இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 14, 2010

எதிர்கால மாணவிக்குத் தேவை புத்தகமா அல்லது கர்ப்பமா?

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தீர்க்க தரிசனமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் எதிர்கால கல்லூரி மாணவிகள் கல்லூரிக்குச் செல்லும் நிலை எப்படி இருக்கும் என்று சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஒரு புதுமையான சமூக சீர்திருத்தக் கருத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்ப்ப காலத்தில் சட்டக் கல்லூரிக்கு சரியாக செல்லாமல் வருகைப் பதிவு குறைந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காத பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவிகள் தொடுத்த வழக்கில் தீர்ப்பு சொல்லும்போது முடிவுரையில் அந்த புரட்சிகரமான கருத்தையும் சேர்த்து சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.

if any female candidate is deprived or detained in any of the semester just on the ground that she could not attend classes being in the advanced stage of pregnancy or due to the delivery of the child, then such an act on the part of any of the university or college would not only be completely in negation of the conscience of the Constitution of India but also of the women rights and gender equality this nation has long been striving for. It is a saying that “Motherhood is priced of God, at price no man may dare to lessen or misunderstand”. By not granting these students relaxation, we will be making motherhood a crime which no civilized democracy in the history of mankind has ever done or will ever do. We cannot make them pay the price for the glory that is motherhood.

தாய்மை என்பது புனிதமானது. இது திருமணத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் ஒரு உடல் நிலை மாறுபாடு. இது வியாதியல்ல. அதனால் இதனைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்கும் மாணவியரை வருகைப்பதிவு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் தேர்வு எழுத அனுமதி மறுப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று மாணவியர் தொடுத்த வழக்கில் நீதிபதி தீர்ப்புக் கூறினார். மிகவும் சரிதான்.

ஆனால், அந்தத் தீர்ப்பின் முடிவுரையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்தியப் பெண்களின் கற்பு, கலவு பற்றி கூறிய தீர்ப்பை மேற்கோள் காட்டி இனிவரும் காலங்களில் திருமணம் செய்யாமல் கர்ப்பம் தரித்து பல மாணவிகள் கல்லூரிக்கு வரும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் பல்கலைக்கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் கூடுதல் அறிவுரையும் வழங்கியிருக்கிறது. திருமணம் செய்யாமல் கூடி வாழ்வது தவறில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதால் சமுதாயத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் வளைந்துகொடுக்கவேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நீதிபதி தனது கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருகிறார். தீர்ப்பின் அந்தப் பகுதியை கீழே படித்துப்பாருங்கள்.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 12.07.2010
முழுத் தீர்ப்பை இங்கே காணலாம் W.P.(C) No. 8302/2009

“It would not be inappropriate to mention at this juncture the recent rulings of the Apex Court in the cases of Lata Singh vs. State Of U.P AIR 2006 SC 2522 and S. Khushboo vs. Kanniamal & Anr MANU/SC/0310/2010 where it has given liberty to the live-in relationship from the shackles of being an offence and also in the latter case where it has held that premarital sex is not an offence. The society today is changing at a rapid pace and we must be in tune with the realities and not hold on to archaic social mores. Once such a right, however unpopular, is recognized then it cannot be ruled out that there can be more cases of girl students proceeding on maternity leave when while they are still in college. Law should be an instrument of social change and not a defender of it. Motherhood is not a medical condition but a promise. We all kowtow to our mothers to whom we owe our existence and to punish a woman for becoming a mother would surely be the mother of all ironies.

Bar Council of India, although not a party in the present writ petitions, is hereby suggested to make rules for women students claiming relaxation on ground of maternity relief so that they are not deprived of appearing in the LLB
examinations due to pregnancy.

