இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Law Misuse. Show all posts
Showing posts with label Law Misuse. Show all posts

Tuesday, September 28, 2010

வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை

யார் வந்து எப்படிப் புகார் கொடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி கண்ணை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அனுப்பி பல குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை நண்பர்கள் அவர்கள் எழுதும் வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை என்று நிரூபித்துவிட்டார்கள். பின்வரும் செய்தியைப் படித்துவிட்டு அது சரிதான் என்று நீங்களும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது

செப்டம்பர் 28,2010 தினமலர்

கரூர் : கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கரூர், செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). இவரது மனைவி லட்சுமி ஸ்ரீ (24). இருவருக்கும் திருமணமாகி நான்காண்டாகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், விரக்தியடைந்த லட்சுமி ஸ்ரீ, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். குடும்ப பிரச்னை என்பதால், இவ்வழக்கு கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுதாகர், லட்சுமி ஸ்ரீ ஆகியோரை வரவழைத்து ஏட்டு லதா கவுன்சிலிங் செய்தார். இதில், கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையாக சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர்.

அப்போது, கோவை புதூர் பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரியும் லட்சுமி ஸ்ரீயின் அண்ணன் ஆனந்தராஜ் (30), போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, சுதாகர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏட்டு லதாவிடம் வாக்குவாதம் செய்தார். "கணவன், மனைவியே சமரசமாக செல்ல ஒத்துக்கொண்ட பின், வழக்கு பதிவு செய்ய முடியாது' என, ஏட்டு லதா கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், லதாவை உதைத்து, தாக்கிவிட்டு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு ஓடியுள்ளார். லதாவுக்கு, கை, கால், முகம், பல்லில் காயம் ஏற்பட்டடு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தப்பியோடிய ஆனந்தராஜை ஏட்டுக்கள் ராஜாமணி, சாமுவேல் ஆகியோர் டூவீலரில் துரத்திச் சென்று பிடித்தனர். ஆனந்தராஜை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



Tuesday, August 03, 2010

பாலியல் வன்கொடுமையை ஆண்கள் ஆதரிக்கிறார்களா?

செய்தியைப் மேலோட்டமாகப் படித்ததும் ஏதோ ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். அப்படித்தான் பல ஆண்டுகளாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் இதுவரை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தப் பதிவை முழுதுமாக கடைசிவரை படித்துப்பாருங்கள். பிறகு இதுபோல செய்தித்தாள்களில் வரும் செய்தி எப்படி மேலோட்டமாக எழுதப்பட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.



புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.


ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.


மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்




உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.

தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.





Wednesday, July 21, 2010

தன்வினை தன்னைச் சுடுமா? கண்டிப்பாகச் சுடும்.

செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நன்கு யோசித்து பிறகுதான் செய்யவேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்று அன்று மூதாதையர்கள் சொன்னார்கள். அதைப் பின்பற்றி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொன்னார்கள். பிறகு அதையே அறிவியல் என்ற பெயரில் ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு என்று சொன்னார்கள். இவ்வளவு சொல்லியும் அதை பெண்களுக்கு எடுத்துரைக்க சரியான ஆசிரியர் இல்லை. இந்த ஆன்மிக, அறிவியல் உண்மைகளை இந்தக் காலத்துப் பெண்கள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்கள் நன்கு உணரவேண்டும். அதற்குப் பெண்கள் வாரியம்தான் உதவி செய்யவேண்டும். வேறுயாரும் பொய்வழக்குப்போடும் பெண்களைக் காப்பாற்றவே முடியாது.



கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை
ஜூலை 22,2010 தினமலர்

சென்னை : பிரபல நடிகரின் முன்னாள் மனைவியின் அண்ணி தற்கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகர், மெலோனி தெருவைச் சேர்ந்தவர் பொன்குமார் தனசேகரன். இவர், பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமியின் சகோதரர். பொன்குமாரின் மனைவி அபிராமி(30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்குமாரின் சகோதரர் நாகராஜனும் தன் மனைவியுடன் இதே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சொத்துப் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே செலவுகளை கவனித்து வந்தனர். பொன்குமாரின் மனைவி அபிராமி, தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, மாம்பலம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாம்பலம் போலீசில் அபிராமியின் தாயார் ஜோன் சீனிவாசன், "பொன்குமாரின் சகோதரர் நாகராஜன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சகோதரர் யுவகிருஷ்ணன் ஆகியோர் தான் தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளனர்' என புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Friday, December 04, 2009

கருத்தடை சாதனத்தில் விந்தை படைக்கும் கல்லூரி மாணவிகள்!

சமீபத்தில் காஷ்மீரத்தில் துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதியை விரட்டிய பெண்ணைப்பற்றிய செய்தியை படிக்கும்போது உங்களுக்கு அந்தக்காலத்தில் முறத்தால் காட்டுப்புலியை விரட்டிய வீரப்பெண்களின் வரலாறு நினைவில் வந்திருக்கும். அந்தக்காலத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய், தில்லையாடி வள்ளியம்மை போன்ற பெருமைமிகு பெண்கள் எப்படி வீரப்போர் புரிந்து எதிரிகளை விரட்டப் போராடினார்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய வீரமிக்க, பண்புமிக்க, மாண்புடைய பெண்களால் பெருமையடைந்த இந்த நாட்டில் இப்போது என்ன நடக்கிறது என்று கீழுள்ள கட்டுரையில் படித்துப் பாருங்கள்.

இந்தக் காலத்துப் "படித்த" கல்லூரி பெண்கள் கத்தியின்றி, ரத்தமின்றி, துப்பாக்கி ஏந்தாமல் எப்படியெல்லாம் மிரட்டலாம் என்று ஒரு அரியவகை கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பிற்கு யாராவது இவர்களுக்கு பரிசு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இந்தக்காலத்தில் பெண்கள் "எது செய்தாலும்" தட்டிக்கொடுத்து "பெண்ணுரிமை" என்ற பெயரில் பாராட்டி மகிழ பல பேர் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில குடும்பங்களில் பெண்ணின் குடும்பத்தாரே கூட்டமாக சேர்ந்து தங்களது பெண்ணை மூலதனமாக வைத்து பொய் கேசு போட்டு அப்பாவிகளை சீரழிப்பதை குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக ஒரு குடும்பத் தொழிலாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.


இனி விகடனில் வந்துள்ள கட்டுரையைப் படித்து மகிழுங்கள்.

நன்றி: http://tamil498a.wordpress.com/


'புற்றுநோய்' என்ற வார்த்தையைச் சொல்லும் போதே வலிக்கும்தான்... ஆனால், கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சிகிச்சையில் இறங்குவதுதானே புத்திசாலித்தனம்! மாறாக, மூடி மறைத்து ஆரோக்கியமாகக் காட்டிக் கொள்ளப் பார்த்தால்... பாதித்த பகுதி மட்டுமின்றி,ஒட்டு மொத்தமாக உயிருக்கே அல்லவா ஆபத்து!

இதை எண்ணித்தான் தயங்கித் தயங்கி,மென்று விழுங்கியபடி, கலங்க வைக்கும் அந்த உண்மையை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர் கோவை மாவட் டத்தின் முக்கியமான அந்தக் கல்லூரியைச் சேர்ந்த நிர்வாகிகள். ''என்னதான் பாதுகாப்பு, கண்காணிப்பு என்று போட்டாலும்... படிக்க வருகிற மாணவிகளின் உள்ளத்தில் ஒழுக்கத்தையும், பொறுப்பு உணர்வையும் வளர்ப்பதில் பெற்றோருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதைச் செய்யத் தவறியவர்களின் குழந்தைகள் எப்படி மாறிப் போயிருக்கிறார்கள் என்பதை நாங்கள் நடத்திய திடீர் ரெய்டு, பட்ட வர்த்தனமாக நிரூபித்திருக்கிறது!'' என்றபடி, மிகப் பொறுப்பான அந்த நிர்வாகிகள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் உலுக்கிப் போடக் கூடியவை! முதலில் பேசுபவர் ஒரு பேராசிரியை...

''பத்து நாளைக்கு முன்னாடி பிரின்ஸிபல் ரூமுக்கு வந்த எங்க காலேஜ் துப்புரவுப் பெண் ஊழியர்கள், 'அம்மா... காலேஜ் டாய்லெட் ரூம் பக்கத்துலயும் ஹாஸ்டல் ரூமுக்கு பின் பக்கத்துலயும் தினமும் பத்து பதினைஞ்சு ஆணுறைகள் கெடக்குதுங்க... அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தோம்...'னு சொல்லி, பிரின்ஸிபல்கிட்ட காட்டினாங்க. நானும் ரூம்ல கூட இருந்தேன். அவங்க காட்டினது எல்லாம் யூஸ் பண்ண காண்டம்ஸ்! நாங்க இரண்டு பேரும் அதைப் பார்த்து ஷாக் ஆயிட்டோம்... இன்னும் சொல்லணும்னா வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டிய மாதிரி இருந்துச்சு.

காலேஜ் நிர்வாகத்தோடு பேசிட்டு அன்னிக்கு நைட்டே ஹாஸ்டலுக்குள்ள ரெய்டு போக முடிவு செஞ்சோம். முதல்ல லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போனோம். அங்கே கேரளாவிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் ஒரு பொண்ணோட சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதுல 15 பாட்டில் விஸ்கி வெச் சிருந்தா. பதறிப்போய் மிரட்டிக் கேட்டோம். அந்த பொண்ணு சாதாரணமா, 'எனக்கு தெனமும் நைட்ல ரெண்டு பெக் விஸ்கி குடிச்சாத்தான் தூக்கம் வருது. அதனாலதான் ஸ்டாக் வெச்சிருக்கேன்'' என்றாள்.

