இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Culture. Show all posts
Showing posts with label Culture. Show all posts

Saturday, July 24, 2010

மனித இனத்தில் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் அதிசயம்!

மனித இனத்தில் மட்டும் நடக்கும் அதிசயம்!

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

திருச்சி : திருச்சி அருகே உள்ள இனாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தனம். இவர்களுக்கு சஞ்சய் குமார் (3 1/2), கணேசன்(1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனம், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகள் இரண்டு பேரையும் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தனத்தை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

= = = = = = = = = = = =


உயிரினங்களில் மனித இனம்தான் பரிணாமத்தில் உயர்நிலையில் இருக்கிறது என்றும் அதிலும் குறிப்பாக “தாய்மை” என்ற பண்பிற்காக பெண்களுக்கு எல்லா விஷயத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல சிறப்புச் சட்டங்கள் மகளிருக்கென இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத்தாய்மைக்கு பெண்களால் உண்மையாகவே மரியாதை கொடுக்கப்படுகிறதா?

இந்தப் படங்களில் பாருங்கள். இதற்குப் பெயர் தாய்மையா அல்லது மனித இனத்தில் இருப்பது தாய்மையா?



விலங்குகளிடம் இருக்கும் “தாய்மை” என்ற புனிதத்தன்மை மனித இனத்திடம் மறைந்துவரும்போது ஆண், பெண் என்ற பேதம் காட்டி இல்லாத தாய்மையைக் காரணமாகவைத்து சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்?





Wednesday, June 30, 2010

கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

மென்யான மனம் படைத்தவர்கள் இந்த செய்தியை தயவு செய்து படிக்கவேண்டாம். படித்தால் உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படும்!


கலியுக கண்ணகி:
பெண் தீக்குளிக்க முயற்சி: திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
ஜூலை 01,2010 தினமலர்

திருப்பூர்: திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று விசாரணைக்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்; இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வீரபாண்டி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ஜீவா; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகனும், மகளும் உள்ளனர்; இதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணையன்; பனியன் தொழிலாளி. இவரது மனைவி கலா (30). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பக்கத்து வீடுகளில் வசித்த ஜீவாவுக்கும், கலாவுக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ள உறவாக மாறியது. ஜீவா மனைவி சித்ராவுக்கு, தன் கணவர் மீதும், கலா மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த சித்ரா சத்தம் போட்டுள்ளார்; கலாவுக்கும் சித்ராவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி ஜீவாவும், கலாவும் காணாமல் போய்விட்டனர். சித்ராவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டறிய முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையத்தில் இருந்த இருவரையும், சித்ராவின் உறவினர்கள் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளனர். தன் கணவர் ஜீவாவை மீட்டுத்தருமாறு, அவரது மனைவி சித்ரா திருப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கலா மற்றும் ஜீவா இருவரையும் அழைத்து வந்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று விசாரித்தனர். அப்போது, தனது நான்கு பிள்ளைகளுக்காக, கலாவை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கண்ணையன் அழைத்தார். இதற்கு மறுத்த கலா, சித்ராவின் கணவர் ஜீவாவுடன் வாழ விரும்புவதாகவும், தனது நான்கு குழந்தைகளையும் அவர் காப்பாற்ற சம்மதித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மீண்டும் கண்ணையனுடன் சேர்ந்து வாழ்ந்தால், ஊர் கேவலமாக பேசும். சித்ராவும் அவரது உறவினர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி தாக்கவும் செய்வர் என்று கலா கூறியுள்ளார். இப்புகாரை விசாரித்த மகளிர் போலீசார், கலாவை அவரது கணவர் கண்ணையனுடன் சேர்ந்து வாழவும், ஜீவாவை, சித்ராவுடனும் சேர்ந்து வாழவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கலா, ஸ்டேஷனுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். ஸ்டேஷன் முன்பகுதியில் நின்று கொண்டு, வீட்டில் இருந்து பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகளிர் போலீசார், கலாவை தடுத்து, மண்ணெண்ணெய் பாட்டிலை கைபற்றினர். மீண்டும் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று பேச்சு நடத்தினர். டி.எஸ்.பி., ராஜா ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை நடத்தினார். தற்கொலைக்கு முயன்ற கலா மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு வந்த பெண், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம், திருப்பூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

===================

நல்ல வேளை. இந்திய வரதட்சணைப் பெண் தெய்வங்கள் (IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act) உள்ளே புகுந்து குழந்தைகளின் நலனுக்காக ஓடிப்போன மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய அந்த அப்பாவிக் கணவனை பொய்வழக்கு மூலம் தண்டிக்கவில்லை. அதுவரை சந்தோஷம்தான்.




Wednesday, April 14, 2010

மருமகள் கொலைசெய்தால் குற்றமா? என்று திருத்துவார்களோ சட்டத்தை!

கள்ளக்காதலை தட்டிக்கேட்கும் மாமனாரையோ அல்லது கணவரையோ மருமகள் கொலைசெய்தால் அது குற்றமா? அது குற்றமில்லை என்று பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஏன் இன்னும் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்று தெரியவில்லை!

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

=========================================================

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.
=========================================================

பொய் வரதட்சணை வழக்குகள் போடுவதெல்லாம் மிகவும் பழையமுறையாகிக்கொண்டுவருகிறது. இந்தக் காலத்தில் வரதட்சணை சட்டங்களை திருத்தி மருமகள்களுக்கு மிகச்சிறிய சலுகை கொடுப்பதைவிட மருமகள் கொலைசெய்தால் கூட அது குற்றமில்லை என்று அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் பல மருமகள்களுக்கு உதவியாக இருக்கும். முற்போக்காக சிந்தித்து மகளிர் ஆணையம் இந்தியப்பெண்களுக்கு முழுச்சலுகைகளை வாங்கித்தருவார்களா?

=======================================================


தினமலர் ஏப்ரல் 15,2010

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயவேல்ரெட்டி(68). அதே பகுதியில் இயங்கி வரும் ரைஸ்மில் மற்றும் பல வணிக வளாகங்களின் உரிமையாளராக இருந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் சாலையில் உள்ள ரைஸ்மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மறுநாள் காலை சாலையோர முட்புதரில், அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., நாகஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில்,ஜெயவேல் ரெட்டியின் மூத்த மகன் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(37).ஆரம்பாக்கம் அருகே உள்ள எடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(37).சொந்தமாக விவசாய டிராக்டர் வைத்துள்ளார். வேலை காரணமாக ஜெயவேல் ரெட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து போன சீனிவாசனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ள காதல் உருவானது. இதை அறிந்த ஜெயவேல் ரெட்டி இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில், ஜெயவேல் ரெட்டி, தனது சொத்துகளில் பாகம் பிரித்த போது, மகன்களை விட, மகள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால், கள்ள காதல் தொடர்பாக கோபமாக இருந்த புவனேஸ்வரி மேலும் ஆத்திரமடைந்தார்.

இதை காரணம் காட்டி, சொத்துகளை பெற்று தனி குடித்தனம் செல்ல புவனேஸ்வரி முயன்றார். இதற்கும் ஜெயவேல் ரெட்டி தடையாக இருந்துள்ளார். இதையடுத்து, சீனிவாசன் உதவியுடன் ஜெயவேல் ரெட்டியை கொலை செய்ய, புவனேஸ்வரி திட்டம் தீட்டினார். இதன்படி, சீனிவாசன் நண்பரான எடகண்டிகை ஸ்ரீதர் உதவியுடன், திருவொற்றியூர் ஷேக் பாரி(35) என்பவரை அணுகினர்.அவர், கொலை திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக, 46 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இதன்படி, ஷேக் பாரி கூட்டாளிகளான பிரபாகரன்(30), பாலாஜி(25) ஆகியோருடன் சேர்ந்து ஜெயவேல் ரெட்டியை கொடூரமாக கொலை செய்தனர், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து புவனேஸ்வரி, சீனிவாசன், அவரது நண்பர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஷேக் பாரி, பிரபாகரன்,பாலாஜி ஆகியேரை தேடி வருகின்றனர்.


Sunday, March 07, 2010

குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் சேர்த்து திருமணம் செய்யலாமா?

பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றினால் சில பெண்கள் அதனைப் பயன்படுத்தி எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறார்கள்.


மாமனார் வீட்டில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை
தினமலர் மார்ச் 08,2010

புதுடில்லி: "மாமனார் வீட்டு சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமையில்லை' என, டில்லி கோர்ட் தெரிவித்துள்ளது.அரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியை, தனது மாமனாரின் சொத்தில் பங்கு கேட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டில்லி செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மது ஜெயின் கூறியதாவது:குடும்ப வன்முறை சட்டம் போன்றவை பெண்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டது. இச்சட்டத்தை வைத்து பெண்கள் யாரையும் மிரட்டக் கூடாது. அதற்கு கோர்ட்டை ஒரு கருவியாகவும் பயன்படுத்தக்கூடாது.

மாமனாரின் சொத்தில் பங்கு கேட்க மருமகளுக்கு உரிமை இல்லை. தேவைப்பட்டால் பராமரிப்பு செலவை கணவனிடமோ, மகன் மற்றும் மகளிடம் மட்டுமே கேட்க உரிமை உண்டு.மனு கொடுத்துள்ள பெண், அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவர், தனியார் பள்ளியில் நூலகராக உள்ளார். இருவருடைய சம்பளமும் ஏறக்குறைய 20 ஆயிரமாக உள்ளது. இதை வைத்து அவர்கள் நல்லபடியாக குடும்பம் நடத்தலாம்.அதை விட்டுவிட்டு மாமனார் சொந்த பணத்தில் கட்டிய வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமையில்லை. இந்த வீட்டை கட்டியதில் இவருடைய கணவரின் பங்கு ஏதும் இல்லை.அதுமட்டுமல்லாமல் திருமணமான புதிதில் ஓரிரு நாள் மாமனார் வீட்டுக்கு சென்றதோடு சரி. அதன் பிறகு அந்த பக்கம் திரும்பிக் கூட பார்த்திராத இந்த மருமகள், அந்த வீட்டில் பங்கு கேட்பதற்கு உரிமை கிடையாது. (மருமகள் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தால் மாமனார் இந்நேரம் வரதட்சணை கொடுமை சட்டத்தில் சிறையில் அல்லவா இருந்திருப்பார்!) இவ்வாறு நீதிபதி ஜெயின் கூறியுள்ளார். மனுவையும் தள்ளுபடி செய்து விட்டார்.

=================

நல்லவேளை இந்த மருமகள் குடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் தாலி கட்ட சொல்லுங்கள் என்று சொல்லி பிறகு சொத்தில் பங்குகேட்கலாம் என்று நினைக்கவில்லை. காசுக்காக சட்டத்தின் மூலம் எதைவேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறது.




Sunday, February 14, 2010

தாய்மையும் பெண்மையும்

இனிவரும் காலங்களில் தாய்மை பெண்மை என்ற குணங்களே இல்லாத ஒரு உயிரினமாகத்தான் மனித இனம் இருக்கும் போலிருக்கிறது.


நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து சக்திவேல் (8) என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், சரஸ்வதிக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில ஆண்டில் சரஸ்வதி இறந்தார். அதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் எம்.களத்தூரை சேர்ந்த அமலா (23) என்ற பெண்ணை, நேரு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராகவி (3), கவின் (2) என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
கணவர் நேரு தனது முதல் மனைவியின் குழந்தையிடமும், தத்தெடுத்த மகனிடமும் அதிக அளவில் பாசம் வைத்திருந்தார். மேலும், அவர்கள் பெயரில் கணிசமான அளவு பணமும் டிபாசிட் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அமலா, "குழந்தைகளை கொன்று விட்டால் தனது கணவர் தனது குழந்தைகளிடம் பாசம் காட்டுவார்' என எண்ணி அதை செயல்படுத்த முடிவு செய்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு நேரு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஷாலினி ஆகியோரை ஒன்றன்பின் ஒன்றாக, வீட்டுக்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து அமலா கொலை செய்தார். "யாருக்கும் தன்மேல் சந்தேகம் வரக்கூடாது' என்பதற்காக தனது குழந்தை கவினை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்வதாக கூறிச் சென்றுவிட்டார்.

காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த அமலா, வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக தனது கணவர் நேருவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதற்குள் செய்தி பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாசில்தார் குப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் சுப்ரமணி, லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமலா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேற்கண்ட உண்மை வெளியானது. அதை தொடர்ந்து அமலாவை, போலீசார் கைது செய்தனர். சித்தி, இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
===============================

இதுபோன்ற பெண்களுக்குத்தான் பெண்கள் நலத்துறையும் பெண்கள் சங்கங்களும் பெண்ணுரிமை என்ற பெயரில் புதிய சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்மையும் தாய்மையும் இல்லாத உயிரினங்களுக்கு எதற்கு சட்டங்களில் சிறப்புரிமை?

தண்ணீரில் மூழ்கடித்து குழந்தைகளைக் கொன்றது மனிதத் தாய்,
தண்ணீரில் மூழ்காமல் குழந்தைகளைக் காப்பாற்றும் இந்த அற்புதத்தாய் !

Swallow - mother, feeding the baby bird on fly photo

தாய்மைக்கு அர்த்தம் இனி விலங்கினங்களில் மட்டும் தான் காணமுடியும்! ஏனென்றால் அவைகளின் சமுதாயத்தில் தான் கொடூரமான ஒருதலைபட்டசமான சட்டங்கள் என்னும் குடும்ப அழிப்பு முறை கிடையாது. பெண்ணுரிமை என்று பேசி குடும்பங்களை அழிக்கும் சதிகாரக் கூட்டமும் கிடையாது.




Tuesday, February 09, 2010

முதியோர்களின் வாழ்க்கை மருமகள்களின் கையில்

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை தண்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக இன்று செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது. நாடு எப்படிப்பட்ட கொடுமையான நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. பெற்றவர்களைக் கூட பிள்ளைகள் கவனிக்காமல் போய்விட்டார்கள்.

சில பிள்ளைகளுக்கு உண்மையாகவே பெற்றோர் மீது பாசமில்லாமல் போயிருக்கலாம். ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் தங்களுக்குத் திருமணமானவுடன் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து பெற்றோரை வீட்டை விட்டு விரட்டும் அவல நிலையில் அடிபணிந்து கிடக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் மருமகள்களுக்கு மட்டும் கொடுத்துள்ள சிறப்பான தவறான சட்டங்கள். ஆம். வயதான பெற்றோரை பராமரிக்கும் ஆண்களுக்கும், பெற்றோர்களுக்கு பணஉதவி செய்யும் ஆண்களுக்கும் அவர்களது மனைவியரால் வரதட்சணை சட்ட மிரட்டல் விடப்பட்டு அந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது. இந்த கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் பணஉதவி செய்யும் ஆண்கள் அவர்களது வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைசெய்ததாக மருமகள்களால் பொய்வழக்குப் போடப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

அதனால் இந்தியாவில் வயதான பெற்றோர்கள் தங்களது மகன்களால் புறக்கணிக்கப்படவேண்டும் அல்லது மகனின் ஆதரவு கிடைத்தால் மருமகளால் பொய்வழக்குப் போடப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

"தாய்க்குப் பின் தாரம்" என்றால் ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் தாரம் வயதானதாயின் இடத்திலிருந்து ஒரு தாய் போல குடும்பத்தை கவனித்து குடும்பத்திலுள்ள வயதான பெற்றோர்களை ஆதரித்து அன்பாக நடக்கவேண்டும். தனது கணவர் ஒழுங்காக தனது பெற்றோரை பராமரிக்கத் தவறினாலும் குடும்பத்தின் தலைவியாக தாயாக இருந்து கணவனுக்குத் தகுந்த அறிவுரை கூறி வயதானவர்களை கவனிக்கவேண்டும், கணவனின் குடும்பத்தை வழிநடத்தவேண்டும். அதனால் தான் எப்போதும் திருமணமானவுடன் கணவன் மனைவியின் வீட்டிற்கு சென்று வாழாமல், பெண்கள் எப்போதும் கணவனின் வீட்டிற்கு சென்று வாழ்வது மரபாக்கப்பட்டது. இது பெண்மையையும் மனைவி என்ற உறவையும் கவுரவப்படுத்தி சமுதாயத்தில் கொடுக்கப்படும் மரியாதை.

இப்போது இதுபோல் எத்தனை மருமகள்கள் இருக்கிறார்கள்? இந்த கலாச்சார நிலை மாறி பெற்றவர்களைக் காப்பாற்றுவதற்குக் கூட நாட்டில் சட்டம் தேவைப்படும் அவலநிலையை ஏற்படுத்திவிட்டார்கள் போலி பெண்ணடிமைவாதிகள்.

காளான்கள் போல முளைத்திருக்கும் பெண்கள் உரிமைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சதிகாரக் கூட்டம் இதை பெண்ணடிமைத்தனம் என்று பெயர் சூட்டி மனைவிக்கு சமுதாயத்தில் உள்ள மரியாதையை அழித்து குடும்பத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டிய மருமகளை குழி பறிக்கும் ஓநாயாக மாற்றி முதியவர்களை தெருவில் அலையவிட்டு குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இது தெரியாத அப்பாவி மருமகள்கள் தானும் அழிந்து பல குடும்பங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மேலும் தவறான பல மருமகள் சார்பு சட்டங்களைப் போடுவதை விட உறவுகளுக்கிடையே அன்பை வளர்க்க முயற்சி செய்யவேண்டும். ஆனால் இந்திய நாட்டில் இதுவரை குடும்பங்களை அழிக்கத்தான் பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். அந்த சட்டங்களால் ஏற்பட்ட மற்றொரு அவலநிலை தான் இன்று பெற்றவர்களைக் காப்பாற்ற மற்றொரு சட்டம் இயற்றும் இழிநிலை. விலங்கினத்தை விட மோசமாக மனிதர்களை இழிபிறவிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் மனித சட்டங்கள் தான் IPC498A, Domestic Violence Act போன்ற சட்டங்கள்.

பெற்ற தாய் தந்தையை கண்ணீர் சிந்தவைக்கும் நாடு என்றுமே உருப்படாமல்தான் போகும்.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு அரசு 'செக்!'
தினமலர் பிப்ரவரி 10,2010


விருதுநகர்:பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு அரசு "செக்' வைத்துள்ளது. சமூக நல அலுவலரிடம் முறையிட்டால், ஜீவனாம்சம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டம்: 60 வயதான முதியவர்களை பிள்ளைகள் பராமரிப்பு செய்து கவனிக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசு 2007ம் ஆண்டு பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல வாழ்வு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இது உடனடியாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, தமிழக அரசு இந்த சட்டத்திற்கான செயல் வடிவம் தயாரித்துள்ளது. இதற்காக, கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்படவுள்ளது. இவர்களை கண்காணிக்க, மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது:
60 வயது நிரம்பியவர், தனது சம்பாத்தியத்தில், தேடி வைத்துள்ள சொத்துக்களால், தன்னை பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் போது, ஜீவனாம்சம் பெற தகுதியுடையவராகிறார். 18 வயது நிரம்பிய தனது மகன், மகள் அல்லது உறவினர் ஆகியோரிடம் ஜீவனாம்சம் கேட்கலாம். முதியவர் இறந்த பின், அவரது சொத்துக்கு யார், யார் வாரிசாக வருகிறார்களோ அவர்கள் அடையும் சொத்து விகிதப்படி, அனைவரும் ஜீவனாம்ச தொகையை கொடுக்க வேண்டும். ஒரு முதியவருக்கு குழந்தைகள் இல்லை என்றால், அடுத்தபடியாக அவரது சொத்துக்கு வாரிசாக வரும் உறவினர்கள், நல்ல நிலையில் இருந்து சொத்துக்களை பெறாவிட்டாலும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும். ஜீவனாம்சம் தர மறுப்பவர்களுக்கு, சட்டப்படி ஐயாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனை வழங்க முடியும். அதிக பட்சமாக, முதியவர் ஒருவருக்கு, மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஜீவனாம்சம் பெற முடியும்.

சமூக அலுவலர்கள் நியமனம்:
பெற்றோர், முதியோர் பராமரிப்பு நல வாழ்வு சட்டத்தின் பராமரிப்பு அலுவலராகவும், செம்மைபடுத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் சமூக நல அலுவலகத்தில் இச்சட்டத்தின் படி, ஜீவனாம்சம் பெற விண்ணப்பிக்கலாம். அதுதவிர, முதியவர் சார்பாக தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் மனு கொடுக்கலாம்.

நடவடிக்கை:
மனுவை பெறும் சமூக நல அலுவலர்கள் முதியோர்களின் வாரிசுகளை அழைத்து, பெற்றோரை பராமரிப்பு செய்ய கவுன்சிலிங் நடத்துவர். இதில், பிள்ளைகள் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஜீவனாம்சம் பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான குழுவும் அமைக்கப்பட உள்ளது. இதில், கலெக்டர் தலைவராகவும், சமூகநல அலுவலர், ஆர்.டி.ஓ.,தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த குழு, பெற்றோர், முதியோர் நல வாழ்வு சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர்.

தென் மாநிலங்கள் ஆர்வம்:
மத்திய அரசின் இந்த சட்டத்தை, தென் மாநிலங்கள் மட்டுமே ஆர்வம் காட்டி செயல்படுத்த முன் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில், இந்த சட்டம் அமலுக்கு வந்துள் ளது. தற்போது, தமிழ்நாடு, கேர ளா, ஆந்திர மாநிலங்கள் இந்த சட்டத்தை செயல்படுத்த முன் வந்துள்ளன.

Thursday, December 31, 2009

மனைவியருக்கு மட்டும் அரசாங்கத்தின் புத்தாண்டு சிறப்புப் பரிசு!

விவாகரத்து ஆன பெண்களுக்கும் பென்ஷன்

தினமலர் ஜனவரி 01,2010

புதுடில்லி: விவாகரத்து ஆன பெண்கள் பயன் பெறும் வகையில், அவர்களையும் விதவை பென்ஷன் திட்டத்தில் டில்லி அரசு சேர்த்துள்ளது. டில்லி மாநில அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கி வருகிறது. 2007ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் 33 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர். நம்பிக்கை இழந்த நிலையில் நிறைய பெண்கள் உள்ளனர். அவர்களில், விவாகரத்து ஆன விதவைகள், குடும்பத்தில் இருந்து பிரிந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவர்.

இவர்களின் நிலையை பரிசீலித்த மாநில அரசு, அவர்களையும் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்தது. அதன்படி, விவாகரத் தான ஏழை பெண்கள் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் பெற தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது. இதற்கு தகுதியாக அவர்கள் டில்லியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்து இருக்கவேண்டும். வயது வரம்பாக 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வேறு எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் பென்ஷன் பெறாதவர்களாக இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளது. இவர்கள் பென்ஷன் பெற்று 60 வயதை அடையும் போது, தானாகவே முதியோர் பென்ஷன் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று அறிவித்துள்ளது.

====================================

ஆகா! என்ன அருமையான புத்தாண்டுப் பரிசு!

ஒரு பக்கம் குடும்பங்களை சிதைக்கும் தவறான சட்டங்களான IPC 498A, Dowry Act, Domestic Violence Act போன்றவற்றை எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் பெண்கள் கையில் கொடுத்து விட்டு அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்திப் பொய் புகார் கொடுத்த பிறகு எந்தக் கணவர் இது போன்ற மனைவியுடன் சேர்ந்து வாழ நினைப்பார்.


பிறகு இவர்களுக்கு கணவனால் கைவிடப்பட்ட அபலைப்பெண் என்று சிறப்பு அந்தஸ்த்து வழங்கி மாதாந்திர உதவித்தொகை வழங்க முடிவு செய்திருப்பது எவ்வளவு ஒரு பெரியமனதுடன் செய்யும் செயல். அதாவது கணவர் உயிரோடு இருக்கும் போதே பெண்களை விதவைகள் லிஸ்ட்டில் சேர்த்து அவர்கள் திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா அல்லது விதவையா என்று எதிலுமே இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளி பிறகு அவர்களைப் பார்த்து பரிதாபப்படும் செயலுக்குப் பெயர் தான் "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது" என்று சொல்லப்படும் பழமொழியின் அர்த்தமோ?


விரைவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.




Tuesday, December 22, 2009

நினைத்ததை சாதித்துவிட்ட அரசாங்கம்

கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு
தினமலர் டிசம்பர் 23,2009

கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவை அடியோடு அறுத் துக்கொள்ள 1,225 தம்பதிகள் வழக்கு தொடுத்து "டைவர்ஸ்' பெற காத்திருக்கின்றனர்.

பொருளாதார வேட்கையும், நாகரீக மோகமும் நகர வாசிகளின் வாழ்க் கையை ஏறத்தாழ இயந்திர மயமாகவே மாற்றி விட்டன. முன்னோர் களால் காலங்காலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. குடும்பத்தை கடந்து, மனித உறவுகளை உறுதிப்படுத்துவதாக தற்போதைய நாகரீக வாசிகளின் வாழ்க்கை முறை இல்லை. சமூகம் சார்ந்த வாழ்க்கை தடம் புரண்டு, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை தலைதூக்கி உள்ளது. "அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை' என, வெறும் வரவு - செலவு கணக்காக மட்டுமே உறவு முறைகள் பார்க்கப்படுகின்றன. விளைவு, தனிக்குடும்ப வாழ்க்கை; அதனால், தலைதூக்கும் பிரச்னைகள். தகராறுகளை தங்களுக்குள் பேசி தீர்த்து கணவன் - மனைவி உறவை தொடர முடியாமல் கோர்ட் படியேறும் அவலம். பெற்றோர், அக்காள், தங்கைகளின் உறவை அறுத்து தனிக்குடித்தன முறைக்கு பலரும் மாறிவிட்டதால், சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டவும், அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் அருகில் பெரியவர்கள் இல்லை.


உடையும் உறவுகள்:
கூட்டுக்குடும்ப முறையில் இருக்கும் சுய கட்டுப்பாடுகள், தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினரிடம் குறைந்து வருவதை, கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் உறுதிப்படுத்து கின்றன. வேலைக்கு செல்லும் கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ, தமது துணை தவிர்த்து பிறருடனான கள்ள உறவு, நடத்தையில் சந்தேகம், பாலியல் உறவில் நிலவும் மனக்குறைகள் என, பல விதமான காரணங்களுடன் அதிக வழக்குகள் கோர்ட் டுக்கு வருகின்றன. கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். கோவையில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் உள்ள போதிலும், மேலும் ஒரு நீதிமன்றம் தேவை, என்ற அளவுக்கு வழக்குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


விவாகரத்து தவிர, ஜீவனாம்சம் கேட்பு, குழந்தை பராமரிப்பு குறித்த வழக்குகளும் அதிகம் தாக்கலாகின்றன. கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மற்ற எல்லா கோர்ட்களையும் விட, குடும்ப நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகளே அதிகம். கடந்த 2008ல் இக்கோர்ட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை விவாகரத்து கோரி 1,139 வழக்குகள் பதிவாகின. ஆனால், இந்த ஆண்டு, இது வரை 1,225 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதமும் 100 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட் டுக்கு வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர்.


கணவரின் கள்ளத்தொடர்பு, மாமனார் - மாமியார் "டார்ச்சர்', தனிக்குடித்தனம் நடத்த வராதது, போன்ற காரணங்கள் விவாகரத்து கோரும் பெண்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதேபோல், மனைவி நடத்தை மீது சந்தேகம், கள்ள உறவு, ஈகோ உள்ளிட்ட காரணங்களை ஆண்கள் முன் வைக்கின்றனர். இளம்தம்பதிகள் பெரும்பாலும், விவாகரத்து தீர்மானத்துடன்தான் கோர்ட் படியேறுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கும் முன், கணவன் - மனைவிக்கு தனித்தனியே "கவுன்சிலிங்' நடத்தி, "முடிவை மாற்ற' அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனாலும், முடிவில் மாற்றமின்றி "டைவர்ஸ் ஒன்றே குறி' என்ற ரீதியில் உறுதியாக உள்ளனர். இதனால், வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படுகின்றன.


மற்ற துறைகளில் பணியாற்றுவோரை காட்டிலும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் விவகாரத்து மனு தாக்கல் செய்கின்றனர். சிலர் திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இறங்கிவிடுகின்றனர். மேற்கண்ட காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கோவையில் மட்டுமல்லாது, பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, திருப்பூர் பகுதியிலுள்ள சப்-கோர்ட்களிலும் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் கோவையில் மேலும் ஒரு குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.


கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது:
நாகரீக உலகில் மாறி வரும் குடும்ப கலாசார போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்கு துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்னை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற "ஈகோ' வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம். விவகாரத்து பெறுவோர், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. இதனால், சமூகச் சூழலும் மாறும் அபாயமிருக்கிறது. இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.


==================================



கூட்டுக்குடும்பங்கள் இல்லாததால் அறிவுரை கூற வயதில் மூத்தவர்கள் வீட்டில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பொய் வரதட்சணை கேசுகளில் சிக்கி அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவில் இப்படி குடும்பங்கள் அழிந்து சின்னா பின்னமாவதற்கு முக்கிய காரணம் பெண்களின் மாறிவரும் கொடுர மனநிலையும் அதைத் தூபம் போட்டு வளர்க்கும் அரசாங்கமும், தவறான சட்டங்களும், காவல் துறையும், சில வழக்கறிஞர்களும், நீதித்துறையும் தான்.


ஒரு பெண் தவறாக சட்டத்தைப் பயன்படுத்தி தனது கணவரின் குடும்பத்தின் மீது அபாண்டமான பழிகளை போடும் போது அதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராயாமல் தங்களுக்குக் காசு கிடைக்கிறது என்பதற்காக அப்பாவிகளின் குடும்பத்தைக் கைது செய்வது காவல் துறை. அதற்குப் பொய்யான புகார்கள் எழுதித்தருவதும் சில வழக்கறிஞர்கள் தான்.

ஒரு பெண் காவல்நிலையத்தில் வந்து புகார் கூறினால் அது நம்பத்தக்கதா என்று கூட காவல் துறை கவலைப்படுவதில்லை. அதற்குப் பிறகாவது ஒழுங்கான விசாரணை செய்து சரியான அறிக்கையும் அவர்கள் நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

ஒரு பெண் காவல் நிலையத்தில் கணவருக்கெதிராகவும் அவரது குடும்பத்திற்கெதிராகவும் பொய்யான புகார் கொடுத்தபிறகு எந்தக் கணவர் அந்தப் பெண்ணுடன் வாழ நினைப்பார்?

இந்தியத்தலைமை நீதிபதி இந்த அவலத்தை பல முறை எடுத்துச்சொல்லியும் அரசாங்கம் அதற்குச் செவி சாய்க்கவில்லை. ஏனென்றால் பொய் வரதட்சணை கேசுகளை கணக்குக் காட்டி பெண்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லி வெளிநாடுகளில் பிச்சை எடுத்து பல நிறுவனங்கள் தொழில் நடத்திக்கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது அப்பாவிப் பெண்களை இந்த அழிவிலிருந்து காப்பாற்ற யாருக்குத்தான் மனம் வரும்?

குடும்பங்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு தேவை பணம் என்பது மறைந்து குடும்பங்களை அழித்து பணம் தேடும் நிலையில் அரசாங்கம் மாறியிருக்கிறது.

வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தேவை என்ற நிலை மாறி நீதிமன்றங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு வருமானம் கிடைப்பதற்காகவே பல வழக்குகள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

வழக்குகள் வேண்டும் என்பதற்காக ஒருவரை குற்றம் செய்யுமாறு சொல்லமுடியாது அதனால் குடும்பங்களை சிதைத்து வழக்குகளை எளிதாக உருவாக்கமுடியும். பொய் வரதட்சணை கேசுகளை போடச் செய்வதன் மூலம் கிரிமினல் நீதிமன்றத்திற்கு வழக்குகள் கிடைக்கும். ஒரு பெண் பொய் கிரிமினல் வழக்குப் போட்ட பிறகு தானாக அடுத்த கட்டமான விவாகரத்து வழக்கு தொடரும். இதன் மூலம் சிவில் நீதிமன்றங்களுக்கும் வருமானம்.

வழக்கறிஞர்களுக்கு சொல்லவே தேவையில்லை வருமானம் கிடைக்கத் தேவை ஏதாவது ஒரு வழக்கு (Proceedings against actor Vijay). காவல்துறைக்குத் தேவை அப்பாவிகளை கைது செய்ய ஏதாவது ஒரு காரணம். அதன் மூலம் கைது, ஜாமின், விசாரணை என தொடர்ச்சியான வருமானம் இருக்கிறது.

பார்த்தீர்களா நாட்டில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும், ஊழல் செய்பவர்களையும், தீவிரவாதிகளையும் தேடிப்பிடித்து கடமையாற்றுவதை விட பல குடும்பங்களை சிதைப்பது மிகவும் எளிது. அதன் மூலம் வழக்குகளை உருவாக்கி அரசு இயந்திரத்தை இயக்கி பணப்புழக்கத்தை உருவாக்குவதும் எளிது.

எந்தவகையான கடுமையான உழைப்பும் காவல் துறைக்கோ, நீதித்துறைக்கோ தேவையில்லை. அதனால் தான் இந்தக் குடும்ப அழிப்புத் தொழில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் குடும்பபங்களை அழிப்பதே தேசியத் தொழிலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தொழிலில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் நேரம் போதாது, எழுதுவதற்கு இந்த இணைய தளமும் போதாது.

இதன் மூலம் அனைவருக்கும் ஒருவகையில் வருமானம் இருக்கிறது. அது குடும்பங்களை அழித்து, குழந்தைகளை அனாதையாக்கி நடுத்தெருவில் நிற்கவைத்துக் கிடைத்தாலும் கவலையில்லை. ஏனென்றால் அழிவது உங்களுடைய குடும்பமும் குழந்தைகளும் தானே.


அரசாங்கத்தின் தவறான சட்டங்கள் பெண்களை தவறான பாதையில் செல்லத் தூண்டுகிறது. அப்படியே பெண்களுக்கு அது தெரியவில்லை என்றாலும் பல போலியான வழக்கறிஞர்கள் அவர்களைத் தூண்டி பொய் வழக்குகளை போடவைக்கிறார்கள். இது போன்ற பொய்வழக்குப் போடும் பெண்களுக்கு இந்திய சட்டத்தில் எந்த வித தண்டனையும் கிடையாது. இதைப் பார்க்கும் பல பெண்கள் தாங்களும் ஏன் இதுபோல செய்யக்கூடாது என்று எண்ணி ஏதோ புரட்சி செய்வதாக நினைத்து பல அற்பக் காரணங்களுக்காக பொய்கேசு போடுவதும், விவாகரத்து வேண்டும் என்றும் இப்போது திரிந்துகொ
ண்டிருக்கிறார்கள்.

இது போன்ற வழக்குகளில் சிக்கும் அப்பாவி குழந்தைகளின் அவலநிலைக்கு காரணமான தவறான சட்டமும் அதை இயற்றி செயல்படுத்துபவர்களும் ஒரு நாள் இந்தப் பாவங்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். நீங்கள் இன்று செய்தித்தாள்களில் படிக்கும் ஆந்திர மாநிலக் கலவரம் கூட அந்தப் பாவங்களின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம் . இன்னும் எத்தனேயோ? அப்பாவிகளின் சாபம் தவறாமல் சுட்டெரிக்கும். இது வரலாறு கண்ட உண்மை.
==============================

அரசாங்கத்தால் வளர்க்கப்பட்டுவரும் குடும்ப அழிவுமுறை சட்டங்களால் பலகுடும்பங்கள் சிதைந்து கீழுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போல பல குழந்தைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் இது போல பல செய்திகளை காணும் பாக்கியம் இந்த சமூகத்திற்கு இருக்கிறது.

3 பெண்களை கொன்ற 'சைக்கோ' வாலிபர் கைது
ThatsTamil புதன்கிழமை, டிசம்பர் 16, 2009


தர்மபுரி: பெற்றோரின் தவறான நடத்தையாலும் சினிமாவின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்ட 22 வயது வாலிபர் இதுவரை மூன்று பெண்களை கற்பழித்து, கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி குண்டுலட்சுமி. வயது 36. கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர் கடந்த வாரம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, முள் புதரில் பிணமாகக் கிடந்தார்.