தாய்மை என்பது புனிதமானதுதான். ஆனால் அந்த புனிதத்தை எந்த வகையில் பெண் பெற நினைக்கிறாள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருமணம் செய்யாமல் கூடி வாழும் நிலை சமூகத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கேற்ப சட்டங்கள் மாறவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை சட்டங்கள் ஆதரிக்கவேண்டும். அதே சமயம் சமுதாயம் தவறான பாதையில் மாற்றம் அடைந்து கொண்டிருந்தால் அதை தட்டிக்கேட்கும் விதமாகவும் இருக்கவேண்டும். சமுதாய மாற்றம் என்ற பெயரில் தன்னிச்சைப்படி சமுதாயம் செல்லும் வழியில் தானும் செல்வது சட்டமா? அல்லது சமுதாயத்திற்கு நல்ல வழியைக் காட்டி ஆரோக்கியமான சமுதாய மாற்றத்திற்கு உதவுவது சட்டமா?

கடைசியில் திருமணம் இல்லாமல் வரைமுறையின்றி தன்னிஷ்டப்படி பலருடன் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரிப்பதும், துன்பம் அனுபவிக்கப்போவதும் பெண்கள்தான்! சமுதாய மாற்றங்கள் தொடரட்டும்!! தந்தையற்ற குழந்தைகள் பெருகட்டும்!!!

Saturday, July 10, 2010

ராத்திரி நேரத்து பூஜை ஆரம்பம்!

தமிழ் நாட்டில் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் குடும்ப நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நல்ல முன்னேற்றம். நாட்டில் பல விவாகரத்து வழக்குகள் அதிகமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

சென்னை, ஜூலை 10: கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இலவச ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைன்' தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் விவாகரத்து வரை செல்வது தடுக்கப்படுவதோடு, விவாகரத்து மனுக்களும் பெருமளவில் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வார விடுமுறையில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியது: நாட்டிலேயே முதல்முறையாக வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இங்கு செயல்பட உள்ளன.

இந்தத் திட்டம் விரைவிலேயே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரத்துக்கு ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தாக்கல் செய்யப்படும் குடும்ப நல வழக்குகளுக்கு இப்போதுள்ள 3 நீதிமன்றங்கள் போதுமானவையாக இல்லை.

இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2000- ல் விவாகரத்து கோரி 972 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009-ல் இந்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

விவாகரத்து தவிர ஜீவனாம்ச வழக்குகளும் இதேபோன்று பல மடங்கு அதிகரித்துள்ளன.மொத்தம் 12,659 வழக்குகள் சென்னையிலுள்ள 3 குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல ஆலோசனைகள் வழங்கினால் தீர்க்கப்பட்டு விடும்.கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்ட உடனேயே அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்னை சிறிதாக இருக்கும்போதே தீர்வு காண்பதோடு, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். இதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைனை' தொடங்கும் திட்டம் உள்ளது.

அதேபோல், சட்ட உதவி மையத்தில் செயல்படும் ஆலோசனை மையங்களையும் இரவு 10 மணி வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது.குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்றார் எம்.ஒய்.இக்பால்.நீதிபதி எலிப் தர்மாராவ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.


மாவட்ட நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அறைகள், வீடுகளில் ஏ.சி. வசதி செய்யப்பட வேண்டும் என்றார் எலிப் தர்மாராவ்.நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி டி.முருகேசன், குடும்ப நல முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம், லா அசோசியேஷன் தலைவர் டி.வி. கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

இதுபோல விவாகரத்து வழக்குகள் அதிகமானதற்குக் காரணம் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க ஆளில்லாமல்போனதுதான் காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது. பெண்களுக்கு நல்வழி காட்வேண்டிய பெண்கள் வாரியம் சொல்லிக்கொடுப்பது என்ன என்று கீழுள்ள செய்தியில் பாருங்கள்:

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாட்டில் என்ன நடக்கிறதென்றால் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனை ஏற்பட்ட உடனே பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால் பொய் வரதட்சணை வழக்குத் தொடரவேண்டும் என்பதுதான். இதுதான் பல சட்டமேதைகள் தங்களிடம் வரும் பெண்களுக்கு சொல்லித்தரும் அறிவுரை. பிரச்சனைக்குக் காரணம் என்ன என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். பிறகு இதற்கு “காசிற்காக” தூபம் போடுவதுபோல் மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து, கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையிலடைத்து அவமானப்படுத்தி மிரட்டும் கொடுஞ்செயல். இவையெல்லாம் கடைசியில் எல்லா குடும்பத்தையும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

இந்த விஷயத்தை 2003ம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது:

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI,
DATE OF DECISION: May 19, 2003,

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sisters, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.