நாங்கள் இது பற்றிக் கடுமை காட்டியதும், அவள் கொஞ்சம்கூட அசராமல்... ''சரக்கை நானாவது ஓப்பனா வெச்சு யூஸ் பண்றேன். இதோ... இவ இருக்காளே... தேங்காய் எண்ணெய் பாட்டில்ல ஊத்தி வெச்சிருக்கா...' என்று சொல்லி தேங்காய் எண்ணெய் டப்பாவை எடுத்துக் கொடுத்தா. திறந்து பார்த்தா... அந்த எண்ணெய் டப்பாவை சுத்தமாக கழுவி, அதுல சரக்கை ஊத்தி வெச்சிருந்தாங்க. இன்னொரு பொண்ணு காலியான சில ஷாம்பூ பாட்டில்களில் வோட்காவை ஊத்தி வெச்சிருக்கா!

இன்னொரு ரூம்ல ஒரு பொண்ணோட பெட்டியை திறந்து பார்த்தா... அதுல ஏகப்பட்ட காண்டம்ஸ் பாக்கெட்! அந்தப் பொண்ணை தனியா கூப்பிட்டு விசாரிச்சோம். அதுக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களாம். 'அப்பப்போ வெளியேபோகும்போது, ஏதாவது ஏடாகூடமாக நடந்துடும். அவனுங்க யாரும் லூப் எடுத்துட்டே வரது இல்ல. அப்புறம் கஷ்டப்படுறது நாங்கதானே! அதனாலதான் இப்போ எவன்கூட வெளியே போனாலும் பர்ஸ்ல ஒரு பாக்கெட் தூக்கிப் போட்டுக் கிட்டே போயிடுறோம், மேம்! இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம்தானே...'ன்னு ரொம்பவும் கூலா சொல்லுது. அதே ரூம்ல இருந்த இன் னொரு பொண்ணோட சூட்கேஸ்ல...'' என்று சொல்லி நிறுத்திய பேராசிரியை, உடன் இருந்த மற்றொரு நிர்வாகியை சங்கடத்தோடு ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்,

''அந்த பொண் ணுக்கு பல பசங்ககூட தொடர்பு இருக்கும் போல. ஒவ்வொருத்தன் கூடவும் போயிட்டு வந்து... அவனுங்க யூஸ் பண்ணிய காண்டத்தை அப்படியே ஒரு முடிச்சுப் போட்டு வெச்சிருக்கா. ஒவ்வொண்ணு மேலேயும் மார்க்கர் பென்ல அந்தப் பையன்களோட பேரை எழுதி, பத்திரப்படுத்தி வெச்சிருக்கா. 'எதுக்கு இதையெல்லாம் இப்படி வெச்சிருக்கே?'ன்னு கேட்டோம். 'நாளைக்கு அதுல எவனையாவது ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கற சூழ்நிலையோ, தேவையோ எனக்கு வந்தா, அப்ப அவன் ஒப்புக்க மாட்டேன்னு சொன்னான்னா..? இதை காட்டி கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலாம் இல்ல... அதுக்காகத்தான் வெச்சிருக்கேன். அதுவுமில்லாம அவனோடது என்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சா நான் எது சொன்னாலும் கேட்பானுங்க..'னு கூச்சமில்லாம சொன்னா அந்தப் பொண்ணு!

இப்படியெல்லாம் போறதுக்கு உங்களுக்கு எங்கே இடமிருக்குன்னு கேட்டா... 'ஹாஸ்டல்ல இருந்து காலையில ஆறு மணிக்கெல்லாம் காலேஜ் கிளம்பி வந்துடுவோம். அந்த நேரத்துல காலேஜ்ல யாரும் இருக்க மாட்டாங்க. கிளாஸ் ரூம்லயேகூட சில சமயங்கள் நடந்திடும். இல்லன்னா வெளியில வீடு எடுத்து தங்கியிருக்கிற பசங்க நிறைய இருக்காங்க. அவனுங்க காலேஜ் வந்த பிறகு அவங்க வீட்டு சாவியை வாங்கிட்டு போயிட்டு வந்துடுவோம்'னு சொன்னாங்க. இதில் பெரும்பாலான மாணவிகள் அதட்டியோ, மிரட்டியோ கேட்டு இதையெல்லாம் சொல்லலை... சர்வ சாதாரணமா, 'என்ன பண்ண முடியுமோ... பண்ணிக்கோங்க' என்கிற குரலில்பேசியதுதான் ரொம்பவே ஷாக்கா இருந்தது. அவங்கசொல்லச் சொல்ல... எங்களுக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சது. என்ன செய்றதுன்னு தெரியலை'' என்று சொன்ன அந்தப் பேராசிரியை,

''அவங்க செய்யற எதுவுமே தப்பில்லைன்னுதீர்க்கமா நம்புறாங்க. கூடவே, 'இதையெல்லாம் ஏன் கேட்கறீங்க..? நல்லா படிச்சு, இந்தக்காலேஜுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துட்டிருக்கோம்ல...எங்களால காலேஜுக்கு எந்தப் பிரச்னை யும் இல்லைதானே?'ன்னு லாஜிக் பேசினாங்க.

எல்லோரையும் ஹால்ல அசெம்பள் பண்ணி... 'இதெல்லாம் தப்பு. இனி இப்படி செய்யாதீங்க'ன்னு அட்வைஸ் பண்ணி னோம். அதை எத்தனை பொண்ணுங்க காதுல போட்டுக்கும்னு புரியலை. குறிப்பாக வெளிமாநிலத்திலிருந்து வந்து தங்கியிருக்கிற சில மாணவிகள் மூலமாத்தான் 'இதெல்லாம் தப்பே இல்லை' என்ற மனோபாவம் நம்மூர் மாணவிகளுக்கும் வந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதுக்காக கண்டித்து சஸ்பெண்ட் பண்ணினாலோ, டி.சி. கொடுத்தாலோ, விஷயம் வெளியே தெரிஞ்சு காலேஜ் பேரு கெட்டுப் போயிடும்னு அப்படியே எங்க நிர்வாகத்தில் விட்டுட்டாங்க. மனநல மருத்துவர் மூலமாக எல்லோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க...'' என்றார் பேராசிரியை.

ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து படிக்கும் அதே கல்லூரியின் பாய்ஸ் ஹாஸ்டலில் காண்டம் மாதிரியான சமாசாரம் இல்லையாம். ஆனால், ரூமுக்கு ரூம் ஒரு மினி பாரே வைத்திருந்தது இவர்களின் ரெய்டில் அம்பலமானதாக படபடப் போடு சொன்னார் அந்த நிர்வாகி! கோவைமாவட் டத்தில் மட்டுமின்றி, வேறு சில கல்லூரி நிர்வாகங் களும், 'காதல்... தோல்வி... தற்கொலை' என்று பேரைக் கெடுக்கிற மாதிரி விவகாரங்கள் நடந்துவிடக் கூடாதே என ஹாஸ்டல்களில் திடீர் ரெய்டு அடிப் பது வழக்கம்தான் என்றார் தலைநகர் ஏரியா கல்லூரி நிர்வாகி ஒருவர்.

''இது போன்ற பாலுணர்வு மற்றும் போதை விவகாரங்களில் முன்பெல்லாம் அசிங்கமான புத்தகங்களைப் பார்த்துத்தான் மாணவ - மாணவிகள் தூண்டப்பட்டார்கள். ஆனால், இப்போது அந்த இடத்தை அசுரத்தனமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது கேமரா செல்போன். ஒருத்தரை ஒருத்தர் குளிக்கும்போதும், அசந்து தூங்கும்போதும் விளையாட்டுக்கு எடுத்துக் கொள்கிற செல்போன் விடியோ காட்சிகளை, சக மாணவ மாணவிகளுக்கு 'பாஸ்' பண்ணி தமாஷ் பண்ணுவதில்தான் விபரீதம் துவங்குகிறது. அடுத்தபடியாக முன்னேறக் கூடிய மாணவர்கள், தங்களோடு வெளியில் 'தங்க' வரும் மாணவிகளை படம் எடுத்து, நண்பர்களிடம் அந்த வீரதீரக்காட்சியை ரவுண்டில் விடுகிறார்கள். இதில் பல காட்சிகள், அந்த மாணவிகளின் சம்மதத்தோடே எடுக்கப்பட்டிருப்பதுதான் கொடுமை! இப்படி செல்போன் வீடியோ தொடர்பான பஞ்சாயத்துகள் அடிக்கடி கல்லூரிக்குள் நடந்து கமுக்கமாக அமுக்கப் படுகின்றன!'' என்று கவலையோடு பேசினார்.

