இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Courts. Show all posts
Showing posts with label Courts. Show all posts

Saturday, October 02, 2010

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் சிறையில் தள்ளப்பட்ட ஆண்

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் பலியாகி சிறையில் தள்ளப்பட்ட ஆண்

தினமலர் அக்டோபர் 02,2010

வேலூர் : இரண்டு பேரை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண், மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர், காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (20). இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த இரு ஆண்டாக தொண்டான் துளசியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சேட்டு (23) என்பவருக்கும், ரேவதிக்கும் திடீரென காதல் ஏற்பட்டது. இதனால், சக்திவேலை, ரேவதி ஒதுக்கித் தள்ளினார். இது தொடர்பாக கடந்த வாரம் ரேவதிக்கும், சக்திவேலுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நண்பர்கள் சமரசம் செய்ததன் பேரில் சக்திவேலை திருமணம் செய்து கொள்ள ரேவதி சம்மதித்தார். இதனால், சேட்டு கோபமடைந்தார்.

கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை. "சேட்டு, ரேவதியை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்' என, சந்தேகப்படுவதாக ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன், லத்தேரி போலீசில் புகார் செய்தார். சேட்டிடம் விசாரணை செய்ததில், ரேவதியை கழுத்தை நெரித்து கொலை செய்து திம்மாம்பேட்டை பாலாற்றில் புதைத்து விட்டதாக கூறினார். போலீசார் சேட்டை அழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பாலாற்றில் ரேவதி புதைக்கப்பட்ட இடத்தை தேடினர். ஆனால் இதோ, அதோ என சேட்டு கைகாட்டிய இடங்களை தோண்டிப் பார்த்து, ரேவதி பிணம் கிடைக்காமல் போனதால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று சேட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, திருமணக் கோலத்தில் ரேவதியும், சக்திவேலும் நண்பர்கள் புடை சூழ லத்தேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணியம்பாடியில் உள்ள நண்பர்கள் வீட்டில் மறைந்து இருந்ததாகவும், 30ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் ரேவதியும், சக்திவேலும் போலீசாரிடம் கூறினர். "ஏன் ரேவதியை கொன்று விட்டதாக பொய் சொன்னாய்?' என, சேட்டிடம் கேட்ட போது, போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே இப்படி சொன்னதாகவும், பாலாற்றில் தோண்டிப் பார்த்த போது தப்பித்து விடலாம் என நினைத்த போது முடியாமல் போனதாக கூறினார். சேட்டு மீது போலீசாரை ஏமாற்றிய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

=========

போலிஸ் கொடுமையிலிருந்து தப்பிக்க தான் செய்யாத தவறை செய்ததாகக் கூறிய ஆண்மீது போலிசை ஏமாற்றியதாக வழக்குப்போட்டிருக்கிறார்கள். ஆனால் பல பெண்கள் பொய்யான புகார்களை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சுமத்தினாலும் காவல்துறைக்கு அது பொய் என்று தெரிந்தாலும் அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைய விடுகிறார்கள். பொய் வழக்குப்போட்டு அப்பாவிகளை அலைக்கழிக்கும் பெண்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது. காவல்துறையோ, நீதித்துறையோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள். என்ன ஒரு விசித்திரமான சட்ட நடைமுறை!

பெண்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு தண்டனை பெறுவது அப்பாவி ஆண்கள்தான்.






Sunday, August 08, 2010

(கள்ளக்)காதலுக்கு மரியாதை

பெண் நினைத்துவிட்டால் சட்டங்களால் என்ன செய்யமுடியும்? ஆனால் பெண் நினைப்பதை அடைவதற்காக சட்டங்கள் ஆண்களை தவறாக தண்டிக்கவும் தயங்குவதில்லை. என்ன ஒரு வினோதம் இந்த நாட்டில்!

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

நாகர்கோவில்: கள்ளக்காதல் மோகத்தில், கட்டிய கணவனை உதறிவிட்டு ராஜபாளையம் பெண், கள்ளக்காதலனுடன் சென்றார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(33); விவசாயி. இவரது மனைவி அம்சவேணி என்ற அனிதா(25). இவர்களுக்கு சரவணன்(7) என்ற மகன் உள்ளான். குமாரசாமியின் சகோதரி கணவரின் அண்ணன் தாமோதரன்(34). இவர் மீசலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும், அனிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த 28ம் தேதி தனது மகனுடன் மருத்துவமனைக்குச் சென்ற அனிதா மாயமாகிவிட்டார். அவர், கள்ளக்காதலன் தாமோதரனுடன் கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே அக்கரையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். மனைவியை காணாத குமாரசாமி, கீழராஜகுலராமன்புதூர் போலீசில் புகார் செய்தார். தாமோதரனுடன் அனிதாவை பார்த்த குமாரசாமி நண்பர்கள், அவருக்கு தகவல் கொடுத்தனர். குமாரசாமி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கள்ளக்காதலர்களை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு கணவன் குமாரசாமி, "நமது மகனுக்காக என்னுடன் வந்து விடு' என்றும், "என்னை கைவிட்டு விடாதே' என்று கள்ளக்காதலன் தாமோதரனும், அனிதாவிடம் கெஞ்சினர். அப்போது, கள்ளக்காதலனை அணைத்து அனிதா ஆறுதல் கூறினார்.போலீசார், சிறுவன் சரவணனை அழைத்து தந்தை யார் என்று கேட்டபோது குமாரசாமியை அடையாளம் காட்ட, அவனை அனிதா பிடித்து இழுத்து வைத்துக் கொண்டார். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அனிதா, கள்ளக்காதலன் தாமோதரனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கீழராஜகுலராமன்புதூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம்)



Saturday, July 24, 2010

மனித இனத்தில் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் அதிசயம்!

மனித இனத்தில் மட்டும் நடக்கும் அதிசயம்!

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

திருச்சி : திருச்சி அருகே உள்ள இனாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தனம். இவர்களுக்கு சஞ்சய் குமார் (3 1/2), கணேசன்(1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனம், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகள் இரண்டு பேரையும் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தனத்தை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

= = = = = = = = = = = =


உயிரினங்களில் மனித இனம்தான் பரிணாமத்தில் உயர்நிலையில் இருக்கிறது என்றும் அதிலும் குறிப்பாக “தாய்மை” என்ற பண்பிற்காக பெண்களுக்கு எல்லா விஷயத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல சிறப்புச் சட்டங்கள் மகளிருக்கென இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத்தாய்மைக்கு பெண்களால் உண்மையாகவே மரியாதை கொடுக்கப்படுகிறதா?

இந்தப் படங்களில் பாருங்கள். இதற்குப் பெயர் தாய்மையா அல்லது மனித இனத்தில் இருப்பது தாய்மையா?



விலங்குகளிடம் இருக்கும் “தாய்மை” என்ற புனிதத்தன்மை மனித இனத்திடம் மறைந்துவரும்போது ஆண், பெண் என்ற பேதம் காட்டி இல்லாத தாய்மையைக் காரணமாகவைத்து சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்?





Wednesday, July 14, 2010

எதிர்கால மாணவிக்குத் தேவை புத்தகமா அல்லது கர்ப்பமா?

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தீர்க்க தரிசனமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் எதிர்கால கல்லூரி மாணவிகள் கல்லூரிக்குச் செல்லும் நிலை எப்படி இருக்கும் என்று சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஒரு புதுமையான சமூக சீர்திருத்தக் கருத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்ப்ப காலத்தில் சட்டக் கல்லூரிக்கு சரியாக செல்லாமல் வருகைப் பதிவு குறைந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காத பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவிகள் தொடுத்த வழக்கில் தீர்ப்பு சொல்லும்போது முடிவுரையில் அந்த புரட்சிகரமான கருத்தையும் சேர்த்து சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.

if any female candidate is deprived or detained in any of the semester just on the ground that she could not attend classes being in the advanced stage of pregnancy or due to the delivery of the child, then such an act on the part of any of the university or college would not only be completely in negation of the conscience of the Constitution of India but also of the women rights and gender equality this nation has long been striving for. It is a saying that “Motherhood is priced of God, at price no man may dare to lessen or misunderstand”. By not granting these students relaxation, we will be making motherhood a crime which no civilized democracy in the history of mankind has ever done or will ever do. We cannot make them pay the price for the glory that is motherhood.

தாய்மை என்பது புனிதமானது. இது திருமணத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் ஒரு உடல் நிலை மாறுபாடு. இது வியாதியல்ல. அதனால் இதனைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்கும் மாணவியரை வருகைப்பதிவு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் தேர்வு எழுத அனுமதி மறுப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று மாணவியர் தொடுத்த வழக்கில் நீதிபதி தீர்ப்புக் கூறினார். மிகவும் சரிதான்.

