பின்வரும் திருக்குறள்களை படித்துவிட்டுப் பிறகு பின்வரும் செய்திகளைப் படியுங்கள். அப்போதுதான் செய்தி நன்றாகப் புரியும்!
இல்லையென்றால் திருவள்ளுவரையும் ஆணாதிக்க எண்ணம் கொண்டவர், பெண்ணடிமை பேசுபவர் என்று முத்திரை குத்திவிடுவீர்கள்!
"மனைவி" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.
***********************
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.திருவள்ளுவரின் “கள்ளுண்ணாமையும்”, “பிறன்மனை நோக்காமையும்”தான் இப்போது தமிழ்நாட்டின் உயிர் மூச்சாக இருக்கிறது என்று பின்வரும் செய்திகளைப் படித்தால் உங்களுக்கே புரியும்!
தமிழ்ப்பெயர் வைத்த திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து தமிழ் வளர்க்கும் கலியுக தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழைப்போற்றுங்காலத்தில் பின்வரும் செய்திகள் எல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயங்கள்தான். காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சிதினகரன் 7/2/2011
சீர்காழி :
கள்ளக்காதலன் சந்திக்க மறுத்ததால் சீர்காழி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் தாமமூர்த்தி.
இவரது மனைவி ஜெனட் (30). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். (498A கணவர்கள் ஜாக்கிரதை!) இதற்கிடையே ஜெனட் பஸ்சில் சென்று வந்தபோது நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கோதண்டபுரத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ராஜசிம்மனுடன்(35) பழக்கம் ஏற்பட்டது.
ராஜசிம்மன் கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி வேட்டவலம் சென்று ஜெனட்டை சந்தித்து வந்தார். இந்நிலையில் ராஜசிம்மன் சில மாதங்களாக ஜெனட்டை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் வருத்தமடைந்த ஜெனட் நேற்றுமுன்தினம் சீர்காழி புறப்பட்டு வந்தார். அங்கு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜசிம்மனிடம்
ஏன் என்னை பார்க்க வரவில்லை என கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெனட் மண்ணெண்ணெய் கேனுடன் சீர்காழி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதைக்கண்ட போலீசார் ஓடிவந்து அவரை தடுத்தனர். சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற ஜெனட் மீதும்,
பொது இடத்தில் ஆபாசமாக பேசி பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராஜசிம்மன் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கள்ளக்காதலன் விஷம் குடித்தார் அதிர்ச்சியில் கள்ளக்காதலி தற்கொலை பிப்ரவரி 07, 2011 தினமலர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெற்றோர் கண்டித்ததால், கள்ளக்காதலன் விஷம் குடித்தார். இதையறிந்த, அவரது கள்ளக்காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி, ஜோதிபாசு நகரைச் சேர்ந்தவர் முருகன்(45). இவரது மனைவி
அமுதலட்சுமி(35). இவர்களுக்கு
மூன்று குழந்தைகள் உள்ளன. அமுதலட்சு மிக்கும், மகாராஜன்
(25) என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையறித்த முருகன், அமுதலட்சுமியையும், மகாராஜனை அவரது பெற்றோரும் கண்டித்துள்ளனர். மனமுடைந்த மகாராஜன், பிப்., 4ல் விஷம் குடித்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அமுதலட்சுமி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் விசாரித்தனர்.
======
கள்ளக்காம ஜோடிகளின் நல்வாழ்விற்கென தனியாக ஒரு நலவாரியமும், நல அமைச்சகமும் உருவாக்கினால் பல உயிர்கள் பலியாவது தவிர்க்கப்படும். சம்மந்தப்பட்ட அலுவலர்களும், பெண்ணார்வ அமைப்புகளும், வாரியங்களும் இதைக் கருத்தில்கொண்டு தேவையான நிதியுதவியை வழக்கம்போல வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.“பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமை” என்ற பெயரில் நிதியுதவி பெறுவதைவிட இந்தக் கள்ளக்காம உயிரிழப்புகளைக் காட்டி நிதியுதவி பெறுவது தான் தற்போதைய “பெண் விடுதலை” வியாபாரத்திற்கான சரியான நிலவரம் (Current Trend). காலத்திற்கேற்ப வியாபார யுக்தியையும் மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!