இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, November 02, 2010

காமம் பெரிதா? தாய்மை பெரிதா?

எது பெரியது என்று செய்தியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தினமலர் 3 நவம்பர் 2010

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்து, வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் இடையகோட்டை புலியூர் நத்தத்தை சேர்ந்த பெருமாள் மனைவி ஈஸ்வரி(26). இவருக்கு இரண்டு குழந்தைகள். ஈஸ்வரி, இதே பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்தார். அவருக்கும் உடன் பணியாற்றிய சுரேஷ்(28)க்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை சுரேஷ் பெற்றோர் கண்டித்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் ரோட்டில் வெள்ளக்கரடு அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



இதுதான்டா இந்தியா! - வேற்றுமையில் ஒற்றுமை

கீழுள்ள செய்திப் படங்கள் அனைத்தும் 3 நவம்பர் 2010 அன்று தினமலரில் வந்திருப்பவை. இவை சொல்லும் கருத்துக்கள் என்னவென்று தொடர்ந்து படியுங்கள்.


1. அடிப்படை தேவையைக் கொடுக்கமாட்டோம். ஆனால் தேவையற்ற இலவசங்களை வேண்டாமென்றாலும் கட்டாயப்படுத்திக் கொடுப்போம்.

(தினமலர்) "டிவி' கொடுத்தும் பயனில்லை: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட துரைகுளம் ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் உள்ள குடிசைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டும் அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


2. மக்களை மனிதாபிமானத்துடன் நடத்தமாட்டோம். அனைத்து இடங்களிலும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம். ஆனால் நாங்கள் மிகவும் பண்பானவர்கள், கருணை மிக்கவர்கள், அன்பானவர்கள் என்று உலகெங்கும் பெருமை பேசித்திரிவோம்.

(தினமலர்) சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த மாற்றுதிறனாளிகள் வளாகத்திலிருந்து, அலுவலகம் வரை சிலர் குதித்தும், சிலர் ஊர்ந்தும், தவழ்ந்தபடி வந்தனர். மாற்றுதிறனாளிகளை அழைத்து வர அமைக்கப்பட்ட சக்கர வாகனம் பயன்படுத்தாததால் பொதுமக்கள் பலர் முகம் சுளித்துக்கொண்டனர்.
(இந்த படத்துடன் தொடர்புடைய மற்றொரு பதிவு:நல்லதை கற்க மறுக்கும் இந்தியர்கள்)


3. எல்லோரும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கண்டிப்பாக நடந்துகொள்வோம். அறிவுரைகளை அள்ளி வழங்குவோம். நீதிதேவதையின் மானத்தையே நாங்கள்தான் கடுமையான சட்டங்கள் மூலம் காப்பாற்றி வருகிறோம் என்று சொல்வோம். ஆனால் அந்த சட்டங்களை நாங்கள் கடைபிடிக்கமாட்டோம். அது எந்த சட்டங்களானாலும் சரி.

(தினமலர்) சட்டப்படி நம்பர் பிளேட் எழுதப்படாத வாகனங்களுக்கு அக்., 20 வரை கெடு விதித்த எஸ்.பிரபாகரன் எஸ்.பி., அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே போலீஸ்காரர் முன்பே விதிமீறிய டூவீலர் சென்றது. (அடுத்த படம்) விருதுநகர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்.

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லி நாம் பெருமைப்படும் இந்தியாவா?





Monday, November 01, 2010

நல்லதை கற்க மறுக்கும் இந்தியர்கள்

தினமலர் 2 நவம்பர் 2010
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று சக்கர சைக்கிள் பெற வந்த மாற்றுத்திறனாளிகள், சாய்வு தள நடைபாதை இல்லாததால் சிரமத்திற்குள்ளாகினர்.


வெளிநாடுகளில் எல்லா பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு கட்டிடங்கள், பேருந்து, இரயில், திரையரங்கம் உட்பட எல்லா இடங்களிலும் ஊனமுற்றவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சமதள சாய்வு நடைபாதை அவர்களுக்காகவே தனியாக அமைக்கப்பட்டிருக்கும். அங்கு மனிதர்களுக்கு தக்க மரியாதை கொடுக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் என்று பலமுறை மக்களின் பணத்தில் கும்மாளம் போடும் தலைவர்கள் தங்களது பயணத்தின்போது வெளிநாடுகளில் இருக்கும் இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? இதுபோன்ற நல்லவிஷயங்களை வெளிநாடுகளிலிருந்து “காப்பியடித்து” இந்தியாவில் செயல்படுத்தலாமே. இது மிகவும் எளியதொரு நல்ல விஷயம்.

