இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, May 31, 2011

கொலையாளியாக்கப்பட்ட 4 வயது இந்தியச் சிறுவன்

இந்தியாவில் அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டிய உன்னதமான பணியிலிருப்பவர்கள் தங்கள் கடமை தவறி அப்பாவிகளை எப்படி குற்றவாளியாக சித்தரித்து பொய் வழக்குப்போடுகிறார்கள் என்று இந்த செய்தியின் மூலம் நன்கு அறிந்துகொள்ளலாம்.

நான்கு வயது சிறுவன் கொலை குற்றவாளியா? பீகார் போலீசாரின் விசித்திரம்
ஜூன் 01,2011 தினமலர்

பாட்னா: பீகாரில் கொலை வழக்கு ஒன்றில், நான்கு வயது சிறுவனை, போலீசார் குற்றவாளியாக சேர்த்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சண்டை ஒன்றில், அச்சுனாந்த் பாண்டே என்பவர் கொல்லப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், பாண்டேவுக்கும் இடையே நடந்த சண்டையின் காரணமாக, இந்த கொலை நடந்தது. இதில், பாண்டேயின் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில், நான்கு வயதே நிரம்பிய, பச்சிளம் சிறுவன் ஒருவனும் இருந்தது, கோர்ட் வளாகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட சிறுவனின் வயது எத்தனை என்பதை பூர்த்தி செய்யவில்லை. வாழ்க்கை என்றால் என்ன, மரணம் என்றால் என்ன என்பது தொடர்பான விவரங்களைப் பற்றி, எதுவுமே அறியாத ஒரு சிறுவனை, எப்படி கொலை வழக்கில் சேர்த்தனர் என, அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். சிறுவன் செய்த ஒரே தவறு, கொலை செய்யப்பட்ட பாண்டேயின் பக்கத்து வீட்டில் பிறந்தது தான்.

இதுகுறித்து வக்கீல்கள் சிலர் கூறுகையில், "ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது. இது தொடர்பாக சட்ட விதிமுறையே உள்ளது. ஆனால், இந்த கொலை வழக்கில், நான்கு வயது சிறுவனை எப்படி சேர்த்தனர் என, தெரியவில்லை' என்றனர்.போஜ்பூர் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் திரிபாதி கூறுகையில்,"நான்கு வயது சிறுவன் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில், நான்கு வயது சிறுவனின் பெயர், கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தால், உடனடியாக, அந்த சிறுவனின் பெயர், வழக்கில் இருந்து நீக்கப்படும்' என்றார்.

இதுபோன்ற சுவாரஸ்யமான பல கதைகளை பின்வரும் இணைப்புகளில் படித்து மகிழுங்கள்.


Saturday, May 28, 2011

அமெரிக்க போலிஸ் செய்தால் கொடுமை! இந்தியப் போலிஸ் செய்தால் சேவை!!

அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி மகளை அமெரிக்க போலிஸ் கைது செய்த விஷயம் சமீபத்தில் செய்தித்தாளில் பரபரப்பான செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

நியூயார்க் : "இந்திய துணைத் தூதரக அதிகாரியின் மகள் விவகாரத்தில், வியன்னா ஒப்பந்த ஷரத்துகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தவறாக புரிந்து கொண்டுள்ளது. உண்மையில், இந்திய தூதரக அதிகாரிக்கான அதிகாரப் பாதுகாப்பு என்பது, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் செல்லுபடியாகும்' என, நியூயார்க் இந்திய துணைத் தூதரகத் தலைவர் பிரபு தயாள் கூறியுள்ளார்.

அமெரிக்கா, நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதரக அதிகாரியாக பணிபுரிபவர் தேபாஷிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ், 18. தான் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான மின் அஞ்சல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில், கிருத்திகாவின் வக்கீல் ரவி பத்ரா, "அவர் தூதரக அதிகாரியின் மகள் என்பதால் அவருக்கு தூதரக அதிகார பாதுகாப்பு உண்டு. அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்' என்று கூறியிருந்தார். இதை தனது பேட்டியில் கிருத்திகாவும் தெரிவித்திருந்தார். மேலும் ரவி பத்ரா, "வியன்னா ஒப்பந்தத்தின் படி, இது போன்ற விவகாரங்களில் கைது செய்யப்பட்டவர் பற்றிய தகவல்களை, அப்பகுதி நிர்வாகம் குறிப்பிட்ட தூதரகத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

