இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, October 04, 2010

பெண்களே தாய்மையைப் பழிக்காதீர்

திருநெல்வேலி : நெல்லையில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை விரைவு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இசக்கியம்மாள்(29). இவரது முதல் கணவர் இறந்ததையடுத்து அவர்களது குழந்தை இசக்கியப்பன் என்ற கார்த்திக்(2) தாத்தா பராமரிப்பில் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டு இசக்கியம்மாளுக்கும், நெல்லை தச்சநல்லூர் அருகேயுள்ள தேனீர்குளம் நியூ காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது. பின்னர் தந்தையின் பராமரிப்பில் இருந்த தனது குழந்தை கார்த்திக்கை தானே வளர்த்துக் கொள்வதாக கூறி இசக்கியம்மாள் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார். இதற்கிடையே இசக்கியம்மாளுக்கும், கணவர் பாலசுப்பிரமணியன் நண்பர்களுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை பாலசுப்பிரமணியனும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி குழந்தை கார்த்திக் திடீரென இறந்தது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறி, ராஜபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு இசக்கியம்மாளும், அவரது கணவரும் ஒரு காரில் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றனர். அப்போது குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள் உள்ளதால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, இசக்கியம்மாளின் தந்தை ஆறுமுகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு "திடுக்' தகவல்கள் வெளியாயின.

இசக்கியம்மாளுக்கும், பாலசுப்பிரமணியனின் நண்பர்களான லாரி டிரைவர்களான சங்கரன்கோவில் குருசாமி(38), கோவை அம்சாவுக்கும்(42) இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இசக்கியம்மாளிடம் உல்லாசத்தில் இருக்கும் போது குழந்தை கார்த்திக் இடையூறு செய்ததால், அவனது உடலில் சிகரெட்டால் சூடு வைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாவே குழந்தை இறந்ததாக தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் இசக்கியம்மாள், தந்தை பாலசுப்பிரமணியன், கள்ளக் காதலர்கள் குருசாமி, அம்சா ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட இரண்டாவது விரைவு கோர்ட்டில் நேற்று நடந்தது.வழக்கை நீதிபதி கமலாவதி விசாரணை செய்தார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையை கொலை செய்ததது உறுதி செய்யப்பட்டதால் இசக்கியம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் குருசாமி, அம்சா இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.கள்ளத்தொடர்புக்காக பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

===========

இவர்களுக்குப் பெயர்தான் அபலைப் பெண்கள். இவர்களைப் பாதுகாக்கத்தான் பல சட்டங்கள் இருக்கின்றன!




Saturday, October 02, 2010

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் சிறையில் தள்ளப்பட்ட ஆண்

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் பலியாகி சிறையில் தள்ளப்பட்ட ஆண்

தினமலர் அக்டோபர் 02,2010

வேலூர் : இரண்டு பேரை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண், மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர், காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (20). இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த இரு ஆண்டாக தொண்டான் துளசியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சேட்டு (23) என்பவருக்கும், ரேவதிக்கும் திடீரென காதல் ஏற்பட்டது. இதனால், சக்திவேலை, ரேவதி ஒதுக்கித் தள்ளினார். இது தொடர்பாக கடந்த வாரம் ரேவதிக்கும், சக்திவேலுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நண்பர்கள் சமரசம் செய்ததன் பேரில் சக்திவேலை திருமணம் செய்து கொள்ள ரேவதி சம்மதித்தார். இதனால், சேட்டு கோபமடைந்தார்.

கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை. "சேட்டு, ரேவதியை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்' என, சந்தேகப்படுவதாக ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன், லத்தேரி போலீசில் புகார் செய்தார். சேட்டிடம் விசாரணை செய்ததில், ரேவதியை கழுத்தை நெரித்து கொலை செய்து திம்மாம்பேட்டை பாலாற்றில் புதைத்து விட்டதாக கூறினார். போலீசார் சேட்டை அழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பாலாற்றில் ரேவதி புதைக்கப்பட்ட இடத்தை தேடினர். ஆனால் இதோ, அதோ என சேட்டு கைகாட்டிய இடங்களை தோண்டிப் பார்த்து, ரேவதி பிணம் கிடைக்காமல் போனதால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று சேட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, திருமணக் கோலத்தில் ரேவதியும், சக்திவேலும் நண்பர்கள் புடை சூழ லத்தேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணியம்பாடியில் உள்ள நண்பர்கள் வீட்டில் மறைந்து இருந்ததாகவும், 30ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் ரேவதியும், சக்திவேலும் போலீசாரிடம் கூறினர். "ஏன் ரேவதியை கொன்று விட்டதாக பொய் சொன்னாய்?' என, சேட்டிடம் கேட்ட போது, போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே இப்படி சொன்னதாகவும், பாலாற்றில் தோண்டிப் பார்த்த போது தப்பித்து விடலாம் என நினைத்த போது முடியாமல் போனதாக கூறினார். சேட்டு மீது போலீசாரை ஏமாற்றிய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

