இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Dowry. Show all posts
Showing posts with label Dowry. Show all posts

Saturday, March 19, 2011

மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்

கசப்பான உண்மை! உண்மை சில உள்ளங்களுக்கு எப்போதுமே கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்கள் வாயில் கொஞ்சம் சர்க்கரையைக் கொட்டிக்கொண்டு படிக்கவும்.

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக மற்றொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

இந்தியாவில் இப்போதெல்லாம் பெண்களின் நிலை எவ்வளவோ உயர்ந்துவிட்டது. நல்ல ஏட்டுக் கல்வி, உயர்ந்த பணி, கை நிறைய சம்பளம் இவற்றைக் காணும் சில பெற்றோர்கள் தங்கள் மகளின் வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை எப்படி ஓட்டலாம் என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதன்விளைவாக பெண்ணின் திருமணத்தை எந்தவகையிலாவது தடை செய்து தள்ளிப்போடுகிறார்கள்.

அப்படியே தட்டுத்தடுமாறி திருமணம் நடந்துவிட்டால் மகளின் திருமண வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனையைக்கூட பெரிதாக்கி மகளுக்கும், மருமகனுக்கும் பிளவு ஏற்படுத்தி வரதட்சணைக் கொடுமை என்று வண்ணங்கள் பூசி மகளை நம்பவைத்து தங்கள் மகளை வைத்தே மருமகன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யவைத்து மகளை வீட்டோடு வைத்துக்கொண்டு அவளின் வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இது போதாதென்று மகளை வைத்து மருமகனை மிரட்டி பொய்வழக்கிலிருந்து விடுபடவேண்டுமென்றால் பெருந்தொகை கொடுக்கவேண்டும் என்று கூட சில பெற்றோர்கள் தங்கள் சொந்த மகளை வைத்தே (Extortion) வியாபாரம் செய்யவும் துணிந்துவிடுகிறார்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இதுபோன்ற பல பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஒருமுறை உங்கள் ஊரில் இருக்கும் குடும்பநல நீதிமன்றங்களை சென்று பாருங்கள்.

இந்த பதிவில் இருக்கும் உண்மை சிலருக்கு கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்களுக்காகவே பின்வரும் வீடியோ. மக்கள் அரங்கத்தில் பொதுஜனம் ஒருவர், அதுவும் ஒரு பெண் இந்த உண்மையை சொல்லியிருக்கிறார். பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.



இந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியை இதற்குப் பிறகும் உங்களால் நம்பமுடியவில்லையென்றால் ஒரு பெண்ணே தனது பொறுப்பற்ற பெற்றோரைப் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்திருக்கும் அவலத்தையும் பாருங்கள்.

மகள் தக்க திருமண வயது அடைந்தும் அவருக்கு திருமணம் செய்துவைக்காமல் அவரது பணத்தின் மீதே கண்ணாக இருந்த பெற்றோரைக் கண்டு மனம் நொந்த பெண் தானாக திருமணம் செய்துகொண்டார். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சொந்த மகள் மீதே புகார் கொடுத்து அவரின் அரசுப் பணியை பறித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை!

இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் அந்தப் பகுதியைப் பாருங்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 28.02.2011
CORAM:THE HONBLE MR.JUSTICE K.CHANDRU
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)

K.Rajeswari ...Petitioner
Vs
1.The Secretary to Government,
Personnel and Administrative
Reforms Department,
Govt. of Tamilnadu,Secretariat, Chennai -9.
2.Deputy Director of Medical and
Rural Health Services and Family Welfare,
Salem.
3.Medical Officer,
Govt. Primary Health Centre,
Konganapuram, Salem District. ...Respondents

7. The facts leading to the filing of the writ petition were as follows:- The petitioner joined as a Store Keeper in the year 1982 in the Government Health Department in Salem District. Her parents did not take care of her and did not get her married at an appropriate age. She had crossed 32 years but yet her parents were only concerned about her income. At that time, when she was feeling depressed and mentally worried about her future, one Thangavel approached her and asked the petitioner whether she was willing to marry him. He also told her that he has a wife who is ill and unable to take care of herself. But however, he has got two children through her. The said Thangavel was unwilling to divorce his first wife on the ground that she was unwell. Therefore, with the consent of his first wife, the petitioner got married to the said Thangavel. The marriage was solemnized on 08.01.1990 at the Sub-Registrar Office, Edapadi. The petitioner never had intention to disregard the law and she got married only after ascertaining the wishes of the first wife of Thangavel.

8. The said Thangavelu was employed as a Junior Assistant in the Department of Treasuries and Accounts. After their marriage, the parents of the petitioner started giving trouble to the petitioner's husband by sending petitions to his department.

