இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Legal Terrorism. Show all posts
Showing posts with label Legal Terrorism. Show all posts

Tuesday, September 28, 2010

வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை

யார் வந்து எப்படிப் புகார் கொடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி கண்ணை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அனுப்பி பல குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை நண்பர்கள் அவர்கள் எழுதும் வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை என்று நிரூபித்துவிட்டார்கள். பின்வரும் செய்தியைப் படித்துவிட்டு அது சரிதான் என்று நீங்களும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது

செப்டம்பர் 28,2010 தினமலர்

கரூர் : கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கரூர், செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). இவரது மனைவி லட்சுமி ஸ்ரீ (24). இருவருக்கும் திருமணமாகி நான்காண்டாகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், விரக்தியடைந்த லட்சுமி ஸ்ரீ, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். குடும்ப பிரச்னை என்பதால், இவ்வழக்கு கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுதாகர், லட்சுமி ஸ்ரீ ஆகியோரை வரவழைத்து ஏட்டு லதா கவுன்சிலிங் செய்தார். இதில், கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையாக சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர்.

அப்போது, கோவை புதூர் பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரியும் லட்சுமி ஸ்ரீயின் அண்ணன் ஆனந்தராஜ் (30), போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, சுதாகர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏட்டு லதாவிடம் வாக்குவாதம் செய்தார். "கணவன், மனைவியே சமரசமாக செல்ல ஒத்துக்கொண்ட பின், வழக்கு பதிவு செய்ய முடியாது' என, ஏட்டு லதா கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், லதாவை உதைத்து, தாக்கிவிட்டு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு ஓடியுள்ளார். லதாவுக்கு, கை, கால், முகம், பல்லில் காயம் ஏற்பட்டடு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தப்பியோடிய ஆனந்தராஜை ஏட்டுக்கள் ராஜாமணி, சாமுவேல் ஆகியோர் டூவீலரில் துரத்திச் சென்று பிடித்தனர். ஆனந்தராஜை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



Thursday, August 12, 2010

கலியுக மருமகளால் வரப்போகும் ஆபத்து!

போலியான பெண்ணியவாதிகள் கூட்டம் எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது, பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள், பெண்களுக்கு அங்கே அது நடக்கிறது, இது நடக்கிறது என்று கூப்பாடு போட்டு மோடி வித்தைக்காரர்கள் போல கூட்டம் சேர்த்து காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அற்பத்தனமான சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப்படும் (IPC498A, Domestic Violence Act) தவறான ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்த சட்டங்களால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிட பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். ஒரு கலியுக மருமகளின் பொய்யான வரதட்சணைப் புகாரால் ஒரு குடும்பத்திலுள்ள குறைந்தது 4 - 6 பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இதுபோன்ற போலியான பெண்ணியவாதிகளின் முகத்திரையைக் கிழித்து ஒரு புதுமைப் பெண் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்கட்டுரையையும் பின்வரும் இணைப்பில் சென்று படியுங்கள்.

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான்.


மேலுள்ள கட்டுரையைப் படித்தபிறகு கலியுகப் பெண்கள் ஏன் மோசமான போலியான பெண்ணியவாதிகளால் தவறான பாதையில் இப்படி தவறான சட்டங்கள் மூலமாக வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள் என்று யோசித்தால் அதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதி வெண்பா என்ற பழந்தமிழ் நூலில் ஒரு அறிஞர் பாடிச் சென்றிருக்கிறார்.

நீதிவெண்பா

32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் கிரேதாயுகத்தில் ரேணுகை என்ற பெண்ணால் உலகம் அழிந்தது. திரேதாயுகத்தில் சானகி என்ற சீதையால் இராமாயணப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது. அதன்பிறகான காலத்தில் திரௌபதி என்ற பெண்ணால் பாரதப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது.

இந்தக் கலியுகத்தில் வீட்டிற்கு வீடு இருக்கும் ஒரு பெண்ணால் இந்த உலகம் அழியும் என்று அந்த அறிஞர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் யாருமல்ல பொய்யான பெண்ணுரிமை பேசும் கூட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு தவறான சட்டங்கள் என்ற ஆயுதங்களை கையில் எடுத்து சிறு குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் அனைவரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கும் மருமகள்தான் அந்தப் பெண். புராண காலத்து யுகங்களில் இருந்த பெண்களால் அநீதிக்கு எதிராக போர் ஏற்பட்டது. ஆனால் இந்தக் கலியுகத்தில் ஏற்பட்டிருக்கிற போரில் நீதியை அழிக்க அநீதிகளலெல்லாம் ஒன்று கூடி தவறான சட்டங்கள் என்ற உருவில் வந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

அதனால் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை பண்புடன் வளர்த்து நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் மாற்றுவது பெற்றவர்களின் கடமை. இல்லையெனில் நீதிவெண்பாவில் சொன்னது உண்மையாகிவிடும். இப்போதே நாட்டின் நிலைமை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்தியிலேயே நீங்கள் உணரமுடியும். அதற்கான சிறு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.


சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

இரும்பு சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்
04 Aug 2010 தினமணி

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்


ஜூலை 29,2010 தினமலர்

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்

சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010
சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஜூலை 16,2010 தினமலர்
Woman ASI caught taking Rs 500 bribe
தாயுடன் கணவனுக்கு கள்ளக்காதல்: நடவடிக்கை கோரி இளம் பெண் புகார்
தினமலர் மார்ச் 05, 2010
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்
கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தினமலர் ஜூன் 12,2010
மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010
மாமியாருக்கு “குத்து”விளக்கு ஏற்றிய குல விலக்கு மருமகள்
தினமலர் 18 மே 2010
மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010
கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

அதனால் அவரவர் வீட்டுப் பெண்களை நல்வழிப்படுத்தி வீட்டையும், நாட்டையும் உலகையும் காப்பாற்றவேண்டியது பெற்றவர்களின் கடமை. பெற்றோர்களே, போலியான பெண்ணியவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் “பெண் விடுதலை” என்பதற்கு தவறான அர்த்தத்தை உங்களின் மகள்களுக்கு காட்டி அவர்களின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள்.