போலீசார் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் உப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (22), குண்டுலட்சுமியை தனது கூட்டாளிகளுடன் கற்பழித்து, கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.


வேலுச்சாமியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேலும் பல கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்பு கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


வத்தலகுண்டைச் சேர்ந்த நர்ஸ் பிரேமா, திண்டுக்கல் ஹோட்டலில் வேலைபார்த்த அழகம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பிண்ணனியில் வேலுச்சாமி இருந்துள்ளார்.


வேலுச்சாமியுடன் அவரது கூட்டாளிகளான உப்பாரப்பட்டிசேர்ந்த வெங்கடாசலம் (24), சேட்டு (19) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இளம் வயதில் பெற்றோர் பிரிந்து சென்றதும், சரியான அன்பு காட்டப்படாததுமே இந்த இளம் வயதில் வேலுச்சாமி கொடூர கொலைகளில் ஈடுபட முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்று விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறினார்.

இளம் வயதிலேயே கற்பழிப்பு மற்றும் கொடூர கொலைகளில் ஈடுபட்ட வேலுச்சாமி குறித்து விசாரணையில் தெரியவந்தவை:


'வேலுச்சாமியின் சிறுவயதில் இருக்கும் போதே அவனின் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர். தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தாய் வேறு ஒருவருடனும் சென்றுவிட்டார்.


இதனால் இளம் வயதிலேயே அக்கம் பக்கத்தவர்களால் வேலுச்சாமி ஒதுக்கி வைக்கப்பட்டான். பெற்றோரின் நடவடிக்கையால் சமுதாயத்தில் அவனுக்கு ஏற்பட்ட அவமானம் மனதில் ஆழமாக பதிந்துபோனது.


தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் மீது வரவேண்டிய கோபம் திசைமாறி ஒட்டுமொத்த பெண்களையும் சிறுவயதில் இருந்தே அவன் வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினான்.

நாளாக நாளாக அந்த எண்ணம் வலுவாகி ஒரு சைக்கோ போலவே மாறிவிட்டான். `சிவப்பு ரோஜாக்கள்', `மன்மதன்' ஆகிய சினிமா படங்களில் வரும் காட்சிகள் அவனை பாதித்துள்ளது.

வேலுச்சாமி பெண்களுடன் பழகுவது போல நடித்து காட்டுப் பகுதிகளுக்கு அழைத்து சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்யத் தொடங்கினான் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.





Saturday, December 19, 2009

மனுநீதிச் சோழனும் பெண்கள் போடும் பொய் வழக்குகளும்

தினமலர் டிசம்பர் 20,2009

புதுடில்லி:
"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.
டில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்," பவானும், நானும்
காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
==================================

100 க்கு 99 கற்பழிப்பு கேசுகள் நாட்டில் இ
ப்படித்தான் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. கடையில் ஏதோஅல்வா வாங்கி சாப்பிடுவது போல சுலபமாக பெண்கள் அப்பாவிகள் மீது பல அபாண்டமான பழிகளைப் போட்டு விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல இருக்கிறார்கள். இதை இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்திய நீதிமன்றமும் "கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது பெண்கள் பொறுப்பு தான் " என்றும், கொரியநாட்டு நீதிமன்றமும் "பெண்கள் குழந்தைகள் அல்ல, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு" என்றும் தோலுரித்துக்காட்டிவிட்டன .

ஆனால் அந்த உண்மையை ஏற்பதற்குத் தான் யாருக்கும் மனம் வரவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் இந்த நாட்டிற்கும் தான் வெகு தூரமாயிற்றே! எவ்வளவு தூரம் என்று தெரிந்து கொள்ள ஆவலகா இருந்தால் உண்மைக்காக கடைசி வரைப் போராடி அனைத்தையும் துறந்த அரிச்சந்திர மகாராஜா இன்று உங்கள் ஊரில் சிலையாக எங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள் புரியும். அதனால் தான் என்னவோ சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட நீதிநெறி வழுவாமல் இருக்க தன் மகனையே தேர்க்காலில் இட்டு தண்டனை அளித்த மனுநீதி சோழனும் நீதிமன்றத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்கவைக்கப்பட்டிருக்கிறார் போலும்!

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
விலங்குகளுக்குக் கூட சமமான நீதி வழங்கப்படவேண்டும், தவறு செய்தது தனது மகனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று எண்ணிய அந்த மாமன்னர் இப்போது இந்திய சட்டங்களும், நீதிமன்றங்களும் பெண்களுக்கு மட்டும் குறிப்பாக இளம் பெண்களுக்கு மட்டும் சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு பல அப்பாவி ஆண்களுக்கும், தாய்மார்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தினம் தினம் கண்டு வேதனையடையாமல் இருக்கவே அவர் நீதிமன்றத்திற்குள் இல்லாமல் வெளியே வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது புரிந்திருக்கும்.

பாதிக்கப்பட்டது ஒரு விலங்காக இருந்தாலும் குற்றம் செய்தவர் அதற்குச் சமமான தண்டனையை அனுபவித்து அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வலியையும் வேதனையையும் உணர வேண்டும் என்று அனைத்து உயிர்களுக்கும் சமநீதி வழங்கிய உன்னதமான நீதியரசர் வாழ்ந்த நாட்டில் இப்போது பெண்கள் அப்பாவிகள் மீது அபாண்டமான பழிகளைப் போட்டு சிறையில் அடைத்துத் துன்புறுத்தி, 6-7 ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலைந்து அதற்குப்
பிறகு கடைசியில் அந்த அப்பாவிகள் குற்றமற்றவர் என்று சொன்னால் அதுவரை அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வேதனைகள் மறைந்து விடுமா?

சட்டத்தைத்
தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளைத் துன்புறுத்தும் பெண்களுக்கு அந்த அப்பாவிகள் அடைந்த வேதனையையும், துன்பத்தையும், இழப்புகளையும், அவமானங்களையும் இன்றைய சட்டங்களும், நீதிமன்றங்களும் என்றாவது உணர்த்தியிருக்கின்றனவா? அல்லது இனியாவது உணர்த்துமா?

ஒருவரை நிரபராதி என்று சொல்வதை விட அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சரியான நீதி தரப்படவேண்டும். சட்டங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதை விட அப்பாவிகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு நீதி வழங்குவதிலும் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்த்தியவர் தான் மனுநீதிச்சோழன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனுநீதிச் சோழனுக்கு இருந்த நடுநிலைதவறாத நீதி வழங்கும் அறிவும், அனைவரையும் சமமாக சீர்தூக்கிப் பார்த்து நேர்மையாக நீதி வழங்கிய திறமையும் இன்று நாகரீகத்திலும் (?), அறிவியல்
முன்னேற்றத்திலும், தொழில்நுட்பங்களிலும் பல மடங்கு முன்னேறியிருக்கும் அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இருக்கிறதா? வெளிநாட்டிலுள்ள சட்ட நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளப் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நீதித்துறை வல்லுனர்கள் தங்கள் நாட்டிலேயே ஒரு அற்புதமான நீதியரசர் நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய முறைகள் இருப்பது பற்றி யோசித்திருப்பார்களா? நீங்களாவது யோசித்துப்பாருங்கள்.

தினம் தினம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த மனுநீதி சோழனைப் பார்த்துவிட்டு யாராவது ஒரே ஒரு நீதிபதியோ அல்லது வழக்கறிஞரோ இந்தக் கேள்வியை ஒரு முறையாவது தங்கள் மனதுக்குள்ளாவது கேட்டுப் பார்த்திருப்பார்களா?

மாமன்னர் நீதியரசர் மனுநீதிச் சோழனின் மாண்புமிக்க வரலாறு தெரியாதவர்கள் தங்களது வீட்டிலிருக்கும் மூத்தோரைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பாவம், பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் பெரியவர்கள் இருப்பதில்லை. ஒன்று மருமகளால் முதியோர் இல்லத்திற்கு விரட்டப்பட்டிருப்பார்கள், அல்லது அவளின் பொய் வரதட்சணை கேசில் சிக்கி நீதிமன்றங்களால் சிதைக்கப்பட்டிருப்பார்கள். அப்படிப் பெரியவர்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்களுக்காக அந்த வரலாறு கீழே தரப்பட்டுள்ளது.

வரலாற்றைத் தெரிந்து கொண்ட பிறகு செய்தித்தாளில் வந்துள்ள மேலுள்ள கற்பழிப்பு வழக்கு செய்தியை ஒப்பிட்டுப் பாருங்கள். இது போலத்தான் நாட்டில் பல பொய் வரதட்சணை வழக்குகளும் நீதிமன்றங்களில் கையாளப்படுகின்றன.

மனுநீதி சோழன் காலத்தில் ஒரு பசுவிற்குக் கிடைத்த நீதிகூட இன்று பலகோடி அப்பாவி ஆண்களுக்கும், வயதான தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் மனிதர்களே இல்லாத நிலவிற்கு ராக்கெட் விட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். இது எந்த வகை வளர்ச்சி? சிந்தியுங்கள்.

அன்று சூர்ப்பநகை என்னும் ஒரு பெண்ணின் தவறால் ராவணன் என்னும் ஒரு மகா பேரரசனே தன் பெருமையிழந்து, பெருஞ் சுற்றத்தையிழந்து, கடைசியில் தனது நாட்டையே இழந்தான். இன்று பல சூர்ப்பநகைகள் பொய் சொல்லி பொய் வழக்குகள் போட்டு எந்த ராஜ்ஜியத்தை வேரறுக்கப்போகிறார்களோ?

கூடுதல் செய்திகள் உங்கள் சிந்தனைக்காக


மனுநீதிச் சோழன்

சோழ நாட்டு மன்னர்களுள் மனுநீதிச் சோழன் சிறப்புக்குரிய ஓர் அரசன், அவனது மகன் வீதியில் தேர் ஓட்டிக் கொண்டு செல்லும் போது, தேரின் சக்கரத்திற்குள் அகப்பட்டு ஒரு கன்று இறந்து விட்டது. தாய்ப்பசு அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சிமணியை அடித்தது. உடனே மன்னன் தன் மகனை அழைத்து வரச் சொன்னான். அவன் மீது தேரை ஏற்றி அவனையும் கொலை செய்ய ஆணையிட்டான். தன் மகனைத் தானே கொன்ற பழிக்கு அவன் அஞ்சவில்லை.


மகனை, இழந்த அந்தத் தாய்ப்பசுவின் மனநிலையை எண்ணினான்.அந்தத் தாய்ப்பசுவின் துயரத்திற்குக் காரணமாக இருந்தவன் யாராகஇருந்தாலும் தண்டனைக்கு உரியவன். எனவே அங்கு மன்னனுக்கு எப்பக்கமும் சாராமல் நீதி வழங்க வேண்டும் என்ற மனநிலையே இருந்தது. பின் விளைவுகளுக்கு அவன் அஞ்சவில்லை. எனவே,மனுநீதிச் சோழனின் பெருமை இன்றும் பேசப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டில் ஒரு மனுநீதிச் சோழன்

தனது மகனின் தேர், ஒரு பசுங்கன்றின் மீது தற்செயலாக ஏறி, அதைக் கொன்றதற்காக மகன் என்று கூடப் பாராமல், மரண தண்டனை விதித்தான் மனுநீதிச் சோழன். இது புராண காலத்து நீதி. ஆனால் தவறுதலாக செய்த ஒரு கொலைக்காக மனைவி என்று கூடப் பாராது மரண தண்டனை விதித்தான் ஒரு முகலாய சக்ரவர்த்தி! யாரிவன்? ஜஹாங்கீர்தான்! அக்பரின் மகன்! ‘ஜஹாங்கீர்! என்றால் ‘உலகை வென்றவன்’ என்று பொருள்.

மக்களுக்கு உடனடி நீதி வழங்க ஆக்ரா கோட்டையில், மனுநீதி ஆராய்ச்சி மணியொன்றை கட்டி வைத்திருந்தான் இவன். ஒரு சமயம், இவனுடைய மனைவியான நூர்ஜஹான் தவறுதலாக, ஒரு பீரங்கியை இயக்கியபோது ஒரு சலவைத் தொழிலாளி, குண்டு பட்டு இறந்தார்.

