்த்து தலைமை நீதிபதி கவலைப்படுவது இது முதல் முறையல்ல.

தலைமை நீதிபதி இதற்கு முன்னர் வெளியிட்ட கவலையான கருத்துக்கள்:

1. USA, August - 2008
"Indian Courts are Helpless to Protect 498A Victims"

2. India, February - 2009
"CJI Balakrishnan admits to misuse of dowry laws"

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

அப்படியென்றhல் இந்தியாவில் அப்பாவிகளின் கதி???


3. India, September - 2009
CJI points to judges’ ignorance - India, September - 2009

Ranchi, Aug. 30: Chief Justice of India K.G. Balakrishnan today took a dig at high court as well as district court judges for delivering wrong verdicts because of their ignorance of criminal justice laws.

Balakrishnan warned that several people wanted to delay the conclusion of criminal cases. “(But) Judges are supposed to prevent the abuse of law by those who want to delay the delivery of judgment,” he added, alluding to the judiciary’s concern at the high number of pending cases.

The Chief Justice was delivering a valedictory address at the conclusion of the first east zone regional judicial conference aimed at equipping senior judicial officers, drawn from seven states — Jharkhand, Bengal, Orissa, Chhattisgarh, Assam, Sikkim and Bihar — to deliver speedy and quality justice.

The three-day programme was organised by National Judicial Academy (NJA), Bhopal, in association with Jharkhand High Court and State Judicial Academy.

Jharkhand High Court Chief Justice Gyan Sudha Misra, Patna High Court Chief Justice P.K. Mishra, State Judicial Academy in-charge Justice M.Y. Eqbal, NJA director G. Mohan Gopal were present among others.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

Balakrishnan added that the criminal procedure code was amended for the police to follow certain procedures before arrests. “We have come across cases in which even high court judges are ignorant of the legal value of statements recorded before the police under Section 161 of the Evidence Act for delivering judgments,” he said. Calling upon lower court judges to be socially sensitive, he asked them to have control over trial proceedings in order to deliver judgments easily. He also asked them to examine eyewitnesses first before examining other witnesses produced by the defence.

“Trial and defence lawyers should not terrorise witnesses. A judge should be alert and caring” he maintained.

Misra said the deteriorating law and order situation was a heavy burden on the criminal justice system.

“It was worrying that the state functionaries were not invoking the provisions of the National Security Act to keep hardened criminals in jail,” she added.

Stressing on the need for quality justice, Misra said she was receiving complaints that the fast-track court has turned into a “farce track court”. Judicial officers, she said, had to wipe out fear that fast-track courts would only convict a person.

“They have to strike a balance between expectation of the victims’ of crime and the accused,” she maintained.

Former Supreme Court judge S.B. Sinha pointed out that 70 per cent of all the pending criminal cases were petty offences. “Sociological studies suggest that it is the poor who suffer the most because of delay in the delivery of judgments,” he added.




Thursday, August 27, 2009

ஆண்களா, பெண்களா?

இந்த வார வாரமலரில் வந்த செய்தி:

அந்துமணி பதில்கள்!

வாழ்க்கைத் துணையை, "கால்குலேட்டிவ்' ஆக தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் இக்கால ஆண்களா, பெண்களா?

அவன்ட்ட டூ-வீலர் இருக்குதா, கார் இருக்குதா, சொந்த வீடா, வாடகை வீடா... சொத்து, பத்து எவ்வளவு, சம்பளம், வருமானம் எவ்வளவு?'- இப்படி எல்லாம் கணக்கு போட்டு, வாழ்க்கைத் துணையை முடிவு செய்வது பெண்கள் தான்.
மனதுக்குப் பிடித்து விட்டால், ஓ.கே., சொல்லி விடுபவர் ஆண் என்கிறார் பெண் உதவி ஆசிரியர் ஒருவர்!