Sunday, August 08, 2010

(கள்ளக்)காதலுக்கு மரியாதை

பெண் நினைத்துவிட்டால் சட்டங்களால் என்ன செய்யமுடியும்? ஆனால் பெண் நினைப்பதை அடைவதற்காக சட்டங்கள் ஆண்களை தவறாக தண்டிக்கவும் தயங்குவதில்லை. என்ன ஒரு வினோதம் இந்த நாட்டில்!

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

நாகர்கோவில்: கள்ளக்காதல் மோகத்தில், கட்டிய கணவனை உதறிவிட்டு ராஜபாளையம் பெண், கள்ளக்காதலனுடன் சென்றார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(33); விவசாயி. இவரது மனைவி அம்சவேணி என்ற அனிதா(25). இவர்களுக்கு சரவணன்(7) என்ற மகன் உள்ளான். குமாரசாமியின் சகோதரி கணவரின் அண்ணன் தாமோதரன்(34). இவர் மீசலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும், அனிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த 28ம் தேதி தனது மகனுடன் மருத்துவமனைக்குச் சென்ற அனிதா மாயமாகிவிட்டார். அவர், கள்ளக்காதலன் தாமோதரனுடன் கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே அக்கரையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். மனைவியை காணாத குமாரசாமி, கீழராஜகுலராமன்புதூர் போலீசில் புகார் செய்தார். தாமோதரனுடன் அனிதாவை பார்த்த குமாரசாமி நண்பர்கள், அவருக்கு தகவல் கொடுத்தனர். குமாரசாமி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கள்ளக்காதலர்களை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு கணவன் குமாரசாமி, "நமது மகனுக்காக என்னுடன் வந்து விடு' என்றும், "என்னை கைவிட்டு விடாதே' என்று கள்ளக்காதலன் தாமோதரனும், அனிதாவிடம் கெஞ்சினர். அப்போது, கள்ளக்காதலனை அணைத்து அனிதா ஆறுதல் கூறினார்.போலீசார், சிறுவன் சரவணனை அழைத்து தந்தை யார் என்று கேட்டபோது குமாரசாமியை அடையாளம் காட்ட, அவனை அனிதா பிடித்து இழுத்து வைத்துக் கொண்டார். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அனிதா, கள்ளக்காதலன் தாமோதரனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கீழராஜகுலராமன்புதூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம்)



Tuesday, August 03, 2010

பாலியல் வன்கொடுமையை ஆண்கள் ஆதரிக்கிறார்களா?

செய்தியைப் மேலோட்டமாகப் படித்ததும் ஏதோ ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். அப்படித்தான் பல ஆண்டுகளாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் இதுவரை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தப் பதிவை முழுதுமாக கடைசிவரை படித்துப்பாருங்கள். பிறகு இதுபோல செய்தித்தாள்களில் வரும் செய்தி எப்படி மேலோட்டமாக எழுதப்பட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.



புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.


ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.


மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்




உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.

தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.





Wednesday, July 21, 2010

தன்வினை தன்னைச் சுடுமா? கண்டிப்பாகச் சுடும்.

செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நன்கு யோசித்து பிறகுதான் செய்யவேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்று அன்று மூதாதையர்கள் சொன்னார்கள். அதைப் பின்பற்றி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொன்னார்கள். பிறகு அதையே அறிவியல் என்ற பெயரில் ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு என்று சொன்னார்கள். இவ்வளவு சொல்லியும் அதை பெண்களுக்கு எடுத்துரைக்க சரியான ஆசிரியர் இல்லை. இந்த ஆன்மிக, அறிவியல் உண்மைகளை இந்தக் காலத்துப் பெண்கள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்கள் நன்கு உணரவேண்டும். அதற்குப் பெண்கள் வாரியம்தான் உதவி செய்யவேண்டும். வேறுயாரும் பொய்வழக்குப்போடும் பெண்களைக் காப்பாற்றவே முடியாது.



கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை
ஜூலை 22,2010 தினமலர்

சென்னை : பிரபல நடிகரின் முன்னாள் மனைவியின் அண்ணி தற்கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகர், மெலோனி தெருவைச் சேர்ந்தவர் பொன்குமார் தனசேகரன். இவர், பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமியின் சகோதரர். பொன்குமாரின் மனைவி அபிராமி(30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்குமாரின் சகோதரர் நாகராஜனும் தன் மனைவியுடன் இதே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சொத்துப் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே செலவுகளை கவனித்து வந்தனர். பொன்குமாரின் மனைவி அபிராமி, தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, மாம்பலம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாம்பலம் போலீசில் அபிராமியின் தாயார் ஜோன் சீனிவாசன், "பொன்குமாரின் சகோதரர் நாகராஜன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சகோதரர் யுவகிருஷ்ணன் ஆகியோர் தான் தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளனர்' என புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tuesday, July 20, 2010

குழந்தைகளுக்கு எமனாகும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்

சமீப காலமாக பத்திரிக்கைகள் விழிப்புடன் செய்திகள் வெளியிடுவதன் மூலம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற இருட்டறைக்குள் இருந்துகொண்டு கொலைசெய்துகொண்டிருக்கும் பல பெண்களின் அப்பாவித்தனம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதுவரை கள்ளக்காதலுக்காக கணவனைக் கொல்லும் நிலை மாறி இப்போது குழந்தைகளையும் கொல்லும் இழிநிலையில் சென்றுகொண்டிருக்கிறது நிலவரம்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பும், கருத்தும் எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊற்றியது போல பலருக்கும் நல்ல தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்துப்படி வயதுவந்த ஆண், பெண் இருவரும் விரும்பி உறவுகொண்டு அது கள்ளஉறவாக அதாவது இந்திய சட்டம் IPC497- Adultery சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாதபட்சத்தில் அது சட்டப்படி தவறில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே அது அடுத்தவன் மனைவியுடனான உறவாக இருந்தால் உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தில் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பின் பகுதியையும் அந்த சட்டப்பிரிவையும் கீழே பாருங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம் அது திருமணம் ஆன ஆணுடனா அல்லது திருமணமாகாத ஆணுடனா என்று சொல்லப்படவில்லை)

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்ட வரையறைப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் கருத்தின்படியும் கீழுள்ள செய்தியில் கள்ளஉறவு ஏற்பட்டு அதில் ஒரு குழந்தை பலியிடப்பட்டிருக்கிறது. கீழுள்ள செய்தியில் திருமணமான ஆண் திருமணமாகாதப் பெண்ணுடன் உறவுவைத்திருக்கிறார். இது சமீபத்திய தீர்ப்புப்படி இரு வயதுவந்த ஆண்,பெண் கொண்ட விருப்ப உறவாக அமையும் அதேநேரத்தில் IPC497 (Adultery) சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாததால் இது Adultery என்ற பிரிவின் கீழ் குற்றமாகவும் வராது.