தன் மனைவி என்றும் பாராது நூர்ஜஹானுக்கு மரண தண்டனை விதித்தார் ஜஹாங்கீர். பின்பு அந்தத் தொழிலாளியின் மனைவி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பேரில் நூர்ஜஹானை விடுதலை செய்தார். அந்த சலவைத் தொழிலாளியின் மனைவிக்கு நிறைய மானியம் தந்தார்.

19 ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை........

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி! நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி என்று கட்டாயப்படுத்துகின்றன இன்றைய சமுதாயமும், தவறான சட்டங்களும்.



Friday, December 18, 2009

ஆகா பெண்களில் எத்தனை வகை!

இந்தக் காலத்திலுள்ள பெண்களின் வகைகளை படம்பிடித்துக்காட்டும் டி.வி. தொடர்களைப் பற்றி தினமணியில் வந்த கட்டுரையில் ஒரு பகுதி.
======================================================


தமிழ்த் தொலைக்காட்சி தொடங்கிய புதிதில் வந்த பல தொடர்கள் நெஞ்சை நிறைத்த அருமையுடையவை. இன்று வருபவையோ நஞ்சை விதைப்பவை. பல இல்லங்களில் பிரச்னைகளை உருவாக்குபவையே நெடுந்தொடர்கள் தாம்.

தொடர்களின் மையப் பொருள்கள் பெரும்பாலும் பெண்களே.

பொறாமையின் வடிவமாய்ச் சில பெண்கள்; கொடுமைக்காரிகளாய்ப் பல பெண்கள்.
பழிவாங்கும் அரக்கிகள் உருவில் பல பெண்கள்;
அரிவாளை ஏந்திக் கொலைசெய்யத் துடிக்கும் சிலபெண்கள். ஏற்கெனவே திருமணமானவன் என்று தெரிந்தும் அவனை வளைத்துக்கொள்ள எண்ணும் பெண்கள்;
வஞ்சனை, சூது, நம்பிக்கைத் துரோகம் முதலிய வக்கிர எண்ணங்களின் வடிவமாகவே பெண்கள்

இதில் என்ன வேதனையென்றால் பெண்களே இந்தத் தொடர்களை மெய்மறந்து ரசிப்பதுதான்.

===================================================

டி.வி. தொடர்களில் காட்டப்படுபவை அத்தனையும் உண்மை. சினிமாவிலும், சின்னத்திரையிலும் வரும் கதைகள் அத்தனையும் நாட்டில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைக் கதைகள்.

பெண்கள் தான் இதை ரசித்துப் பார்க்கிறார்கள். இதில் ஆச்சரியப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை. தங்களுக்குப் பிடித்த காட்சிகளைத்தான் எல்லோரும் ரசித்துப் பார்ப்பார்கள்.
தங்களை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை திரைப்படத்தில் காட்டும்போதோ அல்லது கதையில் படிக்கும்போதோ எல்லோருமே ஒரு தனி விருப்பத்துடன் ரசித்துப் பார்ப்பார்கள் அல்லது படிப்பார்கள். தங்களை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வது மனித குணத்தின் இயல்பு. அது போல இக்கால இளைய தலைமுறைப் பெண்களுக்குத் தங்களின் வாழ்க்கை முறையையும் குணங்களையும் பிரதிபலிக்கும் தொலைக்காட்சித் தொடர்களை பிடித்திருப்பதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது.

==========================================================
மேலுள்ள செய்திக்குத் தொடர்புடைய ஒரு கொசுறு செய்தி (வாரமலரில் வந்துள்ளது)
வெள்ளிக்கிழமை, "தடா!'
என் மாமியார் வீட்டில் ஹாலில் தான், "டிவி' இருக்கும். மற்ற நாட்களில், "டிவி' பக்கமே திரும்பாத மாமனார், வெள்ளிக் கிழமை விளக்கு வைக்கும் நேரத்தில், "டிவி'யை ஆன் செய்து, பக்தி சேனல் போட்டு, கர்ம சிரத்தையாக ரசிக்க ஆரம்பித்து விடுவார். மெகா சீரியல்கள் பார்க்காவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும்; அதிலும், வெள்ளிக் கிழமைகளில் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். குட்டி போட்ட பூனை மாதிரி குறுக்கும், நெடுக்கும் உலவித் தவித்த என் தவிப்பைப் புரிந்து கொண்ட என் நாத்தனார், "என்ன, மன்னி... சீரியல் பார்க்கணுமா?' என்றாள். தலையை ஆட்டினேன். "சாரி! உங்க ஆசையை அடக்கிக்கோங்க. இன்னிக்கு பார்க்க முடியாது!' என்றாள். "ஏன்?' என கண்களால் வினவினேன்.

"ஒவ்வொரு தொடரிலும் வெள்ளிக் கிழமை அன்னிக்குத் தான், யாரையாவது சாகடிச்சு, பொணத்தைப் போட்டு அழுது, ஆர்பாட்டம் பண்ணி, அதை சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிக்கவோ, புதைக்கவோ செய்யறது வரைக்கும் விஸ்தாரமா காட்டுறதை ஒரு கொள்கையாவே கடைபிடிக்குறாங்க.

"விளக்கு வெக்குற நேரத்துல வீட்டுல ஒப்பாரி சப்தமும், அழுகை சப்தமும், சாவு மேளமும் கேட்டுகிட்டு இருந்தா வீடு விளங்குமா? இல்ல, லட்சுமி தான் வீட்டுக்கு வருவாளா? அதான், வெள்ளிக்கிழமையில வீட்டுல சீரியல்களுக்குத் தடா...' என்று விளக்கினாள்.
===========================================================
அப்படியே இளமங்கைகள் இது போன்ற காட்சிகளைப் பார்ப்பதை
வீட்டிலிருக்கும் அன்னையர்கள் அறிவுரை சொல்லி திருத்த நினைத்தால் அவர்களை கொலை செய்யவும் தயங்காத மனநிலையில் தான் இந்தப் பெண்கள் இருக்கிறார்கள் ('டிவி'பார்க்காதே என திட்டிய மாமியாரை கொலை செய்த மருமகள் கைது). இதிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களில் வரும் பெண்களும் இன்றைய மருமகள்களும் குணத்திலும், செயலிலும் எப்படி ஒருமித்துப்போயிருக்கிறார்களென்று உங்களுக்குப் புரிகிறதா?

காலம் மாறிவிட்டது பெண்கள் மட்டும் அவர்களின் நற்குணங்களிலிருந்து மாறாமல் இருக்க அவர்கள் என்ன உயிரற்ற பாறைகளா? அவர்களை நற்பண்புகளிலிருந்து மாறக்கூடாது என்று சொல்வது பெண்ணுரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கத்தனம், மாமியார் கொடுமை என்று "பெண்ணுரிமை என்பது தங்களின் பதிவுரிமை செய்யப்பட்ட சொத்து" எனக்கருதும் பெண்ணுரிமைவாதிகள் சொல்லுவார்கள். யாராவது அதற்குப் பதில் சொல்லமுடியுமா?


போனஸ் செய்தி


நீங்கள் பல நாட்களாக இணைய தளங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வரதட்சணை புகார் செய்யும் மனைவிகளைப் பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்கள் மனைவி நல்லவராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு 498A மனைவி எப்படி இருப்பார் என்று பல நாட்களாக ஒரு யோசனை இருந்துகொண்டிருக்கும்.

498A பெண்களுக்கெதிராகஆண், பெண், வயது வித்தியாசமின்றி சங்கங்கள் அமைத்துக் காப்பாற்றுங்கள் என்று ஏன் இப்படி பலர் போராடிக் கொண்டிருக்கின்றனர்? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? என்ற பல கேள்விகள் உங்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கலாம்.

பொய் வழக்குப் போடும் 498A மனைவி எப்படி இருப்பாள் என்ற உங்களின் சந்தேகங்களை தீர்க்க ஓர் அரிய வாய்ப்பு. மேலே சொல்லப்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதாபாத்திரப் பெண்கள் அத்தனையும் ஒரு சேர ஒரே உருவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அது தான் பொய் வழக்குப் போடும் மனைவியரின் குணமும் உருவமும்.

இந்த உருவங்களிடம் சிக்கிய அப்பாவி கணவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ராட்சச ஜந்துக்களுக்குத் துணையாக அவைகளின் படையாக அரசாங்கமும், அரசாங்க சட்டமும், காவல் துறையும், நீதித்துறையும் செயல்பட்டால் ஒரு நேர்மையான சாதாரண மனிதனும் அவனது குடும்பமும் எப்படி அவதிப்படும் என்று உங்களால் உணரமுடிகிறதா?

இன்று இதை செய்தியாக படித்துவிட்டு மறந்து போகும் உங்களுக்கும் நாளை இது போன்ற நச்சுப்பாம்புகளால் ஒரு எதிர்பாராத தாக்குதல் நடக்க 100% வாய்ப்புள்ளது. உங்களையும் உங்களின் வருங்காலத் தலைமுறையையும் இந்த கொடிய ஜந்துக்களிடமிருந்தும் அதற்கு துணை செய்யும் தீயசக்திகளிடமிருந்தும் காப்பாற்றவே பலர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அன்று நடந்தது வெள்ளையனுக்கெதிரான சுதந்திரப்போராட்டம். இன்று நடப்பதோ அநீதிகளுக்கும், தீயசக்திகளுக்கும் எதிரான இரண்டாம் விடுதலைப்போராட்டம். அன்று மக்கள் ஒன்று திரண்டு போராடினர். இன்று நீங்களே தான் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

நீங்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து மற்றவர்களை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை உங்களையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அப்பாவிகளின் மானத்தையும், உயிரையும் பாதுகாக்க எந்தவித உத்திரவாதமும் இல்லாத சூழ்நிலைதான் இப்போது நிலவிக்கொண்டிருக்கிறது.



Monday, December 14, 2009

மருமகள் கொடுமையால் மாமியார் தீக்குளிப்பு

மருமகள் கொடுமை: மாமியார் தீக்குளிக்க முயற்சி

தினமணி 17 Nov 2009


புதுக் ​கோட்டை,​ நவ. 16:​ புதுக்​கோட்​டை​யில் திங்​கள்​கி​ழமை மரு​ம​கள் கொடுமை கார​ண​மாக பெண் தீக்​கு​ளித்து தற்​கொலை செய்​து​கொள்ள முயன்​றார்.​ புதுக்​கோட்டை மாவட்​டம்,​ ஆவு​டை​யார்​கோ​வி​லைச் சேர்ந்த நாகு மனைவி ஆராயி ​(65). இவ​ரது மகன் ரவிக்​கு​மார் ​(36); மரு​ம​கள் வித்யா ​(32). ரவிக்​கு​மார் வெளி​நாட்​டில் இருக்​கி​றார். வீட்​டில் வித்​யா​வும் அவ​ரது தந்தை ராஜேந்​தி​ர​னும் சேர்ந்து ஆரா​யி​யைக் கொடு​மைப்​ப​டுத்​தி​ய​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. ஆரா​யி பல முறை இவர்​க​ளால் தாக்​கப்​பட்​ட​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​ இது​கு​றித்து சில நாட்​க​ளுக்கு முன் ஆராயி ஆவு​டை​யார்​கோ​வில் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். ஆனால்,​ போலீ​ஸார் எவ்​வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்​லை​யாம்.​

இத​னால் ஏற்​பட்ட மன உளைச்​சல் கார​ண​மாக தீக்​கு​ளித்து தற்​கொலை செய்​து​கொள்ள முடி​வெ​டுத்த ஆராயி,​ திங்​கள்​கி​ழமை காலை புதுக்​கோட்டை வந்​தார். மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அலு​வ​ல​கம் எதிரே மண்​ணெண்​ணெ​யு​டன் அவர் தீக்​கு​ளிக்க முயன்​ற​போது அங்கு வந்த போலீ​ஸார் ஆரா​யி​யைத் தடுத்து அவ​ரைக் காப்​பாற்​றி​னர். அவரிடம் விசாரித்தபோது மருமகளின் கொடுமைகள் குறித்து தெரிவித்தார். போலீஸார் தொடர்ந்து​ அவரை விசா​ரித்து வரு​கின்​ற​னர்.

