இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, July 03, 2012

நீங்கள் அநீதியைக் கண்டு பொங்கி எழுபவரா? உயிர் போய்விடும் ஜாக்கிரதை!!!

நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் நொந்து பொங்கி எழும் குணம் படைத்தவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. காந்திய வழியில் செல்லும் சமூக சிந்தனையுள்ளவர்கள் அநீதிகளுக்கு எதிராக போராட தகவல் அறியும் உரிமை சட்டம், பொதுநல வழக்கு என நேர்மையான வழியை நாடிச் செல்கிறார்கள். இதுபோன்ற அகிம்சை வழியில் பல உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த உண்மைக்காக போராடும் பலர் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற செய்திகள் அதிகம் வெளியே வருவதில்லை. செய்தித்தாள்களும் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை.

அதனால் இன்று இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்தியாவில் நீங்கள் அநீதியைக் கண்டு போராட நினைத்தால் முதலில் உங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



திருவண்ணாமலை கிரிவலப்பாதை, சிங்கமுக தீர்த்தகுளம் அருகே சமூக சேவகர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் மீது மிளகாய் பொடியை தூவி, மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொன்றனர். சம்பவம் நடந்த இடத்தை எஸ்.பி.,ரம்யா பாரதி பார்வையிட்டார்.உள்படம்:ராஜ்மோகன் சந்திரா


திருவண்ணாமலை: பால் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது, சமூக சேவகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக கொலையாளி இருவர், நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளம் எதிரே வசிப்பவர் ராஜ்மோகன் சந்திரா(53), இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


சமூகசேவை:பொறியியல் பட்டதாரியான ராஜ்மோகன், பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் இணைந்து சமூக சேவை செய்து வந்தார். இவர் ஏராளமான பொதுநல வழக்குகளை போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.இவர் பூனைகளை செல்லமாக வளர்க்கும் பழக்கம் கொண்டவர், வீட்டில் 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனத்தை சேர்ந்த, 20 பூனைகளை தன் குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பூனைகளுக்கு பால் வாங்க அருகே உள்ள பால் பூத்திற்கு ராஜ்மோகன் சந்திரா, தன் மொபட்டில் சென்றார். பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

சிங்கமுக தீர்த்த குளம் எதிரே மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென மொபட்டில் வந்த ராஜ்மோகன் மீது மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலை குலைந்த அவர் மொபட்டிலிருந்து கீழே விழுந்தார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மர்ம கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார். எஸ்.பி., ரம்யா பாரதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்:

பல்வேறு போலீஸார், வக்கீல்கள் மற்றும் அதிகாரிகள் மீது இவர் பொது நல வழக்கு தொடர்ந்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில், திருவண்ணாமலை அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சந்திரசேகரன்(29), வட ஆண்டாப்பட்டை சேர்ந்த முருகன்(32), ஆகியோர், கொலை செய்ததை ஒப்புகொண்டு, நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.