இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, February 28, 2010

பெண்கள் வாரியத்தில் பெண்களுக்கு ஆபத்து!




Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.

தேசிய பெண்கள் வாரியத்திற்குள் பணிபுரியும் பெண்களுக்கு வாரியத்தின் தலைவியால் கொடுமை செய்யப்படுவதாக முன்னாள் உறுப்பினர் புகார் செய்கிறார். பெண்களுக்குப்பிரச்சனை வெளியிலிருந்து வருவதில்லை, பெண்கள் வாரியத்திற்குள்ளேயே சகபெண் ஊழியர்களால் தான் பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறதாம்.

தேசிய பெண்கள் வாரியத்தின் முகத்திரையை கிழித்துக்காட்டிய இந்த தலைவிக்கு நன்றி (!)

இந்த தேசிய பெண்கள் வாரியம் நாட்டிலுள்ள கிராமங்களில் வாழும் ஏழைப்பெண்களுக்கு எந்த வகையில் உதவி செய்யமுடியும்?


கற்பிழப்பா அல்லது கற்பழிப்பா?

பிப்ரவரி 28,2010

புதுடில்லி:திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் வியப்பான விஷயம் தெரியவந்துள்ளது; இந்த விஷயத்தில், நகர மக்களை, கிராம ஜோடிகள் மிஞ்சி வருகின்றன என்பது தான் அந்த தகவல். இந்தியாவில், 15 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்று சர்வே தெரிவிக்கிறது.மத்திய சுகாதார அமைச்சகம் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் குறித்த சர்வேயை எடுக்க ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய ஆறு மாநிலங்களை தேர்ந்தெடுத்தது; 15 சதவீத இளைஞர்களிடமும், 4 சதவீத இளம் பெண்களிடமும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்: திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் வகையில் மொத் தம் 51 ஆயிரம் பேர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது.பெண்களை ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 24 சதவீத இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வகையில் 9 சதவீதம் பேர் தான் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துள்ளனர்.திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வது இந்தியாவில் பரவலாக இருந்து வருகிறது. டில்லியில் உள்ள மக்கள் தொகை கவுன்சிலும், மும்பையில் உள்ள பன்னாட்டு மக்கள் தொகை விஞ்ஞான பயிற்சி மையமும் சேர்ந்து நடத்திய விரிவான கணக்கெடுப்பில் இந்தியாவில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் இளம் வயதினர் திருமணத்திற்கு முன் அதிகமாக செக்ஸ் வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இளைஞர்களில், திருமணத்துக்கு முன், நகர்ப்பகுதியில் 17 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 29 சதவீதம் பேரும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இளம்பெண்களில் கிராமப்பகுதியில் 46 சதவீதமும், நகர்ப்பகுதியில் 31 சதவீதம் பேரும், திருமணத்துக்கு முன்னதாகவே உடலுறவு கொள்கின்றனர். நகர்ப்புறத்தில் ஒரு சதவீதமும், கிராமப்புறத்தில் 6 சதவீத இளைஞர்களும் 18 வயதை அடையும் முன்னர் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். 26 சதவீத இளைஞர்களும், 46 சதவீத இளம்பெண்களும், 15 வயதை அடையும் முன்னர் தங்களுடைய காதலருடன் செக்சில் ஈடுபட்டு அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.பெரும்பாலானவர்களின் செக்ஸ் உறவுகள் மிகவும் அபாயகரமாக உள்ளது. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர். 25 சதவீத இளைஞர்களும், 21 சதவீத இளம் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்கின்றனர்; உறவின் போது காண்டம் பயன்படுத்துவது குறைந்த அளவே இருந்து வருகிறது. ஆண்களில் 13 சதவீதத்தினரும், பெண்களில் மூன்று சதவீதத்தினரும் காண்டம் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆறு மாநிலங்களை பொறுத்தவரையில் உடலுறவுகள் பரவலாக பாதுகாப்பற்ற முறையில் தான் நடக்கின்றன. இந்த வித்தியாசம் மாநிலங்களிடையே மாறுபடுகின்றன. ராஜஸ்தான் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் இளைஞர்கள் 32 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட் டோருடன் உறவு கொள் கின்றனர். ராஜஸ்தானில் 14 சதவீதமே நடக்கிறது.இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