9. The petitioner's parents, however started sending further petitions to the petitioner's department which resulted in the issuance of a charge memo under Rule 17(b) of the TNCS (D & A) Rules to the petitioner on 24.07.1996. The petitioner gave her explanation on 19.08.1996. Subsequently, an enquiry was held against the petitioner and a personal hearing was given to her on 10.06.1997. The Enquiry Officer's report was communicated to the petitioner with a covering letter dated 11.05.1998. The petitioner sent a further representation dated 23.06.1998. Thereafter, the second respondent consulted the Government Pleader, Salem. The Government Pleader by his opinion dated 18.10.000 opined that the action committed by the petitioner will amount to 'Bigamy' and the consent obtained from the first wife will not in any way legalise the action. Further, it was also indicated that even if the second marriage was void, the fact that Government servant living with another married Government servant will also be a misconduct in terms of Rule 19(1) of the Government Servants' Conduct Rules. In view of the marriage, which fact was not disputed, a major penalty was imposed on her. Accordingly, the petitioner, vide an order dated 31.10.2000 was removed from service by the second respondent. Though she was eligible to file a statutory appeal, she did not do so. After getting waiver of the appellate remedy, she filed the Original Application and also obtained an interim stay as noted already.


இந்த நீதிமன்ற வழக்கின் செய்தி...


இரண்டாம் திருமணம் நடந்தாலும் பணி நீக்கம் செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு
மார்ச் 14,2011 தினமலர்

சென்னை: ஏற்கனவே திருமணமான, அரசு ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்ததால், அந்தப் பெண் ஊழியரை பணி நீக்கம் செய்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில், ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றினார். 32 வயதை கடந்தும் திருமணமாகவில்லை. அதைப் பற்றி, அவரது பெற்றோர் அக்கறை கொள்ளவில்லை. கருவூலத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய தங்கவேல் என்பவர் ராஜேஸ்வரியை அணுகி, திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியின் ஒப்புதலுடன், இரண்டாவதாக ராஜேஸ்வரியை தங்கவேல் திருமணம் செய்து கொண்டார். எடப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 1990ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கவேல் பணியாற்றும் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, தங்கவேல் மீது விசாரணை நடந்தது. ஊக்க ஊதியத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தனர். பின், பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், தங்கவேல் மனு தாக்கல் செய்தார். கட்டாய ஓய்வை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மகளுக்கு எதிராகவும் பெற்றோர் புகார் அனுப்பினர். விசாரணை நடந்தது. அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியர் ஒருவருடன், அரசு ஊழியர் (பெண்) வாழ்ந்து வந்தால், அது ஒழுங்கீனமாகும் எனக் கூறி, ராஜேஸ்வரியை பணியில் இருந்து நீக்கி, சேலம் மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டார்.

பணி நீக்கத்தை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், "தீர்ப்பாய உத்தரவுப்படி எனது கணவர் தங்கவேல், மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டார். எனக்கு மட்டும் தண்டனை அளிப்பது என்பது பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என கூறப்பட்டுள்ளது.

இம்மனு, ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.கணேசன், எஸ்.மணி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியரைப் பொறுத்த வரை, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ள தனிப்பட்ட சட்டம் அனுமதித்தாலும், அரசின் முன் அனுமதியின்றி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி செய்து கொண்டால், அந்த திருமணம் செல்லத்தக்கது என்றாலும், நடத்தை விதிகளை அந்த அரசு ஊழியர் மீறியதாக அர்த்தம்.

இருதார திருமணம், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். அரசுப் பணியில் ஒருவர் சேரும் போது, நடத்தை விதிகள் அவருக்கு நன்றாக தெரிய வேண்டும். அந்த விதிகளை மீறினால் என்ன தண்டனை என்பதும் தெரிய வேண்டும். எனவே, அந்த விதி தன்னிச்சையானது என்றோ, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறது என்றோ கூற முடியாது. ஆகையால், தண்டனை விதிக்கும் விதிகள் செல்லும். முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றே இரண்டாவது திருமணம் நடந்தது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றாலும் கூட, இந்திய தண்டனைச் சட்டப்படி, இரண்டாவது திருமணம் கிரிமினல் குற்றம். மேலும் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அது ஒழுங்கீனமாக கருதப்படும்.

தங்கவேல் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாநில அரசு அப்பீல் மனு தாக்கல் செய்யவில்லை. அவரை பணியில் நியமித்துள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவர், நடத்தை விதிகளின்படி ஒழுங்கீனம் செய்துள்ளார் என்றாலும், அவருக்கு எந்த தண்டனையும் இல்லாமல் விட்டுள்ளனர். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார் என்பதற்காக அந்தப் பெண்ணை கடுமையாக தண்டிக்கக் கூடாது. கணவனுக்கு ஒரு அளவுகோல், மனைவிக்கு ஒரு அளவுகோல் என, இரண்டு விதமான அளவுகோலை அரசு பின் பற்ற முடியாது.