கடந்த வார துவக்கத்தில் இதுகுறித்து பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர்,
"ஒரு தூதரக அதிகாரியின் மகள் என்ற வகையில், அதிகார பாதுகாப்பை அவர் பெற முடியாது' என்று கூறியிருந்தார்.கடந்த 1961ல், ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நாடுகளின் தூதரக விவகார ஒப்பந்தத்தில், 36வது பிரிவில், "சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு இதுபோன்ற விவரங்களை உடனடியாக தாமதமின்றி தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 37வது பிரிவில், "தூதரக அதிகாரிகளுக்கான அதிகார பாதுகாப்பு, அவர்களது குடும்பங்களுக்கும் பொருந்தும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இதுகுறித்து பேட்டியளித்த நியூயார்க் இந்திய துணைத் தூதரகத் தலைவர் பிரபு தயாள் கூறுகையில்
, ""வியன்னா ஒப்பந்தத்தில், துணைத் தூதரக உறவுகள்(1963) பற்றிய பகுதியில், 53 (2) பிரிவின்படி, தூதரக அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது தனிப்பட்ட அலுவலர்கள் என இரு தரப்பினரும், அதிகாரிக்கான அனைத்து சலுகைகள் மற்றும் அதிகார பாதுகாப்பைப் பெறுவர்.அதன்படி போலீசார் கிருத்திகா பிஸ்வாசை கைது செய்திருக்கக் கூடாது,'' என்றார்.

செய்யாத தவறுக்கு தன்னை போலீசார் கைது செய்ததற்காக, 675 லட்ச ரூபாய் (1.5 மில்லியன் டாலர்) இழப்பீடு கோரி, கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதி பத்திரிகைகளில் இச்சம்பவத்தால் அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். பல முறை, "டிவி'க்கள், பத்திரிகைகள், இணையங்களில் அவர் பேட்டியளித்து விட்டார்.

இந்த செய்தியிலிருந்து இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1. குற்றம் செய்ததாக கருதப்பட்டதால் தூதரக அதிகாரியின் மகளாக இருந்தாலும் அமெரிக்க போலிஸ் கைது செய்திருக்கிறது. ஆனால் நம்ம ஊரிலிருந்து செல்லும் இந்திய மருமகள்கள் அமெரிக்காவில் எந்தவித அரசாங்க பின்னணியும் இல்லாமல் அமெரிக்க விசாவில் வேலை செய்துகொண்டிருக்கும் சாதாரண இந்தியக் கணவன் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்து தனது கர்ப்பத்தை கலைத்து கொடுமை செய்தான், பீரை தலையில் ஊற்றி குளிப்பாட்டினான், சிகரெட்டால் சூடு வைத்தான், ஓடும் காரிலிருந்து தள்ளிவிட்டான், சாப்பாடு போடாமல் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்தான் என்றெல்லாம் இந்தியாவில் வந்து கட்டுக்கதை விடுகிறார்களே! இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் அமெரிக்க போலிஸ் இந் கணவன்களை எப்படி சும்மா விட்டுவிடுகிறார்கள்?

அப்படியென்றால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் இந்திய மருமகள்கள் இந்தியாவிற்கு வந்து கதை சொல்லி பணம் பறித்துக்கொண்டிருக்கிறார்களா? அல்லது அமெரிக்க போலிஸ் இதுபோன்ற குற்றவாளி இந்தியக் கணவன்களை தட்டிக்கொடுத்து சபாஷ் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களா?

2. அமெரிக்க போலிஸ் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன்னை கைது செய்துவிட்டதால் 675 லட்ச ரூபாய் (1.5 மில்லியன் டாலர்) இழப்பீடு கோரி இந்த பெண் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அப்படியென்றால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் எந்தவித ஆதாரமும் இல்லாத பொய் வரதட்சணை வழக்குகளில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்களே. இதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லையே!

ஆதாரமில்லாமல் அப்பாவியை அமெரிக்க போலிஸ் கைது செய்தால் அதைக் கொடுமையாக கருதும்போது தினந்தோறும் பல அப்பாவிப் பெண்களை பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித ஆதாரமுமில்லாமல் இந்தியாவில் இந்தியப் போலிஸ் கைது செய்கிறார்களே அதை தேசசேவை என்று கருதவேண்டுமா?

Once a complaint is lodged under Sections 498AIPC whether there are exaggerated allegations or there is no evidence, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there … … …Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out(Delhi High Court, Savitri Devi Vs. Ramesh Chand, Crl. R 462/2002, Date:19/5/2003).
மேலுள்ள செய்தியை வெளியிட்டுள்ள அதே நாளிதழில்தான் இந்த செய்தியும் வந்திருக்கிறது!

