இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, May 25, 2012

இந்தியாவில் பற்றி எரியும் கள்ளக்காமத் தீ

பெண்ணிற்கு பெருமையைம், மரியாதையையும் அளிப்பது தாய்மைக் குணம். அது இல்லையென்றால் பெண்ணிற்கு எந்த சிறப்பும் கிடையாது. தினமும் வரும் கள்ளக்காம செய்திகளைப் பார்த்தால் இந்த தாய்மைக் குணம் இந்தியாவில் அழிந்து வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பெற்ற குழந்தைகளை புறக்கணிக்கும் அளவிற்கு கள்ளக்காமத்தீ இளம் பெண்களின் மனதில் எரிய ஆரம்பித்திருக்கிறது. ஒருதலைபட்சமான இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் இந்த எரிகின்ற தீக்கு இலவசமாக பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

உதாரணத்திற்கு, இந்திய கள்ளக்காம சட்டப்படி கள்ளக் காமத்தில் ஈடுபடும் மனைவிக்கு தண்டனை கிடையாது. அதுபோலவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் மனைவி செய்யும் வன்முறைபற்றி எந்தவித வரைமுறையும் இல்லை. வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மருமகள் சொல்வது மட்டுமே உண்மை என்று வரையறை செய்திருக்கிறார்கள் இந்திய சட்ட மேதைகள்.
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
இந்த சட்டங்களை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று நன்றாக தெரிந்துவைத்திருக்கும் படித்த மேல்தட்டுப் பெண்கள் தங்களது கள்ளக்காமத்தீக்கு இலவச எரிபொருள் போல இந்த பெண்கள் பாதுகாப்பு சட்டங்களைப் பயன்படுத்தி கள்ளக்காமத்திற்கு தடையாக இருக்கும் கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய்யான வழக்குகள் மூலம் முடக்கிவிடுகிறார்கள்.


கள்ளக்காதல் பிரிவுத்துயர் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

தினமலர் மே 26,2012

திருச்சி: கள்ளக்காதலன் பிரிவை தாங்க முடியாத பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மேலப்புலிவார்டு சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் ரவி (39). காந்தி மார்க்கெட்டில் லோடு மேனாக பணிபுரிகிறார். இவரது மனைவி மாலதி (32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.இவர்களுக்கு, ஏழு வயது மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சித்தாள் வேலை பார்த்த மாலதிக்கும், திருமணமாகாத கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இருவரின் குடும்பத்தினரும் இவர்களின் கள்ள உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். சிறுவயதில் உள்ள இரண்டு மகன்களை விட்டு ஓடிபோனதால் வருத்தமடைந்த மாலதியின் பெற்றோர், இருவரையும் சிரமப்பட்டு கண்டுபிடித்து, மாலதியை மட்டும் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்காதலன் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்த மாலதி, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பயிற்சி எஸ்.ஐ., சுப்பையா மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.*

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.