===================================================


மேலே கூறப்பட்டுள்ள உண்மையையும் நடைமுறையில் அப்பாவி
ஆண்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறhர்கள் என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். காசுக்காக கொடுமை செய்வது கணவனா அல்லது மனைவியா என்று புரியும். ஆனால் காசுக்காக மனைவியை வரதட்சணை கொடுமை செய்வதாக அப்பாவி ஆண்கள் மீதும் அவர்தம் குடும்பத்தார் மீதும் அபாண்டமான பொய் வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பே பணத்தைக் குறி வைத்துத் தான் திருமணத்திற்கு இக்காலப் பெண் சம்மத்கிறhள்?! திருமணமான பிறகு கணவன் அந்தப் பெண்ணின் பேராசைக்கு அடிபணியவில்லை என்றhல் பொய் வரதட்சணை வழக்கு என்னும் ஆயுதத்தை எடுத்து அனைவரையும் சீரழிக்கத் துணிந்து விடுகிறhள்.

திருமணத்திற்கு முன்
பே கணவனின் சொத்துக்களை அபகரிக்க அவள் போடும் திட்டம் திருமணத்திற்கு பிறகு தோல்வியடையும் போது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது அவள் பெண்ணுரிமை என்ற பெயரில் பொய் கேசுகளை போட்டு அந்தப் பணத்தை பெற்றுவிடவேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறhள்.

இது போன்ற பெண்களுக்குத் துணையாக சட்டமும் அதனை செயல்படுத்தித் தர அனைத்துத் தரப்பிலும் பெண்ணடிமைவாத தீவிரவாதிகளும் நிறைய இருக்கின்றனர்.

மேலுள்ள செய்திப்படி தற்கால இளம் பெண்களின் மனநிலை பணம், ஆடம்பரம், பகட்டு என்ற வலையில் பின்னப்பட்டுள்ளது நன்றகாத் தெரிகிறது. நவ நாகரீக மங்கைகளின் மனம் பலவிதமான பேராசைகளால் பின்னப்பட்டு அடுத்தவரின் வாழ்க்கையைக்கூட அழிக்கலாம் என்ற மனநிலை தான் இப்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கு பெண்ணுரிமை என்ற சாயம் பூசப்பட்டுள்ளது.

வரதட்ணை கொடுமை என்ற காலமெல்லாம் என்றேh போய் விட்டது. ஆனால் பேராசை பிடித்த சில
நவ நாகரீக பெண்கள் தங்களின் தவறhன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்னமும் அந்த துறுபிடித்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறhகப் பயன்படுத்தி பொய்யான வழக்குகளை போட்டு தானும் சீரழிந்து பல அப்பாவி குடும்பங்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறhர்கள்,



Wednesday, August 19, 2009

எப்போது கண்டுகொள்வார்களோ?

'விவாகரத்து வழங்கும் போது குடும்பங்கள் பிரிகின்றன'
தினமலர் செய்தி

கணவரிடமிருந்து பெற்ற விவாகரத்தை ரத்துசெய்த, மாவட்ட கோர்ட் உத்தரவை எதிர்த்து, ராஜபாளையம் பெண் டாக்டர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கணவன், மனைவிக்கு விவாகரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்கள் பிரிகின்றன எனவும் குறிப்பிட்டது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜா. இவருக்கும் டாக்டர் சித்ராவுக்கும் 1996 மே 23ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விவாகரத்து கோரி சித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் சப்- கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ""கணவருக்கு, என் தந்தை இரண்டு லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி கொடுத்தார். அதை அவர் விற்று விட்டார். மேலும் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் கேட்கிறார்,'' என்றார்.

முன்சீப் கோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதை எதிர்த்து வெங்கட்ராஜா மாவட்ட கோர்ட்டில் மனு செய்தார். மனுவில், ""என் மனைவி பாசம் மிக்கவர். அவரது சகோதரி, தந்தை தூண்டுதலால் எங்கள் வாழ்க்கை சீர்குலைகிறது. அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்,'' என்றார். மாவட்ட கோர்ட், விவகாரத்து வழங்கிய கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து, சித்ரா ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.செல்வம், ""இத் தம்பதிகள் திருமணமான பிறகு பரஸ்பரம் எழுதிய கடிதங்களில், ஒரு வார்த்தை கூட கொடுமை, கருத்துவேறுபாடு பற்றி குறிப்பிடவில்லை. இருவரும் பாசத்துடன் இருந்தது கடிதத்தில் தெரிகிறது. தம்பதிகளிடம் நல்ல சூழ்நிலை நிலவியதால் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவன், மனைவிக்கு விவகாரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்களும் பிரிந்து விடுகின்றன. குழந்தையின் எதிர்காலம் செயல் இழந்து விடும் என்பதை கீழ்கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. மாவட்ட கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,'' என்றார்.