அதனால் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டன என்பதற்காக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏன் இப்படி அதிகமானது என்ற அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால்தான் சமுதாயத்தில் குடும்பக் கட்டமைப்பு சிதையாமல் இருக்கும். நீதிமன்றங்கள் அதிகரிப்பதால் பலருக்கு வருமானம் கிடைப்பதைத்தவிர அப்பாவிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.


பொய் வரதட்சணை வழக்குகள் உருவாவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படாதவரை இந்தியக்குடும்பங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. பணம் கிடைக்கிறது என்பதற்காக அடுத்தவன் குடிதானே கெடுகிறது நமக்கென்ன என்றிருப்பவர்களுக்கு தன்குடி கெடும்போதுதான் அந்த உண்மை புரியும். அதுவரை இந்த ராத்திரி நேரத்து நீதிமன்ற பூஜைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.




Thursday, July 08, 2010

மகளிர் காவல் நிலையத்தில் நடக்கும் ரகசியம்!

சமீபத்தில் வந்த செய்தியில் ஒரு பெண்காவலர் தான் கொடுத்த புகாரை மகளிர் காவல்நிலையத்தில் வாங்க மறுத்ததாகவும் காவலரான தனக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நடக்கும் என்று கேள்விக்கணை தொடுத்திருந்தார். அந்த செய்தியை இங்கே (தனக்கு வந்தால்தான் அந்த இன்பவலியை உணரமுடியுமோ?) படித்துவிட்டு அதற்கான பதிலை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். அப்பாவி பொதுமக்கள் கண்டிப்பாக படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

Woman ASI caught taking Rs 500 bribe



VADODARA: A woman cop from mahila police station was caught allegedly accepting a bribe of Rs 500 from a complainant on Thursday. Assistant sub-inspector Laksmi Parmar was arrested by the anti-corruption bureau (ACB) when she was accepting bribe from Raju Shrimali. Shrimali had approached the ACB officials two days ago when Parmar asked him to dole out cash for making some documents.

This is for the first time that a woman cop from mahila police station that was established last year was caught accepting bribe. According to ACB officials, Shrimali's wife Hema had registered complaint against him for demanding dowry in 2009. The couple had got married in 2008. "Shrimali was called to the mahila police station on Tuesday for investigation. Parmar told him that he will have to give Rs 500 cash for preparing some documents," said ACB officials.

"Shrimali told her that he is poor and doesn't have money, but she kept insisting for money. She even threatened to arrest him. So, he approached ACB following which we laid a trap," the officials added.

மேலுள்ள இந்த செய்திதான் அந்த கேள்விக்கான பதில். வரதட்சணை வழக்கு என்றால் ஒரே கொண்டாட்டம்தான். அந்தப் புகார் உண்மையா பொய்யா என்ற கவலையே கிடையாது.




ஈரானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம்

சமீபத்திய செய்தி என்னவென்றால் ஈரான் நாட்டில் கள்ள உறவு என்ற குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிற்கு கல்லால் அடித்து மரணதண்டனை என்று அந்த நாட்டு நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதை எதிர்த்து உலகநாடுகள் அனைத்தும் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஈரான் நாட்டில் கள்ள உறவிற்கு இப்படி ஒரு சட்டம் வைத்திருக்கிறார்கள். அது சரியா தவறா என்பது இங்கு விவாதமல்ல. இந்தியாவில் என்ன நடக்கிறது என்று ஒரு ஒப்பீடு செய்வதற்காக மட்டுமே இந்த செய்தி.

