இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, February 10, 2011

இந்திய அரசியல் ஒரு பார்வை - சிரிக்க, சிந்திக்க

செய்திப் படங்கள்- தினமலர் 11/2/2011

2020-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய அரசியல்!

பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் நடத்திய ஊழியர் கூட்டத்திற்கு, வந்திருந்த தொண்டர் ஒருவர் ஆசீர்வாதம் பெறுகிறார்.


கடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் சேர்மன் தங்கராசு தலைமையில் நடந்தது.

சென்னையில் நடைபெற்ற ம.பெ.சி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட தங்க வாள் மற்றும் கிரீடத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி மேடையில் வைத்து ஏலமிட்டார், இதை தொண்டர் ஒருவர் 55 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்.



Wednesday, February 09, 2011

காதலித்தால் மரணம்தான் பரிசா?

கணவனைப் பிடிக்காததால் வேறு ஒருவனைக் காதலித்தால் அதற்கு மரணம்தான் பரிசா? என்ன ஒரு கொடுமை இந்த நாட்டில்! “அபலைப் பெண்களை” காப்பாற்ற யாருமே இல்லையா? கணவனிடம் வரதட்சணைக் கொடுமை, கள்ளக் காதலனிடம் கொலை செய்துவிடுவானோ என்ற அச்சம். பெண்ணின் “அன்பை” பக்குவமாக புரிந்துகொண்டு அன்பு செலுத்த நேர்மையான ஆண்களே இல்லையா?

கணவனை ஏமாற்றிய மனைவி கள்ளக்காதலில் மரணம்
மாலைமலர் 8/2/2011

கோவை, பிப். 8-

கணவரை ஏமாற்றி விட்டு கள்ள காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் அருண் தினேஷ் (25). ஓட்டல் ஊழியர். இவரது மனைவி மலர்கொடி (21). இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மலர்கொடி மருந்து கடையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மலர்கொடிக்கு வடவள்ளி வி.ஓ.நகரை சேர்ந்த தன்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. 2 பேரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

கள்ளகாதல் விவகாரம் கணவன் அருண்தினேசுக்கு தெரியாமல் இருப்பதற்காக தன்ராஜை தனது பழைய நண்பன் என்று கணவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் மலர்கொடியும், அருண்தினேசும், வடவள்ளியில் உள்ள தன்ராஜ் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.
நேற்று தன்ராஜ் மலர் கொடிக்கு போன் செய்து வீட்டில் யாரும் இல்லை. நீ உடனே புறப்பட்டு வா? நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். இதையடுத்து மலர்கொடி கணவரிடம் கோவையில் வேலைக்கு விண்ணப்ப மனு கொடுக்க போவதாக பொய்யான தகவலை கூறிவிட்டு தன்ராஜ் வீட்டிற்கு சென்றார்.

அங்கு 2 பேரும் காலை முதல் மதியம் வரை உல்லாசமாக இருந்தனர். அப்போது தன்ராஜூக்கும் மலர்கொடிக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கள்ளகாதலன் தன்ராஜ் மலர்கொடியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தான்.

பின்னர் போன் மூலம் நடந்த தகவலை தாய் விஜயலட்சுமிக்கு போன் செய்து கூறினான். மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டான். அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு படுக்கை அறையில் மலர்கொடி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். மலர்கொடி மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது.

இதுகுறித்து விஜயலட்சுமி வடவள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். கூடுதல் துணை சூப்பிரண்டுகள் ஜெயபாண்டியன், அண்ணா துரை, பேரூர் துணை சூப்பிரண்டு முத்தரசு ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்துவிட்டு தலைமறைவான தன் ராசை பிடிக்க பேரூர் டி.எஸ்.பி. முத்தரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தன்ராஜின் மோட்டார் சைக்கிள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிற்பதை கண்டு பிடித்தனர்.

எனவே கொலையாளி தன்ராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. தனிப்படை போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.

தினமலர் பிப்ரவரி 10,2011

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மேலகுமிழங்குளத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41). இவரது மனைவி சீதை (32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் வெளியூருக்கு ஓடி விட்டனர். சில மாதங்களில் சீதை ஊர் திரும்பினார். முருகனும் ஊர் திரும்பி, வேறு திருமணம் செய்து கொண்டார்.கடந்த 2007 ஜூன் 6ம் தேதி முருகனை சீதை சந்தித்தார். முருகன், "எனக்கு திருமணம் ஆகி விட்டது, நீ மருந்து குடித்து செத்து தொலை' எனக்கூறினார். வீடு திரும்பிய சீதை, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் முருகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை சப் கோர்ட் நீதிபதி ஜெசிந்தா மார்டின் தீர்ப்பளித்தார்.