==============

அப்பாவித்தனமாக (?) கற்பிழக்கும் இந்த இளமங்கைகளை பாதுகாக்கத்தான் அரசாங்கம் பல பாதுகாப்பு சட்டங்களை தந்திருக்கிறது. இவர்கள்தான் பிற்காலத்தில் இந்த சட்டங்களை நன்கு திறமையாக பயன்படுத்திக்கொள்ளும் வழியை தெரிந்துவைத்துக்கொண்டு தக்க சமயம் பார்த்து அப்பாவிகள் மீது கற்பழிப்புப் புகார் கொடுத்தல், அப்பாவி கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பொய் வரதட்சணைப் புகார் கொடுத்தல் போன்ற புனிதப் பணிகளில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள்.
இதுபோன்ற பெண்களுக்கு பொய்வழக்குகள் போடுவது மிகவும் எளிதான செயல். கற்பிப்பு என்ற சொல்லில் எப்படி எழுத்தில் ஒரு சிறு மாற்றம் செய்தால் கற்ழிப்பு என்று மாறுகிறதோ அது போல தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழியை மாற்றிப் போடுவது மிகவும் எளிதான செயல்.
இதை செய்யக்கூடாது என்று யாராவது சொன்னால் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு கொடுமை செய்யப்படுவதாக பெண்கள் வாரியம் கோபித்துக்கொள்ளும். நமக்கேன் வம்பு. வாழ்க பெண்கள் வாரியம் போற்றும் கலாச்சாரமும் பண்பாடும்!







Friday, February 26, 2010

அப்பாவிப் பெண்களுக்கு 50% கிடைக்குமா?


புதுடில்லி : பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் மசோதா, அடுத்த வாரம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.


ஐயோ பாவம் இந்தியப் பெண்கள். 33% இடஒதுக்கீடு கொடுத்தால் தான் அவர்களால் முன்னேறமுடியும் என்ற இழிநிலையில் இத்தனை ஆண்டுகள் இந்த சுதந்திரநாட்டில் அரசியல்வாதிகள் பெண்களின் நிலையை தாழ்த்திவைத்திருக்கின்றனர். இனி அரசியல்வாதிகளின் சாதிப்பட்டியலில் பெண்கள் என்ற ஒரு புதிய தாழ்த்தப்பட்ட சாதியையும் பார்க்கலாம்!

இதுவரை சாதியின் பெயரால் இந்திய சகோதர சகோதரிகளை பிரித்துவைத்து சூழ்ச்சி செய்து வந்த கூட்டம் இப்போது பாலினத்தை வைத்து பிரிவினை செய்து மனிதசமுதாயத்தையே பாழ்படுத்தப்போகிறது. இடஒதுக்கீடு செய்தால் தான் இனி பெண்கள் முன்னேற முடியும் என்றால் இத்தனை ஆண்டுகள் பெண்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தது யார்? இந்த இடஒதுக்கீட்டால் எத்தனை கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படப்போகிறது? யார் இதில் லாபம் அடையப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.

பசித்தவருக்கு ஒரு வேளைக்கு மட்டும் உணவை பிச்சையாக் கொடுப்பதை விட அவரின் வாழ்க்கை முழுதும் சுயமாக தனக்குத் தேவையான உணவைத் தானே தேடிக்கொள்ளும் வழியை காட்டுவது தான் புத்திசாலித்தனம். ஊழல் இல்லாத அரசாங்கம் இருந்தால் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் திறமையிருக்கும் எவரும் எத்துறையிலும் சாதனை புரியலாம் அல்லவா? ஒதுக்கீடு என்ற பேச்சிற்கே இடமில்லையே.

அரசியலில் நுழைந்து வியாபாரத்தை ஆரம்பிக்கப்போகும் அபலைப் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுக்கும்போது கீழுள்ள செய்தியில் உள்ளது போன்ற சுயதொழில் செய்து முன்னேறத்துடிக்கும் அப்பாவிப் பெண்களுக்கும் 50% இடஒதுக்கீடு கொடுத்தால் நாட்டிற்கு நல்லது.


கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்திரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் கைது
தினமலர் பிப்ரவரி 27,2010

திண்டுக்கல்:கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.கொடைக்கானலில் கீழ் பூமி பிரமபுத்திர பெண்கள் இணைப்பு குழுவின் கீழ், 237 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செம்பகனூர் மரிய ஜெயா இருந்துள்ளார். இவர், உறுப்பினர்களுக்கு தேவையான வங்கிக் கடன்களை பெற்றுத் தருவதும், இந்த பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டுவதாக கூறி கிராம பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கையாடல் செய்து தலைமறைவானார்.

இவருக்கு உதவியாக விமலாராணி, தனபாக்கியம், ஆரோக்கிய செல்வி, லாரன்ஸ் செல்வி, மெர்சி, ஜாகீர்லூர்துராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், கடந்த வாரம் கொடைக்கானல் செம்பகனூர் சுயஉதவிக்குழு அலுவலகம் அருகே நடந்து சென்ற இந்த குழுவை சேர்ந்த மெர்சி என்ற பெண்ணை கேட்டில் கட்டி வைத்து, மறியல் செய்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குழுவில் பணியாற்றிய கொடைக்கானல் லேக் ரோட்டை சேர்ந்த லாரன்ஸ் செல்வி(43)யை கைது செய்து, திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமாராணி உத்தரவிட்டார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:சுயஉதவிக்குழு நடத்தி கிராம மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வங்கியில் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் இன்னும் ஏழு பேர் தலைமறைவாகினர். இவர்களை தேடி வருகிறோம், என்றனர்.

தினமலர் பிப்ரவரி 27,2010

சென்னை:போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியாக வலம் வந்த சாருலதாவுக்கு பல்வேறு வகையிலும் உதவிக் கமிஷனர் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதால் உதவி கமிஷனர் விரைவில் கைதாவார் என கூறப்படுகிறது.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாருலதா (36). இவர், மிடுக்கான உடையில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக சென்னை முழுவதும் வலம் வந்தார்.

போலீசில் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் வசூல் வேட்டை நடத்தினார். அடுத்தடுத்து வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலீசார் பத்து நாட்களுக்கு முன் சாருலதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரின் மோசடி பற்றியும், அவருக்கு போலீஸ் அதிகாரிகள் உடந்தையாக இருந்தனரா என்ற விவரங்கள் குறித்தும் மேல் விசாரணை செய்வதற்காக சாருலதாவை போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தி முடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சாருலதாவை நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

விசாரணையின்போது, தனக்கு உதவியாக இருந்த போலீஸ் அதிகாரிகள் யார், யார், தனக்கு அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது எப்படி என்பது பற்றிய விவரங்களை சாருலதா தெரிவித்தார். விசாரணை அனைத்தையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள போலீஸ் உதவிக் கமிஷனர் ஒருவரது குடும்பத்தில் ஒருவர் போல் சாருலதா பழகி வந்தது தெரியவந்துள்ளது.அந்த உதவிக் கமிஷனர், செக் மூலம் 1.31 லட்சம் ரூபாயை சாருலதாவுக்கு கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. உதவி கமிஷனரின் மகள் திருமணத்திற்கு 15 சவரன் நகைகள், வாஷிங் மெஷின், இரண்டு தேக்கு கட்டில்களையும் சாருலதா வாங்கிக் கொடுத்துள்ளார். திருமண வீட்டில் பட்டுப் புடவையுடன் சாருலதா வலம் வந்துள்ளார்.மேலும், சென்னையில் போலீசுக்கு ஆள் எடுக்கும் மையத்தில், உதவி கமிஷனர் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும், அவருடன் போலீஸ் உடையிலேயே சாருலதா சுற்றி வந்தார். அப்போதுதான் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் வசூல் நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் போலீஸ்காரர், ஜீப் டிரைவர் என பலருக்கும் சாருலதாவுக்கு பல்வேறு வகையில் உதவியுள்ளனர்.சாருலதாவின் மோசடிக்கு பல்வேறு வகையிலும் உதவி கமிஷனர் உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதால், உதவி கமிஷனர் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Thursday, February 25, 2010

அப்பாவி போலிஸ் (பகுதி - 4)

போலீஸ் என்றாலே பொது மக்களிடம், மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே தோன்றி நிற்கிறதே... இந்த நிலைக்கு காரணம் என்ன?

இதுவரை நடந்தது....

