இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 12, 2010

கலியுக மருமகளால் வரப்போகும் ஆபத்து!

போலியான பெண்ணியவாதிகள் கூட்டம் எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது, பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள், பெண்களுக்கு அங்கே அது நடக்கிறது, இது நடக்கிறது என்று கூப்பாடு போட்டு மோடி வித்தைக்காரர்கள் போல கூட்டம் சேர்த்து காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அற்பத்தனமான சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப்படும் (IPC498A, Domestic Violence Act) தவறான ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்த சட்டங்களால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிட பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். ஒரு கலியுக மருமகளின் பொய்யான வரதட்சணைப் புகாரால் ஒரு குடும்பத்திலுள்ள குறைந்தது 4 - 6 பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இதுபோன்ற போலியான பெண்ணியவாதிகளின் முகத்திரையைக் கிழித்து ஒரு புதுமைப் பெண் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்கட்டுரையையும் பின்வரும் இணைப்பில் சென்று படியுங்கள்.

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான்.


மேலுள்ள கட்டுரையைப் படித்தபிறகு கலியுகப் பெண்கள் ஏன் மோசமான போலியான பெண்ணியவாதிகளால் தவறான பாதையில் இப்படி தவறான சட்டங்கள் மூலமாக வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள் என்று யோசித்தால் அதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதி வெண்பா என்ற பழந்தமிழ் நூலில் ஒரு அறிஞர் பாடிச் சென்றிருக்கிறார்.

நீதிவெண்பா

32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் கிரேதாயுகத்தில் ரேணுகை என்ற பெண்ணால் உலகம் அழிந்தது. திரேதாயுகத்தில் சானகி என்ற சீதையால் இராமாயணப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது. அதன்பிறகான காலத்தில் திரௌபதி என்ற பெண்ணால் பாரதப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது.

இந்தக் கலியுகத்தில் வீட்டிற்கு வீடு இருக்கும் ஒரு பெண்ணால் இந்த உலகம் அழியும் என்று அந்த அறிஞர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் யாருமல்ல பொய்யான பெண்ணுரிமை பேசும் கூட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு தவறான சட்டங்கள் என்ற ஆயுதங்களை கையில் எடுத்து சிறு குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் அனைவரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கும் மருமகள்தான் அந்தப் பெண். புராண காலத்து யுகங்களில் இருந்த பெண்களால் அநீதிக்கு எதிராக போர் ஏற்பட்டது. ஆனால் இந்தக் கலியுகத்தில் ஏற்பட்டிருக்கிற போரில் நீதியை அழிக்க அநீதிகளலெல்லாம் ஒன்று கூடி தவறான சட்டங்கள் என்ற உருவில் வந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

அதனால் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை பண்புடன் வளர்த்து நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் மாற்றுவது பெற்றவர்களின் கடமை. இல்லையெனில் நீதிவெண்பாவில் சொன்னது உண்மையாகிவிடும். இப்போதே நாட்டின் நிலைமை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்தியிலேயே நீங்கள் உணரமுடியும். அதற்கான சிறு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.


சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

இரும்பு சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்
04 Aug 2010 தினமணி

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்


ஜூலை 29,2010 தினமலர்

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்

சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010
சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஜூலை 16,2010 தினமலர்
Woman ASI caught taking Rs 500 bribe
தாயுடன் கணவனுக்கு கள்ளக்காதல்: நடவடிக்கை கோரி இளம் பெண் புகார்
தினமலர் மார்ச் 05, 2010
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்
கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தினமலர் ஜூன் 12,2010
மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010
மாமியாருக்கு “குத்து”விளக்கு ஏற்றிய குல விலக்கு மருமகள்
தினமலர் 18 மே 2010
மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010
கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

அதனால் அவரவர் வீட்டுப் பெண்களை நல்வழிப்படுத்தி வீட்டையும், நாட்டையும் உலகையும் காப்பாற்றவேண்டியது பெற்றவர்களின் கடமை. பெற்றோர்களே, போலியான பெண்ணியவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் “பெண் விடுதலை” என்பதற்கு தவறான அர்த்தத்தை உங்களின் மகள்களுக்கு காட்டி அவர்களின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள்.





Wednesday, August 11, 2010

காதலுக்காக “நுண்ணறிவைப்” பயன்படுத்திய பெண் போலிஸ்

இந்தக் காதல் கதையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கவேண்டும். ஏனென்றால் திட்டம்போட்டு காதல் செய்திருப்பது ஒரு பெண் போலிஸ்.