====

  • கள்ளக்காமத்தலைவனின் பேச்சை தலையில் தாங்கி தட்டாமல் உயிரைக்கூட விடும் பெண்கள் தன்னுடைய கணவனின் பேச்சை மட்டும் மதிப்பதில்லையே!
  • கள்ளக்காமத்தலைவனின் மீது வைத்திருக்கும் மதிப்பு மரியாதையில் சிறிதளவுகூட வயதான மாமனார் மாமியார் மீது வைப்பதில்லையே!
  • தான் பெற்ற குழந்தைகள் மீது இருக்கவேண்டிய பாசத்தைவிட கள்ளக்காமத்தில் இருக்கும் மோகம் அதிகமாக இருக்கிறதே!
ஆனால் இதெல்லாம் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை "பெண்ணடிமைத்தனம்" என்று சொல்வார்கள் பல தலைவிகள். அதனால் இதுபோன்ற கள்ளக்காமத்திற்கு ஏங்கும் “அப்பாவிப் பெண்களை” ஆதரித்து குரல் கொடுத்தால் நீங்களும் “பெண் விடுதலை விரும்பி” என்று சமுதாயத்தால் போற்றப்படலாம்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் ஏதோ ஒரு காரணத்தால் மனைவி இறந்துவிட்டால் கணவனும், அவனது குடும்பத்தாரும்தான் அதற்குக் காரணம் என்று கூறி “வரதட்சணைக் கொலை” என்ற ஒரு சட்டத்தின் பெயரில் கணவனை அவனது குடும்பத்தோடு சிறையில் அடைக்கும் நடைமுறை இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்த சட்ட நடைமுறையுடன் சேர்த்து மனைவி கள்ளக்காமத்தில் பலியானால் அதற்கும் அவளது கணவன்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறி அதற்காக கணவனுக்கு தூக்குதண்டனை என்று ஒரு புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று பெண்ணுரிமை பேசி நாட்டு நடப்பிற்கேற்ப ஊரோடு நாமும் அனுசரித்துப்போவதுதான் புத்திசாலித்தனம்.



Monday, February 07, 2011

ஊழலின் நிறம் என்னவென்று தெரியுமா?

அடேங்கப்பா!
தினமலர் பிப்ரவரி 08,2011
(படங்களும், செய்தியும் - தினமலர்)

Latest News

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சர்ச்சை நீடிக்கையில், தொலைத்தொடர்பு துறையில், அடுத்த மெகா ஊழல் அம்பலமாகியிருக்கிது. 2005ல், இஸ்ரோ செயற்கைக்கோள்களில், "எஸ்-பாண்ட்' அலைவரிசையை [...]


மேலுள்ள படங்களில் சிவப்பு, வெள்ளை நிற புகைகள் தெரிகிறது. இந்த நிறங்களுடன் பச்சை நிறம் தெரிகிறதா என்று பாருங்கள்.

மேலும் பல வண்ணங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்: 2020க்கு முன்பாகவே இந்தியாவை வல்லரசாக்கிவிட்ட மாமனிதர்கள்!

Sunday, February 06, 2011

கவர்ச்சியான அட்டகாசங்கள்

பின்வரும் திருக்குறள்களை படித்துவிட்டுப் பிறகு பின்வரும் செய்திகளைப் படியுங்கள். அப்போதுதான் செய்தி நன்றாகப் புரியும்! இல்லையென்றால் திருவள்ளுவரையும் ஆணாதிக்க எண்ணம் கொண்டவர், பெண்ணடிமை பேசுபவர் என்று முத்திரை குத்திவிடுவீர்கள்!

"மனைவி" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்
:

மனைத்
தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
.

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

***********************

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

திருவள்ளுவரின் “கள்ளுண்ணாமையும்”, “பிறன்மனை நோக்காமையும்”தான் இப்போது தமிழ்நாட்டின் உயிர் மூச்சாக இருக்கிறது என்று பின்வரும் செய்திகளைப் படித்தால் உங்களுக்கே புரியும்!

தமிழ்ப்பெயர் வைத்த திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து தமிழ் வளர்க்கும் கலியுக தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழைப்போற்றுங்காலத்தில் பின்வரும் செய்திகள் எல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயங்கள்தான்.


காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
தினகரன் 7/2/2011

சீர்காழி : கள்ளக்காதலன் சந்திக்க மறுத்ததால் சீர்காழி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் தாமமூர்த்தி. இவரது மனைவி ஜெனட் (30). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். (498A கணவர்கள் ஜாக்கிரதை!) இதற்கிடையே ஜெனட் பஸ்சில் சென்று வந்தபோது நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கோதண்டபுரத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ராஜசிம்மனுடன்(35) பழக்கம் ஏற்பட்டது.