கர்ப்பிணியின் கருவறுத்த காவல்துறை - இந்திய வரதட்சணை வழக்குகளின் உச்சகட்டம்

சிந்தித்துப் பாருங்கள். ஏதாவது பதில் தெரிந்தால் உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.


Thursday, May 26, 2011

பொய் வரதட்சணை வழக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு டி.வி. நிகழ்ச்சி

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட அந்த வரதட்சணைக் கொடுமையை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைத் தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் பெண்கள்தான் மிகவும் அதிகம். இப்படி வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தும் துர்குண பெண்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் அதைவிட மிக மிக அதிகம். இதுவே இந்த உலகத்தில் பெண்களால் பெண்களுக்கு செய்யப்படும் மிகப் பெரிய கொடுமை!

இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை ஜெயா தொலைக்காட்சியில் கண்ணாடி என்ற நிகழ்ச்சியில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை அவர்களுக்கு எழுதியனுப்புங்கள்.

பகுதி - 1


kannadi by tammy27

பகுதி - 2


kannadi_0 by tammy27

பகுதி - 3


kannadi_1 by tammy27

Friday, April 29, 2011

மனைவிக்கு இடையூறு செய்யும் கணவர்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் திருமணம் செய்து கணவனாகிவிட்டவர்கள் தங்கள் மனைவியிடம் பக்குவமாக எந்தஒரு இடையூறும் செய்யாமல் நடந்துகொள்ளவேண்டும். ஏனென்று தெரிந்துகொள்ள பின்வரும் செய்தியை படியுங்கள். அதிகமாக இடையூறு செய்தால் இரண்டு லட்சம் போதும் உங்களை அடக்கி அடக்கமே செய்துவிடுவார்கள்.

பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன்பு திருவள்ளுவரின் இந்த திருக்குறள்களை படித்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

"மனைவி" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

***********************

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.


மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை :கூலிப்படையினருடன் மனைவியும் கைது
ஏப்ரல் 30,2011 தினமலர்


திருவள்ளூர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி ஜோதி மற்றும் கூலிப்படையினர் தைரியநாதன், ரமேஷ், ரவீந்திரன், ஜானகிராமன்.

திருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார்.

விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.

செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார் மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.

அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
====

உயிர்மீது பயம் இருக்கும் கணவர்கள் பின்வரும் வீடியோவில் இருக்கும் பாதுகாப்பான வழியைப் பின்பற்றலாம்.





Sunday, April 24, 2011

கோயிலுக்குச் சென்றால் கொடுமை!

“கொடுமை கொடுமை என்று கோயிலுக்குச் சென்றால் அங்கே இரண்டு கொடுமைகள் ஜிங்கு ஜிங்கு என்று ஆடிக்கொண்டிருந்ததாம்” என்று நாட்டுப் புறங்களில் தங்களது குறைகளைத் தீர்க்க வழியில்லாமல் மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இதுதான் இன்றைய இந்தியத்திருமண வாழ்க்கையில் சிக்கியிருப்பவர்களின் நிலை. இக்காலத்தில் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் “புதிய பெண்ணுரிமை” கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட பல மனைவியர் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எல்லா குடும்பப் பிரச்சனைகளுக்கும் வரதட்சணைக் கொடுமை என்ற ஒரே சாயம் பூசி கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகாரை எழுதி எடுத்துக்கொண்டு மகளிர் காவல்நிலையத்திற்குச் சென்று புகாரை நீட்டிவிடுகிறார்கள்.

இதுபோன்ற மனைவியர் மகளிர் காவல் நிலையங்களை மனைவியரின் சகலவிதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பக மரத்தடி தேவலோகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கொடுமை கொடுமை என்று கோயிலுக்குச் சென்றால் அங்கே இரண்டு கொடுமைகள் ஜிங்கு ஜிங்கு என்று ஆடிக்கொண்டிருந்ததாம்” என்ற பழமொழி மகளிர் காவல் நிலையங்களுக்குத்தான் நன்றாக பொருந்தியிருக்கிறது என்பது இந்த மனைவியருக்குத் தெரிவதில்லை.

