இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Woman. Show all posts
Showing posts with label Woman. Show all posts

Saturday, October 09, 2010

வெளிநாட்டு மாணவருக்கு உதவி செய்த பெண்

பெண் அதிகாரிகளின் உதவி மனப்பான்மைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது!

உதவி செய்யாத சூடான் மாணவனின் பாஸ்போர்ட்டை முடக்கிய பெண் ஊழியர் சஸ்பெண்ட்
தினகரன் 10/10/2010

கோவை: வெளிநாட்டு மாணவனின் பாஸ்போர்ட்டை முடக்கிய பெண் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவை மாநகர காவல்துறை கமிஷனர்அலுவலக கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் பாஸ்போர்ட் பிரிவு உள்ளது. மாநகரை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது, பரிசீலனை செய்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்புவது இப்பிரிவின் பணி. தவிர, கோவையிலிருந்து வெளிநாடு செல்கிறவர்கள், வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருகிறவர்கள் பற்றிய முழு விவரமும் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருகை தருவோர் விசா காலம் முடிந்த பிறகும் நாடு திரும்பவில்லையெனில் இப்பிரிவு அலுவலர்களிடம் அதற்குரிய விளக்கம் அளித்து, தடையின்மை சான்றிதழ் பெற்ற பிறகே மீண்டும் நாடு திரும்ப முடியும்.

இந்த அலுவலகத்தில் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த ஸ்வர்ணலதா (40) என்பவர் எழுத்தராக பணிபுரிகிறார். இவர், சூடான் நாட்டை சேர்ந்த ஒரு மாணவனிடம் சில உதவிகளை கேட்டுள்ளார். ஆனால், அவர் தன்னால் செய்துகொடுக்க இயலாது எனக்கூறியுள்ளார். இதையடுத்து, அம்மாணவனின் பாஸ்போர்ட்டை கடந்த 6 மாத காலமாக முடக்கிவைத்துள்ளார். இதனால், அம்மாணவன் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார்செய்தார். இதுபற்றி விசாரணை நடத்திய அவர், நேற்று முன்தினம் ஸ்வர்ணலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி கமிஷனர் கூறுகையில், ஸ்வர்ணலதா மீது இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அதுபற்றியும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.



Saturday, October 02, 2010

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் சிறையில் தள்ளப்பட்ட ஆண்

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் பலியாகி சிறையில் தள்ளப்பட்ட ஆண்

தினமலர் அக்டோபர் 02,2010

வேலூர் : இரண்டு பேரை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண், மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர், காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (20). இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த இரு ஆண்டாக தொண்டான் துளசியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சேட்டு (23) என்பவருக்கும், ரேவதிக்கும் திடீரென காதல் ஏற்பட்டது. இதனால், சக்திவேலை, ரேவதி ஒதுக்கித் தள்ளினார். இது தொடர்பாக கடந்த வாரம் ரேவதிக்கும், சக்திவேலுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நண்பர்கள் சமரசம் செய்ததன் பேரில் சக்திவேலை திருமணம் செய்து கொள்ள ரேவதி சம்மதித்தார். இதனால், சேட்டு கோபமடைந்தார்.

கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை. "சேட்டு, ரேவதியை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்' என, சந்தேகப்படுவதாக ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன், லத்தேரி போலீசில் புகார் செய்தார். சேட்டிடம் விசாரணை செய்ததில், ரேவதியை கழுத்தை நெரித்து கொலை செய்து திம்மாம்பேட்டை பாலாற்றில் புதைத்து விட்டதாக கூறினார். போலீசார் சேட்டை அழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பாலாற்றில் ரேவதி புதைக்கப்பட்ட இடத்தை தேடினர். ஆனால் இதோ, அதோ என சேட்டு கைகாட்டிய இடங்களை தோண்டிப் பார்த்து, ரேவதி பிணம் கிடைக்காமல் போனதால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று சேட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, திருமணக் கோலத்தில் ரேவதியும், சக்திவேலும் நண்பர்கள் புடை சூழ லத்தேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணியம்பாடியில் உள்ள நண்பர்கள் வீட்டில் மறைந்து இருந்ததாகவும், 30ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் ரேவதியும், சக்திவேலும் போலீசாரிடம் கூறினர். "ஏன் ரேவதியை கொன்று விட்டதாக பொய் சொன்னாய்?' என, சேட்டிடம் கேட்ட போது, போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே இப்படி சொன்னதாகவும், பாலாற்றில் தோண்டிப் பார்த்த போது தப்பித்து விடலாம் என நினைத்த போது முடியாமல் போனதாக கூறினார். சேட்டு மீது போலீசாரை ஏமாற்றிய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

=========

போலிஸ் கொடுமையிலிருந்து தப்பிக்க தான் செய்யாத தவறை செய்ததாகக் கூறிய ஆண்மீது போலிசை ஏமாற்றியதாக வழக்குப்போட்டிருக்கிறார்கள். ஆனால் பல பெண்கள் பொய்யான புகார்களை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சுமத்தினாலும் காவல்துறைக்கு அது பொய் என்று தெரிந்தாலும் அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைய விடுகிறார்கள். பொய் வழக்குப்போட்டு அப்பாவிகளை அலைக்கழிக்கும் பெண்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது. காவல்துறையோ, நீதித்துறையோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள். என்ன ஒரு விசித்திரமான சட்ட நடைமுறை!

பெண்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு தண்டனை பெறுவது அப்பாவி ஆண்கள்தான்.






மகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?

Thats Tamil News வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2009

சென்னை: சென்னையில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜீவிதா (18). இவரது கணவர் மோகன். ஜீவிதா திருவான்மியூரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார்.
திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பமடைந்தார். ஆனால், ஜீவிதாவின் நடத்தையில் மோகன் சந்தேகப்பட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தி்ல் ஜீவிதாவின் நகைகளைப் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டார். இதையடுத்து ஜீவிதா தனது பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கடந்த 2ம் தேதி தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா அடையார் மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து புகார் தந்தார்.

மனுவை வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, ஜீவிதாவையும் மோகனையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினார். அப்போது இனிமேல் ஜீவிதாவோடு வாழமாட்டேன் என்று மோகன் பிடிவாதம் செய்தார்.

ஜீவிதா தினமும் தனது பெற்றோருடன் அடையார் போலீஸ் நிலையத்துக்கு நடையாக நடந்தும் கூட இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இன்ஸ்பெக்டர் கீதா இழுத்தடித்ததார்.

கணவர் பறித்து வைத்துள்ள நகைகளையாவது மீட்டுத்தாருங்கள் என்று ஜீவிதா கோரினார்.

பலநாள் ஜீவிதாவை அலைய விட்ட இன்ஸ்பெக்டர் கீதா, இனிமேல் இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன், கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொடு என்று ஜீவிதாவிடம் கூறியுள்ளார்.