ஆனால், அந்தத் தீர்ப்பின் முடிவுரையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்தியப் பெண்களின் கற்பு, கலவு பற்றி கூறிய தீர்ப்பை மேற்கோள் காட்டி இனிவரும் காலங்களில் திருமணம் செய்யாமல் கர்ப்பம் தரித்து பல மாணவிகள் கல்லூரிக்கு வரும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் பல்கலைக்கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் கூடுதல் அறிவுரையும் வழங்கியிருக்கிறது. திருமணம் செய்யாமல் கூடி வாழ்வது தவறில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதால் சமுதாயத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் வளைந்துகொடுக்கவேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நீதிபதி தனது கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருகிறார். தீர்ப்பின் அந்தப் பகுதியை கீழே படித்துப்பாருங்கள்.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 12.07.2010
முழுத் தீர்ப்பை இங்கே காணலாம் W.P.(C) No. 8302/2009

“It would not be inappropriate to mention at this juncture the recent rulings of the Apex Court in the cases of Lata Singh vs. State Of U.P AIR 2006 SC 2522 and S. Khushboo vs. Kanniamal & Anr MANU/SC/0310/2010 where it has given liberty to the live-in relationship from the shackles of being an offence and also in the latter case where it has held that premarital sex is not an offence. The society today is changing at a rapid pace and we must be in tune with the realities and not hold on to archaic social mores. Once such a right, however unpopular, is recognized then it cannot be ruled out that there can be more cases of girl students proceeding on maternity leave when while they are still in college. Law should be an instrument of social change and not a defender of it. Motherhood is not a medical condition but a promise. We all kowtow to our mothers to whom we owe our existence and to punish a woman for becoming a mother would surely be the mother of all ironies.

Bar Council of India, although not a party in the present writ petitions, is hereby suggested to make rules for women students claiming relaxation on ground of maternity relief so that they are not deprived of appearing in the LLB
examinations due to pregnancy.

தாய்மை என்பது புனிதமானதுதான். ஆனால் அந்த புனிதத்தை எந்த வகையில் பெண் பெற நினைக்கிறாள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருமணம் செய்யாமல் கூடி வாழும் நிலை சமூகத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கேற்ப சட்டங்கள் மாறவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை சட்டங்கள் ஆதரிக்கவேண்டும். அதே சமயம் சமுதாயம் தவறான பாதையில் மாற்றம் அடைந்து கொண்டிருந்தால் அதை தட்டிக்கேட்கும் விதமாகவும் இருக்கவேண்டும். சமுதாய மாற்றம் என்ற பெயரில் தன்னிச்சைப்படி சமுதாயம் செல்லும் வழியில் தானும் செல்வது சட்டமா? அல்லது சமுதாயத்திற்கு நல்ல வழியைக் காட்டி ஆரோக்கியமான சமுதாய மாற்றத்திற்கு உதவுவது சட்டமா?

கடைசியில் திருமணம் இல்லாமல் வரைமுறையின்றி தன்னிஷ்டப்படி பலருடன் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரிப்பதும், துன்பம் அனுபவிக்கப்போவதும் பெண்கள்தான்! சமுதாய மாற்றங்கள் தொடரட்டும்!! தந்தையற்ற குழந்தைகள் பெருகட்டும்!!!

Saturday, July 10, 2010

ராத்திரி நேரத்து பூஜை ஆரம்பம்!

தமிழ் நாட்டில் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் குடும்ப நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நல்ல முன்னேற்றம். நாட்டில் பல விவாகரத்து வழக்குகள் அதிகமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

சென்னை, ஜூலை 10: கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இலவச ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைன்' தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் விவாகரத்து வரை செல்வது தடுக்கப்படுவதோடு, விவாகரத்து மனுக்களும் பெருமளவில் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வார விடுமுறையில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியது: நாட்டிலேயே முதல்முறையாக வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இங்கு செயல்பட உள்ளன.

இந்தத் திட்டம் விரைவிலேயே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரத்துக்கு ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தாக்கல் செய்யப்படும் குடும்ப நல வழக்குகளுக்கு இப்போதுள்ள 3 நீதிமன்றங்கள் போதுமானவையாக இல்லை.

இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2000- ல் விவாகரத்து கோரி 972 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009-ல் இந்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

விவாகரத்து தவிர ஜீவனாம்ச வழக்குகளும் இதேபோன்று பல மடங்கு அதிகரித்துள்ளன.மொத்தம் 12,659 வழக்குகள் சென்னையிலுள்ள 3 குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல ஆலோசனைகள் வழங்கினால் தீர்க்கப்பட்டு விடும்.கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்ட உடனேயே அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்னை சிறிதாக இருக்கும்போதே தீர்வு காண்பதோடு, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். இதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைனை' தொடங்கும் திட்டம் உள்ளது.

அதேபோல், சட்ட உதவி மையத்தில் செயல்படும் ஆலோசனை மையங்களையும் இரவு 10 மணி வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது.குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்றார் எம்.ஒய்.இக்பால்.நீதிபதி எலிப் தர்மாராவ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.


மாவட்ட நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அறைகள், வீடுகளில் ஏ.சி. வசதி செய்யப்பட வேண்டும் என்றார் எலிப் தர்மாராவ்.நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி டி.முருகேசன், குடும்ப நல முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம், லா அசோசியேஷன் தலைவர் டி.வி. கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

இதுபோல விவாகரத்து வழக்குகள் அதிகமானதற்குக் காரணம் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க ஆளில்லாமல்போனதுதான் காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது. பெண்களுக்கு நல்வழி காட்வேண்டிய பெண்கள் வாரியம் சொல்லிக்கொடுப்பது என்ன என்று கீழுள்ள செய்தியில் பாருங்கள்:

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாட்டில் என்ன நடக்கிறதென்றால் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனை ஏற்பட்ட உடனே பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால் பொய் வரதட்சணை வழக்குத் தொடரவேண்டும் என்பதுதான். இதுதான் பல சட்டமேதைகள் தங்களிடம் வரும் பெண்களுக்கு சொல்லித்தரும் அறிவுரை. பிரச்சனைக்குக் காரணம் என்ன என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். பிறகு இதற்கு “காசிற்காக” தூபம் போடுவதுபோல் மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து, கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையிலடைத்து அவமானப்படுத்தி மிரட்டும் கொடுஞ்செயல். இவையெல்லாம் கடைசியில் எல்லா குடும்பத்தையும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

இந்த விஷயத்தை 2003ம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது:

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI,
DATE OF DECISION: May 19, 2003,

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sisters, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.

அதனால் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டன என்பதற்காக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏன் இப்படி அதிகமானது என்ற அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால்தான் சமுதாயத்தில் குடும்பக் கட்டமைப்பு சிதையாமல் இருக்கும். நீதிமன்றங்கள் அதிகரிப்பதால் பலருக்கு வருமானம் கிடைப்பதைத்தவிர அப்பாவிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.


பொய் வரதட்சணை வழக்குகள் உருவாவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படாதவரை இந்தியக்குடும்பங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. பணம் கிடைக்கிறது என்பதற்காக அடுத்தவன் குடிதானே கெடுகிறது நமக்கென்ன என்றிருப்பவர்களுக்கு தன்குடி கெடும்போதுதான் அந்த உண்மை புரியும். அதுவரை இந்த ராத்திரி நேரத்து நீதிமன்ற பூஜைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.




Wednesday, June 30, 2010

மனைவி உடையான் துப்பாக்கிக்கு அஞ்சான்!

கீழுள்ள செய்தியைப் படிப்பதற்கு முன்பு இந்த சட்டத்தைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு செய்தியில் சொல்லப்பட்டுள்ள பெண் இந்திய சட்டப்படி எந்தத்தவறும் செய்யவில்லை என்று உங்களுக்கே புலப்படும்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் !), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவசாயி கைது
ஜூன் 30,2010 தினமலர்

ஓசூர்: அஞ்செட்டி அருகே கள்ளக்காதல் தகராறில், கள்ளக் காதலனை, காதலியின் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த மாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிக்கய்யா (37). அவரது மனைவி ராதா (32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு அருகே வசிப்பவர் விவசாயி அண்ணாதுரை (34). அவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

அண்ணாதுரைக்கும், ராதாவுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவன் இல்லாத நேரங்களில் ராதா, அண்ணாதுரையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை உறவினர்கள் மூலம் கேட்டறிந்த சிக்கய்யா, மனைவியை கண்டித்ததோடு, அண்ணாதுரையை வீட்டுக்கு வரக்கூடாது என, எச்சரித்தார். ஆனால், அண்ணாதுரை, சிக்கய்யா வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டுக்கு சென்று ராதாவுடன் உல்லாசமாக இருந்தார்.