===========================

இது போல பொய் 498A கேசுகளில் பல அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கை அரசின் தவறhன சட்டங்களால் அரசாங்கத்திற்கு தெரிந்தே சீரழிகின்றதே. அதை எப்போது கண்டுகொள்வார்களோ?



அதிசயம்! ஆனால் உண்மை!

பாதிக்கப்பட்ட கணவருக்காக நீதிமன்றம் செவிசாய்த்துள்ளது.

மனைவி மீது வழக்கு
தினமலர் செய்தி

கண்டபடி திட்டினாள் மனைவி; பொறுத்துப் பார்த்த கணவன், கோர்ட்டுக்குப் போய் விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சிறிய அளவில் அவ்வப்போது மோதல் வரும். ஆனால், அப்போதே சரியாகிவிடும். சில சமயம், பெரிதாக வெடித்துவிடும். இப்படித்தான் கடந்தாண்டு ஒரு நாள் சாதாரண விஷயம், பெரிதாகி இவர்களிடையே மோதலை அதிகப்படுத்தியது.

"பள்ளிக்கு நேரமாகி விட்டது; காரில் இறக்கி விடுங்கள்' என்று மனைவி கூறியிருக்கிறாள். ஆனால், "எனக்கும் வேலை இருக்கிறது; என்னால் முடியாது' என்று கணவன் கூறி விட்டார். இது தான் நடந்தது. ஆனால், இது பெரிதாகி இருவரிடையே மோதல் வெடித்தது. "சரி, என் தந்தை உன்னைக் காரில் போய் இறக்கி விடுவார்' என்று கணவர் சொல்ல, "என்னை இறக்கி விட உங்களால் முடிந்தால் சரி; மாமனார் உதவியை நான் கேட்கவில்லை' என்று கணவனைக் கண்டபடி திட்டியிருக்கிறாள் மனைவி.

இது மட்டுமின்றி, தன் குடும்பத்தினரை அழைத்துச்சென்று, கணவரையும், அவர் தந்தையையும் தாக்க முயற்சி செய்துள்ளார் மனைவி. அறையில் அடைத்து சில ரவுடிகளை வைத்தும் தாக்க முயற்சி நடந்துள்ளது. மாமனாருக்கு சில அடிகளும் விழுந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன அவரது கணவர், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். "ஸ்ருதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவர் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்' என்று மாஜிஸ்திரேட் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.



Monday, August 17, 2009

மிக உன்னதமான உதவி

ஆகஸ்ட் 15, 2009 அன்று சென்னையில் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அப்பாவி குடும்பங்களை அழிக்கும் கொடிய சட்டங்களைப்பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விநியோகித்த விளக்கப் பிரசுரத்தின் நகல். டவுன் லோடு செய்து உங்களுக்குத் தெரிந்த இந்தியர்களுக்கு அனுப்புங்கள். இது நீங்கள் உங்களுடைய இந்திய சகோதர சகோதரிகளுக்கு செய்யக்கூடிய மிக உன்னதமான உதவி. இது பணமோ, உடலுழைப்போ இல்லாமல் உங்களால் செய்யக்கூடிய மிக மிக உன்னதமான உதவி. பல அப்பாவி குடும்பங்களின் உயிரையும், அதைவிட மேலான மானத்தையும் காக்கக்கூடிய உதவி.



செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. ( குறள் எண் : 101 )

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.


வாழ்க "இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்" தலைவர்கள் !


Sunday, August 16, 2009

ஒரு சொல் கேளீர்!

திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களே, அண்ணன் "PKS" சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்கள். அத்தனையும் உண்மை.

இன்றைய தவறான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் திருமணம் என்ற ஒரு புனிதமான நிகழ்ச்சியை "எதிர்காத்தில எச்சி முழிவதற்கு" சமமான செயலாக மாற்றிவிட்டது. "குடும்ப விளக்கு" என்று சொல்லப்பட்ட உறவை "நெருப்பாண்ட கொட்டிய குப்பை" துர்நாற்றத்துடன் எரிவது போல மாற்றிவிட்டது.