பெண் போலீஸ்

.

Thursday, 29 July, 2010 மாலைச்சுடர்
.
சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35). இவர் துரைப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக வேலை பார்த்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பாக ராஜேந்திரனின் தாயார் செல்லம்மாள் வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் துணை கமிஷனர் செந்தில்குமரன் தலைமையில் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜேந்திரனுக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமானது. பத்தே நாட்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜேந்திரனை விட்டு அனிதா பிரிந்து சென்று விட்டார்.

ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த சாஸ்திரக்கனி என்ற பெண் போலீசுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது. போலீசார் சாஸ்திரக்கனியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.

அந்த வாக்குமூலத்தில் சாஸ்திரக்கனி கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:சாஸ்திரக்கனியின் குடும்பத்தினர் அவரது சிறு வயதிலேயே திருநெல்வேலியிலிருந்து வேளச்சேரி செக் போஸ்ட் அருகே உள்ள ஒண்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தனர்.

சாஸ்திரக்கனி கிண்டியில் படித்து வந்தபோது அதே பள்ளியில் படித்த ராஜேந்திரனுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் உயிருக்கு உயிராக பழகியதாக சொல்லப்படுகிறதுது.ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சிக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரனும் சிறு வயதிலிருந்தே சென்னையில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 1993 ஆம் ஆண்டு சாஸ்திரக்கனிக்கும், செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் விடுதியில் தங்கி +1 மற்றும் 4வது வகுப்பு படித்து வருகின்றனர்.திருமணத்தின் போது பள்ளி நண்பர் என்று செல்வராஜிடம் ராஜேந்திரனை சாஸ்திரக்கனி அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்கள் இருவருக்கும் இருந்த தொடர்பை ஆரம்பத்தில் நட்பு என்று கருதிய செல்வராஜுக்கு பின்னர் அது தகாத உறவு என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே 1997 ஆம் ஆண்டு சாஸ்திரக்கனிக்கு போலீஸ் வேலை கிடைத்தது. அதன் பிறகும் ராஜேந்திரனுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்ததை கணவர் செல்வராஜ் தட்டிக் கேட்டதை அடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ராஜேந்திரனும், சாஸ்திரக்கனியும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே 2007 ஆம் ஆண்டு ராஜேந்திரனுக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. ஆனால் திருமணமான பத்தே நாளில் ராஜேந்திரனின் கள்ளத் தொடர்பு தெரிய வந்ததை அடுத்து அனிதா அவரை விட்டு பிரிந்து தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

பெண்ணின் வாழ்க்கை பாழானதை பொறுக்க முடியாத ராஜேந்திரனின் மாமியார் பாக்கியலட்சுமி, சாஸ்திரக்கனியின் வீட்டுக்கு வந்து அவரிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. தங்களது இன்ப வாழ்க்கைக்கு பாக்கியலட்சுமி இடையூறாக இருப்பதாக கருதிய சாஸ்திரக்கனி சாலிக்கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வீரராஜன் (வயது 27) என்பவரிடம் ராஜேந்திரனின் மாமியாரை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாஸ்திரக்கனிக்கும், வீரராஜனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீரராஜன் ஐபிஎஸ் தேர்வு எழுதியிருப்பதாகவும் அதில் தேர்வாகி போலீஸ் அதிகாரியாகி விடுவேன் என்றும் கூறியதை அடுத்து சாஸ்திரக்கனி அவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த ரகசிய உறவு ராஜேந்திரனுக்கு தெரிய வந்ததும் அவர் சாஸ்திரக்கனியிடம் உன்னால்தானே என்னுடைய வாழ்க்கை வீணாகி விட்டது. இப்போது நீ வேறொருவருடன் குலாவுவதா என்று கேட்டதாக கூறப்படுகிறது.இதை சாஸ்திரக்கனி வீரராஜனிடம் தெரிவிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி ராஜேந்திரனை வீரராஜன் சந்தித்தார்.

ராஜேந்திரனின் மாமியாரை கொல்ல முடிவாகி விட்டது என்றும் அந்த சமயத்தில் ராஜேந்திரன் சென்னையில் இருந்தால் போலீசாருக்கு வீணான சந்தேகம் ஏற்படும் என்று கூறி அவரை திருத்தணிக்கு வீரராஜன் ஒரு காரில் அழைத்துச் சென்றார்.

