இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 31, 2011

பெண்கள் கற்பழிப்புக்கு காரணம் ஆண்களல்ல

பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் என்பது அவர்கள் அணியும் ஆடையில்தான் இருக்கிறது!! சம உரிமை என்பது எந்த அளவு ஆண்களை அடக்க முடியுமோ அவ்வளவு சமஉரிமை என்று அர்த்தம்!

ஐதராபாத்: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பெண்களின் ஆடைகள், ஆண்களை கவர்ச்சியூட்டி கவர்ந்திழுப்பதே காரணம். இன்றைய கிராமத்து பெண்கள் நாகரீக ஆடைகளை அணிகின்றனர் என ஆந்திரமாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, டி.ஜி.பி.,யின் கருத்து முறையானதல்ல. அரசாங்கமோ அல்லது போலீசாரோ பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய முடியாது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் அதனை தடுப்பதும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுமே முக்கியம் என கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், டி.ஜி.பி., கருத்தில் உடன்பாடு கிடையாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் என்ன அணிய வேண்டும் என்பதை உரிமை செய்ய அவர்களுக்கு உண்டு. இதனை கொள்கையாக மாற்ற முடியாது. இது போன்ற கருத்து மாநில டி.ஜி.பி.,யிடமிருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடியும் ஆந்திர டி.ஜி.பி.,கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Monday, December 26, 2011

திருமண வரதட்சணைக்கு இன்சூரன்ஸ் உண்டா?


புதுடில்லி : திருமண விருந்தின் போது உணவு விஷமாகி, உறவினர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு கோரும் வகையில், இன்சூரன்ஸ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்பட்டாலும், இதற்காக, சாமானிய மக்களும், பல லட்ச ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கிடையே கூடி வரும் திருமணம், கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் தடைபட்டு, ஏராளமான பணம் வீணாக நேரிடுகிறது. இந்த சிரமத்தை போக்க, "ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்ட்' நிறுவனமும், "பஜாஜ் அலையன்ஸ்' நிறுவனமும், திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நான்கு வகை பிரிவுகளில், இன்சூரன்ஸ் செய்வோருக்கு, இரண்டு லட்சம், நான்கு லட்சம், ஆறு லட்சம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் வரை, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்காக, 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, பிரீமியம் செலுத்த வேண்டும்.

தீ விபத்து மற்றும் வேறு வகையான விபத்துகள், கொள்ளை, திருட்டு ஆகிய காரணங்களால், திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு வழங்கப்படும். திருமண விருந்தின் போது, உணவு விஷமாகி விருந்தினர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு பெற இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் வழி செய்கின்றன.

சில மரணங்களாலோ, மணமக்கள் காயம் பட்டு, அதனால் திருமணம் தடை பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ, இழப்பீடு பெற முடியும். ஆனால், மணமக்களுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட முறையிலான கருத்து வேறுபாட்டால் திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு பொருந்தாது.



Tuesday, December 13, 2011

இரண்டு பெண்களும் போலிஸூம்

பதவியை வைத்து மிரட்டக் கூடாது என்பதால் புகார் கூறினேன்: ஐ.பி.எஸ்., மீது பெண் புகார்
டிசம்பர் 14,2011 தினமலர்

சென்னை : "" ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி வருணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பதவியை வைத்து மிரட்டக் கூடாது என்பதற்காக தான் புகார் அளித்தேன்,'' என்று பிரியதர்ஷிணி தெரிவித்துள்ளார். சென்னை, வளசரவாக்கம், கனகதாரா நகர், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் கோகுல் சாகர், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., இவரது மகள் பிரியதர்ஷினி. திருச்சியைச் சேர்ந்தவர் வருண்குமார், ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி. இவர்கள் இருவரும், கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகடமி ஒன்றில் பயிற்சி பெற்றனர். அப்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தேர்வுக்காக டில்லி சென்ற போது, வருண் குமார், தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் பிரியதர்ஷிணியை அறிமுகப்படுத்தினார். அப்போது, அவர்கள் பயிற்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளனர்.