ஏனென்றால் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண்களின் நிலைமையே தலைகீழாக இருக்கிறது. அங்கிருக்கும் பெண் போலிஸிற்கே பாலியல் கொடுமை, குடும்பப் பிரச்சனை, வழக்குகளை கையாள முடியாத மன அழுத்தம் போன்ற பல தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் பெண் காவலர்கள் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு எடுத்ததற்கெல்லாம் காவல்நிலையத்திற்கு ஓடும் மனைவியரை விட மிகுந்த பரிதாபமான, மன உளைச்சல் மிக்க சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இவர்களை நாடி செல்லும் மனைவியருக்கு இந்த மகளிர் காவல்நிலையங்களில் ஏதாவது தீர்வு கிடைக்குமா? ஏற்கனவே பலவித மன உளைச்சலுடன் இருக்கும் காவலர்கள் இதுபோன்ற மனைவியர் தங்கள் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வரும்போது யார் குடி கெட்டால் நமக்கென்ன என்ற மனப்பான்மையுடன் வருகின்ற புகாருக்கெல்லாம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை ஏதும் செய்யாமல் வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். இதுதான் இன்று பல பொய் வரதட்சணை வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் குவிந்திருப்பதற்குக் காரணம்.

கடைசியில் அழிந்துபோவது யாருடைய வாழ்க்கை என்று உங்களுக்குத் தெரியுமா?


மதுரை:வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளாலும், குடும்பத்தினராலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் பெண் போலீசார், "கவுன்சிலிங்' பெற வழியின்றி, தற்கொலை முடிவை தேடுகின்றனர்.

அதேபோல், குடும்ப பிரச்னையுடன் வரும் பெண்களுக்கு, பெண் போலீஸ் பற்றாக்குறையால் "கவுன்சிலிங்' அளிக்க முடியவில்லை. ஈரோடு ஏட்டு வள்ளி(35), போலீஸ் அதிகாரிகளால் "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளான விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பெண் போலீசாரின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க, அந்தந்த மாவட்டங்களில் எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, கடந்தாண்டு மார்ச் 14ல், மதுரை போலீஸ் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில், டி.ஜி.பி., லத்திகா சரண் தெரிவித்தார்.அதிகாரிகளால் "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாகும் பெண் போலீசார், "புகார் கூறினால் வேலைக்கு ஆபத்தாகி விடும்' என தயங்குகின்றனர். சமீபத்தில், தென்மாவட்ட எஸ்.பி., ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறிய பெண் எஸ்.ஐ., வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். "இதுபோன்ற காரணங்களால், செக்ஸ் புகார்களை சொல்ல தயங்குகிறோம். அதையும் மீறி கூறினால், அசிங்கப்படுத்தப்படுகிறோம்,'' என பெண் போலீசார் புலம்புகின்றனர். இவர்களுக்கு "கவுன்சிலிங்' அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால், பெண் போலீசார் தற்கொலை செய்கின்றனர். மதுரையில் மூன்று ஆண்டுகளில், நான்கு பெண் எஸ்.ஐ.,க்கள், இரு போலீசார் இறந்தனர். இவர்கள் தற்கொலைக்கு, வழக்கமாக சொல்லப்படும் "குடும்ப பிரச்னை, உடல்நலப்பிரச்னை' என காரணம் கூறப்பட்டது.

போலீசாருக்கு இந்த நிலை என்றால், அவர்களிடம் புகார் கூறவரும் சாதாரண குடும்ப பெண்களின் நிலைமை பரிதாபம். வரதட்சணை கொடுமை, பெண்கள் மீதான வன்கொடுமை போன்றவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க, மதுரையில் நகர், தெற்கு, வடக்கு ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஸ்டேஷன் போலீசார், வழக்குப்பதிவு செய்யாமல், புகார்தாரர்கள் சமரசமாக செல்ல, "கவுன்சிலிங்' நடத்த சென்னையில் பயிற்சி பெற்றனர். புகார் செய்தவர்களின் ஊருக்கே சென்று "கவுன்சிலிங்' நடத்த ஒரு எஸ்.ஐ., இரு ஏட்டுகள், டாக்டர், தொண்டு நிறுவன ஊழியர், வக்கீல், மனவள நிபுணரைக் கொண்ட நடமாடும் குழுவும் உருவாக்கப்பட்டது.

இன்று ஆள் பற்றாக்குறையாலும், போலீஸ் துறை அல்லாதவர்கள் "கவுன்சிலிங்' செய்ய முன்வராததாலும், இக்குழு முடங்கி உள்ளது. இதனால், ஸ்டேஷனில் விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்தாண்டு தெற்கு மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்த மேலபொன்னகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக கூறி, ஸ்டேஷன் முன் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த கணவரும் விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்றார். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, பெண் போலீசார் தைரியத்துடன் முன்வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார் கொடுக்க வழிவகைகள் செய்ய வேண்டும். குடும்ப பெண்களின் பிரச்னை தீர, அனுபவம் வாய்ந்த, பயிற்சி பெற்ற ஏட்டுக்களை "கவுன்சிலிங்' செய்ய நியமிக்க வேண்டும். நடமாடும் "கவுன்சிலிங்' குழுவுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.