மேலும் அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் திருமணம் செய்திருந்தால்தான் அது அந்த ஆணைத் தண்டிக்க வழி செய்யும் இருதார மணம் (Bigamy) என்ற பிரிவில் கருதப்படும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மனைவியல்லாத இரண்டாவது காதலியுடன் திருமணம் செய்யாமல் பல அரசியல்வாதிகள் உங்கள் கண்ணுக்கெதிரேயே பெருமையுடன் உங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோன்ற குற்றங்களை சட்டங்களும் சமுதாயமும் எப்படி ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன என்று தெளிவாகத் தெரிகிறதல்லவா.


சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆதித்யா உடல், நாகை சுடுகாட்டில் புதைக்கப்பட்ட போது கதறியழும் தாய் ஆனந்தி.

சென்னை :சென்னையில் காணாமல் போய், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (எ) அனந்த லட்சுமி (30). இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், மூன்றரை வயதில் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசி (26). எம்.எஸ்சி., பட்டதாரியான இவர், ஜெயக்குமார் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெயக்குமாரும், பூவரசியும் முன்னரே, சென்னையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய போது நெருக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பாக வளர்ந்தது. பூவரசியை, வேப்பேரியில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ., விடுதியில் ஜெயக்குமார் தங்க வைத்தார். இதை அறியாத ஆனந்தியும், அவரது குழந்தைகளும், பூவரசியிடம் நெருக்கமாக பழகினர்.ஜெயக்குமார் அடிக்கடி தனது மகன் ஆதித்யாவை அலுவலகத்திற்கு அழைத்து வரும் போது, பூவரசி தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை 17ம் தேதி வழக்கம் போல் ஆதித்யா, அலுவலகம் வந்த போது, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஆண்டர்சன் சர்ச்சில் விழா நடப்பதாகவும், அங்கு ஆதித்யாவை அழைத்துச் செல்வதாகவும் பூவரசி கூறினார். தொடர்ந்து, ஜெயக்குமார், ஆதித்யாவை பூவரசியுடன் அனுப்பி வைத்தார். அன்று மாலை 6 மணிக்கு தனது மகன் ஆதித்யாவை காணவில்லை என்று எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்தார். விசாரணையில், தனது மகனை, நண்பியான பூவரசியுடன் அனுப்பியதாகவும், அவர் சர்ச்சில் மயங்கி விழுந்த போது மகனை காணவில்லை என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பூவரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரும் அப்படியே கூறியதால், மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். மறுநாள் காலை போலீசும், ஜெயக்குமாரும் தொடர்பு கொண்ட போது, பூவரசியின் மொபைல் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் இணைப்பு கிடைத்த நிலையில், போலீசார் மீண்டும் பூவரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் சூட்கேசில் இறந்த நிலையில் சிறுவன் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த படத்தை வைத்து கேட்ட போது ஜெயக்குமாரும், பூவரசியும் மறுத்துவிட்டனர். ஆனால், ஆனந்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் அடையாளம் காட்ட நாகைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சென்ற ஆனந்தி, சூட்கேசில் இருந்த சிறுவன் உடல் தனது மகன் ஆதித்யாவுடையது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், பூவரசியை கைது செய்தனர். சிறுவனின் தந்தை ஜெயக்குமார் தற்போது நாகை விரைந்துள்ளார்.

சிறுவன் உடல், நாகை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீசாருடன், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தி, சிறுவன் உடலை பார்த்து கதறியழுது மயங்கி விழுந்தார். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஆனந்தி சேர்க்கப்பட்டார்.நேற்று மாலை சிறுவன் ஆதித்யா உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நாகை சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சோகத்தோடு பங்கேற்றனர்.நாகை பஸ் ஸ்டாண்டு முழுப்பகுதியையும் கண்காணிக்க, நவீன கேமரா பொருத்தப்பட்டு இதன் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேரமும், தனி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், சிறுவனை கொலை செய்து உடலை அடைத்து வைத்திருந்த சூட்கேஸ் இறக்கி வைக்கப்பட்டு, அனாதையாக கிடந்துள்ளது. இது நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத மர்மம் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.

"ஜெயக்குமாரை பழிவாங்கவே கொன்றேன்'

ஜெயக்குமாருக்கும், எனக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். இரண்டு முறை அப்படி நடந்தது. தொடர்ந்து அவர், கருவை கலைக்கச் சொன்னதால் நான் ஆத்திரமடைந்தேன். திருமணம் செய்யுமாறு கூறியபோது ஜெயக்குமார் மறுத்தார். எனக்கு உருவான குழந்தையை கொன்றுவிட்டு, ஜெயக்குமார் மட்டும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.கடந்த 17ம் தேதி, சிறுவன் ஆதித்யாவை கூட்டிக் கொண்டு எனது விடுதிக்குச் சென்று, அங்கு அவன் அணிந்திருந்த டிரஸ்சில் இருந்து நைலான் கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கி கொன்றேன். பின்பு, தலையை பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி உடலை சூட்கேசில் வைத்தேன். அங்கிருந்து ஆண்டர்சன் சர்ச்சிற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற போது மயங்கி விழுந்து விட்டேன். போலீசார், மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும் போது, ஆதித்யாவின் உடல் சூட்கேசில் எனது அறையில் இருந்தது.மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்து, ஆட்டோவில் சூட்கேசை ஏற்றி கோயம்பேடு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏற்றி புதுச்சேரி சென்றேன். அங்கு, நாகை பஸ்சில் சூட்கேசை ஏற்றி வைத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டேன். ஜெயக்குமாரை பழிவாங்கவே நான் இந்த கொலையை செய்தேன்.