சரி சமமாக குற்றம் புரிந்த கணவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு, மனைவிக்கு மட்டும் பணி நீக்கம் என்கிற தண்டனையை அரசு ஏன் விதிக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே, தண்டனை விதிப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதில் கோர்ட் தலையிட வேண்டியதுள்ளது. மனுதாரரை வேறு விதமாக கருதுவதற்கு எந்த சிறப்பான காரணங்களையும் அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. கணவன், மனைவி வெவ்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர் என்பதை மட்டுமே அரசு கூறியுள்ளது. இந்த பணி நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

====

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி இப்படி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க உடன் பிறந்தவர்கள் தன் சகோதரிக்கு சட்டப்படி சேரவேண்டிய சொத்தை அவளது திருமணத்திற்குப் பிறகு எப்படி அபகரிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதையும் கண்டு மகிழுங்கள். இந்த சொத்து தொடர்பான விஷயத்தை இங்கே சென்று படியுங்கள்: இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி



இந்தியாவில் உருவாகும் பல பொய் வரதட்சணை வழக்குகளின் பின்னணி இதுதான். 1. பெண்ணை பெற்றவர்களின் பணப் பேராசை, 2. உடன் பிறந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிக்கு சொத்தை கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று போடும் திட்டங்கள். இந்த இரண்டின் வெளிப்பாடுதான் சொந்த மகளின் அல்லது உடன்பிறந்த சகோதரியின் வாழ்வையே நாசமாக்கும் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருப்பதற்குக் காரணம்.

பெற்றோர் மற்றும் உடன் பிறந்த ஆண்களின் தவறான வழிகாட்டுதலால் பொய் வரதட்சணை வழக்கு மூலம் கட்டிய கணவனையும் விட்டு விட்டு, உடன் பிறந்த ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு சட்டப்படியாக தனக்கு சேரவேண்டிய குடும்ப சொத்தையும் இழந்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு கடைசியில் நீதிமன்றங்களில் “வழக்கறிஞரின் உதவியோடு” பெண்கள்பாதுகாப்பு சட்டங்கள் மூலம் வாழ்வு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள் பல அப்பாவிப் பெண்கள்! இந்தக் கொடிய காட்சியைக் காண ஒரு முறை சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்குச் சென்று வாருங்கள்.
====



Monday, June 28, 2010

வரதட்சணை கொடுப்பது தவறு என்று சொன்ன ஒரு உண்மையான பெண் நீதிபதி!

1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி இந்த சட்டத்தின் மூலம் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் பெண்கள் அமைப்புகள் வரதட்சணைக் கொடுமை இன்னும் நாட்டில் இருக்கிறது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிப்பதும் கிடையாது, ஒழுங்காக செயல்படுத்துவதும் கிடையாது. இதுதான் இந்திய நாட்டு சட்டங்களின் நடைமுறை. இதனால்தான் நாட்டில் பல அவலநிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நாட்டில் இன்றும் எப்போதாவது மழை பொழிகிறது.
தில்லியில் உள்ள ஒரு பெண்நீதிபதி வரதட்சணைகொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சட்டத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி நீதிபதி என்ற பதவிக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கிறார். இதுபோல அனைத்து காவல் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதித்து ஒழுங்காக செயல்படுத்தினால்தான் நாட்டில் பெண்களின் நிலை உயரும்.

பெண்களை எப்போதும் இழிநிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கூட்டம் சட்டங்களை ஒருதலை பட்சமாக செயல்படுத்தி ஆண்களை குற்றவாளிகளாகக் காட்டி பெண்களை தவறு செய்ய தூண்டி அவர்களை எப்போதும் கீழ்நிலையில் வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் பெண்களின் நிலை தரம்தாழ்ந்திருந்தால்தான் வெளிநாடுகளில் இவர்களைக் காட்டி பணம் கேட்கமுடியும். அவர்களும் ஐயோ பாவம் இந்தியாவில் பெண்களின் நிலை மோசமாக இருக்கிறதென்று அந்த பெண்ணுரிமை பேசும் அமைப்புகளுக்கு பணம் தருவார்கள். அதனால்தான் இன்றுவரை அந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒருதலை பட்சமாக செயல்படுத்தப்படுகிறது.


Giving dowry an equal crime, says court

Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.




Wednesday, August 12, 2009

கோடி ருபாய் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்குமா?