அதன் பின், தேர்வு எழுதியதில், வருண் குமார் வெற்றி பெற்று அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்காக டில்லி சென்ற போது, பிரியதர்ஷிணியே அவருக்கு பொருளாதார உதவிகளை செய்து வந்தார். டில்லியில் இருவரும் இருந்த போது, தன் மகனை பார்த்துக் கொள்ளுமாறு பிரியதர்ஷிணிக்கு வருணின் தந்தை வீரசேகரன் பலமுறை இ-மெயில் அனுப்பியுள்ளார். பிரதான தேர்வு முடிந்த பின், வருணும் பிரியதர்ஷிணியும் கடந்தாண்டு நவம்பர், சென்னை வந்தனர். அதன் பின், நேர்முகத் தேர்வுக்கு தயாராகினார் வருண். அதற்கும் பல வழிகளில் பிரியதர்ஷிணியே பணம் செலவழித்துள்ளார்.

நேர்முகத் தேர்வுக்காக, தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் வருணுக்கு கொடுத்தார் பிரியதர்ஷிணி. இந்தாண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் செய்வதாகவும் இரு குடும்பத்தினர் பேசினர். இதற்கிடையில், வருண்குமார் ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சிக்குச் சென்ற நிலையில், பிரியதர்ஷிணியை திருமணம் செய்ய வேண்டுமானால் பி.எம்.டபிள்யூ.,கார் மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கிலோ தங்கம் வேண்டும் என வருணின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

மற்றொருபுறம், பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக வருண், பிரியதர்ஷினியிடம் கூறியுள்ளார். அதன் பின், வருண் திருமணம் செய்து கொள்ள மறுக்க, பிரியதர்ஷிணி வருணிடம் கேட்ட போது, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், சமீபத்தில் பிரியதர்ஷிணி புகார் அளித்தார். புகார் குறித்து, விசாரணை நடத்துமாறு, வடபழனி உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று பகல் பிரியதர்ஷிணி, எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபெய்குமார் சிங்கை சந்தித்துவிட்டு வந்த அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே அளித்த புகாருக்கு தேவையான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக இங்கு வந்தேன். அவர் தேர்வில் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில், அவரது குடும்பத்தினருடன் நான் இருந்த போட்டோ, கடந்த மாதம் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும், அவர் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்., விவரங்களையும் பதிவு செய்து கூடுதல் கமிஷனரிடம் கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

வருண்குமார், தற்போது என்னை தெரியாது என்றும், எனது நடத்தையை குறையாகவும் கூறியுள்ளார். பழகி விட்டு, அதன் பின் ஒரு பெண் எதிர்த்தால், அப்பெண்ணைப் பற்றி அவதூறு பேசுகின்றனர். எனக்கு, வருண் குமாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தன் பதவியை பயன்படுத்தி, மற்றவர்களை மிரட்டுகிறார். அப்படி இனியாரையும் அவர் மிரட்டக் கூடாது. பிரச்னைகளை பேசி தீர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து, அவர் எனது உயிருக்கே மிரட்டல் விடுத்ததால் தான் நான் புகார் அளித்தேன். அவர், என்னை தெரியாது என்கிறார். அப்படியானால், அவர் வைத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து எனக்கு," நான் வேறு பெண்களை பற்றி கூறியபோதும் என் பெற்றோர் வேண்டாம் என்றனர். உன்னையும் வேண்டாம் என்கின்றனர். அவர்களை சம்மதிக்க வைப்பேன்' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார். அது எப்படி சாத்தியமாகும். அவரை பழிவாங்க வேண்டி, புகார் அளிக்கவில்லை. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தான் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