சேலத்தை சேர்ந்த பிரபல மனநல மருத்துவரான பாஸ்கர் இன்னும் சில அதிர வைக்கும் சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ''ஒரு மாசத்துக்கு முன்னாடி சேலத்துல இருக்குற ஒரு பிரபலமான ஸ்கூல்ல டென்த் படிக்கிற பொண்ணை அவங்க பேரண்ட்ஸ் கூட்டிட்டு வந்தாங்க. அந்தப் பொண்ணு மூணு மாசம் கர்ப்பம்! அவகிட்ட பேசினப்ப, 'நான் தெனமும் பஸ்லதான் ஸ்கூலுக்கு போவேன். அதே பஸ்ல பைக் மெக்கானிக் ஒருத்தர் வருவாரு. எவ்வளவு கூட்டமா இருந்தாலும் அவரு எனக்கு ஸீட் புடிச்சு கொடுத்துடுவாரு. ஒரு நாள் திடீர்னு என்னை லவ் பண்றதா சொன்னாரு. முதல்ல எனக்கு கோபம் வந்துச்சு. ஆனா, அவரு எம்மேலே எவ்ளோ ஆசையா இருக்காருனு தெரிஞ்சதும் நானும் ஓகே சொல்லிட்டேன். அடிக்கடி கிளாஸை கட் அடிச்சிட்டு சினிமாவுக்கும், ஏற்காட்டுக்கும் போவோம்' என்று அந்தப் பெண் திக்கித் திணறிச் சொன்னாள். அவள் குடும்ப நிலவரம் பற்றி மெதுவாக விசாரித்தேன். 'எங்கப்பா, அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போயிடுவாங்க. வீட்டுல நான் ஒரே பொண்ணுதான். படிச்சிட்டியா... பரீட்சை எப்போ... இப்படித்தான் பேசுவாங்க. ஆனா, அவன் நான் சொல்றதையெல்லாம் கேட்பான். ஒரு நாள் ஏற்காடு போனபோது ரூம் போட்டு தங்கினோம்'னு சொல்லிகிட்டே போனா அந்தப் பொண்ணு!

அவ மட்டுமில்ல...

இன்னிக்கு இதே மாதிரி பெற்றோர் இருந்தும் தனிமையாக உணருகிற பல பெண்களும் பையன்களும் இருக்காங்க. வேலைக்குப் போகாத தாய்மார்களில் சிலரும்கூட வீட்டுல இருக்கிற பொண்ணோ, பையனோ சொல்றதை பத்து நிமிஷம் உட்கார்ந்து பொறுமையா கேக்குறதில்லை. குழந்தைங்க மனசுல வெறுமை படியும்போது, படிப்படியாஒரு வித முரட்டுத்தனம் உருவாகுது. அது பெற்றோரைப் பழிவாங்குறதாகவும், தங்கள் வெறுப்புக்கு வடிகால் தேடுறதாகவும் திசைமாறி இப்படி யெல்லாம் போயிடுது!'' என்றார்.

இதுபோல பல அப்பாவிக் குழந்தைகளை தாய் தந்தையற்ற வினோத உயிரினங்களாக மாற்றி பிற்காலத்தில் சமூகத்தில் ஒரு தலைசிறந்த குற்றவாளியாக உருவாக்குவதில் IPC 498A போன்ற பெண்களை காப்பாற்றுவதாக நினைத்து "மூதறிஞர்களால்"தவறாக இயற்றப்பட்ட சட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஒழுங்குமுறையற்ற சட்டங்களால் பெண்கள் காப்பாற்றப்படுவதை விட பல குடும்பங்கள் அழிக்கப்பட்டு பல தாய்மார்கள் சிறைக்கு அனுப்பப்பட்டதுதான் மிச்சம். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு பாவமும் அறியாத சிறு குழந்தைகள் தகப்பன் இல்லாத வினோத பிறவிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இது போல பல கட்டுரைகள் சர்வசாதாரணமாக செய்தித்தாள்களில் தினம் தினம் வருவதை பார்க்கத்தான் போகிறீர்கள்.

==============================================

வக்கிரம், அப்பாவித்தனம், விபத்து என்று பல்வேறு காரணங்களால் பாலியல் ரீதியாக தடம்மாறித் தவிக்கும் ஏராளமான இளம் வயதினருக்கு மனோதத்துவத் தீர்வு அளித்த அனுபவம் கொண்டவர் பிரபல செக்ஸாலஜிஸ்ட் நாராயணரெட்டி...

அவரிடம், கோவை - சேலம் - சென்னை விவகாரங்களை நாம் சொல்லவும், முகத்தில் எந்தவித ஆச்சர்ய ரேகையும் இல்லாமல் நம்மிடம் பேசினார் ரெட்டி...

''ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்ந்து, எதையும் பொறுமையா காத்திருந்து அனுபவிக்கிற காலம் மலையேறிக்கிட்டிருக்கு. அடுத்தவங்க ஒரு விஷயத்தை அனுபவிச்சா... அதுக்குத் தகுதி இருக்கோ இல்லையோ நாமும் அதை உடனே அனுபவிக்கணும் என்று வெறிகொள்கிற வகையில்தான் இருக்கோம் இப்ப! இந்த அவசரமும் வேகமும்தான் தப்பான வழி, சரியான வழி என்ற வேறுபாடுகள் தெரியாமல் கண்ணை மறைக்குது. ரொம்பப் பெரியவங்களே இது போன்ற தப்பான பல முடிவுகளை எடுக்கும்போது, இளம் வயதினரை என்ன சொல்லுவது?
மருத்துவரின் இந்த கூற்றுக்கு மிகச்சரியான ஒரு உதாரணம் இங்கே இருக்கிறது:
`Pub bharo' to beat moral police: Renuka Choudhary - The
Govt, NCW differ over Mangalore pub probe - The Times of India,

'இந்த நிமிஷத்துல ஜாலியா இருந்தா போதும். நாளைக்கு வர பிரச்னைகளை பத்தி நாளைக்கு பார்த்துக்கலாம்' என்கிற மனநிலையிலதான் போயிட்டு இருக்காங்க. குறிப்பா, ஆண் - பெண் ஈர்ப்பு என்பதே ஒரு ஃபேஷனாகவும் கௌரவப் பிரச்னையாகவும் இளைஞர்கள் மத்தியில் மாறிக்கிட்டு வருது. அதுவே எல்லை மீறுவதால் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாசாரத்தின் மதிப்பு, சிலருக்குப் புரியாமப் போயிடுது! அப்புறம் யாரை தப்பு சொல்லி என்ன பண்றது சொல்லுங்க..?'' என்று கேட்ட டாக்டர்,

''விந்தணுக்களை பொறுத்த வரைக்கும் மிக பாதுகாப்பாக வைக்காத பட்சத்தில், ரெண்டு நாள் கடந்துவிட்டாலே அது யாருக்குரியது என்று தெரிவிக்கும் தன்மையை இழந்துவிடும். அந்தப் பொண்ணு அறியாமையில அப்படி பண்ணியிருக்கணும். அல்லது, அந்த மாணவரை பிளாக்மெயில் செய்து தனக்கொரு பாதுகாப்பு தேடிக்கிற தவறான புத்திசாலித்தனத்தில் இப்படி எடுத்து வச்சிருக்கணும்!'' என்றார்.

======================



Friday, November 13, 2009

இந்தியக் கலாச்சாரம் இனி வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமே!

182 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம் கர்நாடகாவில் குறும்படம் ரெடி
தினமலர் - நவம்பர் 01,2009

தாவணகெரே: இந்தியாவின் பாரம்பரியமான கூட்டு குடும்ப கலாசாரம் அழிந்து வரும் காலகட்டத்தில், கர்நாடக மாநிலத்தில், 182 உறுப்பினர்களை கொண்ட கூட்டு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது.கர்நாடக மாநிலம், தார்வாத் மாவட்டம், லோக்கூர் பகுதியில் நரசிங்நாவர் குடும்பம் வாழ்ந்து வருகின்றனர்.


இவர்கள் குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 182. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.இந்த குடும்பத்தினர் தற்போது, அழிந்து வரும் கருத்தான கூட்டுக் குடும்ப தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றனர். இவர்களை வைத்து, எழுத்தாளர்களான ஆனந்த் மற்றும் மதுரா கட்டி தம்பதியினர் குறும்படம் ஒன்று எடுத்துள்ளனர். இதற்காக, படப்பிடிப்புக் குழுவினர் ஒரு வாரம், லோக்கூரில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்தனர்.


இது குறித்து ஆனந்த் மதுரா கட்டி கூறியதாவது:இந்த குறும்படம், இந்தியா மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய சமூக கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்கல் உட்பட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும், இந்த சிறிய விவசாய குடும்பத்தினர், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாக வாழ்கின்றனர். இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.


இந்த குறும்படத்தில், இந்திய கிராமப்புற கலாசாரமும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலேயே, இவர்கள் தான், மிகப் பெரிய கூட்டுக்குடும்பத்தினர். இவர்கள் அனைவரும் ஒரே சமையலறையிலேயே சமைக் கின்றனர்.இவ்வாறு அவர்கூறினார். இதுகுறித்து ஆனந்த் கட்டி கூறுகையில், "இந்த குறும்படத்தை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதலில் கர்நாடகாவில் வெளியிடுவோம். இது இந்திய கலாசாரத்தை வெளி உலகத்திற்கு காட்டும் நான்காவது குறும்படம்' என்றார்.

==========

இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இனி "டாக்குமெண்டரி படங்களிலும்", வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சிந்து சமவெளி நாகரித்தைப் பற்றி படிப்பது போலவும் தான் இனி அறிந்து கொள்ள முடியும். கூட்டுக் குடும்பங்களை சிதைக்கும் தவறான சட்டங்கள் இந்திய வாழ்க்கை முறையை அப்படித் தலைகீழாக புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றது.

வயதான பெற்றோர்களில் பெரும்பாலோர் மருமகள் கொடுத்த பொய் வரதட்சணை வழக்குகளால் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், மற்றும் தங்களது மகனின் சிதைந்து போன வாழ்க்கையை நினைத்து மனம் நொந்து நீதியைத் தேடி கோயில்களிலும் நிம்மதி இழந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பொய் புகார்களில் சிக்காத மீதம் இருக்கும் கொஞ்சம் பேர் மருமகள்களால் விரட்டப்பட்டு முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.