ஜீவிதா கதறி அழவே, உன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.5,000 தர வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறிய ஜீவிதாவிடம், கழுத்துல கிடக்கிற தாலிய வித்துக்கு வந்து காச குடுடி என்று சினிமா வில்லி போல இன்ஸ்பெக்டர் கீதா பேசவே, அதிர்ந்துபோன ஜீவிதா லஞ்ச ஒழிப்பு போலீசில் கீதா மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனர் ராமானுஜம், ஐ.ஜி. துக்கையாண்டிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்பி பவானீஸ்வரி, துணை எஸ்பி பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, அசோகன், இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று மாலை அடையாறு போலீஸ் நிலையத்தில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருக்க, ஜீவிதா ரூ.5,000 பணத்தோடு, இன்ஸ்பெக்டர் கீதாவை போய் பார்த்தார்.

அப்போது பணத்தை கையில் வாங்காமல், தன்னுடைய டைரியை கொடுத்து அதற்குள் பணத்தை வைக்கும்படி இன்ஸ்பெக்டர் கீதா கூறினார். ஜீவிதாவும் பணத்தை டைரிக்குள் வைத்தார்.

அப்போது அங்கு புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்டை போட்ட கீதா பி்ன்னர் தரையில் விழுந்து புரண்டு அழுது நாடகமாடினார்.

ஆனாலும் அவரை போலீசார் விடவில்லை. அவரைக் கைது செய்ததோடு சைதாப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் உள்ள கீதாவின் வீட்டிலும் சோதனை நடத்தி ஏராளமான சொத்துப் பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடையார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கீதா மீது ஏற்கனவே ஏராளமான லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளன.

நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தபோது திடீரென்று தரையில் விழுந்து உருண்டு அழுததோடு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

பின்னர் 'மயக்கம்' போட்டு விழுந்தார். டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு 'சிகிச்சை' அளிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வழக்குக்கும் இன்ன விலை என நிர்ணயித்து ஆட்டம் போட்டு வந்த கீதா வரதட்சணை புகார்களில் இரு தரப்பினரிடமும் பணம் வாங்கிக் கொண்டு கணவன்-மனைவியை பிரித்து அனுப்பும் வேலையை செய்வதில் கில்லாடி.

இதுவரை ஒரு தம்பதியைக் கூட கவுன்சிலிங் மூலம் சேர்த்து வைக்காதவர் என்ற பெருமையுடைவர்.

கீதாவுக்கு லஞ்சம் வாங்கித் தருவதில் பெண் ஏட்டு சோபியா என்பவரும் பக்க பலமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ள போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போலீஸ் வேலையை பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்துங்கள். சட்டவிரோதமாக சம்பாதிக்க முயலும் போலீசார் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கேட்கும் போலீஸ் அதிகாரிகள் பற்றி பொதுமக்கள் என்னிடம் நேரடியாக புகார் செய்யலாம் என்றார்.

மகளிர் காவல் நிலையங்களில் பொது காவல் நிலையங்களுக்கு இணையாக அநியாயங்களும், கட்டப் பஞ்சாயத்துகளும், லஞ்சம்-ஊழலும் கொடி கட்டிப் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகார் தருவோர், பிடிபட்டோரிடம் கெட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதிலும் மகளிர் காவல் நிலையங்கள் எந்த விதத்திலும் சளைத்தவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

==============

மகளிர் காவல்நிலையங்களில் பொய் வரதட்சணை வழக்குகளில் அப்பாவிகளை துன்புறுத்தி அவமானப்படுத்தும் - செய்த பாவத்திற்கும், செய்துகொண்டிருக்கின்ற பாவத்திற்கும், செய்யப்போகிற பாவத்திற்கெல்லாம் விமோசனம் கிடைக்கவேண்டுமென்றால் கீழுள்ள படத்தில் உள்ளதுபோல் செய்தால் கிடைத்துவிடுமா?

செய்தியும் படமும் தினமலரில் வந்துள்ளது.



புது பயிற்சி: பெண் போலீஸ் கோலம்மெல்லாம் போடுறாங்க ஏதாவது புது பயிற்சியா இல்ல கோலப் போட்டி நடக்குதான்னு நினைச்சிடாதீங்க. போலீஸ், பொதுமக்கள் நல்லுறவுக்காக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக போடப்பட்ட கோலம்தான் இது. பரவாயில்லை வீடு போல் பாவித்து இப்படியெல்லாம் செய்தா, மக்கள் மத்தியில போலீஸ் "உங்கள் நண்பன்னு' நிருபிக்கலாமில்ல. (தினமலர் அக்டோபர் 2, 2010)




Saturday, September 25, 2010

பெண்மையின் பெயரால் ஒரு ஆயுதம்!

ரஷ்ய பெண் உளவாளியின் பிரதான ஆயுதம்

செப்டம்பர் 25,2010 தினமலர்


நியூயார்க்:ரஷ்ய பெண் உளவாளி அன்னா சாப்மன், தனது பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தியதாக, அவரது முன்னாள் காதலர்கள் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவின் பெண் உளவாளியான அன்னா சாப்மன், அமெரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். தனது அழகால், மனிதர்களின் மனங்களை வீழ்த்திய அன்னாவுக்கு, "கவர்ச்சி உளவாளி' என்று பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர்.மேலும், தனது பெண்மையை, உளவு வேலைக்கு மிகச் சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியதாக அவரது முன்னாள் காதலர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து, அன்னாவின் மூன்று முன்னாள் காதலர்கள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர்.டென்னிஸ் இர்டிட் என்பவர் கூறியதாவது:எதிராளியிடம் தனக்கு வேண்டிய தகவல்களை பெறுவதற்கு, அன்னா தனது பெண்மையை மிகப் பெரிய ஆயுதமாக கையாண்டாள். அதற்காக, அவள் எந்த எல்லைக்கும் போவாள்.

ஆனால், அன்னாவின் ஆரம்ப கட்ட காதல் விளையாட்டுகளான, சிறிய தொடுகை, காதுமடல் அருகே ரகசியமாக கிசுகிசுப்பது, கைகோர்த்துக் கொள்வது, எதேச்சையாக படுவது போன்று உதடுகளால் உதடுகளை உரசுவது போன்றவற் றால், எதிராளி ஆரம்பத்திலேயே கவிழ்ந்துபோவான்.இவ்வாறு இர்டிட் கூறினார்.

ஆன் - லைன் ரியல் எஸ்டேட் வணிகம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பில் சான்போர்டு கூறுகையில், அன்னாவைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவளின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்தாலே, டீன் - ஏஜ் இளைஞர்கள் முதல், வயது முதிர்ந்தவர்கள் வரை காதல் வயப்பட்டுவிடுவர். அவளது சிவந்த கூந்தலும், உடல் அமைப்பும், அங்க அசைவுகளுமே என்னை கவர்ந்தன. தனது பணியின் நிமித்தமாக, அவள் மற்றவர்களுடன் செயற்கையான உறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம், ஆனால், அவள் என்னிடம் உண்மையாக இருந்தாள் என்று தெரிவித்துள்ளார். இவர் 90ம் ஆண்டுகளில், நிகரகுவா, கொலம்பியா மற்றும் பெரு நாடுகளில் உளவாளியாக பணிபுரிந்துள்ளார்.அன்னா மட்டுமல்ல, உளவுப் பணியில் ஈடுபடும் அனைத்து பெண்களுமே, தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற இந்த வழிமுறைகளை கடைபிடித்துள்ளார்கள் என்கிறார் அன்னாவுடன் நீண்ட நாள் தொடர்பில் இருந்த சைன்தியா மர்பி.