முந்தைய "மருமகள் ஜாக்கிரதை!!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கும் இன்று தினமலரில் வெளியாகிவுள்ள செய்திக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!!
---------------------------------------------------

ஆண்மையற்ற கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு

சென்னை:ஆண்மையற்ற கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரியும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.சென்னையைச் சேர்ந்த சவும்யா என்பவர் தாக்கல் செய்த மனு:

மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 30 சவரன்நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வரதட்சணை வழங்கப்பட்டது. திருமண மண்டபத்தில் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. களைப்பாக உள்ளதாகக் கூறி, எனது கணவர் தூங்கிவிட்டார்.மறுநாள் கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அன்று இரவு, படுக்கை அறைக்குதனது பெற்றோரையும் எனது கணவர் அழைத்தார்.

எனது மாமனார், மாமியார் இருவரும் படுக்கை அறைக்கு வந்து எங்களுடன் சேர்ந்து உறங்கினர். தொடர்ந்து இந்த நிலை நீடித்தது.வேலைக்குச் சென்ற எனது கணவர், தொடர்ந்து இரண்டாவது ஷிப்ட், இரவு நேர ஷிப்ட்டுக்கு சென்றார். இதனால், எங்களுக்குள் உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை. மாமனார், மாமியார் என்னை மோசமாக, வேலைக்காரி போல் நடத்தினர். மாதம் தோறும், சம்பளப் பணம் முழுவதையும் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

உடல் நலம் சரியில்லாமல் இருந்த எனது தந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்களிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என்பதால் தடுத்தனர். திருமணம் நடந்த நாள் முதல், எங்களுக்குள் உறவு இல்லை என எனது மாமியாரிடம் தெரிவித்தேன். எனது மாமனாரும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.வேலையில் இருந்து ராஜினாமா செய் யும்படி என்னை நிர்பந்தித்தனர். ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொண்டு வரும்படி வற்புறுத்தினர்.

டாக்டர் ஒருவரிடம் சென்றோம். எனது கணவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை யளிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.அதற்கு, அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனது பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில், எனது மாமனார் மற்றும் மாமியார், தங்கள் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்துள்ளனர். தங்கள் மகன், ஆண்மையற்றவர் என தெரிந்தும் இவ்வாறு செய்துள்ளனர்.

நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனஉளைச்சல் அடைந்தேன். இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.எங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என உத்தரவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை குடும்ப நல கோர்ட் தள்ளிவைத்துள்ளது.இதற்கிடையில், மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சவும்யா மனு தாக்கல் செய்துள்ளார்.

------------------------------------------------------------------


மேற்படி செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பது கேள்வியல்ல. இது போல பொய் 498A, Dowry கேசுகளில் நீதிமன்றத்தில் அது பொய்யான கேசு என்று நிருபித்த பிறகு பொய் 498A, Dowry கேசு போட்ட பெண்ணிடமிருந்து வாழ்க்கையை இழந்த பாதிக்கப்பட்ட அப்பாவி கணவருக்கும் அவரது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் கோடி ருபாயை நீதிமன்றம் வாங்கிக் கொடுக்குமா? அப்படி நேர்மையாக நடந்திருந்தால் இப்போது நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?


பொய் கேசுகளால் அப்பாவி கணவருக்கும், அவரது வயதான தாய், தந்தைக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படாதா? மன உளைச்சல் ஏற்படாதா? அவர்கள் மனிதர்கள் கிடையாதா? அவர்களுக்கு ஏன் நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை?


கோடி ருபாய் கொடுத்தாலும் இழந்த வாழ்க்கையும், நீதிமன்றங்களில் அலைந்து பாழாய்ப் போன காலமும், குடும்ப மானமும் திரும்பக் கிடைக்குமா?



Saturday, July 11, 2009

வரதட்சணை தடுப்புச் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட அப்பாவிகள்

வரதட்சணை தடுப்புச் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட அப்பாவிகள்
அப்பாவிகளின் கண்ணீருக்கு நாடு ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.


***************************************************************************************

***************************************************************************************

*************************************************************************************

**************************************************************************************

*************************************************************************************

**********************************************************************************
Sincere Thanks to mynameisbila (Youtube)

Tuesday, July 07, 2009

Are You Ready for Marriage???

சமீபத்தில் வெளியான "பசங்க" திரைப்படத்தில் சிறிய குடும்பப் பிரச்சினைக்கு மனைவி தனது கணவரை வரதட்சணை தடுப்புச் சட்டத்தைக் கூறி மிரட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட காட்சி அல்ல. நாட்டில் நடக்கும் அவலத்தைக் காட்டும் கண்ணாடி. இது போல பல பெண்கள் வரதட்சணை சட்டத்தை தவறhகப் பயன்படுத்த தவறhக வழிகாட்டப்பட்டு தங்களது வாழ்க்கையையும் இழந்து பல அப்பாவிகளின் வாழ்க்கையையும் கெடுத்திருக்கிறhர்கள், கெடுத்துக்கொண்டிருக்கிறhர்கள். இந்த அப்பாவிகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.