இந்த வயதான தாய், தந்தையர்கள் படும் மன வேதனைக்கு இந்த சமுதாயம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போற்றப்பட்ட நாட்டில் இப்போது முறைப்படுத்தப்படாத கொடிய சட்டங்களால் வயதான தாய்மார்களும், தந்தையரும் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெற்ற தாய், தந்தையை போற்றிப் பாதுகாக்காத சமுதாயம் நிச்சயம் அழிவைத்தான் சந்திக்கும்.





Saturday, November 07, 2009

கொடிய அழிவாயுதங்கள்

எந்த காரணத்தாலோ சட்டவாதிகள் பெண்களைப் பாதுகாப்பதாக நினைத்து IPC498A போன்ற பலவகையான முறைப்படுத்தப்படாத சட்டங்களை இயற்றிவிட்டனர். குறிப்பாக இந்த கொடிய சட்டங்களை தவறான நோக்கத்துடன் பயன்படுத்துவோருக்கு எந்த வித தண்டனையோ அல்லது இழப்போ கிடையாது. அதற்குப் பதிலாக தவறாக சட்டத்தை பயன்படுத்தி அப்பாவிகளை கொடுமை செய்வதற்கு இந்த சட்டங்களில் பலவித வழிவகைகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்டங்களை பயன்படுத்துவதில் எந்த வித ஒழுங்கு முறையோ, கட்டுப்பாடோ இல்லாத காரணத்தால் அந்த சட்டங்களைப் பெரும்பாலும் நவ நாகரீக மங்கைகள் பெண்ணுரிமை என்ற பெயரில் தங்களின் சுயலாபத்திற்காகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த அராஜகச்செயலை உச்ச நீதிமன்றம் சட்ட தீவிரவாதம் என்று வன்மையாக கண்டித்திருக்கிறது. தலைமை நீதிபதி பல முறை இதனைப் பற்றி தனது வருத்தமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதியும் இந்த அவல நிலைப்பற்றி ஒரு மாநாட்டில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் அரசு தரப்பிலிருந்து இதனை தடுப்பதற்கோ, அப்பாவிகளை இந்த சட்டதீவிரவாதத்திலிருந்து காப்பதற்கோ யாரும் எந்த வித நடவடிக்கையையும் எடுப்பதற்கு இதுவரை முன்வரவில்லை.

அதற்குப் பதிலாக மேலும் மேலும் பல ஒருதலைபட்சமான சட்டங்கள் அடுக்கடுக்காக இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து சட்டங்களிலும் ஆண்கள் எப்போதும் குற்றவாளியாகவும், பெண்கள் எப்போதும் ஒன்றுமறியா அப்பாவிகள் போலவும் ஒருதலைபட்சமாக சித்தரிக்கப்பட்டிருப்பது மிகவும் கொடுமை.

அதேசமயம் இந்த நவநாகரீக மங்கைகளின் அராஜக வன்முறைகளிலிருந்து அப்பாவி ஆண்களைப் பாதுகாக்க ஒரு சட்டமும் கிடையாது என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் எப்படி பயன்படுத்தப்படுதுகின் என்பதைத் தமிழ்த் திரைப்படங்களில் காட்டியுள்ளார்கள். திரைப்படம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். எனவே பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான இன்றைய சமூக நடைமுறையை இங்கே காணுங்கள்.








Sunday, October 04, 2009

மாமியாரை காப்பாத்துங்க....

Thanks: அவள் விகடன்

'பெண்ணின வரலாற்றில் முதல் முறையாக' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்... சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள 'அனைத்திந்திய மாமியார்கள் பாதுகாப்பு சங்கம் (ஆல் இண்டியா மதர்-இன்-லா புரொடக்ஷன் ஃபோரம்)' பற்றி!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு உதயமாகியிருக்கிறது இந்தப் புதிய அமைப்பு! நான்கு பேருடன் துவங்கப் பட்ட இந்தச் சங்கத்தில் ஒரே வாரத்தில் ஐம்பது உறுப்பினர்கள் சரசரவென வந்து சேர, நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அதன் வளர்ச்சி! தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் கிளைகளைத் துவங்கி யிருக்கும் இந்தச் சங்கத்தை டெல்லி, மும்பை, நாக்பூர் ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தும் பணிகளும் ஜரூர்!

சங்கத்தின் நோக்கம் என்ன?

'பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வழிசெய்யும் நாற்பத்து நான்கு வகை இந்திய சட்டங்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் கணவர், மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார் ஆகியோர் மீதெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. கணவன், மனைவி சண்டையில், 'உன் குடும்பத்தையே கோர்ட்டுக்கு இழுக்கறேன் பார்!' என்று ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த, இந்தச் சட்டத்தை பல மருமகள்களும் துருப்புச் சீட்டாக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்தெல்லாம் சட்டரீதியாகவோ, மனிதாபிமான அடிப்படையிலோ மாமியார்களும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களை காத்துக் கொள்ள உதவுவதற்காகவே இந்தச் சங்கம்'' என்கிறார்கள் இதன் உறுப்பினர்கள். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பதினோரு மணிக்கு பெங்களூரு, கப்பன் பார்க்கில் சங்கக் கூட்டத்தை நடத்துகின்றனர்.

சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவரான மமதா நாயக், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர். இப்போது பெங்களூருவில் பணியாற்றும் அவரை, சொந்த சோகங்களே சங்கத்தில் சேர வைத்திருக்கிறது!

''தனிக்குடித்தனம் போகணும்கிறது என் மருமகளோட எண்ணம். அதுக்கு எங்க மகன் உடன்படல. அதனால வரதட்சணை வழக்கு, குடும்ப வன்முறை சட்டம்னு ஏதேதோ எங்க குடும்பத்து மேல பாய்ஞ்சிருச்சு. குற்றமில்லாதவங்க மேல பழி சுமத்தறப்போ, அதோட வலி அனுபவிக்கறவங்களுக்குத் தான் தெரியும். இப்போ நியாயத்தின் துணையோட நாங்க இந்த வழக்கை சந்திச்சுட்டு இருந்தாலும், இதனால நாங்க பட்ட அவமானமும், வேதனையும் சொல்லி மாளாது. அந்த வலிகளெல்லாம்தான் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கற எண்ணத்தை எங்களுக்குள்ள உண்டாக்குச்சு!'' என்கிறார் கண்கள் துடைத்து!

சங்க நிறுவனர்களில் மற்றொருவரான நீனா தூலியா, கோபமும் கொந்தளிப்புமாக அவர்களின் வாதங்களையும் நியாயங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''மாமியார் கொடுமைங்கறது, காலம் காலமா மக்களோட மனசுல பதிஞ்சு போய் கிடக்கற ஒரு 'மித்'... அவ்வளவுதான்! அந்தக் காலத்துல இருந்திருக்கலாம். இப்போ இந்தச் சமூகம் ரொம்பவே மாறியிருக்கு. நாங்க மட்டும் மாறாம இருப்போமா என்ன? ஆனா, மாமியார் ஜாதியை ஏதோ வில்லி மாதிரி பார்க்கற மக்களோட மனோபாவம் மட்டும் இன்னும் மாறாம இருக்கறது, வேதனைக்குரிய விஷயம். டி.வி. சீரியல்கள்லகூட மாமியார்களை கொடுமைக்காரங்களாவேதான் காட்டுறாங்க.

இன்னொரு பக்கம், இதையே சாதகமா எடுத்துக்கற சில சாமர்த்திய மருமகள்கள், வீட்டுப் பிரச்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோகும்போது, கேஸ் அவங்க பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கணும்கறதுக்காக மாமியார், மாமனார் உட்பட புகுந்த வீட்டுல இருக்கு எல்லார் மேலயும், இருக்கிற எல்லா பிரிவுலயும் புகார் கொடுத்துடறாங்க. போலீஸும், விசாரணை கூட இல்லாம உடனே கைது செய்யறாங்க. 'நாங்க அப்பாவிங்க'னு அவங்ககிட்ட நிலைமையை எடுத்துச் சொன்னாகூட, 'சட்டம் என்ன சொல்லுதோ, அதைத்தான் செய்யு முடியும்'னு ஒரு வரியில பதில் கொடுக்கறாங்க.

இப்படி ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமா இருக்கற சட்டங்கள், காலத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்படணும். ஓய்வெடுக்க வேண்டிய வயசுல இருக்கற எத்தனையோ மாமனார், மாமியார்களை இந்த சட்டங்கள்தான் இப்போ கோர்ட், கேஸுனு சீரழிய விட்டிட்டிருக்கு.

மாமனார்-மாமியார் சொந்த உழைப்புல கட்டின வீட்டிலிருந்து அவங்களை விரட்ட, இந்தச் சட்டம் மருமகள்களுக்கு துணையா இருக்கு! இதுக்கெல்லாம் தீர்வு ஏற்படுத்த, சங்கம் முழுமூச்சா செயல்படும். பாதிக்கப்படற மாமியார்கள், 'விதி விட்ட வழி'னு இருக்க வேண்டியதில்ல. எங்க அமைப்புல இணைந்தோ அல்லது வழிகாட்டுதலைப் பெற்றோ கொடுமைக்கார மருமகளை சட்ட ரீதியா எதிர்கொள்ளலாம்!'' என்று அழைப்பு விடுத்தார்.