=========

போலிஸ் கொடுமையிலிருந்து தப்பிக்க தான் செய்யாத தவறை செய்ததாகக் கூறிய ஆண்மீது போலிசை ஏமாற்றியதாக வழக்குப்போட்டிருக்கிறார்கள். ஆனால் பல பெண்கள் பொய்யான புகார்களை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சுமத்தினாலும் காவல்துறைக்கு அது பொய் என்று தெரிந்தாலும் அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைய விடுகிறார்கள். பொய் வழக்குப்போட்டு அப்பாவிகளை அலைக்கழிக்கும் பெண்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது. காவல்துறையோ, நீதித்துறையோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள். என்ன ஒரு விசித்திரமான சட்ட நடைமுறை!

பெண்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு தண்டனை பெறுவது அப்பாவி ஆண்கள்தான்.






மகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?

Thats Tamil News வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2009

சென்னை: சென்னையில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜீவிதா (18). இவரது கணவர் மோகன். ஜீவிதா திருவான்மியூரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார்.
திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பமடைந்தார். ஆனால், ஜீவிதாவின் நடத்தையில் மோகன் சந்தேகப்பட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தி்ல் ஜீவிதாவின் நகைகளைப் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டார். இதையடுத்து ஜீவிதா தனது பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கடந்த 2ம் தேதி தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா அடையார் மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து புகார் தந்தார்.

மனுவை வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, ஜீவிதாவையும் மோகனையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினார். அப்போது இனிமேல் ஜீவிதாவோடு வாழமாட்டேன் என்று மோகன் பிடிவாதம் செய்தார்.

ஜீவிதா தினமும் தனது பெற்றோருடன் அடையார் போலீஸ் நிலையத்துக்கு நடையாக நடந்தும் கூட இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இன்ஸ்பெக்டர் கீதா இழுத்தடித்ததார்.

கணவர் பறித்து வைத்துள்ள நகைகளையாவது மீட்டுத்தாருங்கள் என்று ஜீவிதா கோரினார்.

பலநாள் ஜீவிதாவை அலைய விட்ட இன்ஸ்பெக்டர் கீதா, இனிமேல் இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன், கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொடு என்று ஜீவிதாவிடம் கூறியுள்ளார்.

ஜீவிதா கதறி அழவே, உன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.5,000 தர வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறிய ஜீவிதாவிடம், கழுத்துல கிடக்கிற தாலிய வித்துக்கு வந்து காச குடுடி என்று சினிமா வில்லி போல இன்ஸ்பெக்டர் கீதா பேசவே, அதிர்ந்துபோன ஜீவிதா லஞ்ச ஒழிப்பு போலீசில் கீதா மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனர் ராமானுஜம், ஐ.ஜி. துக்கையாண்டிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்பி பவானீஸ்வரி, துணை எஸ்பி பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, அசோகன், இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று மாலை அடையாறு போலீஸ் நிலையத்தில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருக்க, ஜீவிதா ரூ.5,000 பணத்தோடு, இன்ஸ்பெக்டர் கீதாவை போய் பார்த்தார்.

அப்போது பணத்தை கையில் வாங்காமல், தன்னுடைய டைரியை கொடுத்து அதற்குள் பணத்தை வைக்கும்படி இன்ஸ்பெக்டர் கீதா கூறினார். ஜீவிதாவும் பணத்தை டைரிக்குள் வைத்தார்.

அப்போது அங்கு புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்டை போட்ட கீதா பி்ன்னர் தரையில் விழுந்து புரண்டு அழுது நாடகமாடினார்.

ஆனாலும் அவரை போலீசார் விடவில்லை. அவரைக் கைது செய்ததோடு சைதாப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் உள்ள கீதாவின் வீட்டிலும் சோதனை நடத்தி ஏராளமான சொத்துப் பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடையார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கீதா மீது ஏற்கனவே ஏராளமான லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளன.

நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தபோது திடீரென்று தரையில் விழுந்து உருண்டு அழுததோடு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

பின்னர் 'மயக்கம்' போட்டு விழுந்தார். டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு 'சிகிச்சை' அளிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வழக்குக்கும் இன்ன விலை என நிர்ணயித்து ஆட்டம் போட்டு வந்த கீதா வரதட்சணை புகார்களில் இரு தரப்பினரிடமும் பணம் வாங்கிக் கொண்டு கணவன்-மனைவியை பிரித்து அனுப்பும் வேலையை செய்வதில் கில்லாடி.

இதுவரை ஒரு தம்பதியைக் கூட கவுன்சிலிங் மூலம் சேர்த்து வைக்காதவர் என்ற பெருமையுடைவர்.