நேற்று முன்தினம் சிக்கய்யா வெளியூர் செல்வதாகக் கூறி விட்டு, வீட்டை விட்டு சென்றார். இரவு 9 மணிக்கு திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் அண்ணாதுரையும், ராதாவும் ஒன்றாக இருந்தனர். சிக்கய்யாவை பார்த்ததும், அண்ணாதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆத்திரமடைந்த சிக்கய்யா, மனைவியை அடித்ததோடு, வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அண்ணாதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அவரை, சிக்கய்யா நாட்டுத் துப்பாக்கியால் 17 முறை கோபம் தணியும் வரை சுட்டார். அதில், அண்ணாதுரை சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். சிக்கய்யா அங்கு இருந்து தப்பியோடி தலைமறைவானார்.

தகவல் அறிந்த அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணாதுரையை சிக்கய்யா துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை அஞ்செட்டியில் இருந்து வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற சிக்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கணவர் இந்திய சட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார் போலிருக்கிறது. கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று இந்திய சட்டமே சொல்லியிருக்கிறது. அதனால்தான் சட்டத்தை மதித்து கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆணை மட்டும் இந்த அப்பாவி கொன்றிருக்கிறார் போலிருக்கிறது.



Wednesday, April 14, 2010

மருமகள் கொலைசெய்தால் குற்றமா? என்று திருத்துவார்களோ சட்டத்தை!

கள்ளக்காதலை தட்டிக்கேட்கும் மாமனாரையோ அல்லது கணவரையோ மருமகள் கொலைசெய்தால் அது குற்றமா? அது குற்றமில்லை என்று பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஏன் இன்னும் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்று தெரியவில்லை!

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

=========================================================

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.
=========================================================

பொய் வரதட்சணை வழக்குகள் போடுவதெல்லாம் மிகவும் பழையமுறையாகிக்கொண்டுவருகிறது. இந்தக் காலத்தில் வரதட்சணை சட்டங்களை திருத்தி மருமகள்களுக்கு மிகச்சிறிய சலுகை கொடுப்பதைவிட மருமகள் கொலைசெய்தால் கூட அது குற்றமில்லை என்று அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் பல மருமகள்களுக்கு உதவியாக இருக்கும். முற்போக்காக சிந்தித்து மகளிர் ஆணையம் இந்தியப்பெண்களுக்கு முழுச்சலுகைகளை வாங்கித்தருவார்களா?

=======================================================


தினமலர் ஏப்ரல் 15,2010

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயவேல்ரெட்டி(68). அதே பகுதியில் இயங்கி வரும் ரைஸ்மில் மற்றும் பல வணிக வளாகங்களின் உரிமையாளராக இருந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் சாலையில் உள்ள ரைஸ்மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மறுநாள் காலை சாலையோர முட்புதரில், அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., நாகஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில்,ஜெயவேல் ரெட்டியின் மூத்த மகன் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(37).ஆரம்பாக்கம் அருகே உள்ள எடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(37).சொந்தமாக விவசாய டிராக்டர் வைத்துள்ளார். வேலை காரணமாக ஜெயவேல் ரெட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து போன சீனிவாசனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ள காதல் உருவானது. இதை அறிந்த ஜெயவேல் ரெட்டி இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில், ஜெயவேல் ரெட்டி, தனது சொத்துகளில் பாகம் பிரித்த போது, மகன்களை விட, மகள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால், கள்ள காதல் தொடர்பாக கோபமாக இருந்த புவனேஸ்வரி மேலும் ஆத்திரமடைந்தார்.

இதை காரணம் காட்டி, சொத்துகளை பெற்று தனி குடித்தனம் செல்ல புவனேஸ்வரி முயன்றார். இதற்கும் ஜெயவேல் ரெட்டி தடையாக இருந்துள்ளார். இதையடுத்து, சீனிவாசன் உதவியுடன் ஜெயவேல் ரெட்டியை கொலை செய்ய, புவனேஸ்வரி திட்டம் தீட்டினார். இதன்படி, சீனிவாசன் நண்பரான எடகண்டிகை ஸ்ரீதர் உதவியுடன், திருவொற்றியூர் ஷேக் பாரி(35) என்பவரை அணுகினர்.அவர், கொலை திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக, 46 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இதன்படி, ஷேக் பாரி கூட்டாளிகளான பிரபாகரன்(30), பாலாஜி(25) ஆகியோருடன் சேர்ந்து ஜெயவேல் ரெட்டியை கொடூரமாக கொலை செய்தனர், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து புவனேஸ்வரி, சீனிவாசன், அவரது நண்பர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஷேக் பாரி, பிரபாகரன்,பாலாஜி ஆகியேரை தேடி வருகின்றனர்.


Tuesday, December 22, 2009

காவலும், நீதியும் - இன்றைய நிலவரம்

ஆயுள் தண்டனைக் கைதிக்கு பதிலாகசிறையில் உள்ளவரை விடுவிக்க உத்தரவு
தினமலர் டிசம்பர் 23,2009

மதுரை:நெல்லை பாளை சிறையில், ஆயுள்தண்டனைக் கைதிக்கு பதிலாக உள்ளவரை, உடனடியாக விடுதலை செய்யும்படி, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது.மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கு:நெல்லை ராதாபுரம் அருகே, நயினார்குளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் சில ஆண்டுகளுக்கு முன் முத்துப்பட்டன் என்பவரை கொலை செய்தார். இதில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர், ஐகோர்ட் கிளையில் அப்பீல் மனு செய்தார். அவரை ஜாமீனில் விட, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பின் அவரது மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவரை சிறையில் அடைக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சுடலைமுத்துவுக்கு பதிலாக, அவரது உறவினர் சிவக்குமார் சிறைக்கு சென்றார். நான்கு ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார். அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இம்மனு, நேற்று நீதிபதிகள் ஆர்.ரகுபதி, ஆர்.சுப்பையா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் செந்தூர்பாண்டியன், விசாரணையை ஜன., 6ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும், என்றார். மனுதாரர் வக்கீல்கள் ரத்தினம், ஜின்னா ஆகியோர், போலீசார் தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பாவி வாலிபர் தேவையில்லாமல் சிறையில் உள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், என்றனர். அதை பதிவு செய்த நீதிபதிகள், சிறையில் உள்ள சிவக்குமாரை உடனடியாக விடுதலை செய்யும்படி, இடைக்கால உத்தரவிட்டனர். சிவக்குமாருக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்த விசாரணையை தள்ளிவைத்தனர்.


=========================

நான்கு ஆண்டுகளாக ஆள்மாறாட்டம் செய்து ஒரு ஆளை சிறையிலடைத்து வைத்திருக்கிறார்கள். இது தான் இன்றைய நிலைமை. இதுவே இப்படியென்றால் பொய் வரதட்சணை கேசுகள் எப்படி கையாளப்படும் என்று யோசித்துப்பாருங்கள். கிடைக்கின்ற அப்பாவிகள் எல்லாம் சட்டத்திற்கு முன் பலியாடுகள் தான். காப்பாற்றத்தான் மனிதாபிமானமுடைய மனிதர்கள் இல்லை.




Sunday, December 20, 2009

அப்பாவி போலிஸ் (பகுதி - 2)

தினமலர் டிசம்பர் 21,2009
மதுரை : ஒருவரை போலீசார் கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காததால், போலீசார் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.

மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் உரிமையாளர் வெற்றிவேல் பாண்டியன் டிச.,17ல் துப்பாக்கி முனையில் கடத்தப் பட்டார். விசாரணையில், செக் மோசடி வழக்கில் ஆந்திரா போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின் "பேக்ஸ்' மூலம் அவர்கள், மதுரை போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். அதேபோல், திருட்டு நகை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்களை விசாரணைக்காக, தகவல் தெரிவிக்காமல் போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். இதைக் கண்டித்து உரிமையாளர்கள் கடையடைப்பு போராட் டங்களில் ஈடுபடுவதும், பின் போலீசார் சமரசம் செய்வதும் தொடர்கதையாக நடக்கிறது. இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம், கைது செய்யும்போது சில நடைமுறைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து, 1996ல் சுப்ரீம் கோர்ட் 11 கட்டளைகளை பிறப்பித்தது.

1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
- ஆனால் மதுரையில் எந்தஅதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்ததாக தெரியவில்லை.


2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வது இல்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்தில் கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.


3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக் கின்றனர்.


4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
-"விசாரணை' என்ற பெயரில், போலீசார் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்வது அதிகரிக்கிறது.


5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இந்த நடைமுறை போலீசிற்கு தெரிந்தாலும், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்பதற்காக, கைதானவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுவதில்லை.


6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
- பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.


7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
- போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றபடி, கைதானவருக்கு ஸ்டேஷனே கதி.


8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறையை பின்பற்றாததால்தான் "லாக்கப் மரணம்' நிகழ்கிறது.


9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்நடைமுறையை மட்டும் போலீசார் பின்பற்றுகின்றனர்.


10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
-பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களைஉடன்இருக்க அனுமதிக்கின்றனர்.