அமைப்பின் சென்னை பொறுப்பாளரான மனோஜ் குறிப்பிட்ட அந்த வழக்கு விஷயம், நமக்குள்ளும் கேள்வியை எழுப்பியது! ''இன்ஷுரன்ஸ் செஞ்சிருக்கற ஒரு மாமனார், ஏதாவது விபத்துல இறந்துட்டா கிடைக்கற தொகையில முக்கால் பங்கு மருமகளுக்கும், கால் பங்கு மனைவிக்கும் கொடுக்கப்படணும்னு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்குல தீர்ப்பு சொல்லியிருக்கு! இதுல இருக்கற நியாயம் என்னனு எனக்குத் தெரியல. தன் கணவனுக்காக காலம் முழுக்க வாழற மனைவி, அவரோட இன்ஷுரன்ஸ் பணத்தை வாங்கக்கூட தகுதியில்லாதவளா போயிட்டாளா? வீட்டுலதான் மாமியார் வர்க்கத்துக்கு மரியாதை இல்லாமப் போச்சுனா, நாட்டுலயும் எங்களை அவமதிக்கறதை என்னனு சொல்றது?!'' என்று வேதனைக் கேள்வி எழுப்பியவர், தொடர்ந்தார்...

''மாமியாரை தாய் மாதிரி பார்த்துக்கற மருமகள்கள் இருக்காங்கங்கறதையும் நாங்க ஏத்துக்கறோம், அவங்களைப் பார்த்து நாங்க ஏங்கறோம்! அதேசமயம், கொடுமைக்கார மாமியார்கள் சிலருக்காக வெட்கப்படறோம்!

பெண்களை காக்கும் சட்டங்களை நாங்கள் குற்றம் சொல்லலை. அது தவறா பயன்படுத்தப்படக் கூடாதுங்கறதுதான் எங்க அமைப்போட வேண்டுகோள்.

எங்க அமைப்பு சார்பா சென்னை, செனாய் நகர் திரு.வி.க. பூங்காவுல ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை அஞ்சுல இருந்து எட்டு மணிவரைக்கும் மீட்டிங் நடத்தறோம். பாதிக்கப்பட்டவங்க யார் வேணும்னாலும் எங்களை அணுகி வழிகாட்டுதலை பெறலாம்!'' என்கிறார்.

இந்தச் சங்கத்துக்கு இதுவரை எந்த ஆட்சேபனைகளும் எழவில்லை என்பது, டெய்ல் பீஸ்!

தொடர்புக்கு:
செல்போன்: 98862 50907, 98403 24551.
இணைய தளம்:
http://www.aimpf.org/

=========================

மேலுள்ள செய்திக்குப் பொருத்தமாக வாரமலரில் வந்துள்ள கவிதை!


வலி!

* மாமியார்
கொடுமை என்கிறாய்
மாமனார்
கடுமை என்கிறாய்...

* நாத்தனார்க்கு
அடிமை என்கிறாய்
தனி வீடே இனிமை
என்கிறாய்...

* மூன்று மாதத்தில்
மூன்று முறை
பிறந்த வீடு போய் வந்தும்
சுதந்திரமில்லை என்கிறாய்...

* வேலைக்கு ஆள் இருந்தும்
வேலை செய்யவா
அழைத்து வந்தீர்கள்
என்கிறாய்...

* பாசமெல்லாம்
வேஷம் என்கிறாய்
பணத்திற்குத்தான்
கூட்டுக் குடும்பம் என்கிறாய்...

* மகளுக்கு அறிவுரை
கூறத் தெரியாத
பெற்றோரைப் பெற்றிருக்கும்
மருமகளே...

* உன் சொல் அம்புகள்
ஒவ்வொன்றும்
உள்ளத்தைப் பிளந்து
ரணமாக்கினாலும்...

* எல்லா வலிகளும்
பறந்து விடுகின்றன
சிரிக்கும் பேரன்
என் நெஞ்சில்
உதைக்கும்போது...

- ஏ.வி.கிரி, தாம்பரம்.


Sunday, September 20, 2009

கட்சிகள் செய்யும் கலாட்டா

கணவருடன் சேர்த்து வைக்க போராடிய பெண் பச்சிளம் குழந்தையுடன் கைது
செப்டம்பர் 21,2009

நாகர்கோவில் : கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராட்டம் நடத்தி வந்த பெண்ணை, பச்சிளம் குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த கண்ணனுக்கும், இரணியல் கோணம் பகுதியை சேர்ந்த எம்.சி.ஏ., பட்டதாரியான கோபிகா(23)வுக்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோபிகா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், கோபிகாவுக்கு குழந்தை பிறந்தது. கணருடன் பேசி சேர்ந்து வாழ விரும்பினார். ஆனால், கணவர் வீட்டார் விரும்பவில்லை.

கோபிகாவை அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை தே.மு.தி.க., அறிவித்தது. இதற்காக, கோபிகா தனது குழந்தையுடன் பாலப்பள்ளம் சென்றார். அங்கு வந்த போலீசார், கண்ணன் வீட்டில் யாரும் இல்லாததால், திரும்பி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து குழந்தையை ரோட்டில் படுக்க வைத்து கோபிகா போராட்டம் நடத்தினார். இதை தொடர்ந்து கோபிகாவை அவரது குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
=======================
இது போல பொய் வதட்சணை கேசுகளில் சிக்கித் தவிக்கும் பல அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற இந்த கட்சிகள் உண்மையாகவே போராடுமா?

Saturday, September 19, 2009

இது போலிஸ் மாதம்

காவல் துறையில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு!

சில நாட்களுக்கு முன் வந்த மற்றொரு செய்தி
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்

=================================
இப்போது வந்துள்ள செய்தி

மதுரை இன்ஸ்பெக்டர் மீது மனைவி புகார்
செப்டம்பர் 20,2009

சேலம்: "வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரை இன்ஸ்பெக்டர் மீது, மனைவி புகார் கூறியுள்ளார். சேலம் கல்லூரி பேராசிரியை சாந்தி, போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

எனக்கும், சரவணரவி(43) என்பவருக்கும், 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு தீரஜ்(8) என்ற மகன் உள்ளான். திருமணத்தின் போது, 50 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை கொடுக்கப்பட்டது (என்ன ஆச்சரியம் வரதட்சணை என்ற வார்த்தைக்கு பதிலாக சீர்வரிசை என்று எழுதப்பட்டுள்ளதே!). திருமணமான போது, சரவணரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். தொடர்ந்து, சங்ககிரி, ஏற்காடு, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில், நான் பேராசிரியையாக பணியாற்றுகிறேன்.

ஐந்து ஆண்டு கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், சரவணரவிக்கு பெண்கள் பலருடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. அதை தட்டிக் கேட்ட போது, அடித்து உதைத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தீரஜுக்கு ஜாதி சான்றிதழ் பெற முயற்சித்த போது, அவருடைய ஜாதி சான்றிதழை தர மறுத்துவிட்டார்.அவர் ஆவணத்தில், இசை வேளாளர் என்ற ஜாதியில் சான்றிதழ் பெறப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், இசைவேளாளர் பிரிவில் சான்றிதழ் பெற்று வேலையில் சேர்ந்துள்ளார். அதன் பின், என் சான்றிதழை கொண்டு, மகன் தீரஜுக்கு ஜாதி சான்றிதழ் பெற்றேன். ஏற்காட்டில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய போது, வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்தனர். இது பற்றி கேட்டபோது, என்னை விரட்டியடித்து விட்டனர். என்னுடைய 70 சவரன் நகை மாமனார், மாமியார் வசம் உள்ளது. தற்போது, மதுரை வணிக கூட்டுறவு புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டராக சரவணரவி பணியாற்றி வருகிறார். பலமுறை அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தும் முடியவில்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



Wednesday, September 09, 2009

(மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம்!

ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான புகார்: அடக்கி வாசிக்க போலீசார் முடிவு

Dinamalar News: செப்டம்பர் 10,2009
இது தொடர்பான முந்தைய செய்தியை இங்கே காணலாம்: கணவர் மற்றும் அவரது "குடும்பத்தினர்"


ஐ.பி.எஸ்., அதிகாரிக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்னை, ஜம்மு-காஷ்மீரில் நடந்துள்ளது. அதனால், மனைவியை துன்புறுத்தியதாக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் வங்கி அதிகாரியாக பணிபுரியும் பெண் சர்மிளா. இவரும் காஷ்மீரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சாமுவேலுவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கொஞ்ச நாட்கள் ராமநாதபுரத்திலும், மதுரையிலும் தங்கிருந்த அவர்கள், பிறகு சென்னைக்கு வந்து ஓட்டலில் தங்கியுள்ளனர். அதன்பின் காஷ்மீர் சென்றுள்ளனர். சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்த சர்மிளா , "சென்னையில் தங்கியிருந்தபோது, எனது கணவர் கொடுமைப்படுத்தினார்' என, தெரிவித்திருந்தார்.

உடன் ஜம்முவில் இருந்து சென்னை வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், தன் விளக்கத்தை வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசில் அளித்தார். இதிலிருந்தே, சாமுவேலும், சர்மிளாவும் பல இடங்களில் தங்கியிருந்துள்ளது தெரிகிறது. அப்படியானால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து, அதை ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு அனுப்ப வேண்டும். ஜம்முவிலும் அவர்களுக்குள் பிரச்னை நடந்துள்ளது. இப்பிரச்னைக்கு கிடையே, "எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது' என அறிவிக்க கோரி, சென்னை கோர்ட்டில் ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் மனு தாக்கல் செய்தார்.

ஜம்முவில் இருந்து சாமுவேல், மனைவி புகாரால் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதே போல், மனைவி மீதான விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜம்முவில் வழக்கு தொடர்ந்தால், சென்னையில் உள்ள சர்மிளா, அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குடும்பநல ஆலோசனை மையத்தில் அணுகி தீர்வு காண, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர் ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்தால், அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான விவகாரத்தை தற்போதைக்கு சென்னை போலீசார் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.

