மாலை மலர் வெள்ளிக்கிழமை, ஜனவரி 14,2011
ஈரோடு, ஜன.14-
பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
மூவரை திருமணம் செய்து ஏமாற்றிய "கல்யாண ராணி'’
செங்கன்னூர் : மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை மோசடி செய்த, "கல்யாண ராணி'யை போலீசார் கைது செய்தனர்.
அவரை காணவில்லை என, கணவர் கொடுத்த வழக்கில், கோர்ட் விடுவித்தது என்றாலும், ஒரு மணி நேரத்திற்கு பின், பணம், நகைகளை மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதானார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சடையமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (28). இவர் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பிரமோத் (48) என்பவருடன் வாழ்ந்து வந்தார். தன்னுடன் வாழ்ந்து வந்த ஷாலினியை காணவில்லை என்றும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் கோரி கேரள ஐகோர்ட்டில் அவர், "ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு தாக்கல் செய்தார்.ஐகோர்ட் உத்தரவின்படி செங்கன்னூர் போலீசார், ஷாலினியை தேடி வந்தனர். பத்திரிகைகளில் ஷாலினியின் படத்தை பார்த்த பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனது பகுதியில் அப்பெண் இருப்பதாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர்களிடம், அப்பெண் இருக்கும் இடத்தை காண்பித்து அப்பெண்ணை பிடிக்க உதவினார்.அப்பெண்ணுடன் இருந்த அவரது மகன் கண்ணன் (5) ஆகியோரை, போலீசார் செங்கன்னூர் கொண்டு சென்று, விசாரணை நடத்தினர்.நாகர்கோவில் : மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவர், மண மேடையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே கடம்பன்குழியைச் சேர்ந்தவர் வினோ (35). இவருக்கும், அஞ்சுகிராமம் பாப்பையன் மகள் ஹெப்சிபாவுக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோன்சி (8), மிஸ்பா (7) என இரு மகள்கள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஹெப்சிபா தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், காட்டாத்துறையை சேர்ந்த, சாந்திரி (28) என்ற பெண்ணை, வினோ, இரண்டாம் திருமணம் பேசி, சாமியார் மடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று திருமணம் நடக்க ஏற்பாடானது. இது பற்றி தகவல் கிடைத்த ஹெப்சிபா, தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குச் சென்ற போது வினோ, சாந்திரி கழுத்தில் தாலி கட்டிவிட்டார். மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததற்காக, போலீசார் அவரை கைது செய்தனர். இதனால், திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, சாந்திரி பெற்றோரை வினோ ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.
விலங்குகளிடம் இருக்கும் பாசம் கூட மனித இனத்தில் இருப்பதில்லையோ? (படம்- தினமலர் ஜனவரி,11, 2011)