CNN News July 5, 2010
Iranian Woman Faces Stoning for Adultery
Mother of two could be put to death as soon as this weekend
  • Sakineh Ashtiani was sentenced to death on adultery charges
  • Human rights activist: only international pressure campaign can save her
  • Mother of two will be killed by stoning, says her Tehran lawyer
  • He says she was forced to confess under duress

ஆனால் இந்தியாவில் நிலைமையே தலைகீழ். இந்திய நாட்டு சட்டம் என்ன சொல்கிறதென்றால் கணவன் இருக்கும்போதே கள்ள உறவில் பெண் தானே விரும்பி ஈடுபட்டாலும் அந்தப் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக 1860-லேயே எழுதிவிட்டார்கள் நம்நாட்டு சட்ட மேதைகள்.



IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


சட்டம் கொடுமையாக இல்லாவிட்டாலும் தவறு செய்பவர்களை கொஞ்சம் யோசிக்கவைக்கும் அளவிலாவது இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அதற்குப் பெயர் சட்டம். நம்ம ஊரில் பெண்ணிற்கு சாதகமாக ஒருதலைபட்சமான சட்டங்கள் இருப்பதால் செய்திகள் எப்படியெல்லாம் வந்துகொண்டிருக்கிறது பாருங்கள்.

இந்தியாவில் நடப்பது..... தினமலர் செய்தி ஜூலை 09,2010

திருப்பரங்குன்றம்:பசுமலை ஜோன்ஸ்புரத்தை சேர்ந்தவர்கள் முருகேசன், மகாலட்சுமி. இவர்களது மகள் திவ்யா (21). தாய்மாமன் ராஜகோபாலுடன் திவ்வாவிற்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. மதுரை கோமதிபுரம் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவருடன் திவ்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஆறு மாதங்களுக்கு முன் சென்னை சென்றனர்.ராஜகோபால் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததின் பேரில் திவ்யாவை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். தாய் வீட்டில் இருக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது.

கடந்த ஒன்றாம் தேதி கோர்ட்டில் ஆஜரான போது, திவ்யா தாய் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியதால், மேலூரில் பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.கடந்த 5ல் திவ்யா, மகாலட்சுமி, ராஜகோபால், தாத்தா நவநீதகிருஷ்ணன் கோர்ட்டிற்கு வரும் போது, அருண் மற்றும் அவரது அண்ணன் அசோகன் வழிமறித்து மிரட்டினர். மகாலட்சுமி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அருண், அசோகனை போலீசார் கைது செய்தனர்.
மேலுள்ள செய்தியில் திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. ஆனால் பெண் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். கணவனை பிடிக்கவில்லையென்றால் முறையாக விவாகரத்து செய்திருக்கலாமே. ஆனால் அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் என்ன செய்திருக்கிறது பாருங்கள். பத்திரமாக மகளிர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள். தாலி கட்டிய கணவனுக்கு அல்வா. (கள்ளக்)காதலருக்கு பெண்கொடுமை சட்டத்தில் சிறை. அருமையான சட்டம்.

அப்படியே இந்த சம்பவம் தலைகீழாக நடந்திருந்து கணவன் மனைவியை விட்டு சென்றிருந்தால் அப்போதும் கணவனுக்குத்தான் சிறை.

மற்ற செய்திகளையும் பாருங்கள்.

திருச்சி:"தன்னுடைய தாயுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் கணவன் மற்றும் தாய் மீதும், அவர்களுக்கு உதவும் வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்ட பலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இளம்பெண் கோரியுள்ளார்.


திண்டுக்கல்: கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில்அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும் ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார்.இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் என்றால் எவ்வளவு மரியாதை கிடைக்கிறது! எந்த தண்டணையும் கிடையாது! இதுபோன்ற பெண்களை கட்டுப்படுத்த எந்த சட்டமும் கிடையாது. மற்ற நாடுகளில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் தவறு செய்பவர்களை தண்டிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெண் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம். பெண் செய்யும் குற்றத்திற்கும் ஆணைத்தான் தண்டிப்பார்கள். அதுதான் இந்தியநாட்டு சட்டத்தின் சிறப்பு. இன்னும் சொல்லப்போனால் பெண் தன் குற்றத்தை மறைத்து ஆண் மீது பழி சுமத்துவதற்காகவே பல சட்டங்களை பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவைதான் IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act. இதுபோன்ற வசதி பெண்களுக்கு வேறெந்த நாட்டிலாவது கிடைக்குமா?