வீடியோவில் வரும் தத்துவங்களை கவனியுங்கள் புரியும்!

பம்மல் K சம்பந்தம் திரைப்படத்திற்கு நன்றி

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யப் போவதாக நீங்கள் முடிவு செய்திருக்கலாம். நீங்கள் பார்த்திருக்கும் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் நல்லவர்களாகக் கூட தெரியலாம் . எல்லாம் சரிதான்.

ஆனால், வரதட்சணை தொடர்பான சட்டங்கள் தவறhனவையாக இருக்கின்றன. குடும்பத்தில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை திசை திருப்பி தக்க சமயம் பார்த்து அந்த
கொடிய சட்டங்களை "திருமணம்" என்ற காரணத்தை வைத்து உங்கள் மீது ஏவ "சட்ட தீவிரவாதக்" கூட்டம் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது.

ஆம். ஒரு நொடிப் பொழுதில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கொடிய சதி வலையில் தள்ளப்பட்டு வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடத்தப்படும். அதற்கு பல விதமான சட்டங்கள் இருக்கிறது. IPC 498A, DOWRY PROHIBITION ACT, DOMESTIC VIOLENCE ACT மற்றும் பல சட்டப்பிரிவுகள் உங்களை விழுங்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

இது திருமணத்திற்கு எதிரான செய்தியல்ல. திருமணங்களை முறித்து பல அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைக்கும் தவறhன சட்டங்களுக்கெதிரான செய்தி. சட்டங்களை திருத்தமாட்டார்கள். அதற்கு பலவித குறுகிய நோக்கங்கள் இருக்கின்றன.
அதனால் திருமணம் பற்றி சரியான முடிவு செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது.

இந்த
கொடிய சட்டங்களைப் பற்றியும் அவற்றhல் பாதிக்கப்பட்ட பல கோடி அப்பாவி குடும்பங்களின் அவல நிலைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த இணையதளங்களைப் பாருங்கள்:
www.saveindianfamily.org
www.mynation.net
www.protectindianfamily.org
www.savefamily.org
www.sahanaindia.org
www.498a.org
www.ghrs.in
http://tamil498a.blogspot.com/
http://ipc498a.wordpress.com/2007/07/01/the-498a-survival-kit/




Wednesday, August 12, 2009

கோடி ருபாய் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்குமா?

முந்தைய "மருமகள் ஜாக்கிரதை!!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கும் இன்று தினமலரில் வெளியாகிவுள்ள செய்திக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!!
---------------------------------------------------

ஆண்மையற்ற கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு

சென்னை:ஆண்மையற்ற கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரியும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.சென்னையைச் சேர்ந்த சவும்யா என்பவர் தாக்கல் செய்த மனு:

மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 30 சவரன்நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வரதட்சணை வழங்கப்பட்டது. திருமண மண்டபத்தில் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. களைப்பாக உள்ளதாகக் கூறி, எனது கணவர் தூங்கிவிட்டார்.மறுநாள் கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அன்று இரவு, படுக்கை அறைக்குதனது பெற்றோரையும் எனது கணவர் அழைத்தார்.

எனது மாமனார், மாமியார் இருவரும் படுக்கை அறைக்கு வந்து எங்களுடன் சேர்ந்து உறங்கினர். தொடர்ந்து இந்த நிலை நீடித்தது.வேலைக்குச் சென்ற எனது கணவர், தொடர்ந்து இரண்டாவது ஷிப்ட், இரவு நேர ஷிப்ட்டுக்கு சென்றார். இதனால், எங்களுக்குள் உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை. மாமனார், மாமியார் என்னை மோசமாக, வேலைக்காரி போல் நடத்தினர். மாதம் தோறும், சம்பளப் பணம் முழுவதையும் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

உடல் நலம் சரியில்லாமல் இருந்த எனது தந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்களிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என்பதால் தடுத்தனர். திருமணம் நடந்த நாள் முதல், எங்களுக்குள் உறவு இல்லை என எனது மாமியாரிடம் தெரிவித்தேன். எனது மாமனாரும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.வேலையில் இருந்து ராஜினாமா செய் யும்படி என்னை நிர்பந்தித்தனர். ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொண்டு வரும்படி வற்புறுத்தினர்.