கீதாவுக்கு லஞ்சம் வாங்கித் தருவதில் பெண் ஏட்டு சோபியா என்பவரும் பக்க பலமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ள போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போலீஸ் வேலையை பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்துங்கள். சட்டவிரோதமாக சம்பாதிக்க முயலும் போலீசார் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கேட்கும் போலீஸ் அதிகாரிகள் பற்றி பொதுமக்கள் என்னிடம் நேரடியாக புகார் செய்யலாம் என்றார்.

மகளிர் காவல் நிலையங்களில் பொது காவல் நிலையங்களுக்கு இணையாக அநியாயங்களும், கட்டப் பஞ்சாயத்துகளும், லஞ்சம்-ஊழலும் கொடி கட்டிப் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகார் தருவோர், பிடிபட்டோரிடம் கெட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதிலும் மகளிர் காவல் நிலையங்கள் எந்த விதத்திலும் சளைத்தவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

==============

மகளிர் காவல்நிலையங்களில் பொய் வரதட்சணை வழக்குகளில் அப்பாவிகளை துன்புறுத்தி அவமானப்படுத்தும் - செய்த பாவத்திற்கும், செய்துகொண்டிருக்கின்ற பாவத்திற்கும், செய்யப்போகிற பாவத்திற்கெல்லாம் விமோசனம் கிடைக்கவேண்டுமென்றால் கீழுள்ள படத்தில் உள்ளதுபோல் செய்தால் கிடைத்துவிடுமா?

செய்தியும் படமும் தினமலரில் வந்துள்ளது.



புது பயிற்சி: பெண் போலீஸ் கோலம்மெல்லாம் போடுறாங்க ஏதாவது புது பயிற்சியா இல்ல கோலப் போட்டி நடக்குதான்னு நினைச்சிடாதீங்க. போலீஸ், பொதுமக்கள் நல்லுறவுக்காக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக போடப்பட்ட கோலம்தான் இது. பரவாயில்லை வீடு போல் பாவித்து இப்படியெல்லாம் செய்தா, மக்கள் மத்தியில போலீஸ் "உங்கள் நண்பன்னு' நிருபிக்கலாமில்ல. (தினமலர் அக்டோபர் 2, 2010)




Friday, October 01, 2010

கொத்து கொத்தாக செத்து மடியும் ஆண்கள்


திருப்பூர் : திருப்பூரில், திருமணமான 15வது நாளில், கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற இளம் மனைவியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அவினாசியை அடுத்துள்ள நரியம்பள்ளியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் ஜமுனா (25). இவரும், திருப்பூர் பி.என்., ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபுவும் காதலித்தனர். இதையறிந்த ஜமுனாவின் பெற்றோர், அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மண்ணரை பகுதியைச் சேர்ந்த செல்வராஜூக்கும் (25), ஜமுனாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, திடீரென ஜமுனாவின் தந்தை மாணிக்கம் இறந்து விட்டார். எனினும், நிச்சயித்தபடி, செப்டம்பர் 12ம் தேதி, கருவலூர் பொன்காளியம்மன் கோவிலில் செல்வராஜூக்கும், ஜமுனாவுக்கும் திருமணம் நடந்தது.பிரபுவின் மீது தீராத காதல் கொண்டிருந்த ஜமுனா, திருமணத்துக்கு பிறகும் பிரபுவை மறக்க முடியாமல் தவித்தார். கணவர் செல்வராஜை கொலை செய்துவிட்டு, காதலன் பிரபுவுடன் சென்றுவிட முடிவு செய்தார்.

திருமணமான 15வது நாளான செப்டம்பர் 26ம் தேதி, கோவிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தில் விஷம் கலந்து, செல்வராஜூக்கு தந்தார். அதை குடித்த சில நிமிடங்களில் செல்வராஜ் மயங்கி விழ, அவரை திருப்பூர் வலையங்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் குடித்த தீர்த்தத்தில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. செல்வராஜூக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக ஜமுனா மீது, செல்வராஜின் தந்தை சுப்ரமணியம், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஜமுனாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜமுனாவை, 15 நாள் சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.



சூப்பர் நியூஸ்!

அக்டோபர் 1, 2010, Thats Tamil

போளூர்: வரதட்சணை புகார் தொடர்பாக போளூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடியப்பன் திடீர் என தலைமறைவாகி உள்ளார்.

கடந்த 1991-ம் அண்டு அதிமுக கட்சி சார்பாக போளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேடியப்பன்.

இவரது மகன் தண்டபானிக்கும், சத்யா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சத்யா போளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வேடியப்பன் மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் தண்டபாணி, மாமனார் வேடியப்பன், மாமியார் சந்தியா ஆகியோர் 100 சவரன் நகை, கார், ஜே.சி.பி. இயந்திரம் வேண்டும் என வரதட்சனை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வேடியப்பனைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றனர்.

ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. வேடியப்பன் மற்றும் அவரது மனைவி சந்தியா, மகன் தண்டபாணி ஆகியோர் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதையடு்த்து அவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.