ஈரோடு : கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, அவரது வீட்டின் முன் குழந்தையுடன் அமர்ந்து, இளம்பெண் தர்ணா போராட்டம் செய்தார். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது மகள் பிருந்தா தேவி,29; திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஈரோடு அருகே வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுக கவுண்டர் மகன் ராதாகிருஷ்ணன். திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டுக்கு வந்த பிருந்தா தேவி, தன் குழந்தையுடன் வீட்டு வாயிலில் அமர்ந்தார். "எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க வேண்டும்' எனக் கோரி, விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிருந்தா தேவி கூறியதாவது: திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்தேன். வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், அங்கு பனியன் கம்பெனி நடத்தி வந்தார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. 2008ல் திருப்பூர் மாவட்டம், மூலனூரில் உள்ள குலதெய்வம் கோவிலில், எங்கள் குடும்பத்தார் சம்மதத்துடன், எனக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மாற்று ஜாதி காரணமாக, கணவர் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் வீட்டிலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். நான் ஏழு மாதம் கர்ப்பமாக இருந்த போது, ராதாகிருஷ்ணன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது திருப்பூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தேன். போலீசார் தலையிட்டு, எங்களை சேர்த்து வைத்தனர்.டிச., 5ம் தேதி, திருப்பூர் வந்த ராதாகிருஷ்ணனின் அண்ணன் சிவசங்கர், உறவினர்கள் கஸ்தூரி, லலிதா, சிவசங்கர் ஆகியோர், என் கணவரை அழைத்துச் சென்று விட்டனர். அவரது மொபைல் போன், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தேன். நேற்று முன்தினம் மாலை, மகளிர் போலீஸ் ஒருவர், ஈரோட்டில் உள்ள என் கணவன் வீட்டுக்கு என்னை அழைத்து வந்தார். என் கணவரிடம், "சேர்ந்து வாழுங்கள்' என, அறிவுரை கூறிவிட்டு, பெண் போலீஸ் சென்று விட்டார். ஆனால், என் கணவர் குடும்பத்தார், "உனக்கும் என் மகனுக்கும் திருமணமே நடக்கவில்லை. பல ஆண்களுடன் உனக்கு தொடர்பு உள்ளது. இந்த குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது' என்று கூறி, என்னை வெளியே தள்ளி, வீட்டை பூட்டிச் சென்று விட்டனர். இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. இவ்வாறு பிருந்தா தேவி கூறினார்.

ராதாகிருஷ்ணன் உறவினர்கள் கூறுகையில், "இவர் விபசார கும்பலை சேர்ந்தவர். இவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. ராதாகிருஷ்ணனுக்கும், இவருக்கும் திருமணமாகவில்லை. இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன' என்றனர்.

பிருந்தா தேவி கூறுகையில், ""ராதாகிருஷ்ணன் தான் என் கணவர். வேண்டுமானால் என் குழந்தைக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய தயார்,'' என்றார்.

கணவன் வீட்டாரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பிருந்தா தேவிக்கு, வீரப்பன்சத்திரம் போலீசார் இரண்டு பேர், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நேற்று இரவு வரை, பிருந்தா தேவி அங்கேயே இருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Thursday, November 24, 2011

குடும்பம் ஒரு கதம்பம் - இந்தியக் குடும்பம் 2020

இந்திய பொய் வரதட்சணை வழக்குகளால் பிரியும் தம்பதிகள் எந்தெந்த திசையில் செல்வார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் பின்வரும் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொய் வரதட்சணை வழக்குகள் உருவான பிறகு கணவனுக்கு நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக விவாகரத்து கொடுக்காது. அதனால் அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் வாழவேண்டியதுதான். பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண் வழக்கு என்ற பெயரில் போலிஸ் மற்றும் நீதித்துறையின் வலையில் சிக்கி ஆண்டுகளை கழிக்கவேண்டியதுதான். இதனிடையே தனிமைக்கு தீணி போட பலரும் வட்டமிடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உருவாவதுதான் கள்ளக்காதல், கொலை போன்ற சம்பவங்கள்.

பொய் வரதட்சணை வழக்குகளை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லையென்றால் “இந்தியக் குடும்பம் ஒரு கதம்பம்” போல மாறிவிடும். எந்தக் குழந்தைக்கு யார் அப்பன் என்று தெரியாது. யாருக்கு யார் மனைவி என்று தெரியாது. யாருக்கு யார் கள்ளக் காதலன் என்று தெரியாது. யாருக்கு யார் கள்ள மனைவி என்று தெரியாது. இதுதான் இந்தியக் குடும்பம் என்று உலகம் சொல்லும் அளவிற்கு நாடு உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்போதே விழித்துக்கொண்டால் இந்தியக் குடும்பங்களை காப்பாற்றலாம்.



சென்னை- வேலை தருவதாகக் கூறி, தகாத உறவு கொண்டு ஏமாற்றியதால், தொழில் அதிபரை கொன்றோம் என்று, தம்பதியினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

சென்னை, நங்கநல்லூர், அபிலாஷ் அப்பார்ட்மென்டைச் சேர்ந்த சந்திரசேகர், 55. கொசுவலை பொருத்தும் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவுரி, 45; வங்கி அதிகாரி. கடந்த 18ம் தேதி பணிக்குச் சென்ற கவுரி ஷிப்ட் முடிந்து இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் படுக்கையறையில், அவரது கணவர் சந்திரசேகர் பிணமாகக் கிடந்தார். டெலிபோன் ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. ஆறு மோதிரங்கள், பிரேஸ்லெட் என, எட்டு சவரன் நகைகள், வாட்ச் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் மாயமாகியிருந்தன.பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர்.

துணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன் மேற்பார்வையில், தனிப்படைகள் அமைத்தனர். கொலை செய்ததாக சிவக்குமார், 36 மற்றும் கவிதா, 28 ஆகிய இருவரையும், பல்லடம் அருகே சின்னக்கரையில், கைது செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சூரக்குடியைச் சேர்ந்தவர் சிவக்குமார். பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால், வீட்டாருடன் தொடர்பற்றுப் போனது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் பிரிந்து சென்ற நிலையில், சிவக்குமார், அவினாசிக்கு வந்துள்ளார். அங்கு தான், புதுச்சேரி அருகில் உள்ள பாகூரைச் சேர்ந்த கவிதாவை சந்தித்துள்ளார். கணவனை பிரிந்து குழந்தையுடன், ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய கவிதாவை, திருமணம் செய்து இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

திருப்பூர், சிவகங்கையில் சரியான வேலை அமையாததால், சென்னையில் வேலை தேடியுள்ளனர். அப்போதுதான் சந்திரசேகரின் விளம்பரத்தை பார்த்து, கவிதா அதிலிருந்த எண்ணில், சந்திரசேகரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின், கவிதாவை பலமுறை தொடர்பு கொண்ட சந்திரசேகர், வேலைக்கு வந்தால், அதிகளவில் சம்பளம் தந்து பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 16ம் தேதி காரைக்குடியிலிருந்து இருவரும் சென்னை வந்து, பணியில் சேர்ந்துள்ளனர்.

அன்று பிற்பகல் மனைவி வங்கிக்குச் சென்றதும், கவிதாவை அழைத்த சந்திரசேகர், பணமும், இருக்க இடமும் தருவதாகக் கூறி, கள்ள உறவு வைத்துக் கொண்டார்.இந்த உறவு பலமுறை தொடர்ந்துள்ளது. அடுத்த நாளும் அழைத்து உல்லாசம் அனுபவித்ததுடன், தனக்கு தெரிந்த வேறு ஒருவருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு ஒப்புக் கொள்ளாத கவிதா, அங்கிருந்து வெளியேறி, சிவக்குமாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அன்றிரவே, தங்களை ஏமாற்றிய சந்திரசேகரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, மறு நாள் காலை, 18ம் தேதி, சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து, சந்திரசேகரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, டெலிபோன் ஒயரைக் கொண்டு கழுத்தில் இறுக்கி கொலை செய்துவிட்டு, நகைகள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து தப்பிவிட்டனர்.

Friday, November 18, 2011

இன்றைய சூடான காமெடி செய்தி!

பின்வரும் இரண்டு செய்திகளையும் படித்தால் இன்றைய காமெடி செய்தி என்னவென்று உங்களுக்கே புரியும்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
நவம்பர் 18,2011 தினமலர்

கோவை: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு, மாவட்ட அளவிலான வல்லுநர் குழு அமைக்க வேண்டும்' என்று, தமிழக அரசுக்கு, கலெக்டர் தலைமையிலான [...]


திருநெல்வேலி : கணவனை காரை ஏற்றி கொலை செய்த கள்ளக்காதலனுக்கு மனைவி கார் வாங்க ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை வாக்குமூலத்தில் தெரிவித்து [...]

====

பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரிப்பு என்று அறிக்கை சமர்ப்பித்தால் ஐ.நா. சபையிலிருந்து பெண்கள் வளர்ச்சி நிதியாக கோடிக்கணக்கான பணம் கிடைக்கும்!


Theschemes/programmes that address violence against women are budgeted both in the Union and the State budgets (depending upon whether it is a Centrally sponsored scheme, or is a State scheme). It is not possible to give the exact budgetary allocation as many Ministries meet the expenditure from their general budget. There is gender budgeting in India and Gender Budget Statement (Statement 20) is part of the Union Budget. It includes grants for demands from different ministries/departments. Grants under Part A deal with 100 per cent women specific programmes and Part B deal with 30 per cent women specific programmes. For the year 2010-2011, the total allocation is Rs. 67,749.80 crores (Rs. 19,266.05 crores for Part A and Rs 48,483.75 crores for part B).


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.