ஆனால் வெளிநாடுகளிலிருந்து நாம் “காப்பியடித்து” நாட்டை சிதைக்க சுறுசுறுப்பாக செயல்படுத்திவரும் விஷயங்கள் என்ன தெரியுமா? “Women Empowerment” என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று பல சட்டங்களை இயற்றி குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கும் வேலையைத்தான் பக்குவமாக செய்து வருகிறோம்.

அதற்கு உதாரணம்தான் பின்வரும் விஷயங்கள்.

1961லேயே வரதட்சணை தடுப்புச்சட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதை அரசாங்கம் இன்றுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. ஆனால் இந்த சட்டத்திற்குத் துணையாக அடுக்கடுக்காக பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள்.

1961ல் இயற்றப்பட்ட சட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தாமல் தங்களது குறையை மறைத்து அரசாங்கம் 1984ல் IPC498A என்று மற்றொரு சட்டத்தை இயற்றியிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மருமகள்கள் இதை எப்படிவேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம். இதற்குப் பெயர்தான் மேல்நாட்டில் இருப்பதுபோன்ற “பெண்ணுரிமை”. இந்த சட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். இன்னும் இந்த அழிவுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த அவலத்தைப் பற்றி இந்திய உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறது. சமீபத்தில் கூட அதைப்பற்றி கூறியிருக்கிறது.

Supreme Court of India: Direction to Indian Government to Curb IPC498a Misuse

August 13, 2010

31. The learned members of the Bar have enormous social responsibility and obligation to ensure that the social fiber of family life is not ruined or demolished. They must ensure that exaggerated versions of small incidents should not be reflected in the criminal complaints. Majority of the complaints are filed either on their advice or with their concurrence. The learned members of the Bar who belong to a noble profession must maintain its noble traditions and should treat every complaint under section 498-A as a basic human problem and must make serious endeavour to help the parties in arriving at an amicable resolution of that human problem. They must discharge their duties to the best of their abilities to ensure that social fiber, peace and tranquility of the society remains intact. The members of the Bar should also ensure that one complaint should not lead to multiple cases.

34. Before parting with this case, we would like to observe that a serious relook of the entire provision is warranted by the legislation. It is also a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over implication is also reflected in a very large number of cases.


35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.


நாட்டில் இன்றும் நடந்துகொண்டிருக்கும் இந்த சமூகச் சீரழிவைப்பற்றித் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் www. 498A.org. Save Indian Family Foundation


IPC498A விற்கு அடுத்து 2005ல் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி ஆண்கள் மட்டுமே குடும்ப வன்முறை செய்யும் கொடியவர்கள். பெண்கள் வெறும் அப்பாவிகள். வன்முறையே செய்யத் தெரியாதவர்கள். இது மேல்நாடுகளில் இருக்கும் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தை அரைவேக்காட்டுத்தனமாக காப்பியடித்து ஒருதலைபட்சமாக இயற்றப்பட்டுள்ளது. மேல்நாடுகளில் குடும்பவன்முறை தடுப்புச் சட்டத்தின்படி ஆண், பெண் இருவரும் சமமாகக் கருதப்படுவர். ஆனால் இந்திய சட்டத்தில் பெண் எந்தவித குற்றம் இழைத்தாலும் தவறே கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற இந்திய வாழ்க்கை நெறிமுறையை மக்களுக்கு கற்பிக்க மறுத்து மக்களுக்கு நன்னெறி சொல்லவதற்காக ஒரு சட்டத்தை மேலைநாட்டிலிருந்து அரைவேக்காட்டுத்தனமாக “Domestic Violence Act” என்று ஒரு சட்டத்தை காப்பியடித்து இயற்றியிருப்பது எவ்வளவு கேவலமான செயல்.