=======

இது வெளிநாட்டு வழிமுறை என்று நினைத்து விடாதீர்கள். எல்லா நாட்டிலும் இந்த முறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சர்வதேச “கரன்சி” போன்றது. தேவைக்கேற்றபடி எங்குவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யாருக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். உளவுப்பணியில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல மற்ற பெண்கள் கூட இதை வேறுவிதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

நம்நாட்டில் பெண்மையின் மேன்மையை பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.





Thursday, August 12, 2010

கலியுக மருமகளால் வரப்போகும் ஆபத்து!

போலியான பெண்ணியவாதிகள் கூட்டம் எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது, பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள், பெண்களுக்கு அங்கே அது நடக்கிறது, இது நடக்கிறது என்று கூப்பாடு போட்டு மோடி வித்தைக்காரர்கள் போல கூட்டம் சேர்த்து காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அற்பத்தனமான சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப்படும் (IPC498A, Domestic Violence Act) தவறான ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்த சட்டங்களால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிட பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். ஒரு கலியுக மருமகளின் பொய்யான வரதட்சணைப் புகாரால் ஒரு குடும்பத்திலுள்ள குறைந்தது 4 - 6 பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இதுபோன்ற போலியான பெண்ணியவாதிகளின் முகத்திரையைக் கிழித்து ஒரு புதுமைப் பெண் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்கட்டுரையையும் பின்வரும் இணைப்பில் சென்று படியுங்கள்.

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான்.


மேலுள்ள கட்டுரையைப் படித்தபிறகு கலியுகப் பெண்கள் ஏன் மோசமான போலியான பெண்ணியவாதிகளால் தவறான பாதையில் இப்படி தவறான சட்டங்கள் மூலமாக வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள் என்று யோசித்தால் அதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதி வெண்பா என்ற பழந்தமிழ் நூலில் ஒரு அறிஞர் பாடிச் சென்றிருக்கிறார்.

நீதிவெண்பா

32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் கிரேதாயுகத்தில் ரேணுகை என்ற பெண்ணால் உலகம் அழிந்தது. திரேதாயுகத்தில் சானகி என்ற சீதையால் இராமாயணப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது. அதன்பிறகான காலத்தில் திரௌபதி என்ற பெண்ணால் பாரதப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது.

இந்தக் கலியுகத்தில் வீட்டிற்கு வீடு இருக்கும் ஒரு பெண்ணால் இந்த உலகம் அழியும் என்று அந்த அறிஞர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் யாருமல்ல பொய்யான பெண்ணுரிமை பேசும் கூட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு தவறான சட்டங்கள் என்ற ஆயுதங்களை கையில் எடுத்து சிறு குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் அனைவரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கும் மருமகள்தான் அந்தப் பெண். புராண காலத்து யுகங்களில் இருந்த பெண்களால் அநீதிக்கு எதிராக போர் ஏற்பட்டது. ஆனால் இந்தக் கலியுகத்தில் ஏற்பட்டிருக்கிற போரில் நீதியை அழிக்க அநீதிகளலெல்லாம் ஒன்று கூடி தவறான சட்டங்கள் என்ற உருவில் வந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

அதனால் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை பண்புடன் வளர்த்து நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் மாற்றுவது பெற்றவர்களின் கடமை. இல்லையெனில் நீதிவெண்பாவில் சொன்னது உண்மையாகிவிடும். இப்போதே நாட்டின் நிலைமை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்தியிலேயே நீங்கள் உணரமுடியும். அதற்கான சிறு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.


சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

இரும்பு சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்
04 Aug 2010 தினமணி

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்


ஜூலை 29,2010 தினமலர்

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்

சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010
சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஜூலை 16,2010 தினமலர்
Woman ASI caught taking Rs 500 bribe
தாயுடன் கணவனுக்கு கள்ளக்காதல்: நடவடிக்கை கோரி இளம் பெண் புகார்
தினமலர் மார்ச் 05, 2010
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்
கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தினமலர் ஜூன் 12,2010
மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010
மாமியாருக்கு “குத்து”விளக்கு ஏற்றிய குல விலக்கு மருமகள்
தினமலர் 18 மே 2010
மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010
கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

அதனால் அவரவர் வீட்டுப் பெண்களை நல்வழிப்படுத்தி வீட்டையும், நாட்டையும் உலகையும் காப்பாற்றவேண்டியது பெற்றவர்களின் கடமை. பெற்றோர்களே, போலியான பெண்ணியவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் “பெண் விடுதலை” என்பதற்கு தவறான அர்த்தத்தை உங்களின் மகள்களுக்கு காட்டி அவர்களின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள்.





Monday, August 09, 2010

33% ஒதுக்கீடு இல்லாமலேயே சாதனை செய்யும் பெண் அலுவலர்கள்

33% இடஒதுக்கீடு கொடுத்தால்தான் பெண்களால் எத்துறையிலும் முன்னேற முடியும் என்று நினைப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமலேயே எத்துறையிலும் சாதனை செய்யலாம் என்று இந்த கிராமப்புற பெண் அதிகாரி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

காரைக்குடி: திருமண நிதி உதவி தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சாக்கோட்டை ஒன்றிய ஊர்நல அலுவலர் லலிதா (54), கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது உறவினர் அமிர்தத்திற்கு (22), வரும் 27ல் திருமணம் நடக்கவுள்ளது. அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் பெற, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த ஊர் நல அலுவலர் லலிதா, மனுவை சமூகநலத்துறைக்கு பரிந்துரைக்க, 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், சுப்பையா புகார் செய்தார். நேற்று மாலை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற லலிதாவை, டி.எஸ்.பி., அருளானந்தன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாண்டியராஜன், ஏட்டு மைக்கேல், சிவக்குமார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

================

இப்படித்தான் பெண் மற்றொரு பெண்ணுக்கு உதவி செய்து ஆணாதிக்கத்திற்கு எதிராக சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி சுயநல நோக்கில் உருவானவைதான் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பெண்கள் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எனப்படும் வரதட்சணை சட்டங்கள்.



Sunday, August 08, 2010

(கள்ளக்)காதலுக்கு மரியாதை

பெண் நினைத்துவிட்டால் சட்டங்களால் என்ன செய்யமுடியும்? ஆனால் பெண் நினைப்பதை அடைவதற்காக சட்டங்கள் ஆண்களை தவறாக தண்டிக்கவும் தயங்குவதில்லை. என்ன ஒரு வினோதம் இந்த நாட்டில்!