=========================

நாடு விட்டு நாடு போய் நடக்காத சம்பவங்களை நடந்ததாக பொய் புகார் கொடுக்கும் போது கேசு பதிவு செய்து அப்பாவி கணவரின் குடும்பத்தாரை கூட்டமாக கைது செய்யும் போதும், வெளிநாட்டில் இருப்பவர்களை கேசுகளில் சிக்க வைக்கும் போது ஒரு துளி கூட இது போல சிந்திப்பதில்லையே?

பலமிருந்தால் (மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம். என்ன "பலம்" என்று உங்களுக்குத் தெரியும்!


Monday, September 07, 2009

மருமகளின் கொடுமை தாங்கமுடியாத 105-வயது பெரியவரின் போராட்டம்

‘Harassed by bahu’, 105-yr-old leads 60 of family on dharna

Indian Express: Tuesday , Jun 09, 2009

Rajkot : This one could well turn the scripts of the teary saas-bahu TV serials on their head. A 105-year-old patriarch of a Rajkot joint family is on a hunger strike against its own daughter-in-law — with some 60 members of his joint family in tow — outside their home in Mahudi gav.

The family’s estranged bahu, they claim, has been harassing them to no end and there was no other way to get it to stop.

From the 105-year-old Arjan to five-year-old Abhay, these 60-odd members of the Thummar family have been holding their dharna in the scorching heat for two days now. They claim Rekha, Arjan’s daughter-in-law, has been a source of constant harassment.

Estranged for over a decade now, Arjan’s grandson, 30-year-old Shantilal, says his wife has been harassing his extended family including his father and his five brothers and their children.

Rekha, 28, on her part, claims it is the husband’s family that has been mentally and physically harassing her.

Rekha married Shantilal in 1996, and after the relationship collapsed, she has filed as many as five police cases under different sections against various members of the husband’s family. These cases were registered with police stations in as different places as Junagadh, Dhoraji, Jamkandorna, Jetput and Jamanagar between 1999 and 2004. The Thammars say the family was being harassed by the police and lawyers all these years, claiming Rekha had a “good rapport” with the cops.

Arjan says he is on an indefinite fast. “I won’t eat until justice is done to us.”

The Thummars have submitted a memorandum to the Rajkot Commissioner of Police. While the Malaviya Nagar police station has begun investigating the complaint, the Thummars maintain they want immediate action against the policemen and lawyers.

“The cops keep trooping into our home every now and then, harassing and even threatening the family members,” a family member claimed.

After the relationship fell through, Rekha has been receiving Rs 3,500 as alimony every month from Shantilal over the past five years. However, she claims that her belongings are still with the in-laws. Rekha and Shantilal have two children, a son (5) and a daughter (7). Both are in Shantilal’s custody.



Sunday, September 06, 2009

அப்பாவித் தாய்மார்களை காக்க ஒரு கூட்டமைப்பு

Moms-in-law of the world unite..

Times of India News:

CHENNAI: After woeful wives and harassed husbands, it’s the turn of mothers-in-law to form an organisation. More than 500 of them from across the country will come together in Bangalore to launch the All-India Mothers-in-law Protection Forum (AIMPF) on Sunday.

For some, it will provide a forum to be heard; for others, it is to break the ‘cruel woman’ stereotype that TV soaps have been reinforcing. So varied is the constitution of the forum that it has as members a university teacher from Chennai, a forensic expert from Delhi and a surgeon from Karnataka.

“In TV dramas, we are the villains; in real life, we are the victims,” said Nalini (name changed), a homemaker from Chennai, who has joined the AIMPF. The organization is being supported by the Save India Family Foundation (SIFF), a Bangalore-based NGO working for ‘harassed husbands’.

So will the AIMPF protect mothers-in-law only from their daughters-in-law and not sons-in-law? “Mostly the women are accused and dragged to court by their daughters-in-law. So we are focussing only on them. The organization is not against anyone; it is for mothers-in-law,” said SIFF public relations officer Virag Dhulia.

The forum plans to use its website, www.aimpf.org, to host discussions and debates. “The forum will take up issues, including amendments to inheritance laws and the Domestic Violence Act,” SIFF convenor Manoj David said.

Some AIMPF members TOI spoke to had horror tales to narrate. One said that whenever she went inside the bath to shower, her daughter- in-law would turn on the geyser from outside.

Supporters of the forum said that though there were several incidents of mothers-in-law torturing their daughters-in-law, there were also many mothers-in-law who silently bore the brunt of domestic violence. “There are several mothers-in-law who are victimised and threatened with Section 498 (a) of the IPC, which speaks of up to three years’ imprisonment for husband’s relatives in dowry harassment cases,” said Virag.
=============================

By Geeta Pandey

A group of Indian mothers-in-law have come together to fight the harassment they claim to endure at the hands of their daughters-in-law.

Fifty women have joined the All India Mothers-in-law Protection Forum (AIMPF), launched in Bangalore city.

A spokeswoman told the BBC that while there were 15 laws to protect the younger generation, there was nothing to protect mothers-in-law from abuse.

India's National Commission for Women has acknowledged the problem.

It says that cases against in-laws are often registered by brides who are protected by strict anti-dowry laws.

But a number of the accusations turn out to be false.

'As vamps'

"The mother-in-law is portrayed as a villain in our society," says Neena Thuliya, coordinator of AIMPF.

"In television serials, films and the media, we are shown as vamps. It's an age-old belief that the mother-in-law physically assaults and mentally tortures the daughter-in-law."

The AIMPF recently did a survey in Bangalore studying cases of abuse and torture filed against the mother-in-law.

Mrs Thuliya says that of the nearly 50 cases they researched, all turned out to be false allegations.

"There was a time when the daughter-in-law had to live with so many restrictions, but now the time has changed. Today's daughter-in-law is free and works outside the home. It's the old mother-in-law who now faces abuse at the hands of the daughter-in-law," Mrs Thuliya says.

"In tele-serials we are the villains, in real life we are the victims," she adds.

Mrs Thuliya says elderly women are sometimes thrown out of their homes by their daughters-in-law.

The forum, she says, will hold meetings every Sunday and will devise strategies to provide support to "harassed mothers-in-law".

The AIMPF says it will also campaign against the demonisation of the mother-in-law in popular culture.

For centuries, in many Indian families, daughters-in-law have been harassed for bringing in "inadequate dowry" - a South Asian tradition where the bride's parents give cash, jewellery and gifts to the groom's family.

The Indian government outlawed giving and accepting dowries in 1961, but the practice continues and even today few arranged marriages take place without an exchange of dowry.

Campaigners say the system has led to the abuse of young brides, making them vulnerable to domestic violence.

Every year, hundreds of women are scalded or even burned alive by their in-laws.

In the past few years, India has introduced several strict laws to protect new brides from abuse and torture.

But it is being accepted by the authorities that the laws are being increasingly misused by young women to harass their in-laws or settle scores.

Story from BBC NEWS:
http://news.bbc.co.uk/go/pr/fr/-/2/hi/south_asia/8241275.stm

Published: 2009/09/07

Wednesday, September 02, 2009

கருப்பு சுனாமியில் சிக்கிய 89வயது இளைஞர்

89-yr-old gets arrest warrant

Sep 02 2009

Chennai, Sept 1: A family court in the city has issued an arrest warrant against an 89-year-old man who had recently made news by divorcing his 80-year-old wife, as he did not pay her alimony of Rs 1,500 for the last few months, thereby violating the court order.

Simpson Kannan and his wife Rajalakshmi were married in 1949 and have several children and grandchildren.

A few months ago, Simpson filed a divorce petition claiming that his wife and children were harassing him both physically and mentally.

The family court also granted the couple a divorce and ordered that the petitioner pay an alimony amount to his ex-wife to meet her expenses.

As Simpson failed to pay the alimony amount to Rajalakshmi, the woman filed a petition against him for violating the court order and demanded that the court intervene and ensure that the octogenarian paid her Rs 1,500 every month as directed by the courts.

After considering the petition, the family court had ordered Kannan to present himself before the court and give an explanation for not paying the alimony amount to her.

However, the old man did not turn up at the court when the petition was heard and, as a result, the court issued an arrest warrant against him.

Reacting to the court order, Simpson told the media that he did not have any source of income to give alimony.

“I can pay her Rs 1,500 only if my children give me money. But they don’t,” Simpson said.



Monday, August 31, 2009

நீதியைத் தேடி..................

ரேடியோ கேட்க முடியவில்லை, டிவி பார்க்க முடியாமல் கணவர் தடுத்தார் அதனால் மனவேதனை அடைந்து மிகவும் பாதிக்கப்பட்டேன் என்பது போன்ற புகார்களுக்கு கிரிமினல் கேஸ் பதிவு செய்து கணவரையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தும் சட்டங்களுக்கு கணவர் படும் அவஸ்த்தை சாதரணமாகத்தான் தெரியும்! இத்தனைக்கும் கணவர் கேட்பது விவாகரத்து மட்டுமே. கிரிமினல் கேஸ் பதிவு செய்து மனைவியை துன்புறுத்த நினைக்கவில்லை.

இந்த செய்திக்கும் கீழுள்ள செய்தியில் தலைமை நீதிபதியின் கருத்துக்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

==================================

தினச் சண்டைக்கெல்லாம் விவாகரத்தா?:நீதிபதிகள் கேள்வி

செப்டம்பர் 01,2009

மும்பை: "தினம் தினம் மனைவி சண்டை போடுவதை, "டார்ச்சராக' கருத முடியாது. அதற் காக விவாகரத்து கொடுக்க முடியாது' என மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.