11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- இதை போலீசார் எப்போதும் பின்பற்றுவதே கிடையாது. இந்த உத்தரவுகளை அனைத்து ஸ்டேஷன்களிலும் வைக்க வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று தெரிந்தும் உத்தரவுகளை மீறுகின்றனர்.


போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :கோர்ட்டின் கட்டளைகளை பின்பற்றும் போது, நடைமுறை சிக்கல் உருவாகும். தகவல் தெரிவித்துவிட்டு கைது செய்ய வந்தால், குற்றவாளி தலைமறைவார். கைது செய்யப்பட்டது தெரிந்தால், உறவினர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவர். விசாரணை பாதிக்கும். உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றால், "நெஞ்சுவலி, வயிற்றுவலி' என்று ஏதாவது கூறி, மருத்துவமனையில் சேர்ந்துகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டர். கைது விபரத்தை மக்கள் பார்வைக்கு வைத்தால், தேவையில்லாத சர்ச்சை ஏற்படும், என்றார். 

=================================

பொய் வரதட்சணை கேசுகளில் அப்பாவிகளை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக மூலை முடுக்கிலுள்ள காவல்நிலையத்திற்கெல்லாம் அனுப்பப்பட்டிருந்தாலும்  அந்த சுற்றறிக்கையெல்லாம் காவல் நிலைய டாய்லெட் கிளின் செய்யும்  துடைப்பான்களாகத்தான் மதிக்கப்படுகிறது.  எத்தனை நீதிமன்றங்கள் எத்தனை சுற்றறிக்கை அனுப்பினாலும் அந்த சுற்றறிக்கையை அனுப்பிய நீதிபதி மட்டும் தான் அதை நினைவில் வைத்திருப்பார்.  அந்த அறிவுரைகளை பின்பற்றவேண்டியவர்களுக்கு அது ஒரு நாள் செய்தித்தாளில் வந்த செய்தி மட்டுமே.

 இது சென்னை உயர்நீதிமன்றம் 2008 ஆகஸ்ட்டில் அனுப்பிய பொய் வரதட்சணை கேசுகள் தொடர்பான நெறிமுறைகள்.

குடும்ப பிரச்னைகளில் சிறை? ஐகோர்ட் அறிவுரை-தினமலர் ஆகஸ்ட் 13,2008,

இதன்பிறகும் செய்தித்தாள்களில் எத்தனை கைது செய்திகளை நீங்கள் தினம் தினம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். 

பொய் வரதட்சணை கேசுகளில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால்  நடுஇரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வயதான பெரியவர்களை ஏதோ ஒரு மிகக் கொடிய தீவிரவாதி தப்பிவிடாமல் பிடித்துக்கொண்டு செல்லும் ஒரு பெருமிதத்துடன் இழுத்துச்செல்வார்கள். பொய்வழக்குப் போடும் பெண் தரப்பிலிருந்து எந்த அளவிற்கு "எனர்ஜி" கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு இந்த கைது நடவடிக்கையிலும்  ஒரு வேகம் இருக்கும். நீதிமன்ற சுற்றறிக்கைகள் எல்லாம் மதிக்க ஆளில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். 




Saturday, December 19, 2009

மனுநீதிச் சோழனும் பெண்கள் போடும் பொய் வழக்குகளும்

தினமலர் டிசம்பர் 20,2009

புதுடில்லி:
"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.
டில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்," பவானும், நானும்
காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
==================================

100 க்கு 99 கற்பழிப்பு கேசுகள் நாட்டில் இ
ப்படித்தான் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. கடையில் ஏதோஅல்வா வாங்கி சாப்பிடுவது போல சுலபமாக பெண்கள் அப்பாவிகள் மீது பல அபாண்டமான பழிகளைப் போட்டு விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல இருக்கிறார்கள். இதை இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்திய நீதிமன்றமும் "கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது பெண்கள் பொறுப்பு தான் " என்றும், கொரியநாட்டு நீதிமன்றமும் "பெண்கள் குழந்தைகள் அல்ல, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு" என்றும் தோலுரித்துக்காட்டிவிட்டன .

ஆனால் அந்த உண்மையை ஏற்பதற்குத் தான் யாருக்கும் மனம் வரவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் இந்த நாட்டிற்கும் தான் வெகு தூரமாயிற்றே! எவ்வளவு தூரம் என்று தெரிந்து கொள்ள ஆவலகா இருந்தால் உண்மைக்காக கடைசி வரைப் போராடி அனைத்தையும் துறந்த அரிச்சந்திர மகாராஜா இன்று உங்கள் ஊரில் சிலையாக எங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள் புரியும். அதனால் தான் என்னவோ சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட நீதிநெறி வழுவாமல் இருக்க தன் மகனையே தேர்க்காலில் இட்டு தண்டனை அளித்த மனுநீதி சோழனும் நீதிமன்றத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்கவைக்கப்பட்டிருக்கிறார் போலும்!

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
விலங்குகளுக்குக் கூட சமமான நீதி வழங்கப்படவேண்டும், தவறு செய்தது தனது மகனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று எண்ணிய அந்த மாமன்னர் இப்போது இந்திய சட்டங்களும், நீதிமன்றங்களும் பெண்களுக்கு மட்டும் குறிப்பாக இளம் பெண்களுக்கு மட்டும் சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு பல அப்பாவி ஆண்களுக்கும், தாய்மார்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தினம் தினம் கண்டு வேதனையடையாமல் இருக்கவே அவர் நீதிமன்றத்திற்குள் இல்லாமல் வெளியே வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது புரிந்திருக்கும்.

பாதிக்கப்பட்டது ஒரு விலங்காக இருந்தாலும் குற்றம் செய்தவர் அதற்குச் சமமான தண்டனையை அனுபவித்து அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வலியையும் வேதனையையும் உணர வேண்டும் என்று அனைத்து உயிர்களுக்கும் சமநீதி வழங்கிய உன்னதமான நீதியரசர் வாழ்ந்த நாட்டில் இப்போது பெண்கள் அப்பாவிகள் மீது அபாண்டமான பழிகளைப் போட்டு சிறையில் அடைத்துத் துன்புறுத்தி, 6-7 ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலைந்து அதற்குப்
பிறகு கடைசியில் அந்த அப்பாவிகள் குற்றமற்றவர் என்று சொன்னால் அதுவரை அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வேதனைகள் மறைந்து விடுமா?

சட்டத்தைத்
தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளைத் துன்புறுத்தும் பெண்களுக்கு அந்த அப்பாவிகள் அடைந்த வேதனையையும், துன்பத்தையும், இழப்புகளையும், அவமானங்களையும் இன்றைய சட்டங்களும், நீதிமன்றங்களும் என்றாவது உணர்த்தியிருக்கின்றனவா? அல்லது இனியாவது உணர்த்துமா?

ஒருவரை நிரபராதி என்று சொல்வதை விட அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சரியான நீதி தரப்படவேண்டும். சட்டங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதை விட அப்பாவிகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு நீதி வழங்குவதிலும் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்த்தியவர் தான் மனுநீதிச்சோழன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனுநீதிச் சோழனுக்கு இருந்த நடுநிலைதவறாத நீதி வழங்கும் அறிவும், அனைவரையும் சமமாக சீர்தூக்கிப் பார்த்து நேர்மையாக நீதி வழங்கிய திறமையும் இன்று நாகரீகத்திலும் (?), அறிவியல்
முன்னேற்றத்திலும், தொழில்நுட்பங்களிலும் பல மடங்கு முன்னேறியிருக்கும் அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இருக்கிறதா? வெளிநாட்டிலுள்ள சட்ட நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளப் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நீதித்துறை வல்லுனர்கள் தங்கள் நாட்டிலேயே ஒரு அற்புதமான நீதியரசர் நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய முறைகள் இருப்பது பற்றி யோசித்திருப்பார்களா? நீங்களாவது யோசித்துப்பாருங்கள்.

தினம் தினம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த மனுநீதி சோழனைப் பார்த்துவிட்டு யாராவது ஒரே ஒரு நீதிபதியோ அல்லது வழக்கறிஞரோ இந்தக் கேள்வியை ஒரு முறையாவது தங்கள் மனதுக்குள்ளாவது கேட்டுப் பார்த்திருப்பார்களா?

மாமன்னர் நீதியரசர் மனுநீதிச் சோழனின் மாண்புமிக்க வரலாறு தெரியாதவர்கள் தங்களது வீட்டிலிருக்கும் மூத்தோரைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பாவம், பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் பெரியவர்கள் இருப்பதில்லை. ஒன்று மருமகளால் முதியோர் இல்லத்திற்கு விரட்டப்பட்டிருப்பார்கள், அல்லது அவளின் பொய் வரதட்சணை கேசில் சிக்கி நீதிமன்றங்களால் சிதைக்கப்பட்டிருப்பார்கள். அப்படிப் பெரியவர்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்களுக்காக அந்த வரலாறு கீழே தரப்பட்டுள்ளது.