==============

இந்த செய்தியிலிருந்து பெண்ணியவாதிகள் என்ன சொல்வார்கள் என்றால் பெண்ணை கர்ப்பம் அடையச் செய்து ஏமாற்றிவிட்டான் ஆண் என்று சொல்வார்கள். ஆனால் செய்தியில் பார்த்தீர்களா? முதல் முறை கர்ப்பம் அடைந்து அது கலைக்கச்சொல்லியும் மீண்டும் பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமலா இரண்டாவது கர்ப்பம் எப்படி ஏற்பட்டிருக்கும்? இப்படித்தான் கள்ள உறவு IPC497 (Adultery) சட்டம் சொல்கிறது. கள்ள உறவில் ஈடுபடும் பெண் குற்றவாளி இல்லை என்று சொல்லி பெண்ணிற்கு தண்டணையிலிருந்து விலக்கு அளித்து பெருமைப்படுத்தினால் அப்பாவிக் குழந்தைகளின் உயிரை பணயம்வைத்து இதுபோன்ற சிறுமைத்தனங்கள்தான் நாட்டில் இனி பெருகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ''தாய்மை" என்ற பண்பு சட்டங்கள் மூலம் சமுதாயத்தில் அழிக்கப்பட்டு வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாய்மை என்ற பெயரில் பெண்களுக்கு ஒருதலைபட்சமான சிறப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடைசியில் அந்தத் தவறான சட்டங்களை பயன்படுத்துபவர்கள் கொடூர குணம் கொண்ட அரக்கிகள் மட்டுமே. உங்கள் வீட்டிலிருக்கும் உங்களது தாய் மற்றும் சகோதரிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதுகாக்கவில்லையே ஏன்?

இதுபோலத்தான் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. இதுபோலத்தானே ஒரு பெண் இரண்டுமாதக் குழந்தையைக் கூட வரதட்சணை வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தார்.

Stepmom Names Two-Month-Old Baby in Dowry Complaint (link)

In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.

கடைசியில் பெண்களுக்குச் சரியான சட்ட விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறது என்று பெண்கள்வாரியம் சொல்கிறது.



Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.

The IPC section allows for immediate arrest of the husband and in-laws by the police on the basis of a woman's complaint and has been controversial. Several pro-male organisations have been protesting against the section saying that the law is being misused by women for selfish gains and should include a penalty provision against its misuse. But women activists have been lobbying for no change in the law.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


இதுபோன்ற கள்ளக்காதல் கொலை, பொய் வரதட்சணை வழக்கு போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் யாரும் கல்வியறிவில்லாத அறியாமையில் உழலும் அப்பாவிகள் கிடையாது. அனைவரும் நன்கு படித்து நல்ல பணியில் இருக்கும் மேல்தட்டுவர்க்க நகரத்துப் பெண்கள். இவர்கள் இப்படி செய்வதற்குக்காரணம் என்ன அறியாமையா? பழிவாங்கத்துடிக்கும் வஞ்சக குணம், ஆணவம், அனைவரையும் அடக்கியாளத் துடிக்கும் கொடூர எண்ணம். இந்தக் குணங்களை பெண்ணுரிமை என்ற பெயரில் பல அமைப்புகள் பெண்களிடையே புகுத்திவருகிறார்கள். அதன் வெளிப்பாடுகள்தான் பின்வரும் வீர வசனங்கள்.

"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

அந்த வக்கிர ஆசையை தவறான பெண்கள் பூர்த்தி செய்துகொள்ள உதவுபவைதான் இன்றைய நடுநிலையற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். இதுபோன்ற நடுநிலையற்ற சட்டங்கள் தவறானப் பெண்களை ஊக்குவிப்பதை நிறுத்தும்வரை இதுபோன்ற அப்பாவிப் பிஞ்சுக்குழந்தைகள் தங்களது உயிரை உங்களுக்காகத் தியாகம் செய்துகொண்டிருக்கும் அவலநிலை தொடரும்.




Saturday, July 10, 2010

ராத்திரி நேரத்து பூஜை ஆரம்பம்!

தமிழ் நாட்டில் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் குடும்ப நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நல்ல முன்னேற்றம். நாட்டில் பல விவாகரத்து வழக்குகள் அதிகமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

சென்னை, ஜூலை 10: கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இலவச ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைன்' தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் விவாகரத்து வரை செல்வது தடுக்கப்படுவதோடு, விவாகரத்து மனுக்களும் பெருமளவில் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வார விடுமுறையில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியது: நாட்டிலேயே முதல்முறையாக வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இங்கு செயல்பட உள்ளன.

இந்தத் திட்டம் விரைவிலேயே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரத்துக்கு ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தாக்கல் செய்யப்படும் குடும்ப நல வழக்குகளுக்கு இப்போதுள்ள 3 நீதிமன்றங்கள் போதுமானவையாக இல்லை.

இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2000- ல் விவாகரத்து கோரி 972 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009-ல் இந்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

விவாகரத்து தவிர ஜீவனாம்ச வழக்குகளும் இதேபோன்று பல மடங்கு அதிகரித்துள்ளன.மொத்தம் 12,659 வழக்குகள் சென்னையிலுள்ள 3 குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல ஆலோசனைகள் வழங்கினால் தீர்க்கப்பட்டு விடும்.கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்ட உடனேயே அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்னை சிறிதாக இருக்கும்போதே தீர்வு காண்பதோடு, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். இதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைனை' தொடங்கும் திட்டம் உள்ளது.

அதேபோல், சட்ட உதவி மையத்தில் செயல்படும் ஆலோசனை மையங்களையும் இரவு 10 மணி வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது.குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்றார் எம்.ஒய்.இக்பால்.நீதிபதி எலிப் தர்மாராவ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.


மாவட்ட நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அறைகள், வீடுகளில் ஏ.சி. வசதி செய்யப்பட வேண்டும் என்றார் எலிப் தர்மாராவ்.நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி டி.முருகேசன், குடும்ப நல முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம், லா அசோசியேஷன் தலைவர் டி.வி. கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

இதுபோல விவாகரத்து வழக்குகள் அதிகமானதற்குக் காரணம் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க ஆளில்லாமல்போனதுதான் காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது. பெண்களுக்கு நல்வழி காட்வேண்டிய பெண்கள் வாரியம் சொல்லிக்கொடுப்பது என்ன என்று கீழுள்ள செய்தியில் பாருங்கள்:

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாட்டில் என்ன நடக்கிறதென்றால் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனை ஏற்பட்ட உடனே பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால் பொய் வரதட்சணை வழக்குத் தொடரவேண்டும் என்பதுதான். இதுதான் பல சட்டமேதைகள் தங்களிடம் வரும் பெண்களுக்கு சொல்லித்தரும் அறிவுரை. பிரச்சனைக்குக் காரணம் என்ன என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். பிறகு இதற்கு “காசிற்காக” தூபம் போடுவதுபோல் மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து, கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையிலடைத்து அவமானப்படுத்தி மிரட்டும் கொடுஞ்செயல். இவையெல்லாம் கடைசியில் எல்லா குடும்பத்தையும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

இந்த விஷயத்தை 2003ம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது:

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI,
DATE OF DECISION: May 19, 2003,

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sisters, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.