ராஜசிம்மன் கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி வேட்டவலம் சென்று ஜெனட்டை சந்தித்து வந்தார். இந்நிலையில் ராஜசிம்மன் சில மாதங்களாக ஜெனட்டை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் வருத்தமடைந்த ஜெனட் நேற்றுமுன்தினம் சீர்காழி புறப்பட்டு வந்தார். அங்கு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜசிம்மனிடம் ஏன் என்னை பார்க்க வரவில்லை என கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெனட் மண்ணெண்ணெய் கேனுடன் சீர்காழி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதைக்கண்ட போலீசார் ஓடிவந்து அவரை தடுத்தனர். சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற ஜெனட் மீதும், பொது இடத்தில் ஆபாசமாக பேசி பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராஜசிம்மன் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


கள்ளக்காதலன் விஷம் குடித்தார் அதிர்ச்சியில் கள்ளக்காதலி தற்கொலை
பிப்ரவரி 07, 2011 தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெற்றோர் கண்டித்ததால், கள்ளக்காதலன் விஷம் குடித்தார். இதையறிந்த, அவரது கள்ளக்காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி, ஜோதிபாசு நகரைச் சேர்ந்தவர் முருகன்(45). இவரது மனைவி அமுதலட்சுமி(35). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அமுதலட்சு மிக்கும், மகாராஜன்(25) என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையறித்த முருகன், அமுதலட்சுமியையும், மகாராஜனை அவரது பெற்றோரும் கண்டித்துள்ளனர். மனமுடைந்த மகாராஜன், பிப்., 4ல் விஷம் குடித்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அமுதலட்சுமி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் விசாரித்தனர்.

======

கள்ளக்காம ஜோடிகளின் நல்வாழ்விற்கென தனியாக ஒரு நலவாரியமும், நல அமைச்சகமும் உருவாக்கினால் பல உயிர்கள் பலியாவது தவிர்க்கப்படும். சம்மந்தப்பட்ட அலுவலர்களும், பெண்ணார்வ அமைப்புகளும், வாரியங்களும் இதைக் கருத்தில்கொண்டு தேவையான நிதியுதவியை வழக்கம்போல வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.

“பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமை” என்ற பெயரில் நிதியுதவி பெறுவதைவிட இந்தக் கள்ளக்காம உயிரிழப்புகளைக் காட்டி நிதியுதவி பெறுவது தான் தற்போதைய “பெண் விடுதலை” வியாபாரத்திற்கான சரியான நிலவரம் (Current Trend). காலத்திற்கேற்ப வியாபார யுக்தியையும் மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!



Thursday, February 03, 2011

குப்பையை கொட்டும் மருமகள்களை தடுப்பது யார்?

விதிமுறையை மீறினால் தப்பில்லை: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு சென்டர் மீடியனில் விடப்பட்டுள்ள சிறிதளவு இடைவெளியில் டூவீலர்கள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. (படமும் கருத்தும் - தினமலர் படம் 3.2.11)

மேலுள்ள படத்தைப் பாருங்கள். சட்டத்தை மீறி பொதுமக்களும், காவல் அதிகாரியும் ஒன்றாக இணைந்து சாலையை கடப்பதுபோலத்தான் அப்பாவிகளுக்கெதிராக தொடரப்படும் பொய்வரதட்சணை வழக்குகளிலும் மருமகள்களும், காவல்துறையும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள்.

பொய் வரதட்சணை வழக்குகள் பதிவாகும்போது காவல்துறை முறையான புலன்விசாரணை செய்யாமல் இருப்பதால் காவல்துறையும் தங்களுக்கு சாதகமாக பொய் வழக்குப்போட உதவுகிறது என்ற தைரியத்துடன் பல மருமகள்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை அடைவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் தினம் தினம் பல பொய் வரதட்சணை வழக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பல மருமகள்கள் காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை பதிவுசெய்து கணவனையும் அவனது குடும்பத்தையும் துன்புறுத்தி வருகிறார்கள். மருமகள்கள் பொய்யான புகார் அளித்தாலும் அதைக் காவல்துறை முறையாக விசாரணை செய்து அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படாமல் பாதுகாக்கவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதைவிட அப்பாவிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம். ஆனால் நாட்டில் நடப்பதோ தலைகீழ். உண்மையாக புலன் விசாரணை செய்தால் பல பொய் வழக்குகள் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியமிருக்காது. பல அப்பாவிகளும் தேவையில்லாமல் தங்களது வாழ்வை இழக்க நேரிடாது.

நாட்டில் நடந்துகொண்டிருக்கும் தற்போதைய நடைமுறைப்படி விசாரணை என்பதே பல பொய் வரதட்சணை வழக்குகளில் செய்யப்படுவதில்லை. நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது சுமத்தப்பட்ட பொய் வரதட்சணை வழக்கை மட்டுமே காவல்துறை முறையாக விசாரணை செய்து அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று உண்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தார்கள். அந்த விசாரணை அறிக்கையை இங்கே சென்று பாருங்கள் (நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை). இதுபோல எத்தனை வரதட்சணை வழக்குகளில் முறையான விசாரணை நடைபெற்றிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித விசாரணையும் செய்யாமல் பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுபோல அப்படியே புகாரை “காப்பியடித்து” விசாரணை அறிக்கை என்ற பெயரில் அப்பாவிகளை குற்றவாளி பட்டியலில் சேர்த்து நீதிமன்றங்களில் பொய் வழக்குகளை குவித்துவிடுகிறார்கள். அதனால் இந்திய நீதிமன்றங்கள் பொய் வரதட்சணை வழக்குகள் என்னும் குப்பைகளால் நிரம்பி வழிந்து துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது. இதன்விளைவாகப் பல அப்பாவிகள் நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் நீதிகிடைக்காமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.