வரலாற்றைத் தெரிந்து கொண்ட பிறகு செய்தித்தாளில் வந்துள்ள மேலுள்ள கற்பழிப்பு வழக்கு செய்தியை ஒப்பிட்டுப் பாருங்கள். இது போலத்தான் நாட்டில் பல பொய் வரதட்சணை வழக்குகளும் நீதிமன்றங்களில் கையாளப்படுகின்றன.

மனுநீதி சோழன் காலத்தில் ஒரு பசுவிற்குக் கிடைத்த நீதிகூட இன்று பலகோடி அப்பாவி ஆண்களுக்கும், வயதான தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் மனிதர்களே இல்லாத நிலவிற்கு ராக்கெட் விட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். இது எந்த வகை வளர்ச்சி? சிந்தியுங்கள்.

அன்று சூர்ப்பநகை என்னும் ஒரு பெண்ணின் தவறால் ராவணன் என்னும் ஒரு மகா பேரரசனே தன் பெருமையிழந்து, பெருஞ் சுற்றத்தையிழந்து, கடைசியில் தனது நாட்டையே இழந்தான். இன்று பல சூர்ப்பநகைகள் பொய் சொல்லி பொய் வழக்குகள் போட்டு எந்த ராஜ்ஜியத்தை வேரறுக்கப்போகிறார்களோ?

கூடுதல் செய்திகள் உங்கள் சிந்தனைக்காக


மனுநீதிச் சோழன்

சோழ நாட்டு மன்னர்களுள் மனுநீதிச் சோழன் சிறப்புக்குரிய ஓர் அரசன், அவனது மகன் வீதியில் தேர் ஓட்டிக் கொண்டு செல்லும் போது, தேரின் சக்கரத்திற்குள் அகப்பட்டு ஒரு கன்று இறந்து விட்டது. தாய்ப்பசு அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சிமணியை அடித்தது. உடனே மன்னன் தன் மகனை அழைத்து வரச் சொன்னான். அவன் மீது தேரை ஏற்றி அவனையும் கொலை செய்ய ஆணையிட்டான். தன் மகனைத் தானே கொன்ற பழிக்கு அவன் அஞ்சவில்லை.


மகனை, இழந்த அந்தத் தாய்ப்பசுவின் மனநிலையை எண்ணினான்.அந்தத் தாய்ப்பசுவின் துயரத்திற்குக் காரணமாக இருந்தவன் யாராகஇருந்தாலும் தண்டனைக்கு உரியவன். எனவே அங்கு மன்னனுக்கு எப்பக்கமும் சாராமல் நீதி வழங்க வேண்டும் என்ற மனநிலையே இருந்தது. பின் விளைவுகளுக்கு அவன் அஞ்சவில்லை. எனவே,மனுநீதிச் சோழனின் பெருமை இன்றும் பேசப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டில் ஒரு மனுநீதிச் சோழன்

தனது மகனின் தேர், ஒரு பசுங்கன்றின் மீது தற்செயலாக ஏறி, அதைக் கொன்றதற்காக மகன் என்று கூடப் பாராமல், மரண தண்டனை விதித்தான் மனுநீதிச் சோழன். இது புராண காலத்து நீதி. ஆனால் தவறுதலாக செய்த ஒரு கொலைக்காக மனைவி என்று கூடப் பாராது மரண தண்டனை விதித்தான் ஒரு முகலாய சக்ரவர்த்தி! யாரிவன்? ஜஹாங்கீர்தான்! அக்பரின் மகன்! ‘ஜஹாங்கீர்! என்றால் ‘உலகை வென்றவன்’ என்று பொருள்.

மக்களுக்கு உடனடி நீதி வழங்க ஆக்ரா கோட்டையில், மனுநீதி ஆராய்ச்சி மணியொன்றை கட்டி வைத்திருந்தான் இவன். ஒரு சமயம், இவனுடைய மனைவியான நூர்ஜஹான் தவறுதலாக, ஒரு பீரங்கியை இயக்கியபோது ஒரு சலவைத் தொழிலாளி, குண்டு பட்டு இறந்தார்.

தன் மனைவி என்றும் பாராது நூர்ஜஹானுக்கு மரண தண்டனை விதித்தார் ஜஹாங்கீர். பின்பு அந்தத் தொழிலாளியின் மனைவி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பேரில் நூர்ஜஹானை விடுதலை செய்தார். அந்த சலவைத் தொழிலாளியின் மனைவிக்கு நிறைய மானியம் தந்தார்.

19 ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை........

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி! நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி என்று கட்டாயப்படுத்துகின்றன இன்றைய சமுதாயமும், தவறான சட்டங்களும்.



Sunday, December 13, 2009

தாய்மை இல்லாத பெண்மை

குடும்ப தகராறில் விபரீதம் குழந்தையை உயிரோடு தீவைத்துக் கொன்ற தாய்

தினமலர் செய்தி டிசம்பர் 14,2009

ஓசூரில், குடும்பத்தகராறில் பெற்ற குழந்தையை தீ வைத்து கொன்ற தாய், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சாமுவேல் (30). அவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவதாக வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேரந்த கலைவாணி (20) என்பவரை சாமுவேல் காதலித்து இரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ஜோன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. சாமுவேல் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதில் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. கலைவாணி கணவரை சென்னைக்கு சென்று வேறு வேலை பார்க்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர், "எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சொந்த ஊரை விட்டு வேறு எங்கும் சென்று தொழில் செய்ய முடியாது' என கூறி விட்டார்.


கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில வாரமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. மனமுடைந்த கலைவாணி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தனது ஒரு வயது குழந்தை மீது கெரஸின் ஊற்றி தீ வைத்துவிட்டு, தானும் கெரஸின் ஊற்றி தீ வைத்து கொண்டார். இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்தில் பலியாகினர்.


ஓசூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., சசிகுமார் தீயில் கருகி இறந்த தாய், மகனின் சடலங்களை கைபற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு ஆண்டு மட்டும் ஆவதால், ஆர்.டி.ஓ., ரத்திவேலு விசாரிக்கிறார்.

=========================

ஒரு அப்பாவிக் குழந்தையை கொல்லும் உரிமையை அந்தப் பெண்ணுக்கு கொடுத்தது யார்?

தான் வாழ இயலவில்லை என்றாலும் தனது குழந்தை எங்காவது பிழைத்து நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவள் தான் தாய். அந்த தியாக மனப்பான்மைக்காகத்தான் பெண்கள் இந்த சமுதாயத்தில் பல ஆண்டுகளாக போற்றப்பட்டு பல சிறப்பான சலுகைகள் பெண்களுக்கு மட்டும் சட்டத்தில் கூட தரப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தக்காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு பெண்மைக்கே உரிய
அந்த தாய்மையும் தியாக மனப்பான்மையும் கிடையவே கிடையாது. அதை விட தனக்கு கிடைக்கவில்லையென்றால் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்ற வஞ்சகமான மனப்பான்மை தான் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் இன்றைய காலங்களில் இது போன்ற குழந்தைகளை பெற்ற தாயே கொஞ்சமும் கருணை இல்லாமல் கொல்லும் செய்திகள். பெரும்பாலான வரதட்சணை புகார்களில் தன்னால் குடும்பத்தில் அனுசரித்து வாழ இயலாத இயலாமையை ஏற்க மறுக்கும் மனைவியர் கணவரின் அனைத்து சகோதரிகளையும், தாயாரையும், குழந்தைகளையும் குற்றவாளிகளாக சித்தரித்து பொய் புகார்களை எழுதி அவர்களின் வாழ்க்கையையும் சிதைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அலைகிறார்கள்.

இப்படித் தாய்மைக்கு கொடுக்கப்பட்ட மரியாதையையும், சலுகைகளையும் இந்தக்காலத்தில் பல பெண்கள் தவறாகப்பயன்படுத்தி சட்டத்தையும் சமுதாயத்தையும் முட்டாள்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற இழிசெயல்கள் வரதட்சணை கேசுகளில் மிக அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.



இரண்டுமாதக் குழந்தையை குற்றவாளி பட்டியலில் சேர்த்து அதற்கு நீதிமன்றத்தில் ஜாமினும் வழங்கிய நாடு இந்த உலகத்தில் எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிறுமைக்குறிய செயலை செய்ததும் ஒரு பெண் தான். அதற்கு துணைபோனதும் பெண்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் சட்டங்கள்தான்.

இப்படி தாய்மையும், பெண்மையும் இல்லாமல்
மாறிவிட்ட பல பெண்களுக்காக இன்னும் எதற்காக அவர்களை பாதுகாப்பதாக சட்டங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன என்பது தான் புரியவில்லை. அதன் பின்னனி தான் என்ன?

மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டதால் ஆர். டி.ஓ. சிறப்பு விசாரணை செய்யப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு கணவர் திருமணமாகி ஒரே வாரத்திற்குள் இறந்தாலும் ஒருவர் கூட அது ஏன் நடந்தது? கொலையா, தற்கொலையா என்று யோசிக்கக் கூட மாட்டார்கள். ஏனென்றால் மனைவி இயற்கையாக இறந்தால் கூட அது
எப்போதும் கணவனோ அல்லது அவரது குடும்பத்தாரோ செய்த கொலையாக சந்தேகக்கண்ணோட்டத்துடன் தான் சட்டமும் சமுதாயமும் பார்க்கின்றன. ஆனால் அதுவே கள்ளக்காதலுக்காக மனைவி தனது கணவனை கொன்றிருந்தாலும் கூட அது பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். இது தான் இன்றைய சட்ட சமுதாய நடைமுறை.

பொம்பளை செத்தா போனது விலைமதிப்பற்ற உயிர் அதுவே ஒரு ஆம்பிளை செத்தால் இந்த சமுதாயத்திற்கு அது "தலையிலிருந்து உதிரும்
ஒரு முடிக்குச்" சமம் என்று இதைக்கூட இன்றைய திரைப்படத்தில் காட்டிவிட்டார்கள். அதைப்பார்த்து சிரிக்கும் கூட்டம் தான் அதிகம் சிந்திப்பவர்கள் மிக மிகக் குறைவு.



"தாய்மை" என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம், உடல் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. பெண்களின் மனநிலை "தாய்மை" என்ற புனிதத்தன்மையை இழந்துவரும்போது சட்டங்களும் காலத்திற்கேற்ப மாறி ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்தினால் தான் இனிவரும் காலங்களில் மனித சமுதாயம் மனிதத்தன்மையுடன் இருக்கும். காலச்சக்கரத்திற்கேற்ப மாற்றமடையாத எந்தவொரு செயலும் இயற்கையால் புறக்கணிக்கப்பட்டுவிடும். அது பெண்கள் பாதுகாப்பு சட்டங்களானாலும் சரி. இயற்கையின் நீதிமன்றத்தில் மனித சட்டங்கள் செல்லாது.




Saturday, December 12, 2009

மக்கள் சக்தியை உணரத் தொடங்கியுள்ள நீதித்துறை

தாமதமாக நீதி வழங்கினால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்: தலைமை நீதிபதி எச்சரிக்கை

தினமலர் டிசம்பர் 13,2009

பெங்களூரு:
"தாமதமாக நீதி வழங்கினால், மக்கள் புரட்சியில் ஈடுபடத் துவங்கி விடுவர். சட்ட முறைகள் செயலிழந்து விடும்,'' என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடந்த மாநாடு ஒன்றில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ நீதி கிடைத்து விடும் என, நம்புகின்றனர். இப்படி எத்தனை நாட்களுக்கு அவர்கள் காத்திருப்பர்? நாம் நீதி வழங்குவதில் காலத்தைக் கடத்த முடியாது.


அப்படி நடந்தால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்; நீதித்துறை ஸ்தம்பித்து விடும்.வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் எக்காரணம் கொண்டும் தாமதம் ஏற்படக் கூடாது. தாமதத்துக்கு, கோர்ட்டுகள், நீதிபதிகள் பற்றாக்குறையும் ஒரு காரணம். வக்கீல்களும் தங்கள் பங்குக்கு வழக்குகளை இழுத்தடிக்கின்றனர்.நாட்டில் உள்ள கோர்ட்டுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மொத்தம் 16 ஆயிரம் கீழ் கோர்ட்டுகள் தான் இருக்கின்றன. இவற்றில் 2,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. 16 ஆயிரமாக உள்ள கீழ் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை 35 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். இதைச் செய்யவில்லை எனில், இந்திய நீதித்துறை, முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது.கோர்ட்டுகளை அதிகரிக்க மாநில அரசுகள் முன்வருவதில்லை. 4,000 கிராம கோர்ட்டுகள் ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்தியா எல்லாவகையிலும் முன்னேறி இருந்தாலும், வழக்குகளை முடிப்பதில் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.


வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு கோர்ட் தவிர சமரசம் மற்றும் மத்தியஸ்தம் என்ற இரண்டு சுலபமான வழிகள் இருக்கின்றன. சீனாவில் 20 சதவீத வழக்குகள் மட்டுமே கோர்ட் விசாரணைக்கு வருகின்றன. மீதி 80 சதவீத வழக்குகள் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்திலேயே முடிக்கப்பட்டு விடுகின்றன.அதுபோல நம்நாட்டிலும் சமரசம் மற்றும் மத்தியஸ்த வழிகளில் வழக்குகளை முடிப்பதை ஊக்கவிக்க வேண்டும். இங்கு கோர்ட்டில் வழக்கிடுவது என்பது மலிவான செலவாக இருப்பதால் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்தை மக்கள் நாடுவதில்லை. இவ்வாறு கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++

ஏற்கனவே பாதி சட்ட நடைமுறைகள் செயலிழந்து தான் இருக்கின்றன. இனி புதிதாக செயலிழக்க என்ன இருக்கிறது? இந்த நாட்டில் அப்பாவிப்பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் கேவலமான பொய் வரதட்சணை கேசுகளுக்காக தீவிரவாதிகளை விட மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண: இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.



இன்றும் தினம் தினம் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. எந்தவொரு முறையான, நேர்மையான சட்ட நடைமுறையும் இல்லாமல் இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கொடிய அநீதியை எந்த வகையில் யார் நியாயப்படுத்த முடியும்?


நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் விட நாட்டிலுள்ள தவறான ஒருதலைபட்சமான பல சட்டங்களை அழித்தாலே நீதிமன்றங்களிலுள்ள முக்கால்வாசி வழக்குகள் ஒழிந்து விடும்.

தாமதமாக நீதி வழங்கினால் மட்டுமல்ல, அப்பாவிகளுக்கு எதிராக பொய்வழக்குகள் போட்டு அநீதி இழைக்கப்பட்டாலும் மக்கள் புரட்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.




Friday, December 11, 2009

தாக்குதலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

இந்திய அப்பாவி குடும்பங்களை தாக்குவதற்கு சட்டதீவிரவாதக் கூட்டம் சதித்திட்டங்களுடன் அலைந்துகொண்டிருக்கிறது. இவர்களின் தாக்குதல் எப்போதும் நடுஇரவிலோ அல்லது அதிகாலையிலோ அனைவரும் கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தான் நடக்கும். ஆம். நடுஇரவிலும் அதிகாலையிலும் நீங்கள் யாரையும் தொடர்புகொள்ள முடியாத நேரத்தில் தான் பொய் வரதட்சணை கேசிற்காக போலிஸ் உங்கள் வீட்டு கதவைத் தட்டுவார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் தான் அதிகமாக இந்த தாக்குதல் நடைபெறும். ஏனென்றால் அப்போது தான் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் கோர்ட் விடுமுறை என்பதால் நீங்கள் கோர்ட்டில் ஜாமின் வாங்கமுடியாமல் தவிப்பீர்கள். அப்போது தான் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் கேட்பது போல முதல் முறையாக காவல்நிலையத்தில் குடும்பத்தோடு அடைபட்டு என்னசெய்வதென்றே தெரியாமல் கலங்கிய மனதுடன் இருக்கும் உங்களிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு பெரிய தொகையை பேரம் பேசமுடியும்.

இது போன்ற எதிர்பாராத தாக்குதல்களிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அந்த சமயத்தில் என்ன செய்யவேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? பாதி தூக்கத்தில் இருக்கும் வயதான தாயும், தந்தையும், திருமணமாகாத சகோதரிகளும், சிறு குழந்தைகளும் உங்கள் கண்ணெதிரேயே வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு இழுத்துச்செல்லப்படும் போது அவர்களைக் காப்பாற்ற நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா?


அரசாங்கமும் நீதித்துறையும் காப்பாற்றும் என்று எண்ணி ஏமாந்து போய்விடாதீர்கள். இவையிரண்டும் உங்களைப்போன்ற அப்பாவிகளை பாதுகாப்பதை விட தீவிரவாதிகளை காப்பதில் தான் அதிக அக்கறையுடன் இருக்கின்றன. மக்களை காக்க எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் சென்ற ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்டவரை பாதுகாக்க இன்று வரை 31 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாளில் செய்தி வந்திருக்கிறது.

அதுபோலத்தான் சட்டதீவிரவாதத்திலிருந்து அப்பாவிகளை காப்பாற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கு மாறாக பொய்வழக்கு போடும் சட்டதீவிரவாதிகளை பாதுகாத்து அப்பாவிகளை துன்புறுத்த மேலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எனவே நீங்கள் தான் உங்களை இந்த சட்ட தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் உங்கள் நகரத்துக்கு அருகாமையில் உள்ள இந்திய குடும்பப் பாதுகாப்பு வீரர்களால்
சட்டதீவிரவாதத்திற்கு எதிராக நடத்தப்படும் பாசறை பயிற்சி கூட்டங்களில் கலந்து கொண்டு உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த தன்னார்வ வீரர்களால் நடத்தப்படும் பயிற்சி கூட்டங்கள் அனைத்தும் இலவசம். அதனால் தயங்காமல் இன்றே உங்கள் அருகாமையிலுள்ள தன்னார்வ வீரரை தொடர்பு கொண்டு அடுத்து வரும் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் குடும்பத்தின் மானத்தையும், உயிரையும் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
வந்தபிறகு வருத்தப்படுவதைவிட வருமுன் காப்பதே நல்லது.