டாக்டர் ஒருவரிடம் சென்றோம். எனது கணவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை யளிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.அதற்கு, அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனது பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில், எனது மாமனார் மற்றும் மாமியார், தங்கள் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்துள்ளனர். தங்கள் மகன், ஆண்மையற்றவர் என தெரிந்தும் இவ்வாறு செய்துள்ளனர்.

நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனஉளைச்சல் அடைந்தேன். இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.எங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என உத்தரவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை குடும்ப நல கோர்ட் தள்ளிவைத்துள்ளது.இதற்கிடையில், மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சவும்யா மனு தாக்கல் செய்துள்ளார்.

------------------------------------------------------------------


மேற்படி செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பது கேள்வியல்ல. இது போல பொய் 498A, Dowry கேசுகளில் நீதிமன்றத்தில் அது பொய்யான கேசு என்று நிருபித்த பிறகு பொய் 498A, Dowry கேசு போட்ட பெண்ணிடமிருந்து வாழ்க்கையை இழந்த பாதிக்கப்பட்ட அப்பாவி கணவருக்கும் அவரது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் கோடி ருபாயை நீதிமன்றம் வாங்கிக் கொடுக்குமா? அப்படி நேர்மையாக நடந்திருந்தால் இப்போது நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?


பொய் கேசுகளால் அப்பாவி கணவருக்கும், அவரது வயதான தாய், தந்தைக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படாதா? மன உளைச்சல் ஏற்படாதா? அவர்கள் மனிதர்கள் கிடையாதா? அவர்களுக்கு ஏன் நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை?


கோடி ருபாய் கொடுத்தாலும் இழந்த வாழ்க்கையும், நீதிமன்றங்களில் அலைந்து பாழாய்ப் போன காலமும், குடும்ப மானமும் திரும்பக் கிடைக்குமா?



Saturday, August 08, 2009

நாட்டைக் காக்க புரட்சி ஆரம்பம்

Harassed hubbies to meet for 'freedom'
CHANDIGARH: A clutch of harassed husbands, from Madurai to Mumbai and Jammu to Jamshedpur, will be converging in Shimla on August 15 to declare their ''independence from their wives''.

The convention is catching such momentum that there could be far more crying men than expected.

''I am a harassed husband and I will be screaming my lungs out when we meet to discuss how the fairer sex has put the lights out of our lives,'' said Pranab Kumar Singh in Chandigarh wistfully.

The organisers claim there will be about 40,000 participants at the ''first meeting of harassed husbands in the country''. At the end of the three-day convention, they will ask the Centre to set up a forum for hearing their grievances. They say both the Domestic Violence Act and Dowry Act are ''draconian'' and ''heavily tilted against men''.

''Around 1.2 lakh harassed husbands have committed suicide in the country in the last four years,'' claimed Nitin Gupta, the Chandigarh representative of Save Indian Family Foundation, the NGO which is behind the convention along with Bangalore-based Children's Rights Initiative for Shared Parenting, Maharashtra's Purush Suraksha Sanstha and Uttar Pradesh's Pathi Paramesh Kendra.

''These figures haven't come from the top of our heads, they have been extracted from the National Crime Records Bureau.'' ''It was fine in the first few months of our marriage. But from wife she turned into a vampire so rapidly that I didn't even have time to understand what led to the metamorphosis,'' said Pranab Kumar Singh.

-----------------------------------------------------
'Men to meet in Shimla for equal rights'

CHENNAI: A group of men from Tamil Nadu is setting off for Shimla to participate in a meeting on August 15 for "equal rights and freedom from harassment from women".

Keshava Vishwanathan, an IT professional who is going to attend the meeting organized by Save Indian Family Foundation, said he felt that in many instances Indian law favoured wives. "Be it in the case of custody of children or allegations of domestic violence and dowry harassment, the law generally takes the side of women," he claims. "Some of the laws are very rigid, and we have found cases foisted on us," Vishwanathan said. He added that they were not women haters'.