====================

இதுவே மருமகள் காவல்நிலையத்தில் ஒரு பொய் புகார் கொடுத்திருந்தால் உடனடியாக வேலைக்காரர்கள் போல ஓடிப் போய் அந்த வயதான மாமியாரை கைது செய்திருப்பார்கள்.

சில கேடு கெட்ட ஜென்மங்களுக்கு தன்னைப்பெற்ற அன்னையும் ஒரு பெண் தான் என்ற
எண்ணமில்லாமல் போய்விட்டது. அதனால்தான் இந்த வயதான தாயாரும் ஒரு பெண், அவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என்று தோன்றவில்லை போலும்.

சட்டத்தின் பார்வையில் பெண் என்பதற்கு ஒரு படம் வரைந்து வரையரை செய்திருக்கிறார்கள். அவர்களின் கவர்ச்சி கண்ணோட்டத்தின்படி மருமகள்கள் மட்டுமே இந்த நாட்டில் பெண்கள். சகோதரிகளோ, அன்னையரோ பெண்களாக கருதப்படுவதில்லை. இளம்பெண்களை மையமாக வைத்து 498A சட்ட வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அன்னையரைப் பற்றி நினைக்கத் தோன்றுமா?

மேலுள்ள செய்தி செய்தித்தாளில் வந்திருப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் செய்தித்தாள்கள் கூட இது போல பல வயதான தாயார்கள் படும் கஷ்டங்களை வெளியிடுவதில்லை. அவர்களுக்குக் கூட மருமகள் பற்றிய ஒருதலைபட்சமான செய்திகளை மட்டும் தான் வெளியிட விருப்பம். ஏனென்றால் மருமகள் பற்றிய செய்தி என்பது அவர்களுக்கு வியாபரத்திற்காக கவர்ச்சிப்பெண்களின் படங்களை போடுவது போல. எல்லாம் ஒருவகையில் பெண்களை இழிவு படுத்தி செய்யும் ஒரு வகை வியாபாரம் தான். இதை எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள்.

இது தான் இந்தக் காலத்தில் வயதான தாய்மார்களின் கதி: ஒன்று மருமகளின் பொய் வரதட்சணை கேஸால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் வயதான காலத்தில் அலைந்து கொண்டிருப்பார்கள். அல்லது மருகளின் உச்ச கட்ட கொடுமையை வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள் குமுறிக்கொண்டிருப்பார்கள்.

இந்தக் காலத்தில் வயதான பெற்றோர்கள் மருமகள்களின் சதியால் எப்படி கொடுமைக்கு பலியாகிறார்கள்
என்ற கொடிய உண்மையை கூட இயக்குனர் தங்கர் பச்சான் தனது "ஒன்பது ரூபாய் நோட்டு" என்ற படத்தில் காட்டியிருக்கிறார்.

இந்தக் காலத்தில் பெரும்பாலான மருமகள்கள் தனது கணவன் அவளுக்கு அடிமையாக இருந்து சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவளது காலடியில் கொட்டி அழவேண்டும், அதே சமயம் அந்தக் கணவனை பெற்றெடுத்த வயதான தாய் நடுத்தெருவிற்கு விரட்டப்படவேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்தத் தாய் இல்லாமல் இந்தக் கணவன் கிடைத்திருப்பானா என்று யோசிப்பதில்லை. மாமியார் என்பதை விட முதலில் அந்தப் பெண்மணி ஒரு தாய் என்ற கோணத்தில் இந்தக்காலத்தில் மருமகள்கள் பார்ப்பதில்லை.

அன்னையை மதித்துப் போற்றாத நாடு சொர்க்கத்தில் இருந்தாலும் நரகத்தைப்போலத்தான் திண்டாடி நிற்கும். அன்னையரின் கண்ணீர் அந்த நாட்டையே எரிக்கும் சக்தியுடையது. மருமகள்களை மட்டும் பெண்ணாக நினைத்து அன்னையரை புறக்கணிக்கும் நாட்டிற்கு அந்த அழிவு வெகு தூரத்தில் இல்லை.





Sunday, December 13, 2009

தாய்மை இல்லாத பெண்மை

குடும்ப தகராறில் விபரீதம் குழந்தையை உயிரோடு தீவைத்துக் கொன்ற தாய்

தினமலர் செய்தி டிசம்பர் 14,2009

ஓசூரில், குடும்பத்தகராறில் பெற்ற குழந்தையை தீ வைத்து கொன்ற தாய், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சாமுவேல் (30). அவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவதாக வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேரந்த கலைவாணி (20) என்பவரை சாமுவேல் காதலித்து இரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ஜோன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. சாமுவேல் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதில் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. கலைவாணி கணவரை சென்னைக்கு சென்று வேறு வேலை பார்க்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர், "எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சொந்த ஊரை விட்டு வேறு எங்கும் சென்று தொழில் செய்ய முடியாது' என கூறி விட்டார்.


கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில வாரமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. மனமுடைந்த கலைவாணி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தனது ஒரு வயது குழந்தை மீது கெரஸின் ஊற்றி தீ வைத்துவிட்டு, தானும் கெரஸின் ஊற்றி தீ வைத்து கொண்டார். இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்தில் பலியாகினர்.


ஓசூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., சசிகுமார் தீயில் கருகி இறந்த தாய், மகனின் சடலங்களை கைபற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு ஆண்டு மட்டும் ஆவதால், ஆர்.டி.ஓ., ரத்திவேலு விசாரிக்கிறார்.

=========================

ஒரு அப்பாவிக் குழந்தையை கொல்லும் உரிமையை அந்தப் பெண்ணுக்கு கொடுத்தது யார்?

தான் வாழ இயலவில்லை என்றாலும் தனது குழந்தை எங்காவது பிழைத்து நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவள் தான் தாய். அந்த தியாக மனப்பான்மைக்காகத்தான் பெண்கள் இந்த சமுதாயத்தில் பல ஆண்டுகளாக போற்றப்பட்டு பல சிறப்பான சலுகைகள் பெண்களுக்கு மட்டும் சட்டத்தில் கூட தரப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தக்காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு பெண்மைக்கே உரிய
அந்த தாய்மையும் தியாக மனப்பான்மையும் கிடையவே கிடையாது. அதை விட தனக்கு கிடைக்கவில்லையென்றால் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்ற வஞ்சகமான மனப்பான்மை தான் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் இன்றைய காலங்களில் இது போன்ற குழந்தைகளை பெற்ற தாயே கொஞ்சமும் கருணை இல்லாமல் கொல்லும் செய்திகள். பெரும்பாலான வரதட்சணை புகார்களில் தன்னால் குடும்பத்தில் அனுசரித்து வாழ இயலாத இயலாமையை ஏற்க மறுக்கும் மனைவியர் கணவரின் அனைத்து சகோதரிகளையும், தாயாரையும், குழந்தைகளையும் குற்றவாளிகளாக சித்தரித்து பொய் புகார்களை எழுதி அவர்களின் வாழ்க்கையையும் சிதைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அலைகிறார்கள்.

இப்படித் தாய்மைக்கு கொடுக்கப்பட்ட மரியாதையையும், சலுகைகளையும் இந்தக்காலத்தில் பல பெண்கள் தவறாகப்பயன்படுத்தி சட்டத்தையும் சமுதாயத்தையும் முட்டாள்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற இழிசெயல்கள் வரதட்சணை கேசுகளில் மிக அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.



இரண்டுமாதக் குழந்தையை குற்றவாளி பட்டியலில் சேர்த்து அதற்கு நீதிமன்றத்தில் ஜாமினும் வழங்கிய நாடு இந்த உலகத்தில் எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிறுமைக்குறிய செயலை செய்ததும் ஒரு பெண் தான். அதற்கு துணைபோனதும் பெண்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் சட்டங்கள்தான்.

இப்படி தாய்மையும், பெண்மையும் இல்லாமல்
மாறிவிட்ட பல பெண்களுக்காக இன்னும் எதற்காக அவர்களை பாதுகாப்பதாக சட்டங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன என்பது தான் புரியவில்லை. அதன் பின்னனி தான் என்ன?

மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டதால் ஆர். டி.ஓ. சிறப்பு விசாரணை செய்யப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு கணவர் திருமணமாகி ஒரே வாரத்திற்குள் இறந்தாலும் ஒருவர் கூட அது ஏன் நடந்தது? கொலையா, தற்கொலையா என்று யோசிக்கக் கூட மாட்டார்கள். ஏனென்றால் மனைவி இயற்கையாக இறந்தால் கூட அது
எப்போதும் கணவனோ அல்லது அவரது குடும்பத்தாரோ செய்த கொலையாக சந்தேகக்கண்ணோட்டத்துடன் தான் சட்டமும் சமுதாயமும் பார்க்கின்றன. ஆனால் அதுவே கள்ளக்காதலுக்காக மனைவி தனது கணவனை கொன்றிருந்தாலும் கூட அது பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். இது தான் இன்றைய சட்ட சமுதாய நடைமுறை.

பொம்பளை செத்தா போனது விலைமதிப்பற்ற உயிர் அதுவே ஒரு ஆம்பிளை செத்தால் இந்த சமுதாயத்திற்கு அது "தலையிலிருந்து உதிரும்
ஒரு முடிக்குச்" சமம் என்று இதைக்கூட இன்றைய திரைப்படத்தில் காட்டிவிட்டார்கள். அதைப்பார்த்து சிரிக்கும் கூட்டம் தான் அதிகம் சிந்திப்பவர்கள் மிக மிகக் குறைவு.



"தாய்மை" என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம், உடல் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. பெண்களின் மனநிலை "தாய்மை" என்ற புனிதத்தன்மையை இழந்துவரும்போது சட்டங்களும் காலத்திற்கேற்ப மாறி ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்தினால் தான் இனிவரும் காலங்களில் மனித சமுதாயம் மனிதத்தன்மையுடன் இருக்கும். காலச்சக்கரத்திற்கேற்ப மாற்றமடையாத எந்தவொரு செயலும் இயற்கையால் புறக்கணிக்கப்பட்டுவிடும். அது பெண்கள் பாதுகாப்பு சட்டங்களானாலும் சரி. இயற்கையின் நீதிமன்றத்தில் மனித சட்டங்கள் செல்லாது.




Saturday, December 12, 2009

புதிய காதல் கலாச்சாரம்

காதலனுடன் பேச தீக்குளிப்பு மிரட்டல்: நள்ளிரவில் இளம்பெண் அட்டகாசம்

சென்னை: காதலனுடன் பேசுவதற்காக இரவு நேரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவியை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்தவர் ரேவதி. 23 வயதான ரேவதி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ரேவதி தன்னுடன் படிக்கும் மாணவரை தீவிரமாக காதலித்து வந்தார். அந்த மாணவரின் வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது.


நேற்று முன் தினம் இரவு காதலனை சந்தித்துப் பேச ரேவதி ஆதம்பாக்கம் சென்றார். ஆனால் அந்த மாணவரின் பெற்றோர் ரேவதியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ரேவதியை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

மனமுடைந்த ரேவதி, கடைக்கு சென்று சிறிய பாட்டிலில் மண்எண்ணெய் வாங்கினார். இரவு 10 மணியை தாண்டிய நிலையில் ஆதம்பாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

போலீஸ் நிலைய வாசலில் நின்று தீக்குளிக்கப் போவதாக கூச்சலிட்டார். சத்தம் கேட்டு போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களிடம் ரேவதி, காதலனுடன் என்னை பேச அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் இங்கேயே உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்து செத்து விடுவேன் என்றார்.

அவரை சமரசம் செய்த போலீசார் மாணவரை வரவழைத்து பேசினார்கள். அப்போது அந்த மாணவர், நானும் ரேவதியும் பேசி பழகுவது உண்மை தான். ஆனால் நான் அவரை காதலிக்க வில்லை. நல்ல நண்பராக நினைத்தே பழகினேன் என்றார்.

ரேவதி இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே மகளை காணாமல் தவித்த ரேவதியின் பெற்றோர் சேலையூர் போலீசுக்கு சென்று புகார் செய்தனர். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்த ரேவதியை அவரின் பெற்றோர் வந்து அழைத்துச்சென்றனர்.