இதுபோன்ற பயிற்சியோ அறிவுரைகளோ அரசாங்கமும் தராது, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இருப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் செய்யாது, நீங்கள் காசு கொடுத்து காப்பாற்றுவார் என நம்பியிருக்கும் வழக்காடுபவரும் சொல்லமாட்டார்.


உங்களின் வசதிக்காக பயிற்சி
க் கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. உங்களது நண்பர்களுக்கும் இந்த செய்தியை அனுப்பி அவர்களது குடும்பங்களையும் காப்பாற்ற உதவுங்கள்.

North India
New Delhi Ludhiana, Punjab

Venue 1: India gate Park (Near Car Parking),
Opposite Gate No. 2 of Patiala House Court,
New Delhi.
Time: 4.00 Pm to 6.00 Pm Every Saturday.

Venue 2: Behind Rohini Court Complex, District Park,
Sector-13, New Delhi.
Near "Rohini East" Metro station.
Time: 9.30A.M to 11.30AM Every Sunday

Contacts: Swarup : 9810611534
Niladri : 9811052770
Neeraj : 9818332305
Sattu : 9953935838
Rajiv : 9891369616

Time: 12:00 pm - 2:00 pm Every Sunday

Venue: Rakh Bagh, near Guru Nanak Stadium

(5 min distance from Rly Station & Bus Stand)

Contacts: Gurmeet: 09463745604 , Harkanwal: 09316297915 ,
Shimlaking: 0916198980 , Mandeep: 9814455521 ,
Ranju: 09872206761

Chandigarh Lucknow

Venue: Sec 17 Plaza - Near Fountain

Meets every month on the third Sunday 11:30 am - 12:30 pm

Contacts: Gurmeet Singh 9463745604
Shimla King 9216198980
Ranju Malhotra 9872206761
Mandeep Gupta 9814455521
Harkanwal Singh 93160 97492

Venue: Laxman Park, Opposite KD Singh Babu Stadium.

Meets every Sunday, 4:30 pm - 6:00 pm.

(Please note that Laxman park is situated is in the heart of the city,
100m from Hazratganj and family Court, 200m from High Court,
0 from Pariwartan chowk and 498km from Delhi.)

Contacts: Dr. (Mrs.) Indu Subhash - 09336002063
Yaksh- 9838097522

Faridabad Kanpur

Venue: Town Park, Opp. Dist. Court, Sector 12

Every Sunday 4:00 pm - 7:00 pm

Contact:
Rishi Jain: 9971132132
Jagat Kishore Sharma: 9899078588

Venue: Ambedkar Smarak, Nana Rao Park ,
Opp. Hotel Meghdoot, The Mall, Kanpur 208001.

(Nana Rao Park is situated in the mid of City, 500 mtrs from Bada Chauraha and
opposite to Hotel Meghdoot. The best land mark is Phool Bagh, Near Khairapati
Baba Temple. Nana Rao Park is also known as Company Bagh. Ambedkar
Smarak is situated while you enter from the gate which is just on the diversion
of VIP road from Mall road.
)

Every Sunday 11:00am

Contacts:
Sandeep Chakrawarty 9956090094 / 0512 2461234



East India
Kolkata

Time: Every Sunday 4:00 pm - 5:00 pm

Location: Back Gate of Vitoria Memorial Park

Contact: D S Rao 9830151555

South India
Bangalore/Bengaluru Chennai

Cubbon Park,
Steps in front of King Edward Statue opposite BSNL Office

Time: 2 pm to 5 pm Every Sunday

Some Photographs of the meeting

Contacts:

Shravan (Kannada): 9902055933
Vishnu (Kannada): 9880286694
Yodha (English): 9886368480
Ravi (English): 9740204406

Venue: Thiruvika Park,
Shenoy Nagar,
Land Mark - Very close to Sai Baba Temple.

Meets every Saturday, 5:30 pm - 8:30 pm

Contacts: Sureshram 9941012958
Amarnath 9840587653
Girish 9381026333
Anuj 9840443555

Vishakhapatnam/Vizag

Venue: Agarwal Images,
2nd lane Dwarakanagar,
Rednam Plaza

Meets every Sunday, 9:00 am - 12:30 pm

Contact: 9246623460



West India
Mumbai (1) Mumbai (2)

M.R.Gupta (Pif - Mumbai) Director
Protect Indian Family Foundation
C/o Rainbow, Shop No.3
Beside Quick Chef Hotel
Tulsi Bhavan,
Opp. Hotel Sitara
Near Mcc College/Mulund Court
S.N. Road, Mulund (W)
Mumbai 400080

Contacts : 9869323538,
922433557,
9833066726

Mr P.R.Gokul
(PIF - Mumbai)
B-102, Matoshrikripa C.H.S,
Near Kamalsagar, 90 Feet Road
Bhandup(East),
Mumbai-400042
Tel: +91 9224335577,
Tel/fax +91 22 25614188
Pune Goregaon(West), Mumbai
Venue: Shambhaji Park, Near Balghandharva Auditorium,
JM Road, Deccan, Pune
Meeting Timing : Sundays 4pm to 6pm
Contact numbers : +91-9850883751(Mahesh)
+91-9823522963(Mohammed)
+91-9823788013(Atit)

Venue: Near Aarey SubWay of Goregaon Railway Station,
Goregaon(West)

Meets every Sunday 11:00 am - 2:00 pm

Contacts: Bharat Rathod: 9892928212,
Jaspreet Singh: 9867619277


Central India
Indore (MP) Gwalior

Every sunday without fail

Sharp 12 noon to 2 p.m. at Nehru Park, Indore

For directions contact: 09302394340, 9827396423

Venue: Phoolbagh

Meets every Sunday 1:00 pm - 4:00 pm

Contacts: Ajay 9425771283
Chandan 9827062235
S.K. Dubey 9425109048

=====================

International Residents contact www.498a.org




Sunday, December 06, 2009

இன்றைய வரதட்சணை தடுப்புச் சட்ட நடைமுறை: பெண்களுக்கு இழைக்கப்படும் கொடிய அநீதி

வரதட்சணை தடுப்புச் சட்ட நடைமுறை: பெண்களுக்கு இழைக்கப்படும் கொடிய அநீதி

இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே அப்பாவி ஏழைப் பெண்களை வரதட்சணை கொடுமையிலிருந்து காப்பாற்றி எதிர்காலங்களில் ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றால் பெண்வீட்டார் கட்டாயம் பணமோ அல்லது பொருட்களோ கொடுக்க வேண்டும் என்ற அவலநிலை மாறவேண்டும் என்பதாகும்.


ஆனால் நல்ல நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டம் இன்றுவரை வெற்றியடையாததற்கு காரணம் பெண்கள் தான். ஆம் பெண்கள் தான் அப்பாவி ஏழைப்பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக்கொடிருக்கிறார்கள். நான் இங்கு குறிப்பிடுவது மாமியார்களை அல்ல. படித்த நல்ல பதவியிலுள்ள நகரத்து வாழ் மேல்தட்டு வர்க்க நவநாகரீக இளம் பெண்களை. இவர்கள் தான் அப்பாவி ஏழைப்பெண்களின் வாழ்வை தட்டிப்பறிக்கும் கொடிய செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.


கிராமங்களில் வாழும் படிப்பறிவில்லாத பல பெண்களைவிட இந்த நகரத்து வாழ் பெண்களுக்கு சட்ட அறிவும் வெளியுலக அனுபவமும் மிக அதிகம். வரதட்சணை கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் எத்தனை நகரத்துப் பெண்கள் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்திருக்கிறார்கள்? எதற்கெடுத்தாலும் கணவரும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டனர் அதனால் தான் நாங்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தோம் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இந்தப் பெண்களும் அவரது குடும்பத்தாரும் கூறுவார்கள்.


மேலும் இது போன்ற பெண்கள் கணவருடன் மனவேறுபாடு ஏற்பட்டால் காவல் நிலையத்திற்கு சென்று வரதட்சணை கொடுமை என்று புகார் வேறு எழுதித்தருவார்கள். ஏனென்றால் வரதட்சணை என்பது ஒரு கொடிய சமுதாயக் குற்றம் என்றும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் கொடுக்கும் அந்த புகாரில் திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் இப்போது மேலும் அதிகமாக வரதட்சணை கேட்டு கணவரும் அவரது குடும்பத்தாரும் துன்புறுத்துவதாகவும் கூசாமல் பொய் குற்றச்சாட்டுகளை வேறு அள்ளி வீசுவார்கள்.