செய்தியின் தொடக்கத்தில் ஒரு பெண்ணிற்கு இந்த தண்டணை கொடுக்கக்கூடாது என்று உலக நாடுகளும், மனித உரிமை சங்கங்களும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் பல அப்பாவித் தாய்மார்களும், ஆண்களும், குழந்தைகளும் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் சட்டத்தின் மூலம் தினம் தினம் உயிரோடு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குரலுக்கு உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் ஒருவரும் இதுவரை செவி சாய்க்கவில்லையே? ஏன்?

Wednesday, July 07, 2010

காவல்துறைக்கு சரியான வேலை கொடுக்கும் பெண்கள்!!

போலிஸ் வாங்கும் சம்பளத்திற்கு சரியான வேலையை சில பெண்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சபாஷ். அரசாங்கம் சரியாக வேலை வாங்கவில்லையென்றால் இதுபோல பெண்கள்தான் வேலைகொடுக்கவேண்டும்.

தங்களது கற்பை பாதுகாத்துக்கொள்ளாமால் போனால் கூட பரவாயில்லை உடம்பையாவது பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால் அதையும் பாதுகாத்துக்கொள்ளாமல் எவனோ ஏமாற்றிவிட்டான் என்று காவல்துறையில் கற்பழிப்பு புகார் கொடுப்பது. அல்லது திருமணமாகிவிட்டால் கணவன் தன் வழிக்கு வரவில்லையென்றால் உடனே வரதட்சணை வழக்கு கொடுப்பது என்று தங்கள் பணியை செவ்வனே செய்துவரும் கண்மணிகள் இப்போது நாட்டில் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுக்காகத்தான் காவல்துறையே இருக்கிறது! இந்த “அப்பாவிகளை” காப்பதற்குத்தான் காவல்துறையோ என்று எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ இதுபோன்ற வழக்குகளால் காவல்தெய்வங்களின் காட்டில் மழைதான்!!!

காவல்துறை இனிவரும் நாட்களில் மக்கள் திருடர்களிடம் பறிகொடுத்த பொருட்களை தேடுவதற்குப் பதிலாக “அப்பாவிப்” பெண்கள் தொலைத்த (தொலைப்பதற்கும் பறிகொடுப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இங்கு நன்கு கவனியுங்கள்) கற்பைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது!

ப.வேலூர்:காதலனுடன் சேர்த்து வைக்குமாறு, எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி, மகளிர் போலீசில் மனு அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அடுத்த எல்லைமேடு பகுதியைச் சேர்ந்த பூவேந்திரன் மகள் மீனா (13); பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோபாலின் மகன் பெரியசாமி (22); ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர்.

பெரியசாமிக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் முயன்றதை அறிந்த மீனா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெரியசாமியிடம் கூறினார்; அதற்கு பெரியசாமி மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த மீனா, ப.வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில், "பெரியசாமியும், நானும் கடந்த ஓராண்டாக காதலித்தோம். அவரும் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். தற்போது, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அதனால், என்னை பெரியசாமியுடன் சேர்த்து வைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.இரு வீட்டாரையும் அழைத்த மகளிர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
==============

விழுப்புரம்:காதலித்து ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், பெண் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சின்னப் பொன்னம்பூண்டியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் ஜோதி(20). இவர் தனது தாய் தேவகியுடன், நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அலுவலக வளாகம் முன் அமர்ந்து, திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் அய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். போலீசாரிடம் ஜோதி கூறுகையில்," இருவரும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்நிலையில் ஏழு மாத கர்ப்பமானேன். கடந்த மாதம், நேரில் சென்று திருமணம் செய்துகொள்ள கூறியபோது மறுத்த அய்யப்பன் என்னை மிரட்டி வருகிறார். இது குறித்து, கடந்த 6ம் தேதி சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை' என்றார்.ஜோதி கொடுத்த மனுவைப் பெற்றுக்கொண்ட, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்ளிட்ட போலீசார் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.