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

நாகர்கோவில்: கள்ளக்காதல் மோகத்தில், கட்டிய கணவனை உதறிவிட்டு ராஜபாளையம் பெண், கள்ளக்காதலனுடன் சென்றார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(33); விவசாயி. இவரது மனைவி அம்சவேணி என்ற அனிதா(25). இவர்களுக்கு சரவணன்(7) என்ற மகன் உள்ளான். குமாரசாமியின் சகோதரி கணவரின் அண்ணன் தாமோதரன்(34). இவர் மீசலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும், அனிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த 28ம் தேதி தனது மகனுடன் மருத்துவமனைக்குச் சென்ற அனிதா மாயமாகிவிட்டார். அவர், கள்ளக்காதலன் தாமோதரனுடன் கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே அக்கரையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். மனைவியை காணாத குமாரசாமி, கீழராஜகுலராமன்புதூர் போலீசில் புகார் செய்தார். தாமோதரனுடன் அனிதாவை பார்த்த குமாரசாமி நண்பர்கள், அவருக்கு தகவல் கொடுத்தனர். குமாரசாமி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கள்ளக்காதலர்களை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு கணவன் குமாரசாமி, "நமது மகனுக்காக என்னுடன் வந்து விடு' என்றும், "என்னை கைவிட்டு விடாதே' என்று கள்ளக்காதலன் தாமோதரனும், அனிதாவிடம் கெஞ்சினர். அப்போது, கள்ளக்காதலனை அணைத்து அனிதா ஆறுதல் கூறினார்.போலீசார், சிறுவன் சரவணனை அழைத்து தந்தை யார் என்று கேட்டபோது குமாரசாமியை அடையாளம் காட்ட, அவனை அனிதா பிடித்து இழுத்து வைத்துக் கொண்டார். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அனிதா, கள்ளக்காதலன் தாமோதரனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கீழராஜகுலராமன்புதூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம்)



Thursday, August 05, 2010

சொத்துக்காக கணவனைக் கொன்ற மனைவி


பெரம்பலூர்: சொத்தை எழுதித்தர மறுத்த கணவனை, இரும்பு சுத்தியால் அடித்து கொன்ற மனைவி மற்றும் மாமியாருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரத்தின் (50) மனைவி பெரியம்மாள் (43). பெரியம்மாளுக்கு சிதம்பரம், இரண்டாவது கணவராவார். இவர்களுக்கு, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் பெயரில் உள்ள சொத்தை, குழந்தைகள் பெயருக்கு எழுதி தருமாறு, பெரியம்மாள் கணவரிடம் கேட்டுள்ளார். "மூன்று பிள்ளையும் எனக்கு பிறக்காததால், நிலத்தை எழுதித்தர முடியாது' என, சிதம்பரம் மறுத்தார். இதை, தன் தாய் செல்லம்மாளிடம் தெரிவித்தார் பெரியம்மாள். இதைக்கேட்ட அவர், "சிதம்பரம் உயிருடன் இருக்கும் வரை, சொத்து கிடைக்காது. இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து விடலாம்' என, கூறியுள்ளார். ஏப்., 23, 2007ம் ஆண்டு, இரவு 9 மணிக்கு, வீட்டுக்கு அருகே மாட்டுக் கொட்டகையில் உள்ள கட்டிலில், தூங்கிக் கொண்டிருந்த சிதம்பரத்தை, இருவரும் சேர்ந்து இரும்பு சுத்தியால், தலையில் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சிதம்பரத்தை, அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரம்மதேசம் வி.ஏ.ஓ., பெருமாள்சாமி, மங்கலமேடு போலீசில் அளித்த புகாரின்படி, இருவரையும் கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். பிறகு, இருவரும் ஜாமீனில் வெளி வந்தனர். பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, "சிதம்பரத்தை கொலை செய்த பெரியம்மாள் மற்றும் இவரது தாய் செல்லம்மாள் ஆகிய இருவருக்கும், தலா ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்' என்றார்.
=================

பணத்திற்காக எதுவும் செய்பவள்தான் கலிகாலத்துப் பெண்ணா? ஆனால் அதையும் நன்றாகத் திட்டமிட்டுத்தான் செய்கிறார்கள்.

Tuesday, August 03, 2010

விவசாயிக்கு உதவிய பெண் சார்பதிவாளர்!

இந்திய விவசாயி நிலத்தை அடமானம் வைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பெண் அதிகாரி விவசாயியிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார் போலிருக்கிறது. இதுபோன்ற கண்மணிகள்தான் நாட்டிற்குத் தேவையோ?

பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல கல்வியும் பதவியும் கிடைத்தபிறகு என்ன செய்கிறார்கள்? சட்டங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இல்லாதவரை பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தவறாகத்தான் பயன்படுத்த நினைப்பார்கள். ஏனென்றால் அதுதான் ஆணுக்குச் சமமாக உரிமை கிடைத்ததன் அடையாளம் என்று பெண்ணுரிமை பேசும் கூட்டம் பெண்களுக்குத் தவறான பாடத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்

04 Aug 2010 தினமணி

நில அடமானப் பத்திரத்தை பதிவு செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நீடாமங்கலம் சார்பதிவாளரையும், அவருக்கு உதவியவரையும் ஊழல் தடுப்புத் துறை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூவண்ணன் (40), விவசாயி.தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்குவதற்காக தனது நிலத்தின் ஆவணங்களை நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் தாக்கல் செய்து, நில அடமானப்பத்திரம் பதிவு செய்துதர விண்ணப்பித்தார் பூவண்ணன். ஆனால், தேவகி பத்திரப்பதிவு செய்து தராமல் தாமதம் செய்து வந்தாராம்.இந்த நிலையில் பத்திரத்தை பதிவு செய்து தருமாறு தனது நண்பர் நீடாமங்கலம் சோணாப்பேட்டை ஜெயகாந்தனின் உதவியை பூவண்ணன் நாடினாராம். ஜெயகாந்தன் நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் பேசியதில், பத்திரத்தை பதிவு செய்து தர ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டுமென்று சார்பதிவாளர் தரப்பில் கேட்கப்பட்டதாம். இந்த நிலையில் பூவண்ணன் நாகப்பட்டினம் ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கவாசகத்திடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஜெயகாந்தன் லஞ்சப் பணத்தை சார்பதிவாளர் தேவகியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தேவகியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த சோணாப்பேட்டை ஜெயகாந்தனும் கைது செய்யப்பட்டார்.





ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்த அரிய உதவி!

சிறுசேமிப்புத் துறை அதிகாரி பணத்தை எப்படி பெரிய அளவில் சேமிப்பது என்று செயல்முறை விளக்கம் கொடுத்திருக்கிறார்!

சிறுசேமிப்பு பிரதிநிதியாக இருந்து சுயமாக உழைத்து சம்பாதிக்க நினைத்த ஒரு பெண்ணுக்கு, அதிகாரியாக இருக்கும் மற்றொரு பெண் வழிகாட்டியாக இல்லாமல் எப்படி நடந்திருக்கிறார் என்று பாருங்கள். பெண்ணால்தான் மற்றொரு பெண்ணுக்கு ஆபத்து. ஆனால் இந்திய சட்டங்கள் ஆண்கள்தான் எப்போதும் பெண்களை துன்புறுத்துவதாக சொல்கிறது.

எங்கும் பெண்கள்! எதிலும் பெண்கள்!! ஆணுக்குப் பெண் சளைத்தவர் அல்லர். எத்துறையிலும் நன்றாகவே முன்னேறிவிட்டார்களே!

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்

திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசன்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரும், கலெக்டர் நேர்முக உதவியாளருமான திலகமணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.






பாலியல் வன்கொடுமையை ஆண்கள் ஆதரிக்கிறார்களா?

செய்தியைப் மேலோட்டமாகப் படித்ததும் ஏதோ ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். அப்படித்தான் பல ஆண்டுகளாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் இதுவரை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தப் பதிவை முழுதுமாக கடைசிவரை படித்துப்பாருங்கள். பிறகு இதுபோல செய்தித்தாள்களில் வரும் செய்தி எப்படி மேலோட்டமாக எழுதப்பட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.



புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.


ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.


மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்




உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.

தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.





Sunday, August 01, 2010

இந்திய மனைவியும் பிச்சைக்காரியும் சமம்?

ஆகஸ்ட் 01,2010, தினமலர்

புதுடில்லி : "கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இல்லத்தரசிகள் பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் அவர்களை பிச்சைக்காரர்களோடும், சிறைவாசிகளோடும் ஒப்பிட்டு கணக்கெடுப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. வருந்தத்தக்க இல்லத்தரசிகளின் மதிப்பை மறுநிர்ணயம் செய்யும் நேரம் இப்போது வந்துள்ளது. பார்லிமென்ட் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், அருண் அகர்வாலும் அவரது 39 வயது மனைவி ரெனுவும் தங்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, உ.பி., மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து நேரிட்டு, ரெனு இறந்து போனார்.அருண், தன் மனைவியின் உயிரிழப்புக்கு , 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்று கோரி, வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாணையமும், அலகாபாத் ஐகோர்ட்டும் அவரது மனுவை நிராகரித்து விட்டன.அவை தமது தீர்ப்பில்,"ரெனு ஓர் இல்லத்தரசி. அவருக்கு மாதந்தோறும் வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், அவரது குடும்பம் அவரைச் சார்ந்தும் இல்லை. அதனால் அவரது மதிப்பு மாதத்துக்கு 1, 250 ரூபாய்தான் பெறும்' என்று கூறிவிட்டன.

மோட்டார் வாகன சட்டம் 1988ன்படி, ஓர் இல்லத்தரசியின் மதிப்பு, அவரது வருமானம் ஈட்டும் கணவரின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அவை சுட்டிக் காட்டியிருந்தன.இதனால் அருண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அவரது வழக்கை ஏற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரெனுவின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ஆறு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டது.மேலும், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:கடந்த 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை, இந்தியாவின் 36 கோடி பெண்களை, வருமானம் ஈட்டாதவர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.

பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் சேர்த்ததைப் போலவே அவர்களோடு இல்லத்தரசிகளையும் சேர்த்தது, உணர்ச்சியற்ற செயல். இது தொழிலாளர்களையும், பெண்களையும் அவமானப்படுத்துவதாகும்.அதேநேரம், இதேபோல் நடக்கும் பாலியல் ரீதியிலான பாகுபாடு நம்மைக் கவலை கொள்ளச் செய்கிறது. ஓர் இல்லத்தரசியின் வீட்டுவேலைகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அவரது பொருளாதார மதிப்பை, மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் இதர சட்டங்கள் வழங்குவதற்கான வழிவகையைக் கொண்டு வர வேண்டிய தருணம் இது. இதுகுறித்து பார்லிமென்ட் சிந்திக்க வேண்டும்.

சட்டங்கள், இல்லத்தரசிகளின் வேலைகளான சமையல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளைக் கவனித்தல், தண்ணீர் எடுத்து வைத்தல் போன்றவற்றை ஒரு வேலையாகவே கருதவில்லை என்பதை ரெனு தொடர்பான வழக்கு நமக்கு காட்டுகிறது. இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் செலவிடும் நேரத்தை ஒரு பணியிலோ அல்லது அவர்களது கல்வியிலோ செலவிட முடியும் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அவர்களது வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான், பெண்கள் மத்தியில் வறுமை அதிகரிக்கவும் சமுதாயத்தில் அவர்களின் துயரம் தொடரவும் காரணமாகின்றன.ஒரு மூன்றாம் நபரை சம்பளத்துக்கு அமர்த்தி வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதை விட, இல்லத்தரசிகளின் பணி மிகவும் உயர்ந்தது. ஒரு சமையல்காரருக்கு தரும் சம்பளம் அல்லது கடையில் வாங்கும் உணவுக்குக் கொடுக்கப்படும் பணம் அல்லது ஒரு குடும்பத்துக்கு வேண்டிய உணவை வாங்க செலவிடப்படும் பணம் என்ற அடிப்படையில் இல்லத்தரசிகளின் சமையல் பணி மதிப்பிடப்பட வேண்டும்.இல்லத்தரசிகளிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருள் கூட, ஓர் இல்லத்தரசி அல்லது பெற்றோர் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

=============

பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று வெளியே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம் இத்தனை ஆண்டுகள் பெண்களை எப்படி நடத்திவருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு இயற்றப்படும் சட்டங்களும் இப்படித்தான். பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையைத்தான் அழிந்துக்கொண்டிருக்கின்றன.

இதுவரை இந்த இழிநிலை தேசிய பெண்கள் வாரியத்திற்கோ, பெண்கள் அமைச்சகத்திற்கோ ஏன் தெரியவில்லை. பொய் வழக்குப் போடும் மருமகள்களை ஊக்குவிக்கும் விதமாக அடுக்கடுக்காக சட்டம் இயற்றும் இந்தக் கூட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் இழிநிலை ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? இந்த உண்மை பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லும் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்களின் சுயநலம் காரணமாக அதை மூடிமறைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது அப்பாவிப் பெண்கள் தெரிந்துகொள்ளுங்கள் - உங்களை வைத்து எல்லோரும் வியாபாரம்தான் செய்வார்களே தவிர எந்தவிதத்திலும் உங்கள் மரியாதையைக் காப்பாற்றமாட்டார்கள்.

பெண்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுகிறேன் என்பதும், 33% ஒதுக்கீடு கேட்கிறேன் என்பதும் இதுபோன்றதொரு பிரித்தாலும் வியாபார தந்திரமே. உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிப் பெண்களையும், தவறாக சட்டங்களைப் பயன்படுத்தத் துடிக்கும் மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் பிரித்தாலும் சூழ்ச்சிதான் இன்றைய பெண்சுதந்திர முழக்கங்கள். கடைசியில் அரசியல் தந்திரங்களால்
கேட்பாரற்று சீரழிக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைதான்.




Thursday, July 29, 2010

தாயில்லாமல் பிறக்கும் குழந்தைகள்

ஜூலை 29,2010 தினமலர்

மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.

டாக்டர்கள் கூறியதாவது:
இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.

மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?
: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.

மனிதத்தாய்மைக்கும் விலங்கினத்தில் இருக்கும் தாய்மைக்கும் உள்ள வித்தியாசம்

பெற்றோரால் வீசியெறியப்பட்ட சிசு

அன்னையின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை

தாயில்லாமல் குழந்தைகள் பிறந்து தெருவில் கிடக்கும் அதிசயம் நடந்துகொண்டிருக்கிறதா? தாய்மை இன்னும் இருக்கிறதா? இல்லாத தாய்மையின் பெயரால் எதற்கு “பெண்கள் சிறப்புச் சட்டங்கள்”?


இதையும் செய்வாள் பெண்

எப்போதுமே கணவன்தான் மனைவியை கொடுமை செய்வான் என்று தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வித்தியாசமான செய்தி. ஆனால் இது உண்மை. இப்படி பல நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் வெளிச்சத்திற்கு வருவதில்லை.


கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை
ஜூலை 30,2010 தினமலர்

ஊட்டி : குடும்பத் தகராறு காரணமாக கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குன்னூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28); இவரது மனைவி பூங்காவனம். இருவரிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த பூங்காவனம், வீட்டிலிருந்த இரும்பு குழாயால் பார்த்தசாரதியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கணவனை கொன்ற குற்றத்துக்காக பூங்காவனத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி முருகன்.





Saturday, July 24, 2010

மனித இனத்தில் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் அதிசயம்!

மனித இனத்தில் மட்டும் நடக்கும் அதிசயம்!

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

திருச்சி : திருச்சி அருகே உள்ள இனாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தனம். இவர்களுக்கு சஞ்சய் குமார் (3 1/2), கணேசன்(1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனம், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகள் இரண்டு பேரையும் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தனத்தை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

= = = = = = = = = = = =


உயிரினங்களில் மனித இனம்தான் பரிணாமத்தில் உயர்நிலையில் இருக்கிறது என்றும் அதிலும் குறிப்பாக “தாய்மை” என்ற பண்பிற்காக பெண்களுக்கு எல்லா விஷயத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல சிறப்புச் சட்டங்கள் மகளிருக்கென இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத்தாய்மைக்கு பெண்களால் உண்மையாகவே மரியாதை கொடுக்கப்படுகிறதா?

இந்தப் படங்களில் பாருங்கள். இதற்குப் பெயர் தாய்மையா அல்லது மனித இனத்தில் இருப்பது தாய்மையா?



விலங்குகளிடம் இருக்கும் “தாய்மை” என்ற புனிதத்தன்மை மனித இனத்திடம் மறைந்துவரும்போது ஆண், பெண் என்ற பேதம் காட்டி இல்லாத தாய்மையைக் காரணமாகவைத்து சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்?





Wednesday, July 21, 2010

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?

பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன் இந்த இணைப்பில் உள்ள செய்தியை படித்துக்கொள்ளுங்கள்.

பெண் லஞ்சம் வாங்கினால் குடியா மூழ்கிவிடும்?

• • • • • • • •

எஸ்.ஐ., ரேகாவுக்கு ஜாமீன் மறுப்பு

ஜூலை 21,2010 தினமலர்

சென்னை : லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் பத்திரங்களை அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை செலுத்தியுள்ளார். ஆனால், மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என நிதி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் லட்சுமி புகார் செய்தார். யானைக்கவுனி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, லட்சுமியின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின், லட்சுமியிடம் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார். பின், அவர் கேட்ட பணத்தை கொடுத்தார். ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் ரேகா புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், எஸ்.ஐ., ரேகாவை மடக்கிப் பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேகா, ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. ரேகா தரப்பில் ஆஜரான வக்கீல், நீண்ட நாட்களுக்கு பின் ரேகா கர்ப்பமாக உள்ளதால், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்க கோரினார். நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் வாங்கியதாக மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் ஊழல் போலீஸ் அதிகாரி என கூறப்படுகிறது. புழல் சிறையில் மருத்துவமனை உள்ளது. அங்கு பெண் டாக்டரும் உள்ளார். என்ன மருந்து தேவையோ அது வழங்கப்படும். சமீபத்தில் தான் ரேகா கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் தன்மை, சூழ்நிலை கருதி ஜாமீன் வழங்க விருப்பமில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

=======

ஒரு பெண் போலிஸ் அதிகாரியாக இருந்துகொண்டு புகார் கொடுக்க வந்த மற்றொரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய இந்தப் பெண் இப்போது “தாய்மையைக்” காரணம் காட்டி ஜாமின் கேட்கிறார். பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது உண்மைதானோ?

தாய்மையுடன் இருக்கும்போது எப்படி ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற குற்றங்கள் செய்ய எண்ணம் தோன்றுகிறது. காலம் மாறிவிட்டது. தாய்மை என்பது இப்போதெல்லாம் குற்றம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ள பயன்படுத்தும் கேடயமாகிவிட்டது. இந்தத் தாய்மையின் புனிதத்தின் பெயரால்தானே பல ஒருதலைபட்சமான சட்டங்கள் பெண்களுக்காக என்று இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல பெண்கள் இப்படித்தவறாகத்தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் “தாய்மையின்” புனிதத்தைப் பெண்களே மதிக்காதபோது பிறகு பெண்களை யார் மதிப்பார்கள்?



தன்வினை தன்னைச் சுடுமா? கண்டிப்பாகச் சுடும்.

செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நன்கு யோசித்து பிறகுதான் செய்யவேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்று அன்று மூதாதையர்கள் சொன்னார்கள். அதைப் பின்பற்றி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொன்னார்கள். பிறகு அதையே அறிவியல் என்ற பெயரில் ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு என்று சொன்னார்கள். இவ்வளவு சொல்லியும் அதை பெண்களுக்கு எடுத்துரைக்க சரியான ஆசிரியர் இல்லை. இந்த ஆன்மிக, அறிவியல் உண்மைகளை இந்தக் காலத்துப் பெண்கள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்கள் நன்கு உணரவேண்டும். அதற்குப் பெண்கள் வாரியம்தான் உதவி செய்யவேண்டும். வேறுயாரும் பொய்வழக்குப்போடும் பெண்களைக் காப்பாற்றவே முடியாது.



கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை
ஜூலை 22,2010 தினமலர்

சென்னை : பிரபல நடிகரின் முன்னாள் மனைவியின் அண்ணி தற்கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகர், மெலோனி தெருவைச் சேர்ந்தவர் பொன்குமார் தனசேகரன். இவர், பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமியின் சகோதரர். பொன்குமாரின் மனைவி அபிராமி(30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்குமாரின் சகோதரர் நாகராஜனும் தன் மனைவியுடன் இதே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சொத்துப் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே செலவுகளை கவனித்து வந்தனர். பொன்குமாரின் மனைவி அபிராமி, தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, மாம்பலம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாம்பலம் போலீசில் அபிராமியின் தாயார் ஜோன் சீனிவாசன், "பொன்குமாரின் சகோதரர் நாகராஜன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சகோதரர் யுவகிருஷ்ணன் ஆகியோர் தான் தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளனர்' என புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tuesday, July 20, 2010

குழந்தைகளுக்கு எமனாகும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்

சமீப காலமாக பத்திரிக்கைகள் விழிப்புடன் செய்திகள் வெளியிடுவதன் மூலம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற இருட்டறைக்குள் இருந்துகொண்டு கொலைசெய்துகொண்டிருக்கும் பல பெண்களின் அப்பாவித்தனம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதுவரை கள்ளக்காதலுக்காக கணவனைக் கொல்லும் நிலை மாறி இப்போது குழந்தைகளையும் கொல்லும் இழிநிலையில் சென்றுகொண்டிருக்கிறது நிலவரம்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பும், கருத்தும் எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊற்றியது போல பலருக்கும் நல்ல தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்துப்படி வயதுவந்த ஆண், பெண் இருவரும் விரும்பி உறவுகொண்டு அது கள்ளஉறவாக அதாவது இந்திய சட்டம் IPC497- Adultery சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாதபட்சத்தில் அது சட்டப்படி தவறில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே அது அடுத்தவன் மனைவியுடனான உறவாக இருந்தால் உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தில் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பின் பகுதியையும் அந்த சட்டப்பிரிவையும் கீழே பாருங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம் அது திருமணம் ஆன ஆணுடனா அல்லது திருமணமாகாத ஆணுடனா என்று சொல்லப்படவில்லை)

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்ட வரையறைப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் கருத்தின்படியும் கீழுள்ள செய்தியில் கள்ளஉறவு ஏற்பட்டு அதில் ஒரு குழந்தை பலியிடப்பட்டிருக்கிறது. கீழுள்ள செய்தியில் திருமணமான ஆண் திருமணமாகாதப் பெண்ணுடன் உறவுவைத்திருக்கிறார். இது சமீபத்திய தீர்ப்புப்படி இரு வயதுவந்த ஆண்,பெண் கொண்ட விருப்ப உறவாக அமையும் அதேநேரத்தில் IPC497 (Adultery) சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாததால் இது Adultery என்ற பிரிவின் கீழ் குற்றமாகவும் வராது.