கணவர் வரதட்சணை கேட்டாரா இல்லையா என்பதை பிறகு பார்க்கலாம். முதலில் வரதட்சணை என்பது ஒரு குற்றம் என்று அந்தப் பெண்ணிற்கு தெரிந்ததால் தானே காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறார். அப்படியென்றால் திருமணத்திற்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டபோது ஏன் அந்தப்பெண்ணுக்கு அது குற்றமாகத் தெரியவில்லை? அப்படியே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டிருந்தாலும் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் ஏன் வரதட்சணை கொடுக்க சம்மதித்தனர்? வரதட்சணை கொடுத்து திருமணமும் செய்து முடித்து விடுகின்றனர். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று தெரிந்திருந்தாலும் ஏன் இந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்கின்றனர்?

இவர்கள் இது போல வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வதால் தான் வரதட்சணை கேட்பவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள். வசதி படைத்த நகரத்து மேல்தட்டு வர்க்க பெண்கள் வரதட்சணை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் கிராமங்களில் வாழும் வசதியற்ற பெண்கள் வரதட்சணை கொடுக்க வசதியில்லாமல் திருமணம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அப்படியே உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்கள் காவல்நிலையத்தை அனுகினால் அங்கு ஏற்கனவே நகரத்து மேல்தட்டு வர்க்க பெண்களால் சுயநலத்திற்காக கொடுக்கப்பட்ட பொய் வரதட்சணை கேசுகள் குவிந்து கிடக்கின்றன.


எனவே இந்த உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்களால் நவநாரீக நகரத்து மங்கைகளால் வளர்த்து விடப்பட்ட வரதட்சணை பழக்கத்திற்கு ஏற்ப வரதட்சணை கொடுக்கமுடியாமல் மணவாழ்க்கையில் பாதிப்பும் ஏற்பட்டு அதற்கு நிவாரணம் தேடி காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றால் அங்கும் இந்த நகரத்து மேல்தட்டு பெண்களின் குப்பை கேசுகள் தான் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதானல் இந்த அப்பாவி ஏழைப் பெண்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கவேண்டிய நீதியும் தடுக்கப்படுகிறது.


இப்போது சொல்லுங்கள் உண்மையான ஏழைப்பெண்களுக்கு கிடைக்கவேண்டிய நல்வாழ்க்கையையும் நீதியையும் தடுப்பது யார்? ஆண்களா அல்லது படித்த மேல்தட்டுவர்க்க பெண்களா? வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் உண்மையான பலன் இந்த ஏழைப்பெண்களுக்கு கிடைக்காமல் தடுப்பது யார்?


ஆண்கள் வரதட்சணை ஏன் கேட்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். வரதட்சணை கேட்பதும் குற்றம் தான் கொடுப்பதும் குற்றம் தான். ஆனால் இதுவரை கேட்பவருக்கு மட்டும் தான் சட்டம் தண்டனை தந்துகொண்டிருக்கிறது. வரதட்சணை கொடுத்தவர்களையோ அல்லது கொடுப்பவர்களையோ இதுவரை பெயரளவிற்கு கூட தண்டிக்கவில்லை என்பது தான் கொடுமையான உண்மை.


போதை மருந்து வாங்கச் சென்றவன் குற்றவாளியா? அல்லது போதை மருந்தை கேட்டவருக்கு அதை கொடுத்தவர் குற்றவாளியா? கொடுத்தவன் மிகப்பெரிய குற்றவாளி, வாங்கியவன் இரண்டாம் தர குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதை விடுத்து வாங்க வந்தவனை மட்டும் துரத்திக்கொண்டிருந்தால் போதை மருந்து விற்பனையை தடை செய்ய முடியுமா? விற்பதற்கே ஆள் இல்லையென்றால் எப்படி வாங்க முடியும். அது போலத்தான் வரதட்சணை கொடுக்க ஆளில்லை என்றால் வாங்குபவர்கள் எப்படி இருக்க முடியும். வரதட்சணை கொடுப்பவர்களை முதலில் கடுமையாக தண்டிக்க வேண்டும். பிறகு வரதட்சணை என்ற வார்த்தை கூட சமுதாயத்தில் இருக்காது.


எனவே வரதட்சணை கொடுப்பவர்களை தண்டிக்காத இன்றைய வரதட்சணை தடுப்புச்சட்ட நடைமுறை மறைமுகமாக வரதட்சணை முறையை ஆதரித்து ஊக்குவித்து சமுதாய அழிவிற்கு வழிவகுக்கிறது. அது போல நகரத்து வாழ் மேல்தட்டு வர்க்கப் பெண்கள் வரதட்சணையை கொடுத்து அதனை சமூகநடைமுறையில் ஊக்குவித்து வருவதால் கிராமப்புற ஏழைப்பெண்கள் நகரத்துப் பெண்களைப் போல வரதட்சணை கொடுக்கமுடியாமல் நசுக்கப்படுகிறார்கள்.


இன்னும் சொல்லப்போனால் நகரத்துப் படித்த பணக்காரப்பெண்கள் வரதட்சணை கொடுமையை சமுதாயத்தில் வளர்க்க ஆண்களை ஒரு கருவியாகப்பயன்படுத்தி கிராமத்து ஏழைப்பெண்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். வரதட்சணை தடுப்புச்சட்டமும் அதற்கு துணையாக வரதட்சணை கொடுப்பவர்களை தண்டிக்காமல் பெண்களுக்கெதிராக நடக்கும் இந்த சமுதாயக் கொடுமையை உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது.


இதுவரை காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டுள்ள வரதட்சணை கொடுக்கல் வாங்கல் புகார்களில் எத்தனை வழக்குகள் வரதட்சணை கொடுத்தவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன? நீதிமன்றங்கள் வரதட்சணை கொடுத்தவர்கள் எத்தனை பேரை தண்டித்திருக்கின்றன? இத்தனைக்கும் அனைத்து வரதட்சணை தொடர்பான புகார்களிலெல்லாம் புகார் கொடுப்பவரே தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக எழுதித்தருகிறார்கள்.

அவர்களை தண்டிப்பதில் என்ன தயக்கம்? அதற்கு என்ன காரணம்? இந்த சமூகக் குற்றம் தொடர்ந்து நடக்கவேண்டும் என்பது தான் நோக்கமா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏழைப்பெண்களுக்கெதிராக இந்த அநீதியை நகரத்துப் பெண்கள்
செய்துகொண்டிருப்பார்கள்? வரதட்சணை கொடுப்பவரையும் கடுமையாக தண்டிக்காமல் இருக்கும் வரை எத்தனை வரதட்சணை தடுப்புச் சட்டங்களும், பெண்கள் பாதுகாப்புச்சட்டங்களும் இயற்றினாலும் அவை அனைத்தும் வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாக மட்டுமே இருக்கும்.

இந்த குறைபாடுடைய வரதட்சணை தடுப்புச்சட்டம் அது இயற்றப்பட்டதற்கான நோக்கத்தைத்தான் செய்யமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால்
இதில் இருக்கும் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்த குறைபாடுடைய சட்டங்களை நகரத்து படித்த யுவதிகள் தங்களின் சுயலாபத்திற்காக அப்பாவிகளை பழிவாங்கும் ஆயுதமாக கையில் எடுத்துக்கொண்டு திரிவது தான் சொல்லமுடியாத கொடுமை. இந்தக் கொடுமையையாவது இந்த சட்டங்கள் தடுத்து நிறுத்தினால் சரிதான்.



Wednesday, November 25, 2009

நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலம்


Dinamalar: நவம்பர் 26,2009


ஐதராபாத் : மனைவியின் பேச்சை கேட்டு போலீஸ் தொல்லைக்கு ஆளான கணவனுக்கு மனித உரிமை கமிஷன் கைகொடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வேணுகோபால் கிருஷ்ணா. இவர் இங்குள்ள ரயில்வே பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மனைவியுடன் தகராறு ஏற்பட்டு, பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போதும், மனைவி மூலம் அவருக்கு பிரச்னைகள் வந்து கொண்டிருந்தன. சமீபத்தில் மாநில மனித உரிமை கமிஷனிடம் அவர் ஒரு புகார் அளித்துள்ளார்."ஐந்து ஆண்டாக நான் மனைவியை பிரிந்து வாழ்கிறேன். என் மீது அவர் தொடுத்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை நான் எதிர்கொண்டு வருகிறேன்.

ஆனால், உள்ளூர் போலீஸ் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை இருந்து வருகிறது.
இவர்களின் தொல்லை காரணமாக நான் தெருத்தெருவாக திரிய வேண்டிய நிலை உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று மனுவில் வேணுகோபால் கூறியுள்ளார்.புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுபாஷன் ரெட்டி, "திருமணத் தகராறுகளில் தலையிடவேண்டாம்' என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.