நாட்டிற்கு தேவையான பல நல்ல விஷயங்களை எந்த நாட்டிலிருந்தும் காப்பியடித்து இந்தியாவில் செயல்படுத்தலாம். ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தவறான விஷயங்களை மட்டுமே இந்தியாவில் செயல்படுத்திவருகிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் மேலுள்ள செய்தியில் வந்துள்ள படமும் இன்றைய பெண்கள் பாதுகாப்பு சட்டங்களும்.






பெண்களின் அவலமான முரண்பாடுகள்

பின்வரும் இரண்டு படங்களையும் பாருங்கள் மனித இனத்தில் எப்படிப்பட்ட கொடூரமான முரண்பாடுகள் இருக்கின்றன என்று புரியும். முதல் படத்தில் பெற்ற சிசுவை பெற்றோர் வாய்க்காலில் வீசியிருக்கிறார்கள். இரண்டாவது செய்தியில் பிள்ளையில்லாதக் கூட்டம் பெண்ணின் கருமுட்டைக்கு விலை நிர்ணயம் செய்து வியாபாரச் சந்தையில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


தினமலர் நவம்பர் 2,2010
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் ராஜவாய்க்கால் அருகே வீசி சென்ற பிறந்த சில மணி நேரமான பெண் சிசுவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.


இது ஒரு வெளிநாட்டு செய்தித்தாளில் வந்துள்ள விளம்பரம்


இந்த இரண்டு செய்தி சம்பவங்களும் நடைபெறுவதற்கு அடிப்படையாக தேவைப்படுவது பெண்கள். பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் குழந்தை பிறக்கவும் முடியாது. கரு முட்டையை விற்கவும் முடியாது.

அப்படியிருக்கும்போது பிறந்த குழந்தைகள் இதுபோன்று குப்பைத்தொட்டியிலும், சாக்கடையிலும் வீசியெறியப்படும் அவலங்களுக்கு யார் காரணமாக இருக்கமுடியும்? பெண்ணின் துணை இல்லாமல் ஒரு ஆண் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை இழைக்க முடியுமா?
கடைசியில் இதற்கெல்லாம் காரணம் யார் என்று நீங்கள் கூறுவீர்கள்?

இந்திய சட்டங்கள் மட்டும் என்ன சொல்கிறதென்றால் ஆண்கள் மட்டுமே எப்போதும் குற்றவாளிகள் என்றும் பெண்கள் எப்போதும் அப்பாவிகள் என்றும் நினைத்துக்கொண்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



இறப்பு உதவி தொகைக்காக லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார்

ஐயோ பாவம். ஒரு பெண்ணை போலிஸில் சிக்கவைத்துவிட்டார்களே! ஒரு பெண் லஞ்சம் கேட்டால் இதையெல்லாம் பெரிதாக்கலாமா? ஆண்கள் மட்டும்தானே எப்போதும் குற்றம் செய்வார்கள்.

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
தினமலர் நவம்பர் 02,2010

மஞ்சூர் : இறப்பு உதவி தொகைக்காக லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் உட்பட இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மஞ்சூர் அருகே தங்காடு பகுதியை சேர்ந்த ஆலுகுட்டி கடந்த செப்டம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு உதவித் தொகைக்காக இவரது மனைவி ராஜாமணி குந்தா தாலுகாவுக்கு விண்ணப்பம் அளித்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இறப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ராஜாமணி இவரது மகன் நாராயணன் குந்தா தாலுகா அலுவலக தாசில்தார் கனகத்திடம் பல முறை கேட்டும் காசோலை வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாராயணன் குந்தா தாசில்தாரிடம் வந்து கேட்டுள்ளார். அதற்கு தாசில்தார் 1000 ரூபாய் லஞ்சம் தருமாறு வற்புறுத்தியுள்ளார்.

இது குறித்து நாராயணன் ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகரன் தலைமையில் போலீஸ் குழுவினர் தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்தனர். ரசாயனம் தடவிய 1500 ரூபாயை போலீசார் நாராயணனிடம் கொடுத்தனர். இந்த தொகையை எடுத்து சென்ற நாராயணன் தாசில்தார் கனகத்திடம்(53), 1000 ரூபாயும், தற்காலிக இளநிலை ஊழியர் சாஸ்திரியிடம்(44) 500 ரூபாயும் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.