மேலும் அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் திருமணம் செய்திருந்தால்தான் அது அந்த ஆணைத் தண்டிக்க வழி செய்யும் இருதார மணம் (Bigamy) என்ற பிரிவில் கருதப்படும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மனைவியல்லாத இரண்டாவது காதலியுடன் திருமணம் செய்யாமல் பல அரசியல்வாதிகள் உங்கள் கண்ணுக்கெதிரேயே பெருமையுடன் உங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோன்ற குற்றங்களை சட்டங்களும் சமுதாயமும் எப்படி ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன என்று தெளிவாகத் தெரிகிறதல்லவா.


சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆதித்யா உடல், நாகை சுடுகாட்டில் புதைக்கப்பட்ட போது கதறியழும் தாய் ஆனந்தி.

சென்னை :சென்னையில் காணாமல் போய், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (எ) அனந்த லட்சுமி (30). இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், மூன்றரை வயதில் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசி (26). எம்.எஸ்சி., பட்டதாரியான இவர், ஜெயக்குமார் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெயக்குமாரும், பூவரசியும் முன்னரே, சென்னையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய போது நெருக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பாக வளர்ந்தது. பூவரசியை, வேப்பேரியில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ., விடுதியில் ஜெயக்குமார் தங்க வைத்தார். இதை அறியாத ஆனந்தியும், அவரது குழந்தைகளும், பூவரசியிடம் நெருக்கமாக பழகினர்.ஜெயக்குமார் அடிக்கடி தனது மகன் ஆதித்யாவை அலுவலகத்திற்கு அழைத்து வரும் போது, பூவரசி தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை 17ம் தேதி வழக்கம் போல் ஆதித்யா, அலுவலகம் வந்த போது, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஆண்டர்சன் சர்ச்சில் விழா நடப்பதாகவும், அங்கு ஆதித்யாவை அழைத்துச் செல்வதாகவும் பூவரசி கூறினார். தொடர்ந்து, ஜெயக்குமார், ஆதித்யாவை பூவரசியுடன் அனுப்பி வைத்தார். அன்று மாலை 6 மணிக்கு தனது மகன் ஆதித்யாவை காணவில்லை என்று எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்தார். விசாரணையில், தனது மகனை, நண்பியான பூவரசியுடன் அனுப்பியதாகவும், அவர் சர்ச்சில் மயங்கி விழுந்த போது மகனை காணவில்லை என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பூவரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரும் அப்படியே கூறியதால், மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். மறுநாள் காலை போலீசும், ஜெயக்குமாரும் தொடர்பு கொண்ட போது, பூவரசியின் மொபைல் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் இணைப்பு கிடைத்த நிலையில், போலீசார் மீண்டும் பூவரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் சூட்கேசில் இறந்த நிலையில் சிறுவன் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த படத்தை வைத்து கேட்ட போது ஜெயக்குமாரும், பூவரசியும் மறுத்துவிட்டனர். ஆனால், ஆனந்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் அடையாளம் காட்ட நாகைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சென்ற ஆனந்தி, சூட்கேசில் இருந்த சிறுவன் உடல் தனது மகன் ஆதித்யாவுடையது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், பூவரசியை கைது செய்தனர். சிறுவனின் தந்தை ஜெயக்குமார் தற்போது நாகை விரைந்துள்ளார்.

சிறுவன் உடல், நாகை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீசாருடன், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தி, சிறுவன் உடலை பார்த்து கதறியழுது மயங்கி விழுந்தார். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஆனந்தி சேர்க்கப்பட்டார்.நேற்று மாலை சிறுவன் ஆதித்யா உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நாகை சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சோகத்தோடு பங்கேற்றனர்.நாகை பஸ் ஸ்டாண்டு முழுப்பகுதியையும் கண்காணிக்க, நவீன கேமரா பொருத்தப்பட்டு இதன் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேரமும், தனி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், சிறுவனை கொலை செய்து உடலை அடைத்து வைத்திருந்த சூட்கேஸ் இறக்கி வைக்கப்பட்டு, அனாதையாக கிடந்துள்ளது. இது நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத மர்மம் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.

"ஜெயக்குமாரை பழிவாங்கவே கொன்றேன்'

ஜெயக்குமாருக்கும், எனக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். இரண்டு முறை அப்படி நடந்தது. தொடர்ந்து அவர், கருவை கலைக்கச் சொன்னதால் நான் ஆத்திரமடைந்தேன். திருமணம் செய்யுமாறு கூறியபோது ஜெயக்குமார் மறுத்தார். எனக்கு உருவான குழந்தையை கொன்றுவிட்டு, ஜெயக்குமார் மட்டும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.கடந்த 17ம் தேதி, சிறுவன் ஆதித்யாவை கூட்டிக் கொண்டு எனது விடுதிக்குச் சென்று, அங்கு அவன் அணிந்திருந்த டிரஸ்சில் இருந்து நைலான் கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கி கொன்றேன். பின்பு, தலையை பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி உடலை சூட்கேசில் வைத்தேன். அங்கிருந்து ஆண்டர்சன் சர்ச்சிற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற போது மயங்கி விழுந்து விட்டேன். போலீசார், மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும் போது, ஆதித்யாவின் உடல் சூட்கேசில் எனது அறையில் இருந்தது.மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்து, ஆட்டோவில் சூட்கேசை ஏற்றி கோயம்பேடு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏற்றி புதுச்சேரி சென்றேன். அங்கு, நாகை பஸ்சில் சூட்கேசை ஏற்றி வைத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டேன். ஜெயக்குமாரை பழிவாங்கவே நான் இந்த கொலையை செய்தேன்.