அப்பாவி போலிஸ் (பகுதி - 1)
அப்பாவி போலிஸ் (பகுதி - 2)
அப்பாவி போலிஸ் (பகுதி - 3)

இனி அப்பாவி போலிஸ் பகுதி - 4

ஊழல் மற்றும் லஞ்சப் புகார் கடந்த மூன்று ஆண்டுகளில் 75 போலீஸார் கைது

ஊழல் மற்றும் லஞ்சப் புகார் தொடர்பாக டெல்லி காவல் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 75 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 45 நாட்களில் மட்டும் லஞ்சம் வாங்கியதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் இருவேறு புகார்களின் கீழ் சிக்கியுள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டில் 24 லஞ்ச வழக்குகளில் 32 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2008ம் ஆண்டில் இந்த கைது எண்ணிக்கை 17ஆக குறைந்தது. எனினும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24ஆக அதிகரித்துவிட்டது. மொத்தம் 75 போலீசார் கடந்த மூன்றாண்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Sunday, February 21, 2010

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

சென்ற ஆண்டு இந்திய ஜனாதிபதி பெணகள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றினார். ஆனால் அதற்கு பல மகளிர் சங்ககங்களும் மகளிர் வாரியங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றிய செய்தியும் அதற்கு செய்தித்தாளில் ஒரு வாசகர் எழுதியிருந்த பதிலும் உங்களின் சிந்தனைக்காக தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு நன்கு யோசியுங்கள்.

வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில்,
"பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

மகளிர் சங்கங்களும் வாரியங்களும் பெண்களுக்கு எந்தவகையான போதனைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிறுமி அழகாக நடித்துக்காட்டியிருக்கிறார். இது தான் இந்த சங்கங்களின் இன்றைய நிலையா என்ற உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த புத்திசாலி சிறுமிக்குப் பாராட்டுக்கள்.





ஜனாதிபதிக்கு "ஜே':
பா.சி.ராமச்சந்திரன், திருவொற்றியூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "வரதட்சணைக் கொடுமை சட்டம், சில பெண்களால் தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு சர்வே கூறியிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று, இந்தியாவின் முதல் பெண்மணியும், நமது ஜனாதிபதியுமான பிரதிபா பாட்டீல் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை. மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஓர் பெண்மணி கூறியதை, உடனே பெண்கள் அமைப்புகள் கண்டனம் செய்தது, கண்டனத்திற்கு உரியதாகும். அவர் அப்படிச் சொன்னது உண்மை தானா என்று ஆராயாமல், அவர் கருத்தை எதிர்ப்பது தவறானது. ஒரு ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கிறதே என்று ஜனாதிபதி வருத்தப் பட்டதையே எதிர்க்கும் பெண்கள், வீட்டில் மாமியாரை எப்படி ஆதரிப்பர்? தங்களுடைய வீட்டில், தன்னைப் பெற்ற அன்னைக்கு ஆதரவாயிருக்கும் பெண்கள், தன்னுடைய கணவரைப் பெற்றதும் ஒரு அன்னையே என்பதை அறியாமல், அவர்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் இன்று ஏராளம். கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில், பெண்கள் தங்களுடைய மாமியார், மாமனாருக்கு எதிராகப் போவதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்திருக்கிறது. அது மட்டுமல்ல, வரதட்சணைக் கொடுமைச் சட்டம், பாலியல் பலாத்காரச் சட்டம் போன்றவைகளையும் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, மாமனார், மாமியார், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களையும் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். அதனால் தான், காவல் துறை எந்த ஒரு சட்டத்தையும் பயன்படுத்தும் போது, தீர விசாரித்து கைது செய்ய வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்' என்றெல்லாம் பேசிவிட்டு, செய்யாத தவறுக்காக பெண் உரிமையைப் பயன்படுத்தி ஆண்களையும், பெண்களையும் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? பல குடும்பங்களில் மருமகள் செய்யும் கொடுமைகளை மாமனார், மாமியார் போன்றோர், காவல் துறைக்குத் தெரிவித்து, மருமகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததற்குக் காரணம், குடும்ப கவுரவம் பாழாகிவிடக் கூடாது என்பதால் தான். இதை இளம் பெண்கள் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்த குடும்ப அமைப்பு. சரியான நேரத்தில் ஜனாதிபதி கூறியது முற்றிலும் சரியே!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.