வீரராஜனுடன் தஞ்சாவூரை சேர்ந்த பசுபதி (வயது 24), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 26), பள்ளிக்கரணையை சேர்ந்த முருகன் (வயது 24) ஆகியோர் அந்த காரில் சென்றனர். சதீஷ் (வயது 25) என்ற டிரைவர் காரை ஓட்டிச் சென்றார்.

கனகம்மா சத்திரம் அருகே சென்றபோது ராஜேந்திரனுக்கு மது வாங்கிக் கொடுத்து அவரை அடித்து வீரராஜனும் அவரது கூட்டாளிகளும் கொன்றனர். பின்னர் அவரது உடலை ஒரு இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டனர்.

அதற்கு அடுத்த நாள் பாதி எரிந்த நிலையில் ராஜேந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி திருத்தணி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்து விட்டனர். ராஜேந்திரனின் உடலில் எரியாமல் இருந்த துணி, ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த திடுக்கிடும் தகவல்கள் சாஸ்திரக்கனியின் வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொண்ட போலீசார் சாஸ்திரக்கனி, வீரராஜன், முருகன், வேணுகோபால் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய பசுபதி, சதீஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கொலையில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலை நடந்ததை நடித்து காட்டுவதற்காக கைது செய்யப்பட்டவர்களை கனகம்மாசத்திரத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர். மேலும் புதைக்கப்பட்ட ராஜேந்திரனின் பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Tuesday, August 10, 2010

ரொம்ப சிக்கலான காதல்

இந்த காதல் கதையைப் படித்தால் தலை சுற்றுகிறது. படித்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள். தாயும் மகளும் சேர்ந்து உருவாக்கிய காதல் சித்திரம்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காட்டுப்பாக்கம், ஸ்டாலின் நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (55). பிஸ்கட் வியாபாரி. இவரது மனைவி அனிதா (42). இவர்களது மகள்கள் அர்ச்சனா (22), அஸ்வினா (21). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக, பிரேம்ராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இளைய மகள் அஸ்வினா கணவனுடன் கேரளாவில் வசிக்கிறார்.

மூத்த மகள் அர்ச்சனா, கணவர் லாரன்சிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டு, தாயுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மதன் (18). கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அர்ச்சனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. மதன் தனது சகோதரர் பிரபாகரன் (20) என்பவருடன், அர்ச்சனா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது பிரபாகரனுக்கும், அனிதாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. சகோதரர்கள் இருவரும் அடிக்கடி அர்ச்சனா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், அர்ச்சனாவுடன் மதன் தொடர்பு வைத்திருப்பது, சமீபத்தில் பிரேம்ராஜிக்கு தெரிந்தது. அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மகளின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததை போல, தனது கள்ளக்காதல் விவகாரமும் தெரிந்தால் பிரேம்ராஜ் நிச்சயம் பிரச்னை செய்வார் என்று அனிதா கருதினார். இதனால் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். தனது கள்ளக்காதலன் பிரபாகரன், மகளின் கள்ளக்காதலன் மதன் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். பிரேம்ராஜிக்கு, ஏற்கெனவே பிரபாகரனை நன்கு தெரியும் என்பதால், அவர் மூலமாக கொலையை அரங்கேற்ற முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன், பிரேம்ராஜை சந்தித்து பேசினார். இருவரும் பூந்தமல்லியில் உள்ள பாரில் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், பிரேம்ராஜை வீட்டில் படுக்க வைத்துவிட்டு பிரபாகரன் சென்றார். இரவு தனது சகோதரர் மதனுடன் அவர் பிரேம்ராஜ் வீட்டிற்கு மீண்டும் வந்தார். அங்கு போதையில் உறங்கிக் கொண்டிருந்த பிரேம்ராஜின், கழுத்தை எலக்ட்ரிக்கல் ஒயரால் இருவரும் சேர்ந்து நெரித்தனர். மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில், பிரேம்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின், பிரபாகரனும், மதனும், அனிதா வீட்டிற்கு சென்று, திட்டம் முடிந்துவிட்டதை கூறினர்.