அதனால் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டன என்பதற்காக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏன் இப்படி அதிகமானது என்ற அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால்தான் சமுதாயத்தில் குடும்பக் கட்டமைப்பு சிதையாமல் இருக்கும். நீதிமன்றங்கள் அதிகரிப்பதால் பலருக்கு வருமானம் கிடைப்பதைத்தவிர அப்பாவிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.


பொய் வரதட்சணை வழக்குகள் உருவாவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படாதவரை இந்தியக்குடும்பங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. பணம் கிடைக்கிறது என்பதற்காக அடுத்தவன் குடிதானே கெடுகிறது நமக்கென்ன என்றிருப்பவர்களுக்கு தன்குடி கெடும்போதுதான் அந்த உண்மை புரியும். அதுவரை இந்த ராத்திரி நேரத்து நீதிமன்ற பூஜைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.




Wednesday, June 30, 2010

வரதட்சணைக் கொடுத்த பெண்ணை பாராட்டிய இந்திய ஜனாதிபதி!

இந்தியாவில் 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை பெண்கள் வரதட்சணைக் கொடுமை அடைவதாக பெண்கள் நல வாரியம், பெண்கள் நல அமைச்சகம் மற்றும் பல மகளிர் குழுக்கள் போர்க்கொடி தூக்கிக்கொண்டு ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கூட்டம் ஒரு உண்மையை மட்டும் மறைத்து தங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் பிரச்சனையை திசைதிருப்பிக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருந்தாலும் இன்றுவரை அதை ஒழுங்காக செயல்படுத்தாமல் தடைசெய்து வருவது இந்திய அரசாங்கம்தான். இயற்றிய சட்டத்தை சுயநல நோக்கில் ஒழுங்காக செயல்படுத்தாமல் அப்பாவிக் கணவர்கள் மீது பழி சுமத்தி சிறையில் தள்ளி சமுதாயத்தை சீரழித்து வருகிறது இந்த ஒட்டுமொத்தக் கூட்டம்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3 ன் படி வரதட்சணை கொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)


3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more


சட்டம் இப்படி இருக்கிறது. ஆனால் இன்றுவரை ஒருவர் கூட வரதட்சணைக் கொடுத்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதில்லை. கொடுப்பவர் இல்லையென்றால் வாங்குபவர்கள் இருப்பார்களா? ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை. காரணம் பல மகளிர் அமைப்புகளுக்கு வரதட்சணை வழக்குகளின் புள்ளி விபரம்தான் பணம் காய்க்கும் மரமாக, வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு இந்த வரதட்சணை முறையை ஒழிக்க மனம் வராது.

கீழுள்ள செய்தியில் பாருங்கள் இந்திய ஜனாதிபதி கூட இதே வேலையைத்தான் செய்திருக்கிறார்.

புதுடில்லி: வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித் தள்ளிய துணிச்சல் பெண்ணை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்த இளம்பெண் புல்தி பாகி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புல்தி பாகிக்கு சஞ்சய் பாகி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது பெற்றோர் புல்தி பாகி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். மேலும் உள்ளுர் பைனான்ஸ் அதிபரிடம் கடன் வாங்கி மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்வரிசைகளை வழங்கினர். கடந்த மாதம் திருமண மண்டபத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணத்தின் போது ஒரு லட்ச ரூபாய் ரொக்கமாக வரதட்சணை கொடுக்க புல்தியின் வீட்டார் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆனால் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தனர். மீதம் பத்தாயிரம் ரூபாயை சிறிது நாட்களில் தருவதாக கூறினர். இதனை மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை.மேலும் கூடுதல் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்றும் நிர்பந்தம் விதித்தனர். மேலும் மாப்பிள்ளை சஞ்சய் குடிபோதையில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மீதி பத்தாயிரம் ரூபாயை உடனே தரவேண்டும்;கூடுதலாக வரதட்சணை கொடுத்தால் தான் புல்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் எனக் கூறினார்.

மாப்பிள்ளை வீட்டாரின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த புல்திபாகி அதிர்ச்சியடைந்தார். மணமேடையில் இருந்து திடீரென எழுந்து கழுத்தில் இருந்த மாலை, நகைகளை கழற்றி வீசினார். நான் சஞ்சய் பாகியுடன் செல்ல மாட்டேன்;எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம் என கூறிவிட்டு விருட்டென்று எழுந்து வீட்டிற்கு சென்று விட்டார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் புல்தி பாகியின் செயலைக் கண்டு திகைத்தனர்.இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்,உறவினர் சமாதானங்களை புல்திபாகி ஏற்கவில்லை.இதையடுத்து பிரச்னையில் ஊர் பெரியவர்கள் தலையிட்டு இந்தத் திருமணம் செல்லாது என அறிவித்தனர்.

இந்நிலையில் வரதட்சணை பிரச்னையால் திருமணத்தை உதறித்தள்ளி,பெண் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் புல்தி பாகியின் துணிச்சலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் புல்தி பாகியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து விரைவில் அவர் கவுரவப்படுத்த உள்ளார். கிராமப்புறங்களில் பெண்கள் திருமணத்தை உதறித் தள்ளுவதால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதையும் மீறி திருமணத்தை உதறித்தள்ளிய புல்தியை ஜனாதிபதி நேரில் அழைத்து ஊக்கப்படுத்த விரும்புகிறார்.அவர் கல்வி கற்கவும் அல்லது வேலைக்கு செல்லவும் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். புல்திக்கு நிதி உதவி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோன்று சமுதாயப் புரட்சி செய்த சரிதா மட்டோ,பிரவீனா கதுன் மற்றும் ரேகா ஆகியோரையும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கவுரவப்படுத்த உள்ளார்.