பரேலைச் சேர்ந்த விட்டல்(47) தனது மனைவி ராஷ்மி மீது புகார் கூறி, விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். தினமும் தன்னிடம் சண்டை போட்டு கொடுமைப் படுத்துவதால், தனக்கு விவாகரத்து வழங்குமாறு கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த மஜும் தார், மோரே ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், "மனைவி சண்டை போடுகிறார் என்பதற்காக விவாகரத்து வழங்க முடியாது' என, மனுவைத் தள்ளுபடி செய்தது. விட்டல் - ராஷ்மிக்கு 1992ல் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளான். விட்டல் தாய், நோயால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தன்னை தேனிலவுக்கு அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக ராஷ்மி மிரட்டியதாக, விட்டல் தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"பால்கனியில் நின்று ஆடைகளைக் களைந்து எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்; தினமும் எனக்கு உணவு சமைப்பதில்லை; குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைப்பதில்லை' என்றும் கூட, தன் மனைவி மீது குற்றம் சாட்டியுள் ளார் விட்டல். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:சமையல் செய்து, குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியாக மனைவியை கருதக் கூடாது. கணவனும், அவரது உறவினர் களும் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்து கொள்ள, மனைவி ஒன்றும் அடிமையில்லை.

பெண் எவரிடமும் தனது குறையைக் கூறாமல் அமைதியாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கணவனின் தவறுகள் குறித்து, ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது என சொல்ல முடியாது. திருமணம் என்பது புனிதமானது; அது சிறு குழந்தைகளின் விளையாட்டல்ல. விவாகரத்து மனுக்கள் குவிவதைப் பார்த்தால், திருமணம் எனும் பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

=======================================

மேலுள்ள செய்தியில் அன்பில்லாத மனைவியிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கணவர் நீதிமன்றத்தை அனுகியதற்கு அவருக்குக் கிடைத்த நீதியையும் கீழுள்ள செய்தியில் கணவர் தனக்குத் தானே நீதியை தேடிக்கொண்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீதிமன்றத்தில் நடுவு நிலையான நீதி கிடைக்காது என்று முடிவு செய்து இது போன்ற செய்திகள் இனி தினம் தினம் செய்தித்தாள்களில் வெளிவரும் போலிருக்கிறது !

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரண்
செப்டம்பர் 01, 2009

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி அருகே, குடும்பத்தினர் அன்பு செலுத்தாமல் விரட்டியடித்ததால் மனமுடைந்த கணவன், தனது மனைவியை, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த, வடபாதி மெயின் ரோடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்; விவசாயி கணேசன் (55). இவரது மனைவி நாகலட்சுமி (48). இவர்களுக்கு துரைராஜ் (31), வேலவன் (30) என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

கணேசனிடம் மனைவி நாகலட்சுமி மற்றும் மகன்கள், அன்பு செலுத்தாமல், வெறுத்து புறக்கணித்தனர்.இதனால், மனமுடைந்து காணப்பட்ட கணேசன், நேற்று அதிகாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தார். தனது மனைவியிடம் இதுபற்றி கேட்ட போது தகராறு முற்றியது. ஆவேசம் அடைந்த கணேசன், நாகலட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றார்.இதை சற்றும் எதிர்பார்க்காததால் அங்கிருந்து தப்பித்து தெரு வழியாக நாகலட்சுமி ஓடத் துவங்கினார். பின்தொடர்ந்து சென்ற கணேசன் மனைவியை, ஓட ஓடவிரட்டி, வெட்டினார். வெட்டுப்பட்ட நாகலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.அங்கிருந்து தப்பித்த கணேசன், நேராக திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். மனைவியை வெட்டிக் கொன்றது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

====================
நன்றி: தினமலர்




கவலை மட்டும் தான் படமுடியுமோ?

மீண்டும் ஒரு முறை தலைமை நீதிபதி 498A விற்கு எதிராகவும் தவறhக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். இதைப்படித்த பிறகு நீதித்துறையின் நடவடிக்கையைப் பார்த்து சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா?

கட்டுக்குள் அடங்காத அநீதிகளைப் பார்த்து தலைமை நீதிபதி கவலைப்படுவது இது முதல் முறையல்ல.

தலைமை நீதிபதி இதற்கு முன்னர் வெளியிட்ட கவலையான கருத்துக்கள்:

1. USA, August - 2008
"Indian Courts are Helpless to Protect 498A Victims"

2. India, February - 2009
"CJI Balakrishnan admits to misuse of dowry laws"

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

அப்படியென்றhல் இந்தியாவில் அப்பாவிகளின் கதி???


3. India, September - 2009
CJI points to judges’ ignorance - India, September - 2009

Ranchi, Aug. 30: Chief Justice of India K.G. Balakrishnan today took a dig at high court as well as district court judges for delivering wrong verdicts because of their ignorance of criminal justice laws.

Balakrishnan warned that several people wanted to delay the conclusion of criminal cases. “(But) Judges are supposed to prevent the abuse of law by those who want to delay the delivery of judgment,” he added, alluding to the judiciary’s concern at the high number of pending cases.

The Chief Justice was delivering a valedictory address at the conclusion of the first east zone regional judicial conference aimed at equipping senior judicial officers, drawn from seven states — Jharkhand, Bengal, Orissa, Chhattisgarh, Assam, Sikkim and Bihar — to deliver speedy and quality justice.

The three-day programme was organised by National Judicial Academy (NJA), Bhopal, in association with Jharkhand High Court and State Judicial Academy.

Jharkhand High Court Chief Justice Gyan Sudha Misra, Patna High Court Chief Justice P.K. Mishra, State Judicial Academy in-charge Justice M.Y. Eqbal, NJA director G. Mohan Gopal were present among others.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

Balakrishnan added that the criminal procedure code was amended for the police to follow certain procedures before arrests. “We have come across cases in which even high court judges are ignorant of the legal value of statements recorded before the police under Section 161 of the Evidence Act for delivering judgments,” he said. Calling upon lower court judges to be socially sensitive, he asked them to have control over trial proceedings in order to deliver judgments easily. He also asked them to examine eyewitnesses first before examining other witnesses produced by the defence.

“Trial and defence lawyers should not terrorise witnesses. A judge should be alert and caring” he maintained.

Misra said the deteriorating law and order situation was a heavy burden on the criminal justice system.

“It was worrying that the state functionaries were not invoking the provisions of the National Security Act to keep hardened criminals in jail,” she added.

Stressing on the need for quality justice, Misra said she was receiving complaints that the fast-track court has turned into a “farce track court”. Judicial officers, she said, had to wipe out fear that fast-track courts would only convict a person.

“They have to strike a balance between expectation of the victims’ of crime and the accused,” she maintained.

Former Supreme Court judge S.B. Sinha pointed out that 70 per cent of all the pending criminal cases were petty offences. “Sociological studies suggest that it is the poor who suffer the most because of delay in the delivery of judgments,” he added.




Thursday, August 27, 2009

ஆண்களா, பெண்களா?

இந்த வார வாரமலரில் வந்த செய்தி:

அந்துமணி பதில்கள்!

வாழ்க்கைத் துணையை, "கால்குலேட்டிவ்' ஆக தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் இக்கால ஆண்களா, பெண்களா?

அவன்ட்ட டூ-வீலர் இருக்குதா, கார் இருக்குதா, சொந்த வீடா, வாடகை வீடா... சொத்து, பத்து எவ்வளவு, சம்பளம், வருமானம் எவ்வளவு?'- இப்படி எல்லாம் கணக்கு போட்டு, வாழ்க்கைத் துணையை முடிவு செய்வது பெண்கள் தான்.
மனதுக்குப் பிடித்து விட்டால், ஓ.கே., சொல்லி விடுபவர் ஆண் என்கிறார் பெண் உதவி ஆசிரியர் ஒருவர்!


===================================================


மேலே கூறப்பட்டுள்ள உண்மையையும் நடைமுறையில் அப்பாவி
ஆண்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறhர்கள் என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். காசுக்காக கொடுமை செய்வது கணவனா அல்லது மனைவியா என்று புரியும். ஆனால் காசுக்காக மனைவியை வரதட்சணை கொடுமை செய்வதாக அப்பாவி ஆண்கள் மீதும் அவர்தம் குடும்பத்தார் மீதும் அபாண்டமான பொய் வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பே பணத்தைக் குறி வைத்துத் தான் திருமணத்திற்கு இக்காலப் பெண் சம்மத்கிறhள்?! திருமணமான பிறகு கணவன் அந்தப் பெண்ணின் பேராசைக்கு அடிபணியவில்லை என்றhல் பொய் வரதட்சணை வழக்கு என்னும் ஆயுதத்தை எடுத்து அனைவரையும் சீரழிக்கத் துணிந்து விடுகிறhள்.

திருமணத்திற்கு முன்
பே கணவனின் சொத்துக்களை அபகரிக்க அவள் போடும் திட்டம் திருமணத்திற்கு பிறகு தோல்வியடையும் போது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது அவள் பெண்ணுரிமை என்ற பெயரில் பொய் கேசுகளை போட்டு அந்தப் பணத்தை பெற்றுவிடவேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறhள்.

இது போன்ற பெண்களுக்குத் துணையாக சட்டமும் அதனை செயல்படுத்தித் தர அனைத்துத் தரப்பிலும் பெண்ணடிமைவாத தீவிரவாதிகளும் நிறைய இருக்கின்றனர்.

மேலுள்ள செய்திப்படி தற்கால இளம் பெண்களின் மனநிலை பணம், ஆடம்பரம், பகட்டு என்ற வலையில் பின்னப்பட்டுள்ளது நன்றகாத் தெரிகிறது. நவ நாகரீக மங்கைகளின் மனம் பலவிதமான பேராசைகளால் பின்னப்பட்டு அடுத்தவரின் வாழ்க்கையைக்கூட அழிக்கலாம் என்ற மனநிலை தான் இப்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கு பெண்ணுரிமை என்ற சாயம் பூசப்பட்டுள்ளது.