==============

இந்த செய்தியிலிருந்து பெண்ணியவாதிகள் என்ன சொல்வார்கள் என்றால் பெண்ணை கர்ப்பம் அடையச் செய்து ஏமாற்றிவிட்டான் ஆண் என்று சொல்வார்கள். ஆனால் செய்தியில் பார்த்தீர்களா? முதல் முறை கர்ப்பம் அடைந்து அது கலைக்கச்சொல்லியும் மீண்டும் பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமலா இரண்டாவது கர்ப்பம் எப்படி ஏற்பட்டிருக்கும்? இப்படித்தான் கள்ள உறவு IPC497 (Adultery) சட்டம் சொல்கிறது. கள்ள உறவில் ஈடுபடும் பெண் குற்றவாளி இல்லை என்று சொல்லி பெண்ணிற்கு தண்டணையிலிருந்து விலக்கு அளித்து பெருமைப்படுத்தினால் அப்பாவிக் குழந்தைகளின் உயிரை பணயம்வைத்து இதுபோன்ற சிறுமைத்தனங்கள்தான் நாட்டில் இனி பெருகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ''தாய்மை" என்ற பண்பு சட்டங்கள் மூலம் சமுதாயத்தில் அழிக்கப்பட்டு வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாய்மை என்ற பெயரில் பெண்களுக்கு ஒருதலைபட்சமான சிறப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடைசியில் அந்தத் தவறான சட்டங்களை பயன்படுத்துபவர்கள் கொடூர குணம் கொண்ட அரக்கிகள் மட்டுமே. உங்கள் வீட்டிலிருக்கும் உங்களது தாய் மற்றும் சகோதரிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதுகாக்கவில்லையே ஏன்?

இதுபோலத்தான் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. இதுபோலத்தானே ஒரு பெண் இரண்டுமாதக் குழந்தையைக் கூட வரதட்சணை வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தார்.

Stepmom Names Two-Month-Old Baby in Dowry Complaint (link)

In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.

கடைசியில் பெண்களுக்குச் சரியான சட்ட விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறது என்று பெண்கள்வாரியம் சொல்கிறது.



Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.

The IPC section allows for immediate arrest of the husband and in-laws by the police on the basis of a woman's complaint and has been controversial. Several pro-male organisations have been protesting against the section saying that the law is being misused by women for selfish gains and should include a penalty provision against its misuse. But women activists have been lobbying for no change in the law.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


இதுபோன்ற கள்ளக்காதல் கொலை, பொய் வரதட்சணை வழக்கு போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் யாரும் கல்வியறிவில்லாத அறியாமையில் உழலும் அப்பாவிகள் கிடையாது. அனைவரும் நன்கு படித்து நல்ல பணியில் இருக்கும் மேல்தட்டுவர்க்க நகரத்துப் பெண்கள். இவர்கள் இப்படி செய்வதற்குக்காரணம் என்ன அறியாமையா? பழிவாங்கத்துடிக்கும் வஞ்சக குணம், ஆணவம், அனைவரையும் அடக்கியாளத் துடிக்கும் கொடூர எண்ணம். இந்தக் குணங்களை பெண்ணுரிமை என்ற பெயரில் பல அமைப்புகள் பெண்களிடையே புகுத்திவருகிறார்கள். அதன் வெளிப்பாடுகள்தான் பின்வரும் வீர வசனங்கள்.

"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

அந்த வக்கிர ஆசையை தவறான பெண்கள் பூர்த்தி செய்துகொள்ள உதவுபவைதான் இன்றைய நடுநிலையற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். இதுபோன்ற நடுநிலையற்ற சட்டங்கள் தவறானப் பெண்களை ஊக்குவிப்பதை நிறுத்தும்வரை இதுபோன்ற அப்பாவிப் பிஞ்சுக்குழந்தைகள் தங்களது உயிரை உங்களுக்காகத் தியாகம் செய்துகொண்டிருக்கும் அவலநிலை தொடரும்.




Saturday, July 17, 2010

உள்நாட்டு ‘ஸ்டைலில்’ ஒரு இலவச "செக்ஸ்" கல்வி?!

தினமலரில் வந்த படம் ஜூலை 17, 2010

இதையெல்லாம் தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கும், பெண்கள் நல வாரியத்திற்கும் நேரமில்லை போலிருக்கிறது! இவர்கள் வரதட்சணை வழக்குகளுக்கு மட்டும்தான் முன்னுரிமை தருவார்கள். ஏன் என்ற கேள்வி எழுப்பும் சிந்தனையாளர்கள் இதற்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டு நிதியுதவி வலைப்பின்னலைப் பற்றி இங்கே சென்று பாருங்கள் இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன்முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியுதவி!

இவற்றில் உருவாகிக்கொண்டிருப்பவைதான் சமீப காலமாக உருவாகிக்கொண்டிருக்கும் 2005 Domestic Violence Act போன்ற சட்டங்கள்.

  1. வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில்லை.
  2. IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டும்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவுகளும் கிடையாது.
  3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) - இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.
  4. கள்ளக் காதல் உறவு (IPC497) - இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தாலும் எந்த தண்டணையும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.

ஒரேவித நோக்கத்திற்காக இதுவரை அடுக்கடுக்காகப் பலவித சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் வரதட்சணை கொடுப்பவர்களையும், சட்டத்தை சுயநலத்திற்காகப் பயன்படுத்துபவர்களையும் தண்டிக்காமல் ஆதரித்து வளர்க்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

அதற்குக் காரணம் பல பொய் வழக்குகள் பதிவானால்தான் அதிக புள்ளிவிபரம் காட்டி நிதியுதவி பெறமுடியும். எப்போதும் இதுபோன்ற புள்ளிவிபரங்களில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும்தான் காட்டப்படும். கடைசியில் எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம் என நிருபிக்கப்பட்டது என்று குறிப்பிடமாட்டார்கள். ஏனென்றால் புள்ளிவிபரம் காட்ட எண்ணிக்கையே இல்லாமல் போய்விடும் அல்லவா? அதனால் காவல்நிலையத்தில் எத்தனை FIR பதிவாகிறது என்பது மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாக பலவகையான சட்டங்கள் தேவை. அவற்றை தவறாகப் பயன்படுத்தினால்தானே பதிவாகும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இந்த தந்திரம் தெரிந்தவர்கள் பெண்களின் பெயரால் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இந்த சட்டங்களால் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலநிலைக்கு ஒரு துளி உதாரணம் கீழே உள்ளசெய்திகள்.


Stepmom Names Two-Month-Old in Dowry FIR (link)
In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.



92 year old woman dragged to police stations (link)

The officer in-charge of Bainsada police station had arrested Badan Devi (92), a widow, and her 40-yearold daughter Minatee of Ichhapur village on Saturday. The police action followed an FIR lodged by the woman's daughter-in-law, Santilata. Police did not even bother to make special arrangements for the old woman. They virtually dragged the tottering accused" to court along with other criminals.

இதுபோன்ற சட்டங்களால் பெண்கள் சட்டங்களை எப்படித் தவறாகப் பயன்படுத்தி தங்களது குடும்பங்களைத் தங்களுக்குத் தெரியாமலேயே எப்படி அழிந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நீதிமன்றம் விரிவாகச் சொல்லியிருக்கிறது. இதுபோன்ற குடும்ப அழிப்புகளுக்குக் காரணம் பொய் வழக்குப் போடும் மனைவிகளா? அல்லது பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் விதத்தில் ஊக்குவிக்கும் அமைப்புகளா? அல்லது இதுபோன்ற பல சட்டங்களை இயற்ற வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவியா? சிந்தியுங்கள்.


N THE HIGH COURT OF DELHI AT NEW DELHI, CRL. R 462/2002 DATE OF DECISION: May 19, 2003,
HON’BLE MR. JUSTICE J.D. KAPOOR

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sistes, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.