=============

மேலுள்ள செய்தியில் முதலில் வரதட்சணைக்கொடுக்க பெண்வீட்டார் ஏன் ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வியே கேட்கப்படவில்லை. வரதட்சணை கொடுக்க முற்பட்டது சட்டப்படி ஒரு குற்றச் செயலாகும். முதலிலேயே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கும்போதே திருமணத்தை உதறியிருந்தால் இந்தப் பெண் புரட்சிப்பெண் என்று சொல்லலாம். ஆனால் இரண்டு கூட்டமும் சேர்ந்து ஒரு குற்றத்தை இழைத்திருக்கிறார்கள். பிறகு “டீல்” ஒத்து வரவில்லையென்றால் அடுத்த ஆள் மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்தியாவில் நடந்துவரும் வரதட்சணை சட்ட நடைமுறை. இதில் வரதட்சணைக்கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஏன் பரிந்துரைக்கவில்லை? வரதட்சணை தடுப்புச் சட்டத்தை முழுமையாக யார்தான் கடைபிடிப்பார்களோ?

நாட்டின் சட்டத்தை கடைபிடிக்கவேண்டிய முதல் பெண்மணியே வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்ய முயன்றவர்களை பாராட்டி கௌரவம் செய்தால் நாட்டில் இதுபோன்ற சமுதாயக் குற்றங்களை களைவது யார்? பெண்களுக்கு உண்மையாகவே நன்மை செய்யப்போவது யார்?

சமீபத்தில் தில்லி நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வரதட்சணை சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்திருக்கிறார். வரதட்சணை கொடுத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார். ஆனால் ஜனாதிபதியோ வரதட்சணை கொடுத்தவர்களை பாராட்டி மகிழ்கிறார். என்ன ஒரு சட்ட நடைமுறையோ! கடைசியில் பெண்களை வைத்து நன்றாக சட்ட, அரசியல் வியாபாரம் செய்துவிடுகிறார்கள் இந்த நாட்டில்.


Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.



கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

மென்யான மனம் படைத்தவர்கள் இந்த செய்தியை தயவு செய்து படிக்கவேண்டாம். படித்தால் உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படும்!


கலியுக கண்ணகி:
பெண் தீக்குளிக்க முயற்சி: திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
ஜூலை 01,2010 தினமலர்

திருப்பூர்: திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று விசாரணைக்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்; இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வீரபாண்டி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ஜீவா; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகனும், மகளும் உள்ளனர்; இதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணையன்; பனியன் தொழிலாளி. இவரது மனைவி கலா (30). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பக்கத்து வீடுகளில் வசித்த ஜீவாவுக்கும், கலாவுக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ள உறவாக மாறியது. ஜீவா மனைவி சித்ராவுக்கு, தன் கணவர் மீதும், கலா மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த சித்ரா சத்தம் போட்டுள்ளார்; கலாவுக்கும் சித்ராவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி ஜீவாவும், கலாவும் காணாமல் போய்விட்டனர். சித்ராவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டறிய முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையத்தில் இருந்த இருவரையும், சித்ராவின் உறவினர்கள் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளனர். தன் கணவர் ஜீவாவை மீட்டுத்தருமாறு, அவரது மனைவி சித்ரா திருப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கலா மற்றும் ஜீவா இருவரையும் அழைத்து வந்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று விசாரித்தனர். அப்போது, தனது நான்கு பிள்ளைகளுக்காக, கலாவை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கண்ணையன் அழைத்தார். இதற்கு மறுத்த கலா, சித்ராவின் கணவர் ஜீவாவுடன் வாழ விரும்புவதாகவும், தனது நான்கு குழந்தைகளையும் அவர் காப்பாற்ற சம்மதித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மீண்டும் கண்ணையனுடன் சேர்ந்து வாழ்ந்தால், ஊர் கேவலமாக பேசும். சித்ராவும் அவரது உறவினர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி தாக்கவும் செய்வர் என்று கலா கூறியுள்ளார். இப்புகாரை விசாரித்த மகளிர் போலீசார், கலாவை அவரது கணவர் கண்ணையனுடன் சேர்ந்து வாழவும், ஜீவாவை, சித்ராவுடனும் சேர்ந்து வாழவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கலா, ஸ்டேஷனுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். ஸ்டேஷன் முன்பகுதியில் நின்று கொண்டு, வீட்டில் இருந்து பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகளிர் போலீசார், கலாவை தடுத்து, மண்ணெண்ணெய் பாட்டிலை கைபற்றினர். மீண்டும் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று பேச்சு நடத்தினர். டி.எஸ்.பி., ராஜா ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை நடத்தினார். தற்கொலைக்கு முயன்ற கலா மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு வந்த பெண், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம், திருப்பூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

===================

நல்ல வேளை. இந்திய வரதட்சணைப் பெண் தெய்வங்கள் (IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act) உள்ளே புகுந்து குழந்தைகளின் நலனுக்காக ஓடிப்போன மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய அந்த அப்பாவிக் கணவனை பொய்வழக்கு மூலம் தண்டிக்கவில்லை. அதுவரை சந்தோஷம்தான்.




மனைவி உடையான் துப்பாக்கிக்கு அஞ்சான்!

கீழுள்ள செய்தியைப் படிப்பதற்கு முன்பு இந்த சட்டத்தைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு செய்தியில் சொல்லப்பட்டுள்ள பெண் இந்திய சட்டப்படி எந்தத்தவறும் செய்யவில்லை என்று உங்களுக்கே புலப்படும்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் !), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவசாயி கைது
ஜூன் 30,2010 தினமலர்

ஓசூர்: அஞ்செட்டி அருகே கள்ளக்காதல் தகராறில், கள்ளக் காதலனை, காதலியின் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த மாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிக்கய்யா (37). அவரது மனைவி ராதா (32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு அருகே வசிப்பவர் விவசாயி அண்ணாதுரை (34). அவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

அண்ணாதுரைக்கும், ராதாவுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவன் இல்லாத நேரங்களில் ராதா, அண்ணாதுரையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை உறவினர்கள் மூலம் கேட்டறிந்த சிக்கய்யா, மனைவியை கண்டித்ததோடு, அண்ணாதுரையை வீட்டுக்கு வரக்கூடாது என, எச்சரித்தார். ஆனால், அண்ணாதுரை, சிக்கய்யா வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டுக்கு சென்று ராதாவுடன் உல்லாசமாக இருந்தார்.