சிறிது நேரம் கழித்து அனிதா பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, "ஸ்டாலின் நகரில் வசிக்கும் எனது கணவர் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக அங்கிருந்தவர்கள் எனக்கு தகவல் தெரிவித்தனர்,' என்று கூறியுள்ளார். போலீசார் பிரேம்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து அனிதாவிடம் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அவர் போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

அர்ச்சனாவின் மாஜி கணவர் லாரன்சிடம் போலீசார் விசாரித்தனர். அனிதா, அர்ச்சனா இருவருக்கும் பிரபாகரன், மதன் ஆகியோருடன் தொடர்பு இருப்பதை அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மதன், பிரபாகரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், பிரேம்ராஜை கொலை செய்ததும், அதற்கு அனிதா திட்டம் வகுத்துக் கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, அனிதா, பிரபாகரன், மதன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

===================

கதையில் பாருங்கள் பெண்கள் தங்களின் கள்ளக்காதலுக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுபோலத்தான் மாமியாரையும் கணவனையும் கொடுமை செய்துவிட்டு பல மருமகள்கள் போலிஸில் தாங்கள் எதுவும் செய்யாததுபோல கணவன் மீது வரதட்சணைப் புகார் கொடுத்துவிட்டு அப்பாவிபோல நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற உண்மை பலபேருக்குத் தெரியாது.



Monday, August 09, 2010

33% ஒதுக்கீடு இல்லாமலேயே சாதனை செய்யும் பெண் அலுவலர்கள்

33% இடஒதுக்கீடு கொடுத்தால்தான் பெண்களால் எத்துறையிலும் முன்னேற முடியும் என்று நினைப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமலேயே எத்துறையிலும் சாதனை செய்யலாம் என்று இந்த கிராமப்புற பெண் அதிகாரி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

காரைக்குடி: திருமண நிதி உதவி தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சாக்கோட்டை ஒன்றிய ஊர்நல அலுவலர் லலிதா (54), கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது உறவினர் அமிர்தத்திற்கு (22), வரும் 27ல் திருமணம் நடக்கவுள்ளது. அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் பெற, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த ஊர் நல அலுவலர் லலிதா, மனுவை சமூகநலத்துறைக்கு பரிந்துரைக்க, 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், சுப்பையா புகார் செய்தார். நேற்று மாலை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற லலிதாவை, டி.எஸ்.பி., அருளானந்தன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாண்டியராஜன், ஏட்டு மைக்கேல், சிவக்குமார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

================

இப்படித்தான் பெண் மற்றொரு பெண்ணுக்கு உதவி செய்து ஆணாதிக்கத்திற்கு எதிராக சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி சுயநல நோக்கில் உருவானவைதான் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பெண்கள் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எனப்படும் வரதட்சணை சட்டங்கள்.



Sunday, August 08, 2010

(கள்ளக்)காதலுக்கு மரியாதை

பெண் நினைத்துவிட்டால் சட்டங்களால் என்ன செய்யமுடியும்? ஆனால் பெண் நினைப்பதை அடைவதற்காக சட்டங்கள் ஆண்களை தவறாக தண்டிக்கவும் தயங்குவதில்லை. என்ன ஒரு வினோதம் இந்த நாட்டில்!

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

நாகர்கோவில்: கள்ளக்காதல் மோகத்தில், கட்டிய கணவனை உதறிவிட்டு ராஜபாளையம் பெண், கள்ளக்காதலனுடன் சென்றார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(33); விவசாயி. இவரது மனைவி அம்சவேணி என்ற அனிதா(25). இவர்களுக்கு சரவணன்(7) என்ற மகன் உள்ளான். குமாரசாமியின் சகோதரி கணவரின் அண்ணன் தாமோதரன்(34). இவர் மீசலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும், அனிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த 28ம் தேதி தனது மகனுடன் மருத்துவமனைக்குச் சென்ற அனிதா மாயமாகிவிட்டார். அவர், கள்ளக்காதலன் தாமோதரனுடன் கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே அக்கரையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். மனைவியை காணாத குமாரசாமி, கீழராஜகுலராமன்புதூர் போலீசில் புகார் செய்தார். தாமோதரனுடன் அனிதாவை பார்த்த குமாரசாமி நண்பர்கள், அவருக்கு தகவல் கொடுத்தனர். குமாரசாமி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கள்ளக்காதலர்களை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு கணவன் குமாரசாமி, "நமது மகனுக்காக என்னுடன் வந்து விடு' என்றும், "என்னை கைவிட்டு விடாதே' என்று கள்ளக்காதலன் தாமோதரனும், அனிதாவிடம் கெஞ்சினர். அப்போது, கள்ளக்காதலனை அணைத்து அனிதா ஆறுதல் கூறினார்.போலீசார், சிறுவன் சரவணனை அழைத்து தந்தை யார் என்று கேட்டபோது குமாரசாமியை அடையாளம் காட்ட, அவனை அனிதா பிடித்து இழுத்து வைத்துக் கொண்டார். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அனிதா, கள்ளக்காதலன் தாமோதரனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கீழராஜகுலராமன்புதூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம்)



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.