Another participant, Manoj David said they were trying to "raise the issue of freedom and dignity of harassed husbands". About 19 men from Chennai, Madurai and Coimbatore would be part of the day-long meeting in Shimla, in which more than 100 men were participating. "More than 100 men, representatives of 30,000 other harassed husbands from across the country, will meet to come up with strategies to take on their wives," he said.

Virag Dhulia, a senior member of Save Indian Family Foundation, said the latest report on the suicide rate of men across India was an indicator of the harassment of men. Around 1.2 lakh harassed' husbands in India have committed suicide in last four years, he claimed, citing figures from the National Crime Records Bureau. "This is an alarming number. We're meeting at Shimla, not to draw a gender-dividing line. We want to discuss a social issue and find solutions as the country is seeing a large number of divorces," he said.

Some of issues they will discuss include a separate men's welfare ministry on the lines of the women and child welfare ministry, equal taxation for men and women, change in inheritance laws, amendment to the domestic violence prevention law, and mandatory joint custody of children for divorced couples. "We'll also demand pre-litigation counseling before grant of divorce, an end to police brutalities and judicial reforms to help address the social issues," Dhulia said.

According to data available with SIFF, a total of 9,000 divorce cases were filed in Delhi, 7,500 in Mumbai and 5,000 cases in Bangalore and 4,000 cases Chennai in 2008.
-------------------------------------------------------------------------

Boys fight for freedom!

Times News Network

Rage. That’s what one gets to see in the eyes of harassed husbands and men’s rights activists in the city, who, outraged by laws, which they claim are unfair, are now getting ready to voice their protest on Independence Day this year.

“We are abstaining from Independence Day celebrations this year to protest the unfair laws that favour women,” says Suresh, the convenor of the Chennai Chapter of the Save Indian Family Foundation (SIFF), an organisation fighting for men’s rights and family harmony under the aegis of the Save Indian Family movement.

Men’s groups across the country have been protesting gender-biased laws in general and the Domestic Violence Act and the 498A, in particular.

Citing an instance, he says, “At present, Indian law considers adultery as a crime when committed by Indian men, but not so when committed by women. This is blatant discrimination against men. Also, Indian law exempts women from punishment for domestic violence. The laws have been pampering women by not according them any duties, while creating obligations for men. By this decidedly anti-male mindset of the law, men in India have started to feel
that it’s perhaps a crime to be born a male in India.”

Kumar Jahgirdar, the presi
dent of Children’s Rights Initiative For Shared Parenting (CRISP), which is working to ensure the rights of children, points out another hotly contested issue.

“Women’s rights are different from children’s rights. What’s more, the rights of both these categories are not always compatible. While remarriage might be in the interest of a woman who has divorced her hus
band, it may not be in the best interest of her child. So, ideally, there should be a separate ministry for children to look into issues concerning their rights. However, in India, that isn’t the case. Children constitute forty percent of the population and there is no separate ministry for them. A child has to have access to both parents because nature has provided some unique qualities to the father which cannot be substituted by the mother, and vice-versa.” Giving out details of what SIFF plans to do on Independence Day, Suresh says, “This Independence Day, our members in Chennai will distribute flyers at the Marina Beach in the morning, elucidating our problems, cause and activities.

We are also planning to present a memorandum to the Governor and the Law Minister of the state.” Also, there is bound to be action at the national level as well as the Save Indian Family
Movement’s second national conference, is to be held on August 15 and 16 at Shimla.

Says Virag, an office-bearer of SIFF, “The first one was held in Goa last year. There are 14 non-governmental organisations affiliated to the SIFF across the country and at least 100 active leaders from different parts of the country will be attending this meet to discuss ways to further intensify our agitation and reiterate our demand for a National Commission for Men and Men’s Welfare Ministry.” Informs Suresh,“This time, nine members from Chennai will be participating in the national conference in Shimla.” Volunteers from various
other organisations such as the Family Cultural Forum and CRISP will also join SIFF’s members in distributing pamphlets on Independence Day. It seems that men have finally taken the fight for freedom from harassment to the next level!
------------------------------------------------------
Courtesy: Times of India


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.