வரதட்ணை கொடுமை என்ற காலமெல்லாம் என்றேh போய் விட்டது. ஆனால் பேராசை பிடித்த சில
நவ நாகரீக பெண்கள் தங்களின் தவறhன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்னமும் அந்த துறுபிடித்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறhகப் பயன்படுத்தி பொய்யான வழக்குகளை போட்டு தானும் சீரழிந்து பல அப்பாவி குடும்பங்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறhர்கள்,



Wednesday, August 19, 2009

எப்போது கண்டுகொள்வார்களோ?

'விவாகரத்து வழங்கும் போது குடும்பங்கள் பிரிகின்றன'
தினமலர் செய்தி

கணவரிடமிருந்து பெற்ற விவாகரத்தை ரத்துசெய்த, மாவட்ட கோர்ட் உத்தரவை எதிர்த்து, ராஜபாளையம் பெண் டாக்டர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கணவன், மனைவிக்கு விவாகரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்கள் பிரிகின்றன எனவும் குறிப்பிட்டது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜா. இவருக்கும் டாக்டர் சித்ராவுக்கும் 1996 மே 23ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விவாகரத்து கோரி சித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் சப்- கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ""கணவருக்கு, என் தந்தை இரண்டு லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி கொடுத்தார். அதை அவர் விற்று விட்டார். மேலும் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் கேட்கிறார்,'' என்றார்.

முன்சீப் கோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதை எதிர்த்து வெங்கட்ராஜா மாவட்ட கோர்ட்டில் மனு செய்தார். மனுவில், ""என் மனைவி பாசம் மிக்கவர். அவரது சகோதரி, தந்தை தூண்டுதலால் எங்கள் வாழ்க்கை சீர்குலைகிறது. அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்,'' என்றார். மாவட்ட கோர்ட், விவகாரத்து வழங்கிய கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து, சித்ரா ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.செல்வம், ""இத் தம்பதிகள் திருமணமான பிறகு பரஸ்பரம் எழுதிய கடிதங்களில், ஒரு வார்த்தை கூட கொடுமை, கருத்துவேறுபாடு பற்றி குறிப்பிடவில்லை. இருவரும் பாசத்துடன் இருந்தது கடிதத்தில் தெரிகிறது. தம்பதிகளிடம் நல்ல சூழ்நிலை நிலவியதால் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவன், மனைவிக்கு விவகாரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்களும் பிரிந்து விடுகின்றன. குழந்தையின் எதிர்காலம் செயல் இழந்து விடும் என்பதை கீழ்கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. மாவட்ட கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,'' என்றார்.

===========================

இது போல பொய் 498A கேசுகளில் பல அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கை அரசின் தவறhன சட்டங்களால் அரசாங்கத்திற்கு தெரிந்தே சீரழிகின்றதே. அதை எப்போது கண்டுகொள்வார்களோ?



Sunday, August 16, 2009

ஒரு சொல் கேளீர்!

திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களே, அண்ணன் "PKS" சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்கள். அத்தனையும் உண்மை.

இன்றைய தவறான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் திருமணம் என்ற ஒரு புனிதமான நிகழ்ச்சியை "எதிர்காத்தில எச்சி முழிவதற்கு" சமமான செயலாக மாற்றிவிட்டது. "குடும்ப விளக்கு" என்று சொல்லப்பட்ட உறவை "நெருப்பாண்ட கொட்டிய குப்பை" துர்நாற்றத்துடன் எரிவது போல மாற்றிவிட்டது.

வீடியோவில் வரும் தத்துவங்களை கவனியுங்கள் புரியும்!

பம்மல் K சம்பந்தம் திரைப்படத்திற்கு நன்றி

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யப் போவதாக நீங்கள் முடிவு செய்திருக்கலாம். நீங்கள் பார்த்திருக்கும் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் நல்லவர்களாகக் கூட தெரியலாம் . எல்லாம் சரிதான்.

ஆனால், வரதட்சணை தொடர்பான சட்டங்கள் தவறhனவையாக இருக்கின்றன. குடும்பத்தில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை திசை திருப்பி தக்க சமயம் பார்த்து அந்த
கொடிய சட்டங்களை "திருமணம்" என்ற காரணத்தை வைத்து உங்கள் மீது ஏவ "சட்ட தீவிரவாதக்" கூட்டம் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது.

ஆம். ஒரு நொடிப் பொழுதில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கொடிய சதி வலையில் தள்ளப்பட்டு வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடத்தப்படும். அதற்கு பல விதமான சட்டங்கள் இருக்கிறது. IPC 498A, DOWRY PROHIBITION ACT, DOMESTIC VIOLENCE ACT மற்றும் பல சட்டப்பிரிவுகள் உங்களை விழுங்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

இது திருமணத்திற்கு எதிரான செய்தியல்ல. திருமணங்களை முறித்து பல அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைக்கும் தவறhன சட்டங்களுக்கெதிரான செய்தி. சட்டங்களை திருத்தமாட்டார்கள். அதற்கு பலவித குறுகிய நோக்கங்கள் இருக்கின்றன.
அதனால் திருமணம் பற்றி சரியான முடிவு செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது.

இந்த
கொடிய சட்டங்களைப் பற்றியும் அவற்றhல் பாதிக்கப்பட்ட பல கோடி அப்பாவி குடும்பங்களின் அவல நிலைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த இணையதளங்களைப் பாருங்கள்:
www.saveindianfamily.org
www.mynation.net
www.protectindianfamily.org
www.savefamily.org
www.sahanaindia.org
www.498a.org
www.ghrs.in
http://tamil498a.blogspot.com/
http://ipc498a.wordpress.com/2007/07/01/the-498a-survival-kit/




சட்டத்தை மாற்றினால் என்ன?

16-8-09 வாரமலரில் வந்த அந்துமணி பதில்கள்!

* மகளைத் தந்தை கற்பழித்தார் - ஐந்து வயது சிறுமியை கற்பழித்தனர்... போன்ற செய்திகள் நிறைய வருகின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளில் விதிப்பது போல கடும் தண்டனை இந்தியாவிலும் விதிக்க சட்டத்தை மாற்றினால் என்ன?

* மாற்றினால்... சட்டம் இயற்றுபவர்களே சிக்கலில் மாட்டிக் கொள்வரே!

============================================

இப்படித்தான் சட்டங்கள் நாட்டில் கொண்டுவரப்படுகிறது. தவறhன சட்டங்களால் யார் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை தங்களுக்கு வருமானம் கிடைத்தா
ல் சரிதான் என்ற நோக்கத்தில் தான் 498A போன்ற சட்டங்கள் தவறhன முறையில் இயற்றப்பட்டிருக்கிறது. இதில் உண்மையிலேயே பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஆனால் இதன் மூலம் சம்பாதிப்பவர்கள் பல பேர். லிஸ்ட் போட்டு எழுதிப் பாருங்கள் தெரியும்.

தவறhன சட்டம் என்று பல முறை சுட்டிக்காட்டிய பிறகும் அதைத் திருத்த மனம் வரவில்லை. ஏனென்றhல் யாருடைய குடும்பமோ அழிந்து அதில் பணம் கிடைக்கிறது அல்லவா.

அது யாருடைய குடும்பமோ அல்ல, அப்பாவிகளான உங்களது குடும்பங்கள் தான்.



Saturday, August 15, 2009

நல்லது நடக்க விடுவோமா நாங்கள்?

வக்கீல்களுக்கு புத்தாக்க கல்வி; பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு
DM News: Aug 16,09

புதுடில்லி : வக்கீல்கள், காலத்திற்கேற்ப சட்ட அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு "புத்தாக்க' பயிற்சியை அளிக்க வேண்டும் என்று தேசிய சட்டக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தில், பங்கேற்று தேர்ச்சி பெற்றால் தான் அவர்கள் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு, வக்கீல்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கமிஷனின் 230வது அறிக்கையைத் தாக்கல் செய்த கமிஷனின் தலைவரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான லட்சுமணன் கூறுகையில், "சட்டத்துறையில் நெறிமுறைகள், கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், காலத்துக்கேற்ற சட்ட திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டியது வக்கீல்களுக்கு முக்கியமாகிறது. அதனால், இந்தப் பயிற்சி அவசியம்'' என்று தெரிவித்தார்.

சட்டப் படிப்பு முடித்து கோர்ட்களில் தொழில் செய்யும் வக்கீல்கள், சட்டத் தகவல்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவே இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கமிஷன் விளக்கம் தெரிவித்துள்ளது. "இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது' என்று வக்கீல்கள் தரப்பில் கருத்து எதிரொலித்துள்ளது."வக்கீல்கள் தங்களது லைசென்சைப் புதுப்பிக்க இது மாதிரி நிபந்தனை விதிப்பது நல்லது அல்ல. வக்கீல்கள் சட்டம் சம்பந்தமாகப் "பல துறைகளிலும்" பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி படிப்புகள் உதவிகரமாக அமையாது'' என்று சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் தலைவர் கிருஷ்ணமணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

==============================================

இது போன்ற திட்டம் அமலுக்கு வந்தால் "498A டெம்ப்ளேட் போலிகள்" வடிகட்டப்படுவார்கள். ஆனால் என்ன செய்வது பாம்பே கோர்ட் சொல்வது போல ஆண்டவனிடம் தான் முறையிட வேண்டும்!




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.