நேற்று முன்தினம் சிக்கய்யா வெளியூர் செல்வதாகக் கூறி விட்டு, வீட்டை விட்டு சென்றார். இரவு 9 மணிக்கு திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் அண்ணாதுரையும், ராதாவும் ஒன்றாக இருந்தனர். சிக்கய்யாவை பார்த்ததும், அண்ணாதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆத்திரமடைந்த சிக்கய்யா, மனைவியை அடித்ததோடு, வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அண்ணாதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அவரை, சிக்கய்யா நாட்டுத் துப்பாக்கியால் 17 முறை கோபம் தணியும் வரை சுட்டார். அதில், அண்ணாதுரை சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். சிக்கய்யா அங்கு இருந்து தப்பியோடி தலைமறைவானார்.

தகவல் அறிந்த அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணாதுரையை சிக்கய்யா துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை அஞ்செட்டியில் இருந்து வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற சிக்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கணவர் இந்திய சட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார் போலிருக்கிறது. கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று இந்திய சட்டமே சொல்லியிருக்கிறது. அதனால்தான் சட்டத்தை மதித்து கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆணை மட்டும் இந்த அப்பாவி கொன்றிருக்கிறார் போலிருக்கிறது.



Monday, June 28, 2010

வரதட்சணை கொடுப்பது தவறு என்று சொன்ன ஒரு உண்மையான பெண் நீதிபதி!

1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி இந்த சட்டத்தின் மூலம் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் பெண்கள் அமைப்புகள் வரதட்சணைக் கொடுமை இன்னும் நாட்டில் இருக்கிறது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிப்பதும் கிடையாது, ஒழுங்காக செயல்படுத்துவதும் கிடையாது. இதுதான் இந்திய நாட்டு சட்டங்களின் நடைமுறை. இதனால்தான் நாட்டில் பல அவலநிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நாட்டில் இன்றும் எப்போதாவது மழை பொழிகிறது.
தில்லியில் உள்ள ஒரு பெண்நீதிபதி வரதட்சணைகொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சட்டத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி நீதிபதி என்ற பதவிக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கிறார். இதுபோல அனைத்து காவல் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதித்து ஒழுங்காக செயல்படுத்தினால்தான் நாட்டில் பெண்களின் நிலை உயரும்.

பெண்களை எப்போதும் இழிநிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கூட்டம் சட்டங்களை ஒருதலை பட்சமாக செயல்படுத்தி ஆண்களை குற்றவாளிகளாகக் காட்டி பெண்களை தவறு செய்ய தூண்டி அவர்களை எப்போதும் கீழ்நிலையில் வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் பெண்களின் நிலை தரம்தாழ்ந்திருந்தால்தான் வெளிநாடுகளில் இவர்களைக் காட்டி பணம் கேட்கமுடியும். அவர்களும் ஐயோ பாவம் இந்தியாவில் பெண்களின் நிலை மோசமாக இருக்கிறதென்று அந்த பெண்ணுரிமை பேசும் அமைப்புகளுக்கு பணம் தருவார்கள். அதனால்தான் இன்றுவரை அந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒருதலை பட்சமாக செயல்படுத்தப்படுகிறது.


Giving dowry an equal crime, says court

Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.




Wednesday, April 14, 2010

மருமகள் கொலைசெய்தால் குற்றமா? என்று திருத்துவார்களோ சட்டத்தை!

கள்ளக்காதலை தட்டிக்கேட்கும் மாமனாரையோ அல்லது கணவரையோ மருமகள் கொலைசெய்தால் அது குற்றமா? அது குற்றமில்லை என்று பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஏன் இன்னும் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்று தெரியவில்லை!

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

=========================================================

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.
=========================================================

பொய் வரதட்சணை வழக்குகள் போடுவதெல்லாம் மிகவும் பழையமுறையாகிக்கொண்டுவருகிறது. இந்தக் காலத்தில் வரதட்சணை சட்டங்களை திருத்தி மருமகள்களுக்கு மிகச்சிறிய சலுகை கொடுப்பதைவிட மருமகள் கொலைசெய்தால் கூட அது குற்றமில்லை என்று அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் பல மருமகள்களுக்கு உதவியாக இருக்கும். முற்போக்காக சிந்தித்து மகளிர் ஆணையம் இந்தியப்பெண்களுக்கு முழுச்சலுகைகளை வாங்கித்தருவார்களா?

=======================================================


தினமலர் ஏப்ரல் 15,2010

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயவேல்ரெட்டி(68). அதே பகுதியில் இயங்கி வரும் ரைஸ்மில் மற்றும் பல வணிக வளாகங்களின் உரிமையாளராக இருந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் சாலையில் உள்ள ரைஸ்மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மறுநாள் காலை சாலையோர முட்புதரில், அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., நாகஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில்,ஜெயவேல் ரெட்டியின் மூத்த மகன் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(37).ஆரம்பாக்கம் அருகே உள்ள எடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(37).சொந்தமாக விவசாய டிராக்டர் வைத்துள்ளார். வேலை காரணமாக ஜெயவேல் ரெட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து போன சீனிவாசனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ள காதல் உருவானது. இதை அறிந்த ஜெயவேல் ரெட்டி இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில், ஜெயவேல் ரெட்டி, தனது சொத்துகளில் பாகம் பிரித்த போது, மகன்களை விட, மகள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால், கள்ள காதல் தொடர்பாக கோபமாக இருந்த புவனேஸ்வரி மேலும் ஆத்திரமடைந்தார்.

இதை காரணம் காட்டி, சொத்துகளை பெற்று தனி குடித்தனம் செல்ல புவனேஸ்வரி முயன்றார். இதற்கும் ஜெயவேல் ரெட்டி தடையாக இருந்துள்ளார். இதையடுத்து, சீனிவாசன் உதவியுடன் ஜெயவேல் ரெட்டியை கொலை செய்ய, புவனேஸ்வரி திட்டம் தீட்டினார். இதன்படி, சீனிவாசன் நண்பரான எடகண்டிகை ஸ்ரீதர் உதவியுடன், திருவொற்றியூர் ஷேக் பாரி(35) என்பவரை அணுகினர்.அவர், கொலை திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக, 46 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இதன்படி, ஷேக் பாரி கூட்டாளிகளான பிரபாகரன்(30), பாலாஜி(25) ஆகியோருடன் சேர்ந்து ஜெயவேல் ரெட்டியை கொடூரமாக கொலை செய்தனர், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து புவனேஸ்வரி, சீனிவாசன், அவரது நண்பர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஷேக் பாரி, பிரபாகரன்,பாலாஜி ஆகியேரை தேடி வருகின்றனர்.