======================

காதலி வீட்டு முன் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

சிவகாசி: திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி காதலி வீட்டின் முன் போலீஸ்காரர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். சிவகாசி அருகே அதிவீரன் பட்டியை சேர்ந்த சொக்கர் மகன் தங்கப்பாண்டி(25). சட்டீஸ்கர் மாநிலத்தில், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை போலீஸ்காரராக 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். ஆசிரியை பயிற்சி முடித்த மாரனேரி அழகுமலை மகள் தேவி(22) என்பவரை தங்கபாண்டி காதலித்தார். ஆனால், தேவி காதலிக்கவில்லை. தேவியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் தங்கப்பாண்டி கூறினார்.

பெற்றோர்சம்மதிக்காததால், சில மாதங்களுக்கு முன் தங்கப்பாண்டி, தேவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். பெண்ணின் பெற்றோர்கள், "பெற்றோருடன் வந்து பெண் கேள்' என கூறி திருப்பி அனுப்பினர். உடனே சட்டீஸ்கருக்கு தங்கபாண்டியன் சென்றார்.தேவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழகத்தில் நடைபெறும் போலீஸ் தேர்வில் விருதுநகரில் கலந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேர்வு பெற்றார். தொடர்ந்து தேவியை திருமணம் முடித்து வைக்க கோரி பெண் வீட்டாரை வலியுறுத்தி வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தேவியின் வீட்டுக்கதவை தட்டினார். தேவியின் தாய் கதவை திறந்த போது, எனக்கு பெண் கொடுக்கா விட்டால் இதே இடத்தில் தற்கொலை செய்து கொள் வேன் என மிரட்டியவாறு தனக்கு தானே தீ வைத்து கொண்டார். எரிந்த நிலையில் நடந்து சென்ற அவர் அருகிலிருந்த மாரனேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே விழுந்தார். ஆபத்தான நிலையில் கிடந்த தங்கப்பாண்டியை, ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.அவரிடம், சிவகாசி மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். தேவியின் தந்தை அழகுமலை, தங்கப்பாண்டி தன் வீட்டிற்கு வந்து தனது மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என பிரச்னை செய்து, வீட்டின் முன் தீக்குளித்தார் என மாரனேரி போலீசில் புகார் செய்தார். மாரனேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
======================

ஒரு படித்த சுயபுத்தியுடைய பெண் வந்து போலிசை மிரட்டி தீக்குளிக்கப் போவதாக சொன்னபோது போலிஸ் அறிவுரை கூறி பத்திரமாக அனுப்பினார்களாம். அப்படியென்றால் கல்லூரியில் படிக்கும் 23 வயதான ஒரு பெண்ணுக்கு சுத்தமாக அறிவே இருக்காது என்று போலிசும் சட்டமும் பெண்களை இழிவு செய்கிறதா? இந்த நிலையில் தான் பலபேர் இருக்கிறார்களா? தற்கொலை செய்யப்போவதாக போலிஸை மிரட்டிய பெண் மீது ஏன் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை? மாறாக சமரசம் செய்ய சம்பந்தப்பட்ட ஆணை வரவழைத்து பேச்சு நடத்தினார்களாம்.பெண்ணின் பெற்றோர் வந்ததும் ஒரு கேள்வியும் இல்லாமல் அனுப்பிவிட்டார்களாம்.

ஆனால் அதுவே இரண்டாவது செய்தியில் பெண்ணின் தந்தை அந்த ஆணின் மீது புகார் செய்திருக்கிறார். போலிஸும் விசாரணை செய்து வருகிறார்களாம். இந்த கேசில் ஏன் சமரசம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? ஏனென்றால் இதில் ஆணுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தான் இன்று நாட்டில் நடக்கும் அநீதி. பெண் எந்தத் தவறு செய்தாலும் ஒரு தண்டனையும் கிடையாது. அதுவே ஒரு ஆண் என்றால் ஒரு தவறும் செய்யவில்லையென்றாலும் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டால் கூட எல்லா வித தண்டனைகளும் தரப்படும்.

மேலுள்ள செய்திகளில் விஷயம் ஒன்று தான். தவறு செய்வதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஆனால் இவைகளை சட்டமும் சமுதாயமும் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன என்பது தான் மிகவும் வருத்தத்திற்குறியது. இவைகளின் குருட்டுத்தனமான கண்ணோட்டத்தில் பெண் என்றால் எப்போதும் நல்லவள் போலவும் ஆண் என்றால் எப்போதும் குற்றம் செய்வதற்காகவே பிறந்தவன் போலவும் தான் கற்பனையாக எண்ணிக்கொடிருக்கிறார்கள். இந்தப் பாகுபாடான நடைமுறை தான் பெண்களை இன்னும் இழிநிலையில் தள்ளிக்கொண்டிருக்கிறது. பெண்களை இழிவுபடுத்துவதில் தவறான சட்டங்களும், ஆட்சியாளர்களும், பெண்ணடிமையை ஊக்குவிக்கும் போலி பெண்ணுரிமைவாதிகளும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதுபோலத்தான் பல பொய்யான வரதட்சணை கேசுகளில் படித்த நல்ல பணியிலுள்ள
ஒரு பெண் வந்து தான் வரதட்சணை கொடுத்துத்தான் திருமணம் செய்ததாக எழுதிக்கொடுத்தாலும் அது குற்றம் என்று தெரிந்தாலும் போலிஸ் அந்த பெண்ணின் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல பொய்யான குற்றச்சாட்டுக்களுக்காக, செய்யாத தவறுகளுக்காக அப்பாவி கணவரையும் அவரது குடும்பத்தையும் துன்புறுத்துகிறார்கள்.

பொண்ணு வந்து என்ன சொன்னாலும் போதும் அது அத்தனையும் உண்மை என்று சொல்லும் கண்மூடித்தனமான பல கிழக்கோட்டான்களும், சட்டங்களும் இருக்கும் வரை பெண்களுக்கு நன்மதிப்பும் மரியாதையும் கிடைக்கவே கிடைக்காது.

ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தாத சட்டங்கள் இருக்கும் வரை பெண்கள் எப்போதும் அடிமைப்பட்டுத்தான் இருப்பார்கள். பிறகு உரிமை வேண்டும் என்று போராடி என்ன பயன்? சம உரிமை வேண்டுமென்றால் எல்லா விஷயங்களிலும் சமமாக நடத்தப்படவேண்டும். குற்றம் புரிவதற்கு மட்டும் தண்டனையில்லாத உரிமை வேண்டுமென்றால் எல்லோரும் அந்தக் கூட்டத்தை கயமைத்தனம் உள்ள கொடிய மிருகங்களைப் போலத்தான் பார்ப்பார்கள்.

பெண்ணடிமையை ஊக்குவிக்கும் எந்த நாடும் எப்போதும் முன்னேறாது. விரைவில் அழிவை நோக்கித் தான் செல்லும். அழிந்து தான் போகவேண்டும்.





Tuesday, December 08, 2009

இந்தக் காலத்துத் திருமணங்கள்

ஆடம்பர திருமண விருந்து : இளம் தம்பதியை பிரித்தது

தினமலர் டிசம்பர் 09,2009

குருவாயூர் : ஆடம்பர திருமணம், விருந்து என தடபுடலாக நடந்த திருமணத்திற்கு பின், பில் தொகை வந்ததும் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டது. மணமகள் தாலியை கழற்றி வீசியதால், திருமணம் நடந்த சில நாட்களிலேயே, காதல் தம்பதியர் பிரிந்தனர்.

சென்னையில், "மாடலிங்' துறையில் பணியாற்றி வந்த இளம்பெண்ணுக்கும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழிலதிபரான இளைஞருக்கும், "இன்டர்நெட்' மூலம் காதல் ஏற்பட்டது. ஒரு வாரம் முன், சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். மணமகன் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கேரள கலாசாரப்படி, கடந்த 6ம் தேதி, திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர், நண்பர்களுக்கு, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஆடம்பர விருந்து வழங்கப்பட்டது. விருந்திற்கான பில் தொகையை கண்ட தம்பதியர் இடையே, தகராறு ஏற்பட்டது. இதில், மணமகள் தாலியை கழட்டி வீசி எறிந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மனமொத்து காதலித்து, இரு இடங்களில் ஆடம்பர திருமணம், நட்சத்திர ஓட்டலில் விருந்து என ஜமாய்த்த சில நாட்களிலேயே, திருமண வாழ்க்கை முறிந்தது.

====================

இந்தக் காலத்தில் திருமணவாழ்வில் முறிவு ஏற்பட்டால் தாலியையும் கழற்றி எறியலாம், காவல் நிலையத்திற்கு சென்று பலவிதமான பொய்யான புகார்களும் தரலாம்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணி போல "வரதட்சணை கொடுமை சட்டம்" இருக்கிறது. வீட்டில் குழாயில் தண்ணீர் வரவில்லை, டாய்லெட்டில் அடைப்பு என்றால் கூட இந்த சட்டத்தை பயன்படுத்தலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இது தமாசு இல்லை. உண்மை. அரசாங்கம் மனைவிகளுக்கு மட்டும் கொடுத்துள்ள "சிறப்பு உரிமை".

எங்கள் தெருவிற்கு தண்ணீர் திறந்துவிடும் பணியாளர் என் கணவருடன் சேர்ந்து கொண்டு என்னால் வரதட்சணை தரமுடியவில்லை என்பதற்காக என் வீட்டிற்கு வரும் தண்ணீரை நிறுத்திவிட்டார். அதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன் என்று சொன்னால் போதும். உடனே புகாரில் பெயர் சேர்க்கப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். கடமைதவறாத காவலர்கள் பலர் கால நேரம் பார்க்காமல் நடுஇரவு, அதிகாலை போன்ற நேரங்களில் அந்த கைது நடவடிக்கையை மேற்கொள்ள ஏங்கிக் காத்துக்கிடக்கின்றனர். அதில் கிடைக்கும் பெருமையே தனிதான்!

கேட்பதற்கு முட்டாள்தனமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் இன்று நடந்துகொண்டிருக்கும் உண்மை. இந்த விஷயத்தில் உண்மை இருக்கிறதா என்று போலிஸ் "புலன் விசாரணை" செய்து 98% புகார்களில் டாய்லெட் அடைப்பிற்கு காரணம் வரதட்சணை கொடுமைதான் என்று கடமை தவறாமல் தங்களின் "புலன் விசாரணை" அறிக்கையை கோர்ட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கு நீதிபதி 5 - 7 ஆண்டுகள் இதை தீவிரமாக உள் விசாரணை செய்து பிறகு இது உண்மை இல்லை என்று சொன்னால் தான் கணவர் நிரபராதி என்று சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இப்படித்தான் இன்று நீதிமன்றங்கள் நாற்றம் பிடித்த வழக்குகளால் நிரம்பிவழிகிறது.

டாய்லெட் அடைப்பிற்கான காரணத்தைக் கூட நீதிமன்றங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் மனைவிகள் கையில் கட்டப்பட்டுள்ள மோடிமஸ்தான்கள் சேர்ந்து தயாரித்த தாயத்தின் வேலை தான். எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் அந்த தாயத்து தான் IPC498a.

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 4,51,496.
Total Pendency of Civil and Criminal Cases at the end of 31-12-08

Madras High Court
= 4,51,496

டிசம்பர் 31, 2008 நிலவரப்படி தமிழ்நாட்டிலுள்ள சார்பு நிலை நீதிமன்றங்களில் (சென்னை உயர்நீதிமன்றத்தை தவிர) நிலுவையில் உள்ள மொத்த வழக்குகள் = 10,16,598

Total Pendency of Civil and Criminal Cases at the end of
31-12-08 in District and Subordinate Courts in Tamilnadu (Except Madras High Court) = 10,16,598



இதில் மேலும் ஒரு வசதி என்னவென்றால் மனைவிக்கு இந்த சலுகைகள்
எல்லாம் பைசா செலவில்லாமல் இலவசமாக கிடைக்கும். இன்னும் கொஞ்சம் "ஜிகினா" வேலைகள் செய்ய வேண்டுமென்றால் கணவரின் குடும்பத்திலுள்ள தத்தி நடக்கும் குழந்தை முதல் தள்ளாடி நிற்கும் கிழவர் வரை அனைவர் மீதும் நாகூசாமல் எந்த வகையான குற்றச்சாட்டுகளையும் எழுதித் தரலாம். எல்லாம் இலவசம்.