Sunday, March 07, 2010

குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் சேர்த்து திருமணம் செய்யலாமா?

பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றினால் சில பெண்கள் அதனைப் பயன்படுத்தி எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார்கள்.


மாமனார் வீட்டில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை
தினமலர் மார்ச் 08,2010

புதுடில்லி: "மாமனார் வீட்டு சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை' என, டில்லி கோர்ட் தெரிவித்துள்ளது.அரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியை, தனது மாமனாரின் சொத்தில் பங்கு கேட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டில்லி செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மது ஜெயின் கூறியதாவது:குடும்ப வன்முறை சட்டம் போன்றவை பெண்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டது. இச்சட்டத்தை வைத்து பெண்கள் யாரையும் மிரட்டக் கூடாது. அதற்கு கோர்ட்டை ஒரு கருவியாகவும் பயன்படுத்தக்கூடாது.

மாமனாரின் சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமை இல்லை. தேவைப்பட்டால் பராமரிப்பு செலவை கணவனிடமோ, மகன் மற்றும் மகளிடம் மட்டுமே கேட்க உரிமை உண்டு.மனு கொடுத்துள்ள பெண், அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவர், தனியார் பள்ளியில் நூலகராக உள்ளார். இருவருடைய சம்பளமும் ஏறக்குறைய 20 ஆயிரமாக உள்ளது. இதை வைத்து அவர்கள் நல்லபடியாக குடும்பம் நடத்தலாம்.அதை விட்டுவிட்டு மாமனார் சொந்த பணத்தில் கட்டிய வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமையில்லை. இந்த வீட்டை கட்டியதில் இவருடைய கணவரின் பங்கு ஏதும் இல்லை.அதுமட்டுமல்லாமல் திருமணமான புதிதில் ஓரிரு நாள் மாமனார் வீட்டுக்கு சென்றதோடு சரி. அதன் பிறகு அந்த பக்கம் திரும்பிக் கூட பார்த்திராத இந்த மருமகள், அந்த வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமை கிடையாது. (மருமகள் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தால் மாமனார் இந்நேரம் வரதட்சணை கொடுமை சட்டத்தில் சிறையில் அல்லவா இருந்திருப்பார்!) இவ்வாறு நீதிபதி ஜெயின் கூறியுள்ளார். மனுவையும் தள்ளுபடி செய்து விட்டார்.

=================

நல்லவேளை இந்த மருமகள் குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் தாலி கட்ட சொல்லுங்கள் என்று சொல்லி பிறகு சொத்தில் பங்குகேட்கலாம் என்று நினைக்கவில்லை. காசுக்காக சட்டத்தின் மூலம் எதைவேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறது.




Sunday, February 21, 2010

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

சென்ற ஆண்டு இந்திய ஜனாதிபதி பெணகள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றினார். ஆனால் அதற்கு பல மகளிர் சங்ககங்களும் மகளிர் வாரியங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றிய செய்தியும் அதற்கு செய்தித்தாளில் ஒரு வாசகர் எழுதியிருந்த பதிலும் உங்களின் சிந்தனைக்காக தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு நன்கு யோசியுங்கள்.

வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில்,
"பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

மகளிர் சங்கங்களும் வாரியங்களும் பெண்களுக்கு எந்தவகையான போதனைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிறுமி அழகாக நடித்துக்காட்டியிருக்கிறார். இது தான் இந்த சங்கங்களின் இன்றைய நிலையா என்ற உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த புத்திசாலி சிறுமிக்குப் பாராட்டுக்கள்.





ஜனாதிபதிக்கு "ஜே':
பா.சி.ராமச்சந்திரன், திருவொற்றியூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "வரதட்சணைக் கொடுமை சட்டம், சில பெண்களால் தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு சர்வே கூறியிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று, இந்தியாவின் முதல் பெண்மணியும், நமது ஜனாதிபதியுமான பிரதிபா பாட்டீல் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை. மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஓர் பெண்மணி கூறியதை, உடனே பெண்கள் அமைப்புகள் கண்டனம் செய்தது, கண்டனத்திற்கு உரியதாகும். அவர் அப்படிச் சொன்னது உண்மை தானா என்று ஆராயாமல், அவர் கருத்தை எதிர்ப்பது தவறானது. ஒரு ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கிறதே என்று ஜனாதிபதி வருத்தப் பட்டதையே எதிர்க்கும் பெண்கள், வீட்டில் மாமியாரை எப்படி ஆதரிப்பர்? தங்களுடைய வீட்டில், தன்னைப் பெற்ற அன்னைக்கு ஆதரவாயிருக்கும் பெண்கள், தன்னுடைய கணவரைப் பெற்றதும் ஒரு அன்னையே என்பதை அறியாமல், அவர்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் இன்று ஏராளம். கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில், பெண்கள் தங்களுடைய மாமியார், மாமனாருக்கு எதிராகப் போவதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்திருக்கிறது. அது மட்டுமல்ல, வரதட்சணைக் கொடுமைச் சட்டம், பாலியல் பலாத்காரச் சட்டம் போன்றவைகளையும் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, மாமனார், மாமியார், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களையும் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். அதனால் தான், காவல் துறை எந்த ஒரு சட்டத்தையும் பயன்படுத்தும் போது, தீர விசாரித்து கைது செய்ய வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்' என்றெல்லாம் பேசிவிட்டு, செய்யாத தவறுக்காக பெண் உரிமையைப் பயன்படுத்தி ஆண்களையும், பெண்களையும் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? பல குடும்பங்களில் மருமகள் செய்யும் கொடுமைகளை மாமனார், மாமியார் போன்றோர், காவல் துறைக்குத் தெரிவித்து, மருமகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததற்குக் காரணம், குடும்ப கவுரவம் பாழாகிவிடக் கூடாது என்பதால் தான். இதை இளம் பெண்கள் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்த குடும்ப அமைப்பு. சரியான நேரத்தில் ஜனாதிபதி கூறியது முற்றிலும் சரியே!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.