அரசாங்க செலவில் காகிதங்கள் சப்ளை செய்யப்படும், எத்தனை பக்கங்களாக இருந்தாலும் புகார்களை எழுத அரசு சம்பளத்தில் ஒரு எழுத்தர் காவல் நிலையத்தில் காத்துக்கொண்டிருப்பார். வித விதமாக எத்தனை பொய் சொன்னாலும் எந்த தண்டணையும் கிடையாது. பிறகென்ன ஒரே கொண்டாட்டம் தான்.


பாவம் கணவர்கள்! இது போல பிரச்சனைகள் வந்தால் காவல் நிலையத்தில் புகார் சொல்ல முடியாது. ஏனென்றால் கணவரை பாதுகாக்க எந்த செக்ஷ்னும் சட்டத்தில் இல்லை. கணவருக்கு கழற்றி எறிய ஒன்றுமில்லையா என்று கேட்கிறீர்களா? ஏன் இல்லை. கணவர்களுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காமல் "மனைவி & கம்பெனி" அந்த சேவையை செய்துவிடுவார்கள். மனைவியால் கொடுக்கப்படும் பொய் கேசுகளுக்காக அந்தக் கணவர் காவல்நிலையம் முதல் நீதிமன்றம் வரை அலையும் போதே வக்கீல் பீஸ், ஜாமின் தொகை, அவ்வப்போது கையூட்டு, இதற்கிடையே மனைவிக்கு மாதாந்திர "பராமரிப்பு" செலவு என்று ஒரு பெரிய பட்டியலே போட்டு ஒன்று ஒன்றாக அவர்களே உருவி எடுத்துவிடுவார்கள். கடைசியில் கணவர் ஒரு நடமாடும் பிணமாகத்தான் இருப்பார். இது போதாதா?

மேலுள்ள செய்தியை நீங்கள் நம்பவில்லையென்றால் இங்கே சென்று பாருங்கள் www.498a.org




Sunday, December 06, 2009

இன்றைய வரதட்சணை தடுப்புச் சட்ட நடைமுறை: பெண்களுக்கு இழைக்கப்படும் கொடிய அநீதி

வரதட்சணை தடுப்புச் சட்ட நடைமுறை: பெண்களுக்கு இழைக்கப்படும் கொடிய அநீதி

இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே அப்பாவி ஏழைப் பெண்களை வரதட்சணை கொடுமையிலிருந்து காப்பாற்றி எதிர்காலங்களில் ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றால் பெண்வீட்டார் கட்டாயம் பணமோ அல்லது பொருட்களோ கொடுக்க வேண்டும் என்ற அவலநிலை மாறவேண்டும் என்பதாகும்.


ஆனால் நல்ல நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டம் இன்றுவரை வெற்றியடையாததற்கு காரணம் பெண்கள் தான். ஆம் பெண்கள் தான் அப்பாவி ஏழைப்பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக்கொடிருக்கிறார்கள். நான் இங்கு குறிப்பிடுவது மாமியார்களை அல்ல. படித்த நல்ல பதவியிலுள்ள நகரத்து வாழ் மேல்தட்டு வர்க்க நவநாகரீக இளம் பெண்களை. இவர்கள் தான் அப்பாவி ஏழைப்பெண்களின் வாழ்வை தட்டிப்பறிக்கும் கொடிய செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.


கிராமங்களில் வாழும் படிப்பறிவில்லாத பல பெண்களைவிட இந்த நகரத்து வாழ் பெண்களுக்கு சட்ட அறிவும் வெளியுலக அனுபவமும் மிக அதிகம். வரதட்சணை கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் எத்தனை நகரத்துப் பெண்கள் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்திருக்கிறார்கள்? எதற்கெடுத்தாலும் கணவரும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டனர் அதனால் தான் நாங்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தோம் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இந்தப் பெண்களும் அவரது குடும்பத்தாரும் கூறுவார்கள்.


மேலும் இது போன்ற பெண்கள் கணவருடன் மனவேறுபாடு ஏற்பட்டால் காவல் நிலையத்திற்கு சென்று வரதட்சணை கொடுமை என்று புகார் வேறு எழுதித்தருவார்கள். ஏனென்றால் வரதட்சணை என்பது ஒரு கொடிய சமுதாயக் குற்றம் என்றும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் கொடுக்கும் அந்த புகாரில் திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் இப்போது மேலும் அதிகமாக வரதட்சணை கேட்டு கணவரும் அவரது குடும்பத்தாரும் துன்புறுத்துவதாகவும் கூசாமல் பொய் குற்றச்சாட்டுகளை வேறு அள்ளி வீசுவார்கள்.


கணவர் வரதட்சணை கேட்டாரா இல்லையா என்பதை பிறகு பார்க்கலாம். முதலில் வரதட்சணை என்பது ஒரு குற்றம் என்று அந்தப் பெண்ணிற்கு தெரிந்ததால் தானே காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறார். அப்படியென்றால் திருமணத்திற்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டபோது ஏன் அந்தப்பெண்ணுக்கு அது குற்றமாகத் தெரியவில்லை? அப்படியே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டிருந்தாலும் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் ஏன் வரதட்சணை கொடுக்க சம்மதித்தனர்? வரதட்சணை கொடுத்து திருமணமும் செய்து முடித்து விடுகின்றனர். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று தெரிந்திருந்தாலும் ஏன் இந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்கின்றனர்?

இவர்கள் இது போல வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வதால் தான் வரதட்சணை கேட்பவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள். வசதி படைத்த நகரத்து மேல்தட்டு வர்க்க பெண்கள் வரதட்சணை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் கிராமங்களில் வாழும் வசதியற்ற பெண்கள் வரதட்சணை கொடுக்க வசதியில்லாமல் திருமணம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அப்படியே உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்கள் காவல்நிலையத்தை அனுகினால் அங்கு ஏற்கனவே நகரத்து மேல்தட்டு வர்க்க பெண்களால் சுயநலத்திற்காக கொடுக்கப்பட்ட பொய் வரதட்சணை கேசுகள் குவிந்து கிடக்கின்றன.


எனவே இந்த உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்களால் நவநாரீக நகரத்து மங்கைகளால் வளர்த்து விடப்பட்ட வரதட்சணை பழக்கத்திற்கு ஏற்ப வரதட்சணை கொடுக்கமுடியாமல் மணவாழ்க்கையில் பாதிப்பும் ஏற்பட்டு அதற்கு நிவாரணம் தேடி காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றால் அங்கும் இந்த நகரத்து மேல்தட்டு பெண்களின் குப்பை கேசுகள் தான் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதானல் இந்த அப்பாவி ஏழைப் பெண்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கவேண்டிய நீதியும் தடுக்கப்படுகிறது.


இப்போது சொல்லுங்கள் உண்மையான ஏழைப்பெண்களுக்கு கிடைக்கவேண்டிய நல்வாழ்க்கையையும் நீதியையும் தடுப்பது யார்? ஆண்களா அல்லது படித்த மேல்தட்டுவர்க்க பெண்களா? வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் உண்மையான பலன் இந்த ஏழைப்பெண்களுக்கு கிடைக்காமல் தடுப்பது யார்?


ஆண்கள் வரதட்சணை ஏன் கேட்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். வரதட்சணை கேட்பதும் குற்றம் தான் கொடுப்பதும் குற்றம் தான். ஆனால் இதுவரை கேட்பவருக்கு மட்டும் தான் சட்டம் தண்டனை தந்துகொண்டிருக்கிறது. வரதட்சணை கொடுத்தவர்களையோ அல்லது கொடுப்பவர்களையோ இதுவரை பெயரளவிற்கு கூட தண்டிக்கவில்லை என்பது தான் கொடுமையான உண்மை.


போதை மருந்து வாங்கச் சென்றவன் குற்றவாளியா? அல்லது போதை மருந்தை கேட்டவருக்கு அதை கொடுத்தவர் குற்றவாளியா? கொடுத்தவன் மிகப்பெரிய குற்றவாளி, வாங்கியவன் இரண்டாம் தர குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதை விடுத்து வாங்க வந்தவனை மட்டும் துரத்திக்கொண்டிருந்தால் போதை மருந்து விற்பனையை தடை செய்ய முடியுமா? விற்பதற்கே ஆள் இல்லையென்றால் எப்படி வாங்க முடியும். அது போலத்தான் வரதட்சணை கொடுக்க ஆளில்லை என்றால் வாங்குபவர்கள் எப்படி இருக்க முடியும். வரதட்சணை கொடுப்பவர்களை முதலில் கடுமையாக தண்டிக்க வேண்டும். பிறகு வரதட்சணை என்ற வார்த்தை கூட சமுதாயத்தில் இருக்காது.


எனவே வரதட்சணை கொடுப்பவர்களை தண்டிக்காத இன்றைய வரதட்சணை தடுப்புச்சட்ட நடைமுறை மறைமுகமாக வரதட்சணை முறையை ஆதரித்து ஊக்குவித்து சமுதாய அழிவிற்கு வழிவகுக்கிறது. அது போல நகரத்து வாழ் மேல்தட்டு வர்க்கப் பெண்கள் வரதட்சணையை கொடுத்து அதனை சமூகநடைமுறையில் ஊக்குவித்து வருவதால் கிராமப்புற ஏழைப்பெண்கள் நகரத்துப் பெண்களைப் போல வரதட்சணை கொடுக்கமுடியாமல் நசுக்கப்படுகிறார்கள்.


இன்னும் சொல்லப்போனால் நகரத்துப் படித்த பணக்காரப்பெண்கள் வரதட்சணை கொடுமையை சமுதாயத்தில் வளர்க்க ஆண்களை ஒரு கருவியாகப்பயன்படுத்தி கிராமத்து ஏழைப்பெண்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். வரதட்சணை தடுப்புச்சட்டமும் அதற்கு துணையாக வரதட்சணை கொடுப்பவர்களை தண்டிக்காமல் பெண்களுக்கெதிராக நடக்கும் இந்த சமுதாயக் கொடுமையை உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது.


இதுவரை காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டுள்ள வரதட்சணை கொடுக்கல் வாங்கல் புகார்களில் எத்தனை வழக்குகள் வரதட்சணை கொடுத்தவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன? நீதிமன்றங்கள் வரதட்சணை கொடுத்தவர்கள் எத்தனை பேரை தண்டித்திருக்கின்றன? இத்தனைக்கும் அனைத்து வரதட்சணை தொடர்பான புகார்களிலெல்லாம் புகார் கொடுப்பவரே தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக எழுதித்தருகிறார்கள்.

அவர்களை தண்டிப்பதில் என்ன தயக்கம்? அதற்கு என்ன காரணம்? இந்த சமூகக் குற்றம் தொடர்ந்து நடக்கவேண்டும் என்பது தான் நோக்கமா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏழைப்பெண்களுக்கெதிராக இந்த அநீதியை நகரத்துப் பெண்கள்
செய்துகொண்டிருப்பார்கள்? வரதட்சணை கொடுப்பவரையும் கடுமையாக தண்டிக்காமல் இருக்கும் வரை எத்தனை வரதட்சணை தடுப்புச் சட்டங்களும், பெண்கள் பாதுகாப்புச்சட்டங்களும் இயற்றினாலும் அவை அனைத்தும் வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாக மட்டுமே இருக்கும்.

இந்த குறைபாடுடைய வரதட்சணை தடுப்புச்சட்டம் அது இயற்றப்பட்டதற்கான நோக்கத்தைத்தான் செய்யமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால்
இதில் இருக்கும் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்த குறைபாடுடைய சட்டங்களை நகரத்து படித்த யுவதிகள் தங்களின் சுயலாபத்திற்காக அப்பாவிகளை பழிவாங்கும் ஆயுதமாக கையில் எடுத்துக்கொண்டு திரிவது தான் சொல்லமுடியாத கொடுமை. இந்தக் கொடுமையையாவது இந்த சட்டங்கள் தடுத்து நிறுத்தினால் சரிதான்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.